திங்கள், 25 மே, 2015

Status of SEZ

தற்போது ‘மேக் இன் இந்தியா’ என்று கூறிக்கொண்டிருப்பதை போல பத்து வருடங்களுக்கு முன்பு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (எஸ்.இ.இசட்) என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் ஏற்றுமதியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள். ஆனால் இந்த மண்டலங்களின் தற்போதைய நிலை அவ்வளவு பிரமாதமாக இல்லை.
2005-ம் ஆண்டு இதற்காக ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசு / மாநில அரசு / தனியார் நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்திருக்கிறார்கள். பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவை செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பல நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை திருப்பி கொடுத்துவருகின்றன. எஸ்.இ.இசட் பற்றியும் அதன் தற்போதைய நிலைமை பற்றியும் ஒரு சிறப்பு பார்வை.
சரிவுக்கு காரணம்
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி விதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் இந்த உத்தரவு அமலில் உள்ளது. இதனால் எஸ்.இ.இசட் மீதான மதிப்பு குறைந்து வருகிறது.
குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரியை நீக்க வேண்டும் என்று தொழில் துறையில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் குறைந்தபட்ச மாற்று வரியை பாதியாக (7.5%) குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது.
மத்திய அரசு எஸ்.இ.இசட்
மெப்ஸ் (எம்.ஒ.பி.இசட்) சென்னை
எஸ்.இ.இ.பி.இசட். மும்பை
நொய்டா எஸ்இஇசட்
கொச்சின் எஸ்.இ.இசட்
பால்டா எஸ்.இ.இசட். (மேற்கு வங்காளம்)
சி.ஏ.ஜி அறிக்கைபடி எதிர்பார்க்கப்பட்டதை விட 8 சதவீத அளவுக்கு குறைவான வேலை வாய்ப்புகளே எஸ்.இ.இசட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
2006 முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.83,104 கோடி ரூபாய் வரிச் சலுகைகளை எஸ்.இ.இசட்கள் அனுபவித்திருக்கின்றன.
முறையாக அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.இ.இசட்-கள் 436
கொள்கை அளவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.இ.இசட்கள் 32
தற்போது செயல்பாட்டில் இருக்கும் எஸ்.இ.இசட்கள் 199
தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ்.இ.இசட்கள் 36
இதில் பெரும்பாலானவை ஐடியை சேர்ந்தவை. 9%
எஸ்.இ.இசட்கள் மட்டுமே உற்பத்தி துறையை சேர்ந்தவை.
நோக்கம்
உற்பத்தி மற்றும் சேவை துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது.
முதலீடுகளை ஈர்ப்பது.
வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட சில..
சலுகைகள்
கார்ப்பரேட் வரியில் 15 வருடத்துக்கு சலுகை
இறக்குமதி செய்ய உரிமம் தேவை இல்லை.
சேவை வரியில் இருந்து விலக்கு.
பத்திரப் பதிவு கட்டண விலக்கு.
ஏற்றுமதி
2013-14-ல் 4,94,077 கோடி ரூபாய்.

DR. SALLY RIDE - First American Woman In Space

https://sallyridescience.com/about-us/dr-sally-ride

Sally Ride, the first American woman to fly in space, cofounded Sally Ride Science in 2001 to inspire young people—especially girls—to stick with their interest in science and to consider pursuing careers in science and engineering. She served as CEO of the company until her death on July 23, 2012, after a 17-month battle with pancreatic cancer. 

Sally was finishing her Ph.D. in physics at Stanford University in 1977 when she answered a NASA newspaper ad seeking astronaut candidates. When she blasted off aboard the space shuttle Challenger on June 18, 1983, she became the first American woman—and, at 32, the youngest American—in space. Sally's historic flight made her a symbol of the ability of women to break barriers and a hero to generations of adventurous young girls. She flew on Challenger again in 1984 and later was the only person to serve on both panels investigating the nation's space shuttle disasters—the Challenger explosion in 1986 and the breakup of the shuttle Columbia on reentry in 2003. 

After retiring from NASA, Sally became a physics professor and an award-winning author of science books for children. She used her high profile to champion a cause she cared about passionately—igniting students' enthusiasm for science and piquing their interest in careers in science, technology, engineering, and math. At Sally Ride Science, she guided the creation of innovative classroom programs, classroom materials, and professional development programs for teachers and students. 

In 2013 Sally was posthumously awarded the Presidential Medal of Freedom, the nation’s highest
civilian honor.   

நூடுல்ஸ்களில் Monosodium glutamate (MSG) என்கிற ரசாயனப் பொருட்கள் கலப்பது உடலுக்கு தீங்கானது


ஃபேஸ்புக்: நண்பரா, எதிரியா?

ஃபேஸ்புக் - இதழியலின் அடுத்தகட்ட வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற திகைப்பில் இருக்கிறார்கள் உலகளாவிய இதழியலாளர்கள். கடந்த வாரம் பிரபலமான 9 ஊடகங்கள் தங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் நேரடியாகவே ஃபேஸ்புக்கில் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இதனால், ஃபேஸ்புக்கின் 140 கோடிப் பயனாளிகளும், அந்தக் கட்டுரைகளும் செய்திகளும் சம்பந்தப்பட்ட ஊடகங்களில் வெளியான உடனே ஃபேஸ்புக்கிலும் படிக்க முடியும்.
‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’, ‘பஸ்ஃபீடு’ ‘என்பிசி’, ‘தி அட்லாண்டிக்’, ‘தி கார்டியன்’, ‘பிபிசி’, ‘ஸ்பீகல் ஆன்லைன்’, ‘பில்டு’ ஆகியவைதான் அந்த ஊடகங்கள். இதழாளர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. இதனால், அதிக விளம்பர வருவாய் அந்த ஊடகங்களுக்குக் கிடைக்கும். தவிர, இந்த ஊடகங்களைச் சந்தைப்படுத்துவதன் மூலம் ஃபேஸ்புக்குக்குக் கிடைக்கும் வருவாயில் 70 சதவீதத்தை ஃபேஸ்புக்கே வைத்துக்கொள்ளும்.
தரமான, நடுநிலையான, நம்பிக்கையூட்டும் செய்திகளைத் தரும் அச்சு ஊடகங்களுக்கு இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதே சமயம், இணையயுகத்தின் வருகைக்குப் பிறகு தடுமாறிக்கொண்டிருக்கும் மேற்கத்திய ஊடகத்துறைக்கு ஃபேஸ்புக்கின் துணை மிகவும் ஆசுவாசமளிப்பது. வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு. செய்தி ஊடகங்களின் நிலைகுறித்து 2015-ல் ‘பியூ ஆராய்ச்சி மையம்’ வெளியிட்ட அறிக்கை, ‘அச்சு ஊடகத்தின் விளம்பர வருவாய் 2014-ல் பெருமளவு சரிந்திருக்கும் அதே வேளையில், இணையம் வழியாகக் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருக்கிறது’ என்று சொல்கிறது.
ஆனாலும், அச்சுப் பதிப்புகள் சந்தித்திருக்கும் விளம்பர வருவாய் இழப்பை இணைய வழி விளம்பரங்கள் ஈடுகட்டவே இல்லை. அமெரிக்காவில் அச்சு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 100 கோடி டாலர்கள் அளவுக்குச் சரிந்திருக்கிறது, இணைய விளம்பரங்களின் வருவாயோ 10 கோடி டாலர்கள் அளவுக்குத்தான் அதிகரித்திருக்கிறது.
பிரபல பதிப்பாளர்களெல்லாம் ஃபேஸ்புக்கின் ‘இன்ஸ்டண்ட் ஆர்ட்டிக்கிள்ஸ்’ தளத்தில் கால்பதித்துவிட்டார்கள். இன்னும் பலரோ கால்பதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சில பதிப்பாளர்கள் ‘ஃபேஸ்புக்’கைத் தவிர்க்கப்போவதாகச் சொல்லியிருப்பதைப் புத்திசாலித்தனமான முடிவாகக் கருத இடமில்லை.
‘பியூ ஆராய்ச்சி மையம்’ எடுத்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதற்கு முந்தைய வாரம் அரசாங்கத்தையும் அரசியலையும் பற்றிய செய்திகளை ‘ஃபேஸ்புக்’ வழியாகச் சென்று படித்திருப்பதாகத் தெரியவந்தது. மேலும், இணையம் மூலம் செய்யப்படும் விளம்பரங்களில் ‘ஃபேஸ்புக்’கின் ஆதிக்கம் மிகவும் அதிகம். இந்த ஊடகங்களின் இணையதளங்களுக்குக் கிடைக்கும் விளம்பர வருவாயைவிட இது பல மடங்கு அதிகம்.
ஊடகங்கள் இந்த வகையில் ‘ஃபேஸ்புக்’குடன் உறவு வைத்துக்கொள்வது மிகவும் சிரமமான காரியம் அல்ல. செய்திப் பகிர்மானம் செய்யும் பொறுப்பைப் பல்லாண்டுகளுக்கு முன்பே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஒப்படைத்தது இதே ஊடக நிறுவனங்கள்தான் என்பதால், இப்போதைய நிலைக்குப் பொறுப்பும் இவர்களே.
பத்திரிகைத் துறை இப்போது செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று உள்ளது. காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களையும் ஊடகங்களையும் மாற்றிக்கொண்டாலும் தங்களுக்கே உரிய தனித்துவத்தையோ நெறிமுறைகளையோ விட்டுவிட்டு, அந்தத் தொழில்நுட்பங்களிடமும் புதிய ஊடகங்களிடமும் முற்றிலும் அடிபணிந்துவிடக் கூடாது. உள்ளடக்கத்தில் தரத்தையும் புதுமையையும் பின்பற்றும்வரை யாரிடமும் அடிபணியத் தேவையில்லை என்பதுதான் பத்திரிகை உலகின் தாரக மந்திரமாக இருக்க முடியும்.

பசுமை வல்லரசாகிறது ஜெர்மனி

புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை!

பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன்.
முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் பருவநிலை ஆகியவற்றின் பாதுகாப்புக்குப் பெரும் பங்களிப்பு. ஜெர்மனின் எரிசக்தித் துறையின் இலக்கே ‘மாசற்ற எரிசக்திக்கான விலை’ என்பதுதான். இதன் அடிப்படையில் ஜெர்மானியர்கள் சூரிய சக்தி அல்லது காற்று மின்சக்தி சாதனங்களை மிக எளிதாகத் தங்கள் வீட்டில் நிறுவி, அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்துக்குத் தகுந்தபடி அதிக விலையை அவர்கள் பெறுவார்கள்.
இந்த முறையில் ஆரம்ப காலத்தில் மிகவும் செலவு பிடித்தது என்பது மறுப்பதற்கில்லை. அதற்கான மானியங்கள் கோடிக் கணக்கான யூரோக்களைத் தொட்டன. எல்லோருடைய மின்கட்டணத்தின் மூலமும் இந்த மானியம் சரிசெய்யப்பட்டது. புதுப்பிக்கத் தக்க மின்சக்தியை அதிக அளவில் உருவாக்குவது மட்டுமே அதன் இலக்கு அல்ல; இந்த வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்து இந்த உற்பத்தி முறைகளை மையநீரோட்டமாக மாற்றுவதன் மூலம் உற்பத்தி செலவைக் குறைப்பதும் எல்லோருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாக இவற்றை மாற்றுவதும்தான் அடிப்படை நோக்கம்.
தற்போது, சூரிய மின்சக்தியின் கட்டணம் 80% அளவுக்குக் குறைந்திருப்பதாலும், காற்று மின்சக்தி 55% அளவுக்குக் குறைந்திருப்பதாலும் எரிபொருள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துடன் போட்டியிடும் நிலைக்குக் கரிமமில்லா மின்சக்தி இப்போது வந்திருக்கிறது.
வருமானத்துக்கான புதிய வாசல்
“சீன சூரிய மின்தகடு தொழில்துறைக்கு ஏற்றம் கொடுத்திருப்பதைத்தான் ஜெர்மனியின் மின்சக்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பெரும் வெற்றி என்று சொல்வேன்” என்கிறார் ரால்ஃப் ஃபூக்ஸ். ஜெர்மனி பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர் இவர். “பேரளவிலான சந்தையை நாங்கள் உருவாக்கினோம். அதனால், உற்பத்தி அதிகரித்ததோடல்லாமல் செலவும் பெருமளவு குறைந்திருக்கிறது” என்கிறார் அவர்.
உலகைக் காப்பாற்றும் முயற்சியாகத்தான் இந்த சாதனையை நாம் கருத வேண்டும். விலை குறைந்தவுடன் சாதனங்களை நிறுவுவதற்கான மானியங்களும் குறைந்திருக்கின்றன. சூரிய மின்சக்தி சாதனங்களைத் தங்கள் வீடுகளில் பொருத்தியிருக்கும் ஜெர்மானியர்களுக்கு அவற்றால் இப்போது வருமானமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான், நிலக்கரி கிடைக்கும் பிரதேசங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஜெர்மனியில் இன்று, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கூட்டுறவு அமைப்புகளும் தங்கள் கட்டிடங்களிலேயே தங்களுக்குத் தேவையான சூரிய / காற்று மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. “கிட்டத்தட்ட 1,000 மின்சக்திக் கூட்டுறவு அமைப்புகள் தனியாரால் தற்போது நடத்தப்படுகின்றன” என்கிறார் ஆற்றல் துறைப் பொருளியல் நிபுணர் கிளாடியா கெம்ஃபெர்ட்.
பசுமைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் ஒலிவியர் கிரிஷர் என்னிடம் இப்படிச் சொன்னார்: “என்னுடைய நண்பர் ஒருவர் தினமும் வீடு திரும்பும்போது வெயில் இல்லையென்றால், எனக்கு ‘ஹலோ’ கூடச் சொல்ல மாட்டார். நேராக அவர் வீட்டின் கீழ்த்தளத்துக்குச் சென்று மீட்டரைப் பார்த்து, அன்றைய தினத்தில் எவ்வளவு மின்சாரத்தைத் தான் தயாரித்திருக்கிறேன் என்பதை அவர் தெரிந்துகொண்டுதான் மறுவேலை. சொந்தமாகவே நீங்கள் உங்களுடைய மின்சாரத்தை உற்பத்திசெய்துகொள்ள முடியும் என்பதுதான் இதன் தாத்பரியமே. புதுவிதமான முன்னேற்றமில்லையா இது!” இதன் காரணமாக ஜெர்மனியின் நிலக்கரி உற்பத்தி/ அணுமின் உற்பத்தி நிறுவனங்களில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு நிறுவனமான ‘ஈ.ஆன்’ தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, அணுசக்தி ஆகியவற்றிலிருந்து கிடைக்கக் கூடிய கடைசிக் கட்ட லாபத்தைப் பிழிந்தெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் மீது கவனம் செலுத்துவதற்கான ஒரு நிறுவனமாகவும் அது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானியர்கள், “ஈ.ஆஃப்’, ‘ஈ.ஆன்’ என்று அந்த நிறுவனங்களைக் கிண்டலடிக்கிறார்கள்.
ஜெர்மனியில் மலிவான, அசுத்தமான பழுப்பு நிலக்கரி டன் கணக்கில் இன்னும் இருக்கிறது. சூரிய/ காற்று மின்சக்தியில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக அது பயன்படுத்தப்படுகிறது. தூய்மையான இயற்கை எரிவாயு மிகவும் செலவு பிடிப்பது என்பதாலும் அணுசக்தி கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படுவதாலும் இந்த நிலை. இதுதான் இப்போதைக்கு இருக்கும் பிரச்சினை.
தேச சக்தியின் நிலை
புதுப்பிக்கவல்ல ஆற்றலின் கதை இப்படியென்றால், தேச சக்தியின் நிலை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு, தனது எல்லையைத் தாண்டி எந்த அதிகாரத்தையும் செலுத்துவதில் ஜெர்மனிக்குள்ள தயக்கம் அதன் அரசியல் மனநிலையில் ஆழமாகப் பதிந்திருப்பது. ஜெர்மனியின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது அது நல்ல விஷயம்தான். ஆனால், அதை வைத்துக்கொண்டு தனது நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது.
ஜெர்மனிக்கு இன்று கூடுதல் வலு சேர்ந்திருக்கிறது. அதன் ஆட்சி நிர்வாகத் திறன், சட்டத்தின் ஆட்சியைத் திறம்பட நடத்துவது, நடுத்தர அளவு தொழில்களால் உருவான அதன் பொருளாதார வல்லமை போன்றவற்றால்தான் ஜெர்மனிக்கு இந்த சிறப்பியல்புகள் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் எதற்கும் இல்லாத தனித்துவம் இது.
ஐரோப்பா மீது அமெரிக்காவுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் உலகளாவிய ராணுவ சக்தி என்ற நிலையின் கடைசி எச்சங்களிலிருந்தும் பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிச் செல்கிறது. பிரான்ஸும் இத்தாலியும் பொருளாதாரத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. நேட்டோ உறுப்பினர்கள் பலர் தங்கள் நாடுகளின் ராணுவங்களுக்கான செலவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இன்னும் அதிக அளவிலான தலைமைப் பொறுப்பை ஜெர்மனி ஏன் தவிர்த்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்ய ஊடுருவலுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கையாக ஜெர்மனியின் பொருளாதாரத் தடை அமைந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மத்தியத் தரைக்கடல் பிரதேசத்தில் அகதிகளின் வருகை வெள்ளம்போல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து தகுந்த கடல் வழி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஜெர்மனி வினையூக்கியாகச் செயல்பட வேண்டும்.
ஐரோப்பாவின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது ஜெர்மனியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் இந்தப் பிரச்சினையை இப்படி முன்வைத்தார்: “பெரிய அளவில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதே நேரத்தில் ஜெர்மனியின் தலைமையை ஏற்பதில் மற்ற நாடுகள் எந்த அளவுக்குத் தயக்கம் காட்டுகின்றன என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம் - எனவே, இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் வழியாகத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.”
எனது கணிப்பு இதுதான்: ஜெர்மனிதான் ஐரோப்பாவின் பசுமைமிகு, சூரியசக்தி சார்ந்த முதல் வல்லரசாக ஆகும். இந்த இரண்டு பண்புகளையும் ஒரே நாட்டுக்கு உரித்தாக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். அவர்கள் நிச்சயமாக இப்படித்தான் ஆகப்போகிறார்கள், பாருங்கள்!
- © ‘தி நியூயார்க் டைம்ஸ்’, 
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

ஜான் நாஷ் - A Beautiful Mind


நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார்.
"A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார்.
Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நாஷ் செய்துக்காட்டியிருக்கும் ஆழமான ஆய்வுப்பணியும் அதனால் கிடைத்திருக்கும் விளக்கங்களும் அவருக்குப்பிறகான பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக நின்று பயன்படும் என்று அவர் பணிபுரிந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புத்திசாலித்தனமான, பகுத்தறிந்து முடிவெடுக்கவல்லவர்கள் தமக்கிடையிலான மோதலின்போதும் ஒத்துழைப்பின்போதும் செயற்படும் விதங்கள் மற்றும் எடுக்கும் முடிவுகளுக்குள் பொதிந்திருக்கும் கணித சூத்திர மாதிரிகளின் அடிப்படைகளை புரிந்துகொள்ள உதவும் அல்லது அவற்றை விளக்கும் கணித கணக்கீட்டு சூத்திரமே Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அந்த துறையின் பிதாமகராக ஜான் நாஷ் வர்ணிக்கப்படுகிறார்.
*****************
பொருளாதார அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற கணிதவியல் மேதை ஜான் நேஷ் கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் டர்ன்பைக் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் விபத்தில் அவரும் அவரது மனைவி அலிசியாவும் (82) உயிரிழந்தனர்.
ஜான் நாஷ் 1928-ம் ஆண்டும் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் பிறந்தார். நாஷ் ஈகுவிலிபிரியம் (Nash Equilibrium) அதாவது கேம் தியரி (Game theory) என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நேஷ் மேற்கொண்ட ஆய்வுப் பணி பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக பயன்படுகிறது. 1994 ஆம் ஆண்டு அவருக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பேரனாய்ட் ஸ்கிஷோஃப்ரெனியா என்ற நோயால் பெரும் பாதிப்புக்குள்ளாகி மீண்ட ஜான் நாஷ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட "ஏ பியூடிஃபுல் மைண்ட்" (A Beautiful Mind)என்ற திரைப்படம், ஆஸ்கர் விருது வென்றதுடன் உலகப் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 மே, 2015

Famous Life Path 11's

The Life Path 11 has the potential to be a source of inspiration and illumination for people. 
*********************
Famous Life Path 11's
Al Gore, Bill Clinton, Colin Powell, Jackie Kennedy, Michael Jordan, Prince Charles, Robert Monroe, Ronald Reagan, Rose Kennedy, Rush Limbaugh, Terri Irwin, Tim McGraw
**********************

20-July-1982 : Life path number : 11

As a Life Path 11, you possess an inordinate amount of energy and intuition. There is so much going on in your psyche that you are often misunderstood early in life, making you shy and withdrawn. You have far more potential than you know. You galvanize every situation you enter. You inspire people, but without your conscious effort. Energy seems to flow through you without your controlling it. This gives you both power and sometimes emotional turmoil. 

You are a channel for information between the higher and the lower, between the realm of the archetype and the relative world. Ideas, thoughts, understanding, and insight - all of these can come to you without your having to go through a rational thought process. There seems to be a bridge, or connection, between your conscious and unconscious realms, attuning you to a high level of intuition through which even psychic information can flow. All of this amounts to a great capacity for invention. Many inventors, artists, religious leaders, prophets, and leading figures in history have had the 11 prominent in their chart.

Because you are so highly charged, you experience the consequences of a two-edged sword. You possess great abilities, but indulge in much self-reflection and self- criticism. You often feel highly self-conscious. You are aware on some level that you stand out. Even when you try to blend with your environment, you often feel conspicuous, alien, and out-of-place. 

You Must Develop Yourself

You are blessed with a message, or a specific role to play in life. But you must develop yourself sufficiently to take full advantage of that opportunity. Until that time, your inner development takes precedence over your ability to materialize the great undertaking you were chosen to perform. Consequently, 11s seem to develop slowly, but they simply have more to accomplish in their evolution than the average person. Thus, your real success does not usually begin until maturity, between the ages of 35 and 45, when you have progressed further along your path.

Your Life Path Challenges

You may often be frustrated, largely because you have extremely high expectations of yourself. But these expectations can be unrealistic, and can prevent you from accomplishing anything. You can be very impractical, envisioning a skyscraper when all that was necessary was a two-story house. 

You may also suffer from bouts of confusion and lack of direction. This gives rise to loss of confidence and the onset of deep depression. The cause of these emotional problems is your lack of understanding of your own sensitivity and potential. Your desire to achieve some great ambition is enormous. However, a lack of confidence in your own ability to realize this dream may cause you much frustration. You sense the enormous potential you possess, which requires equally enormous confidence in your ability to materialize your dream. Confidence is the key that unlocks your potential. 

Stay Calm

On a strictly physical level, you must protect your nervous system, which is inordinately vulnerable to stress because of your acute sensitivity. Depression is often the result of long periods of stress that have gone unrelieved. Seek out peaceful and harmonious environments, relaxing music, and follow a healthful diet in order to restore balance and peace. As an 11 Life Path, you are a highly charged version of the 2 and possess many of the characteristics and talents of that number.

You can be extremely diplomatic and tactful. You are also patient and cooperative. You work well with groups and somehow find a way of creating harmony among diverse opinions. You enjoy music and poetry and require a harmonious environment. You have an eye for beauty and a fine sense of balance and rhythm. 

You Are Sensitive

You have healing capabilities, especially in such fields as massage, acupuncture, physical therapy, and counseling. You are a sensitive and passionate lover; your perceptiveness makes you aware of your partner's needs and desires, which you are able to fulfill with almost magical delicacy. However, when you feel you have been mistreated or jilted, you can react with devastating power, sometimes using personal criticisms vindictively.

You are a fine companion and possess a good sense of humor. When you have found your niche in life and begun to realize your true potential, your rewards will more than compensate for your trials earlier in life.
Content courtesy of Hans Decoz. Copyright protected.