திங்கள், 24 மார்ச், 2014

Credit Rating

வாங்கிய கடனை திரும்பத் தரும் திறன் அல்லது தகுதி ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆராய்ந்து கூறுவது ‘credit rating’ என்பதாகும். Standard and Poor’s, Fitch, Moody’s போன்ற பல நிறுவனங்கள் credit rating துறையில் உள்ளன. இந்தியாவில் CRISIL, ICRA போன்றவை இத்துறையில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும்.
ஒரு நாட்டின் நிதி சந்தையில் பல நிறுவனங்கள் கடன் பத்திரங்களை விற்பனைக்கு வெளியிடுகின்றன. அந்த நிறுவனங்களின் நிதி நிலைமைகளை முழவதுமாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது இயலாத காரியம். இந்த சூழலில் credit rating நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு நிறுவனம் எதற்காகக் கடன் வாங்குகிறது, அக்கடன் தொகை சரியாக முதலீடு செய்யப்படுமா? அவ்வாறு முதலீடு செய்தால் அதில் உள்ள ரிஸ்க் என்ன? எதிர்பார்க்கபட்ட லாபம் வருமா? இதுவரை அந்நிறுவனம் வாங்கிய கடன்களை எவ்வாறு திருப்பி செலுத்தியுள்ளது இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தரக்கூடிய வகையில் credit rating நிறுவனத்தின் அறிக்கை இருக்கவேண்டும்.
 
***********
credit rating நிறுவனங்கள் சுதந்திரமாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. credit rating நிறுவனங்களுக்கும், கடன் வாங்கும் நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும்; அப்போதுதான் credit rating நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் நிதி பற்றிய முழு விவரங்களையும் ஆராய்ந்து அறிக்கை வழங்க முடியும். இதனாலேயே, இந்த credit rating நிறுவனங்கள் மீது நேர்மையின்மை, தகுதியின்மை போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது கூறப்படுகின்றன. 2008-ம் ஆண்டு உலக நிதிச் சிக்கலுக்கு பிறகு credit rating நிறுவனங்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகியுள்ளன

Who Moved my Cheese

From Hindu

மாறுதல் வேண்டும் என்பதை பொதுவாக எல்லாரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மாற்றத்தை நிகழ்த்தும் முழு மனமும், துணிவும், திறனும் தான் எங்குமே பற்றாக்குறை. மாற்றத்தை மறுக்கும் மனோபாவத்திலிருந்து மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது இந்தப் புத்தகம்.
சின்ன சைஸில் 94 பக்கங்கள் தான். இரண்டு எலி, இரண்டு மினி சைஸ் மனிதர்கள், இவர்கள் தேடும் பாலாடைக் கட்டி. இவ்வளவுதான் கதைக்களம். பாலாடைக் கட்டி தீருவதை கவனிக்காதபோது திடீரென்று தீர்ந்ததாக ஸ்தம்பித்து நிற்பதும் பின்னர் மன மாற்றத்திற்குப் பிறகு புது பாலாடைக் கட்டியை எதிர் நோக்குவதுமாய் செல்லும் சின்ன கதை. மனிதர்களைவிட எலிகள் விரைவில் மாற்றத்தை புரிந்து கொள்கின்றன. தான் கற்ற விஷயத்தை சுவரில் எழுதி வைக்கின்றன. அதை நாம் படித்து,” அட, ஆமாம்..!” என்று ஆச்சரியப்படுகிறோம்.
***********
சாரம்சமாக எலிகள் நமக்குச் சொல்பவை இவைகளைத் தாம்:
மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கும். என்னென்ன மாறுதல்கள் வரும் என கண்காணித்துக் கொண்டே இருங்கள். மாற்றத்தை காலதாமதமின்றி ஏற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி. மாற்றத்தை ரசியுங்கள். இந்த மாற்றமும் மாறும். மீண்டும் மீண்டும் மாறத் தயாராகுங்கள். மாற்றத்தை ரசித்தவாறு வாழுங்கள் என்றென்றும்!
பாலாடை என்பது குறியீடு. நம் வாழ்க்கையில் நாம் துரத்தும் வெற்றியும் சந்தோஷமும்தான் பாலாடைக் கட்டிகள். எதை சந்தோஷம் என்றும் வெற்றி என்றும் நினைத்து செய்து கொண்டிருக்கிறோமோ அவை மாறிக்கொண்டே வருகின்றன. திடீர் மாற்றம் வாழ்க்கையை நிலை குலைய வைக்கிறது. எது நமக்கு நடக்காது என்று நினைக்கிறோமோ அது நமக்கு நடக்கும்போது மனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
மறுப்பும், கோபமும், செயலற்று கிடப்பதும் நம் தடுப்பு நடவடிக்கைகளாய் கொள்கிறோம். அவை எந்தவிதத்திலும் பலன் அளிக்காது என்று காலம் புரிய வைக்கிறது. இந்த பரிவர்த்தனை தத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போது, இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனதுக்கு வருகிறது.
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வணிகர்களுக்கு நிரம்ப தேவைப்படும். தேர்தல் முடிவு, சட்ட சீர்திருத்தம், போட்டியாளர் தந்திரம், சந்தை மாற்றம், இயற்கை கொந்தளிப்பு, முக்கிய பணியாளர் விலகல்.. என எந்த ஒரு சிறு மாறுதலும் கூட உங்கள் வியாபாரத்தை புரட்டிப் போடலாம். அடுத்த மாறுதலை எதிர் நோக்கி தேடி அணைத்து ஏற்றுக்கொள்ளுதல் காலத்தின் கட்டாயம்.
ஒவ்வொரு வியாபாரமும் ஒரு இக்கட்டில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. அதனால்தான் ஒவ்வொரு பெரும் சந்தை தேக்கத்தின் போதும் பல புதிய தொழில்கள் பிறக்கின்றன.
உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்க்கையில் கடந்த 10 ஆண்டுகளில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன? அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்கலாம் என்று யோசியுங்கள். இதை யோசிக்க இப்புத்தகம் உதவும்.
“எங்கே வாழ்க்கை தொடங்கும்?
- அது எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை ; இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறி விடும்;
பயணம் முடிந்துவிடும்.
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்!”
அன்று இயல்பாக சொன்ன இந்த கண்ணதாசன் பாடலின் சாரத்தை இன்று வியாபார புதினமாகப் படிப்பதும் காலத்தின் மாற்றத்தில்தானோ?

Start Up

 TiE (www.tie.org) போன்ற அமைப்புகளில் சேர்ந்து கொண்டால் தொழில் செய்ய விரும்பும் உங்களை போன்ற பலரை அந்த அமைப்புகளில் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் தொழில் செய்யத் துடிக்கும் மாணவராக இருந்தால், பல கல்லூரிகளில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு அமைப்புகள் (ENTREPRENEURSHIP DEVELOPMENT CELL) உள்ளன.

Bhagath Singh - Gandhi - Nehru

புதன், 19 மார்ச், 2014

What MBA should Know

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, இந்துமகா சபாவின் பிறப்பும் வளர்ச்சியும், காங்கிரஸ் தொடங்கப்பட்ட நோக்கமும் வளர்ச்சியும், சுய மரியாதை இயக்கம், அம்பேத்காரின் பங்களிப்புகள், பார்ஸி மக்களின் தொழில்முனைவுகள், உலகளாவிய காலனி ஆதிக்க அரசியல், வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் அரசியல் காரணங்கள், யுத்தமும் பொருளாதார தாக்கமும், மதச்சார்பின்மை

திங்கள், 10 மார்ச், 2014

2014 Election

The numbers say it all. With about 81.45 crore people eligible to vote, India will witness a nine-phase election over a 36-day span covering 9,30,000 polling stations that will press into service 18,78,306 electronic ballot units — the largest and lengthiest democratic exercise in the world. The country added more than 10 crore voters since the last election five years ago, and significantly, those in the age group of 18 to 19 years will constitute 2.88 per cent of the total number of voters as against a mere 0.75 per cent in that age group in 2009.

TN: MoUs - SEZ and SEexportZones

“அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் இதுவரை 33 நிறுவனங்களுடன் ரூ.31,706 கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டி ருக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் ஆய்வுப்படி, ஜூன் 2011 முதல் ஜனவரி 2013 வரை தமிழகத்தில் ஈர்க்கப்பட்ட முதலீட்டின் அளவு ரூ. 1.46 லட்சம் கோடி. தமிழ்நாடு, முதலீட்டில் 18.2% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகத்தைவிடவும் அதிகம்” என்று சொல்லும் ஜெயலலிதா, தான் காண விரும்புவதாகக் குறிப்பிடும் தேசத்தைப் பற்றிய விவரணைகளில் முதன்மையாக இடம்பெற்றிருப்பது திறந்த சந்தையான தேசம். இது முக்கியமான ஒரு சமிக்ஞை. மோடி எப்படியோ தானும் அப்படியே ‘வளர்ச்சியின் பிம்பம்’ என்கிற சமிக்ஞை.

மோடியை எந்தத் தொழில்துறை தூக்கிப்பிடிக்கிறதோ, அந்தத் தொழில்துறை மோடி இல்லாத சூழலில், ஜெய லலிதாவைத் தாங்கிப் பிடிக்குமா? ஆம். நிச்சயம் பிடிக்கும். ஏனென்றால், குஜராத் எப்படித் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறதோ, அப்படித்தான் தமிழகமும் தொழிலதிபர்களின் பேட்டையாக இருக்கிறது. ஒரு சின்ன உதாரணம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடர்பான ஒப்பீடு. குஜராத்தில், பூர்வாங்கமாக அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 43, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை 30, சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் 18. தமிழகத்தில் பூர்வாங்கமாக அனுமதி தர ஏற்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 67, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை 53, சிறப்புப் பொருளாதார ஏற்றுமதி மண்டலங்கள் 33. தேசிய ஊடகங்கள் குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு இன்றைக்கு எழுதும் ‘வளர்ச்சிக் கதைகள்’ இந்தப் பின்னணியோடு இணைத்துக் கவனிக்க வேண்டியவை.