வியாழன், 23 அக்டோபர், 2014

ஜோகோவி - இந்தோனேசியாவின் ஏழாவது அதிபர் ஜோகோ விடோடோ (53)

ஜோகோவி’ என்று மக்களால் அழைக்கப்படும் இந்தோனேசியாவின் ஏழாவது அதிபர் ஜோகோ விடோடோ (53) பற்றி இங்குள்ள ஊடகங்கள் குறிப்பிடும்போது, ‘இந்தோனேசியாவின் நரேந்திர மோடி’ என்று வர்ணிக்கின்றன. காரணம், இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் பல கலாச்சார ஒற்றுமைகள் இருப்பதுபோல், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள்தான்.
இருவருமே அரசியல் பின்னணி இல்லாத எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். மோடிக்கு டீக்கடை என்றால், ஜோகோவிக்கு மரச் சாமான் கடை. இருவருமே முதலில் ஒரு மாநிலத் துக்குள் அரசியல் செய்து தங்கள் ஆளுமையை நிரூபித்துவிட்டு அதன்பிறகு தேசிய அரசியலில் அதிரடியாக அடியெடுத்து வைத்த வர்கள். அவ்வாறு அடியெடுத்து வைத்த முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்றனர். அதுவும் பல ஆண்டுகளாக நாட்டில் ஆழமாக வேரூன்றிய அரசியல் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி பதவியில் அமர்ந்துள்ளனர் மோடியும் ஜோகோவியும்.
ஜோகோவியின் அசுர வளர்ச்சி
எளிய குடும்ப பின்னணியைக் கொண்ட ஜோகோவி இந்தோனேசி யாவின் மத்திய ஜாவா மாகாணத் தின் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந் தார். வனவியலில் கல்லூரிப் பட்டப் படிப்பை முடித்தவுடன், மரச்சாமான் விற்கும் தொழில் நடத்திவந்தார். தொழில்முனைவராக ஏற்றம் கண்ட ஜோகோவி; நண்பர்களின் உதவியுடனும், இந்தோனேசிய ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையு டனும் 2005-ஆம் ஆண்டு, தாய் நகரமான சோலோவில் மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நகரச் சீரமைப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜோகோவி, மக்களின் பேராதரவுடன், இரண்டாம் முறையாக ‘சோலோ’ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயராகத் தனது பதவிக்காலம் முடியும் முன்பாகவே இந்தோனே சியத் தலைநகர் ஜகார்த்தாவின் கவர்னர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிகண்டார்.
எதிர்நோக்கும் சவால்கள்
ஜகார்த்தா மக்களின் நற் பெயரால் பிரபலமடைந்த ஜோகோ வியை அதிபராகப் போட்டியிட இந்தோனேசிய ஜனநாயகக் கட்சி பரிந்துரைத்தது. தேர்தல் சமயத்தில், எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தியே அவர் தனது பிரச்சாரங்களை மேற்கொண்டார். அந்த மக்களின் பேராதரவோடு அதிபர் தேர்தலில் பெரு வெற்றியை ருசித்திருக்கிறார்.
பெரும்பாலும் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்தோனேசியாவின் அரசியல் கட்டமைப்பை ஜோகோவி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை உலக நாடுகளே கூர்ந்து கவனித்து வருகின்றன. திங்கள்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில், “நாட்டு மக்களின் நலம் கருதி, கட்சி வேறுபாடுகளின்றி, ஒற்றுமையுடன் நாம் பணியாற்றவேண்டும்!” என்று ஜோகோவி கூறி இருப்பது, மறைமுகமாக ராணுவ தலையீடு களுக்கு விடப் பட்டுள்ள எச்சரிக்கை யாகவே பார்க்கப்படுகிறது.
வீழ்த்தப்பட்ட இரும்புக் கை!
இந்தோனேஷியா, சுமார் முப்பது ஆண்டுகள் சுகார்த்தோ என்ற ராணுவ அதிகாரியின் இரும்புப் பிடியில்தான் ஆளப்பட் டது. சுகார்த்தோவின் சர்வாதிகார ஆட்சியில் அரசியல் கட்டுக்கோப் புடன், பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது.
அதே சமயம் கட்சிக்குள் பரவிய ஊழல் காரணமாக சுகார்த் தோவின் சர்வாதிகார ஆட்சி 1998ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகான தேர்தல்கள் அனைத்தும் ஜனநாயக முறையில் தான் நடந்தன. ஆனாலும், ஜனநாயக ஆட்சி முறைக்கான இந்த மாற்றம் ஒரு கண்துடைப்பாகவே பார்க்கப்பட் டது. காரணம், அரசாங்கம் தொடர்ந்து சுகார்த்தோ வின் நெருங் கிய ராணுவத் தலைவர் களின் கட்டுப் பாட்டில்தான் இயங்கி வந்தது.
நடந்து முடிந்த அதிபர் தேர்த லில், ஜோகோவியை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியாந் தோவும்கூட மறைந்த சுகார்த்தோ வின் முன்னாள் மருமகன்தான். அதனால்தான் ஜோகோவியின் இந்த வெற்றி உண்மையான ஜனநாயக வெற்றியாக நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது.

சாதாரண ஸ்டீவன், டைனமோவாக - மேஜிக் மன்னன்

இரவு நேரம். கங்கை நதியில் ஏற்றிய விளக்குகள் மிதந்து செல்வதைப் பார்த்தபடி கரையில் அமர்ந்திருக்கிறார்கள் மக்கள். திடீரென்று ஓர் உருவம் வந்து, தன்னைக் கவனிக்கச் சொல்கிறது. அடுத்த சில நொடிகளில் கங்கை முழுவதும் தீபங்கள் ஒளி வீசியபடி மிதந்து செல்கின்றன! நிகழ்ச்சியின் முன்னோட்டத்திலேயே அசரடித்த மேஜிக் கலைஞர் டைனமோவின் அதிரடிகள் ஹிஸ்ட்ரி டிவியில் ஒளிபரப்பாகின்றன. இந்தியாவில் முதல்முறையாக டைனமோ நிகழ்த்திய புதிய சாதனை இது!
நம்மில் ஒருவர்
ஒல்லியான உருவம். நீல நிறக் கண்கள். பழுப்பு முடி. சாதாரண உடை. தலையில் தொப்பியோ, கையில் கோலோ கிடையாது. மேஜிக் கலைஞர்களுக்கே உரிய வசீகரிக்க வைக்கும் பேச்சும் கிடையாது. நம்மில் ஒருவராக வலம் வரும் டைனமோவுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்!
அப்படி என்னதான் செய்கிறார்?
அறைக்குள் இருக்கும் ஒரு காகிதப் பட்டாம்பூச்சியை எடுத்து ஊதினால், அறை முழுக்க ஏராளமான பட்டாம்பூச்சிகள் தங்கள் சிறகுகளை அடித்துப் பறக்கின்றன! இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியில் நடந்துசெல்கிறார்! வாய் குறுகிய பாட்டிலுக்குள் செல்போனை வைத்துவிடுகிறார். ஓடிவரும் தண்ணீரை அப்படியே பனிக்கட்டியாக மாற்றிவிடுகிறார்.
இரண்டு மீன்கள் உள்ள வாளியைக் கவிழ்த்தால், நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. கைகளை நீட்டியபடி, அந்தரத்தில் நிற்கிறார். ஒரே நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து எல்லோருக்கும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஒரு புத்தகத்தில் நாம் நினைக்கும் சில வார்த்தைகளை அப்படியே சொல்கிறார். சீட்டுக் கட்டுகளில் ஏராளமான வித்தைகளைச் செய்கிறார்…
தெருவுக்கு வந்த மேஜிக்
மற்றவர்களுக்கும் டைனமோவுக்கும் என்ன வித்தியாசம்?
பெரிய அரங்குகளில் நடத்தப்பட்ட மேஜிக் நிகழ்ச்சிகளைத் தெருவுக்குக் கொண்டு வந்தவர் டைனமோ. அதாவது அவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை; அவரே மக்களை நாடி வருவார்! அங்கே என்ன பொருள்கள் இருக்கின்றனவோ, அவற்றை வைத்தே மேஜிக் செய்துவிடுவார்! அவர் செய்த மேஜிக்கைப் பார்த்து, ஆச்சரியத்தில் உறைந்துபோயிருக்கும் சமயத்தில் அந்த இடத்தை விட்டு அமைதியாகக் கடந்துவிடுவார்.
அவர் சென்ற பிறகு, இது எப்படி, எப்படி என்று மக்கள் மூளையைக் கசக்கிக்கொள்வார்கள். உடலை இரண்டாக வெட்டுவது, தலை இல்லாமல் செய்வது போன்ற சற்றுக் கிலி ஏற்படுத்தும் மேஜிக் விஷயங்கள் இவரிடம் கிடையாது. எளிமையான விஷயங்களைக் கொண்டு அபாரமான மேஜிக் செய்வதுதான் டைனமோவின் சிறப்பு!
யார் இந்த டைனமோ?
32 வயதான டைனமோவின் இயற்பெயர் ஸ்டீவன் ஃப்ரேன். இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்ட் சொந்த ஊர். டைனமோவின் அப்பா சிறையில் இருந்தார். அம்மா இன்னொருவரைத் திருமணம் செய்து, 3 குழந்தைகளுடன் வசித்துவந்தார். சின்ன வயதிலிருந்தே டைனமோவுக்குச் செரிமானப் பிரச்சினை இருந்தது. அவரால் தேவையான அளவு சாப்பிட முடியாது. சாப்பிட்டால் வயிற்று வலியால் துடிக்க வேண்டியிருக்கும். இதனால் மற்ற குழந்தைகளைவிடக் குள்ளமாகவும் ஒல்லியாகவும் தோற்றமளிப்பார் டைனமோ. வீட்டில் பெரும்பாலும் தனிமையில் இருப்பார். வயிற்று வலி அடிக்கடி வந்து உயிரை வாங்கும். வெளியில் சென்றால், எல்லோரும் கிண்டல் செய்தே அவரை வதைப்பார்கள். ட்ரம்முக்குள் வைத்து, மலையிலிருந்து உருட்டி விட்டிருக்கிறார்கள். மிகக் கொடூரமான அனுபவமாக இப்பொழுதும் அதைச் சொல்கிறார் டைனமோ.
திருப்புமுனை
பிரச்சினைகளில் சிக்கியிருந்த டைனமோவை, மீட்க முடிவெடுத்தார் அவரது தாத்தா. மேஜிக் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார். முதலில் ஓர் ஆர்வத்தில் மேஜிக் கற்க ஆரம்பித்த டைனமோ, விரைவில் அதிலேயே மூழ்கிப்போனார்.
அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது, அவரது நோய், தனிமை, கிண்டல் போன்றவற்றை மறக்க வைக்கும் சக்தி இந்த மேஜிக்குக்கு இருந்தது! பள்ளியில் செய்து காட்டிய மேஜிக்குகளால் கிண்டல் குறைந்தது. அமெரிக்கா சென்றபோது, பாட்டி, பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார்.
பல்வேறு மேஜிக் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்க ஆரம்பித்த டைனமோ, தன்னுடைய எதிர்காலம் மேஜிக்தான் என்பதை முடிவு செய்தவுடன், படிப்பை விட்டுவிட்டார்.
உருவானது எப்படி?
சின்னச் சின்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கொண்டிருந்த டைனமோ, திடீரென்று ஒருநாள் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் இறந்து போனால், உலகம் தன்னை எவ்வாறு நினைவு வைத்துக்கொள்ளும் என்று யோசித்தார்.
உலகம் மறக்காத அளவுக்கு ஏதாவது செய்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தார். 6 மாதச் சிகிச்சைக்குப் பிறகு, திரும்பி வந்த டைனமோ, தன்னுடைய மேஜிக்குகளைத் தொகுத்து சிடியாக வெளியிட்டார். பலரது கவனத்தையும் அது ஈர்த்தது.
புகழ்பெற்ற மேஜிக் கலைஞர் ஹாரி ஹுடினியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் டைனமோவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த வித்தைகளைப் பார்த்த பார்வையாளர்கள், ‘டைனமோ’ என்று உற்சாகத்தில் கத்தினார்கள். ஸ்டீவன் டைனமோவாக மாறியது இந்த இடத்தில்தான்!
அரங்குகளில் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த டைனமோவை வீதிகளில் நிகழ்த்த வைத்தவை டிவி ஷோக்கள்தான். நான்கு வருடங்களாக முக்கிய சானல்களில் டைனமோவின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுவருகின்றன.
ஒரு லட்சம் பார்வையாளர்களுடன் ஆரம்பித்த டைனமோவின் ஷோ, இன்று உலகம் முழுவதும் ஒரு கோடியே 80 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது! மேஜிஷியன் இம்பாசிபிள் நிகழ்ச்சிக்காகப் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் டைனமோ. டைனமோவின் எளிமையும் திறமையும் எல்லோரையும் ஈர்த்துவிடுகின்றன.
டைனமோவின் ரசிகர்கள்
வில் ஸ்மித், ரஸ்ஸல் பிராண்ட், ரிச்சர்ட் பிரான்சன், லிண்ட்சே லோஹன், இளவரசர் சார்லஸ், டேவிட் பெக்ஹாம் ஆகியோர் அவரின் ரசிகர்களில் சிலர்.
“நான் செய்யும் தந்திரங்கள் சாதாரணமானவைதான். அதை விளக்க ஆரம்பித்தால், ஒரு நிமிடம் கூட உங்களால் கேட்க முடியாது. மேஜிக்கை ரசியுங்கள்; அதற்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்!” என்கிறார் டைனமோ.
“எல்லோருக்கும் இனிமையான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. எனக்கும் குழந்தைப் பருவம் அப்படித்தான் இருந்தது. ஆனால் எனக்குக் கிடைத்த மேஜிக் என்ற வாய்ப்பை நான் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். அதுதான் என் எதிர்காலம் என்று தீர்மானித்துக்கொண்டேன். பிறகு, அதில் வெற்றி பெற நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தேன். மற்றவர்களைவிட எந்த விதத்தில்
என்னை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கலாம் என்று யோசித்தேன். அவ்வளவுதான்! மற்றபடி நான் அசாத்தியமான காரியங்கள் செய்வதாக எப்பொழுதும் நினைத்ததில்லை. உழைப்பும் திறமையும் முயற்சியும் இருந்தால் யாரும் எந்தத் துறையிலும் உச்சத்தை அடைய முடியும்! இந்தச் சாதாரண ஸ்டீவன், டைனமோவாக மாறியது இப்படித்தான்!’’ என வெற்றிரகசியம் சொல்கிறார் இந்த மேஜிக் மன்னன்

செவ்வாய், 21 அக்டோபர், 2014

Nobel Prize Winner - France - Patrick Modiano

The world outside France wondered who Patrick Modiano was after the French author was awarded the Nobel Prize in literature last week. The 69-year-old author, who is well-known in France, a country where he has been often compared to Marcel Proust, has been largely unknown to non-French readers. This is because despite having written more than 30 novels and children’s books and screenplays, few of his works have been translated into English. But, as the Swedish Academy’s previous Permanent Secretary, Horace Engdahl, once said: “The purpose of the prize is to make them [writers] famous, not to tap them when they are famous.” Mr. Modiano’s work has stemmed mostly from the complexities of his childhood. His father was an Italian Jew who did not wear the yellow star when Jews were being deported, and instead came closer to organised crime gangs with ties to the Gestapo. His mother was a Flemish actress whose heart, as the writer once described, was so cold that it made her lapdog leap through the window to death. The French writer Clemence Boulouque told The New Yorker: “Modiano has returned again and again to the same themes: the pull of the past, the threat of disappearance, the blurring of moral boundaries, ‘the dark side of the soul.’” As for writing, as Mr. Modiano put it, “It’s something natural, it’s something that’s part of my life.”
In his writing career spanning almost 50 years, Mr. Modiano has shunned publicity and the media limelight, and like many of his works, has remained a mysterious character to his readers. This has led to the origin of the French term “modianesque”, used to describe a mysterious person or situation. In some of his interviews the writer has suggested that writing is not something that brings pleasure to him but is more of a burden from which he cannot set himself free. He compares it to driving in fog when one doesn’t know where one is going, but nevertheless one has to go on. Mr. Modiano’s work often deals with his Jewish origin and the period of Occupation. In a 2010 interview to France Today, Mr. Modiano said: “After each novel, I have the impression that I have cleared it all away … but I know I’ll come back over and over again to tiny details, little things that are a part of what I am. In the end, we are all determined by the place and the time in which we were born.” It is this quality that the Nobel Prize committee recognised, describing it as “the art of memory with which he has evoked the most ungraspable human destinies and uncovered the life-world of the occupation.” Unlike the detective Guy Roland in his best-known work, Missing Person, Mr. Modiano doesn’t have the luxury of losing his memory. But even if it had, he would always attempt to find it.  

முதலாளித்துவத்துக்கு எதிரான போரில் பொலிவியா

முதலாளித்துவத்துக்கு எதிரான போரில் பொலிவியாவைப் பின்பற்றுமா உலகம்?
லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஈவோ மொராலிஸ் 60% வாக்குகள் பெற்று மூன்றாம் முறையாக அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ஈவோ மொராலிஸ் பொலிவியாவின் பெரும்பான்மையான, ஆனால் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களிலிருந்து தோன்றிய முதல் அதிபர். பல காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பெருநிறுவன அசுரர்களும் பொலிவியாவைக் கொடிய சுரண்டலுக்கு உள்ளாக்கி, தங்கள் கைப்பாவை அரசுகள் மூலம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர். அந்த சகாப்தத்தை 2005-ல் முடிவுக்குக் கொண்டுவந்து, பெரும் மக்கள் ஆதரவுடன் மொராலிஸும், அவர் தலைமையிலான சோஷலிஸத்தை நோக்கிய இயக்கமும் வெற்றி கண்டன.
முந்தைய இருண்ட சகாப்தத்தில் பொலிவிய மக்கள் கொடும் இழப்புகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளானார்கள். அனைத்து வளங்களும் பெரும் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கப்பட்டன. நவதாராளமயம் (நியோலிபரலிஸம்) தலைவிரித் தாடியது. சந்தையின் மகிமை தாரக மந்திரமாக ஓதப்பட்டது. தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. ஏழ்மையும் கொள்ளையும் எல்லை மீறியபோது, மக்கள் இயக்கங்கள் வெடித்துக் கிளம்பின. தண்ணீருக்கான போராட்டம், எரிவாயுவைக் காப்பதற்கான போராட்டம் என்று நாடு கொதித்தது. அந்தக் கொந்தளிப்பின் குழந்தையாக, அதன் தலைவராக மொராலிஸ் எழுந்தார்.
2009-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் பிரகடனப் படுத்தப்பட்டது. அதில் இந்தியாவையும், மற்ற பல நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் சித்தாந்தமான நவதாராளமயம் கடுமையாக எதிர்க்கப்பட்டு, பொருளா தார நிர்வாகத்தில் அரசுக்குத் தலைமை ஸ்தானம் அளிக்கப்பட்டது. சமூக, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வலியுறுத்தப்பட்டன. ஏழ்மை ஒழிப்புக்கான திட்டங்கள் முன்னுரிமை பெற்றன.
மக்களுக்காகத்தான் நாடு
கடும் ஏழ்மையிலும், எழுத்தறிவின்மையிலும் ஆழ்ந்து கிடந்த நாடு பொலிவியா. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏழ்மை ஒழிப்பை முன்னிறுத்தி, வியத்தகு வளர்ச்சியையும், அனைத்து மக்களும் நலனடையும் வகையிலான ஜனநாயகத்தையும் நிறுவி அந்த நாடு வெற்றி கண்டிருக்கிறது. சோஷலிஸத்தை நோக்கித் திரும்பிய புதிய எழுச்சிப் பாதையினால்தான் இந்த வரலாற்றுச் சாதனை சாத்தியமாயிற்று. மொராலிஸின் ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2006-ல் இருந்ததைவிட, 2012-ல் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அதனினும் மகத்தானது ஏழ்மை ஒழிப்பில் அதன் சாதனை. ஏற்றத்தாழ்வுகளும் குறைந்து வருகின்றன. சமுதாய ஏணியின் உச்சியில் இருந்த 20 சதவீதத்தினரின் கையில் இருந்த தேச வருமானம் குறைந்து, கீழ்த்தட்டில் உள்ள 20 சதவீதத்தினரின் பங்கு அதிகரித்திருக்கிறது. மிகுந்த ஏழ்மையில் வாடிய மக்களுக்கு நாட்டின் செல்வத்தின் கணிசமான பகுதியை மாற்றி அளிப்பதில் பொலிவியா வெற்றி கண்டிருக்கிறது என்று ஐநா சபையின் வளர்ச்சி அமைப்பு (யூ.என்.டி.பி.) பாராட்டுகிறது. பணவீக்கம் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, லத்தீன் அமெரிக்காவிலேயே குறைந்த பணவீக்கம் உடைய நாடாக பொலிவியா மாறியிருக்கிறது.
இந்தப் பொருளாதார வளர்ச்சியின் முதல் ஆயுத மாக அமைந்தது அரசுடமையாக்கும் கொள்கை. பொலிவியாவின் பெரும் வளமான இயற்கை எரிவாயு அதற்கு முன் அமெரிக்க, உள்ளூர் பெருமுதலாளிகளின் வசம் இருந்தது. அது 2006-லிருந்து படிப்படியாக அரசுடமையாக்கப்பட்டது. விளைவு: உற்பத்தி இரு மடங்குக்கும் அதிகமாயிற்று. தொடர்ந்து, இத்தாலிய முதலாளிகளின் கையிலிருந்த தொலைத்தொடர்பு சாதனத் தொழில், தகரம், துத்தநாகம் போன்றவற்றின் உற்பத்தி அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.
ஏற்றம் பெறும் வாழ்க்கை
அத்துடன், அடித்தட்டு மக்கள் அனைவரும் பயனடையும் பிரம்மாண்டமான நலத்திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ வசதிக்கும், பிரசவத்துக்குப் பின் தாய்-சேய் இருவர் நலனுக்குமான பண உதவி வழங்கியது; கல்விக்கான பெரும் நிதி ஒதுக்கீடு செய்தது; தோழமை நாடுகளான கியூபா, வெனிசுலாவின் உதவி யுடன், அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வி பெறும் திட்டங்கள் உருவாக்கியது; 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கண்ணியமான ஓய்வூதியம் வழங்கியது ஆகியவை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத முன்னேற்றத்தைக் கொண்டுவந்தன. சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட நிலப் பட்டாக்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்தது. அதேபோல் பெண்களுக்கு பொலிவியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் பாராட்டியாக வேண்டும். நாடாளுமன்றத்தில் 28% பெண்கள்; செனட்டில் 47% பெண்கள்; அமைச்சரவையில் பாதி (10 பேர்) பெண்கள்; அதில் மூவர் பழங்குடியினர்.
முழு வேலையுடைமை
கல்விக்காக மொராலிஸ் மேற்கொண்ட இயக்கம் பெரும் வெற்றி கண்டிருக்கிறது. பொலிவியா எழுத்தறிவின்மையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. அரசு பிரம்மாண்டமான கட்டமைப்புத் திட்டங்களைப் பொதுத்துறையின் வழியாக மேற்கொண்டதன்மூலம் பொலிவியா அநேகமாக முழு வேலையுடைமையை அடைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. இது மக்கள் நலனுக்காகப் பெருமளவு செலவு செய்யும் அரசு, நமக்கெல்லாம் உபதேசம் செய்வதைப் போல் சிக்கனம் பிடிக்கும் அரசு அல்ல. இத்தனைக்குப் பின்னும், இன்று உலகிலேயே அதிக சதவீதம் நிதி சேமிப்பு கொண்ட நாடு என்று பன்னாட்டுச் செலா வணி நிதியம் (ஐ.எம்.எஃப்) பொலிவியாவுக்குச் சான்றிதழையும் பாராட்டுதலையும் வழங்கியிருக்கிறது. ஆனால், பொலிவிய அரசு அந்த அமைப்பைச் சந்தேகத்துடன் பார்த்து, இன்னும் அதிகமாகச் செலவழிக்கலாமோ என்று யோசித்துவருகிறது. இவை அனைத்துமாகச் சேர்ந்து, அரசு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
முதலாளித்துவ இந்தியா
இந்தியா இன்று கடைப்பிடிக்கும் பாதை இதற்கு எதிர்மறையானது என்பது சொல்லத் தேவையில்லை: கடைந்தெடுத்த நவதாராளமயம், அனைத்தும் தனியார் மயம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றல், அந்நிய, உள்நாட்டுப் பெரும் முதலாளிகளின் தேவைக்கேற்ற கொள்கைகள், வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி, உலகிலேயே அதிக அளவில் தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, சுகாதார அமைப்புகள், அரசின் முதலீட்டையும், செலவையும் குறைக்கும் சிக்கனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
லத்தீன் அமெரிக்கா முழுவதையும் தன் உடும்புப் பிடியில் வைத்திருந்த அமெரிக்காவின் பெரும் எதிர்ப்பு களுக்கு இடையில்தான் பொலிவியாவின் சாதனைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமீபத்தில் நடந்த தேர்தலிலும் மொராலிஸை எதிர்த்த வேட்பாளர், அமெரிக்காவின், பெரும் முதலாளிகளின் பிரதிநிதியாகத்தான் போட்டி யிட்டார். நாட்டின் பல வளங்களும் நிறுவனங்களும் இன்னும் பெரும் முதலாளிகளின் கையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நாட்டின் ஊடகங்கள் இன்னும் வலதுசாரி சக்திகளான பெரும் முதலாளிகளின் கையில் தான் இருக்கிறது. அவையெல்லாம், மொராலிஸுக்கு எதிரான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. ஆனால், பெருநிறுவன ஊடகங்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரத்துக்கு மக்கள் வீழ்ந்துவிடுவதில்லை.
கொடிய எதிரி
வட அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கொடும் கொலைப் பிடியிலிருந்தும், பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்தும் தப்பியதால்தான், தன் நாட்டை உயர்த்த முடிந்தது என்று மொராலிஸ் கூறுகிறார். “முதலாளித்துவம் மனித சமுதாயத்தின், சுற்றுச்சூழலின், இந்த பூமியின் கொடிய எதிரி என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று மொராலிஸ் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.
அத்துடன், பொலிவியாவின் மிகப் பெரும் பலம் லத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றிடையே தோன்றி யிருக்கும் அற்புதமான ஒருமைப்பாடும் தோழமையும். இன்று கியூபா, வெனிசுலா, பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, சிலி உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இடதுசாரி புரட்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. தங்களுக்குள்ளாக வலிமைமிக்கக் கூட்டு அமைப்பையும் அந்த நாடுகள் உருவாக்கியுள்ளன. அதன் ஒரு அத்தியாயம்தான் பொலிவியாவின் எழுச்சியும், மக்கள் ஆதரவு அரசியலும். மொராலிஸ் வணங்கும் முன்னோடிகள் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும், சமீபத்தில் மறைந்த வெனிசுலாவின் சாவேஸும்.

புகழ் பெற்ற அரசியல் சிந்தனையாளரும், உலக ஆன்மாவின் குரல் என்று போற்றப்படுபவருமான நோம் சாம்ஸ்கி சொல்கிறார், “பொலிவியா தனது சிறந்த முன்னுதாரணத்தினால், உலக முதலாளித்துவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகியிருக்கிறது.” உலக முதலாளித் துவத்துக்கு அச்சுறுத்தல்; நம்மைப் போன்ற நாடுகளின் மக்களுக்கு வழிகாட்டி. 

Black Money

பாஜகவின் அரிதாரம் கொஞ்சம்கொஞ்சமாகக் கலைய ஆரம்பித்திருக்கிறது. ‘கருப்புப் பணத்தை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம்’ என்றெல்லாம் தேர்தல் சமயத்தில் பாஜக தலைவர்கள் முழங்கியபோது, இந்தியாவுக்கு ஒரு பொன் விடியல் வரப்போகிறது என்ற உணர்வையே நாடு முழுவதும் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், கருப்புப் பண விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம் இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. “இரட்டை வரிவிதிப்புத் தடுப்பு ஒப்பந்தத்தைப் பிற நாடுகளுடன் செய்துகொண்டிருக்கிறோம்; அந்த நாடுகளின் வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவதை அவை கடுமையாக ஆட்சேபிப்பதால் இப்போதைக்குக் கூற முடியாமல் இருக்கிறோம்” என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் பதில் அளித்திருப்பதை என்னவென்று சொல்வது?
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுவருவதுகுறித்து அப்போதைய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியும் கடுமையான கேள்வி களை எழுப்பினார்கள். பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 150 நாட்களுக்குள் கருப்புப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவோம் என்றெல்லாம் தேர்தல் காலத்தில் பாஜக தலைவர்கள் முழங்கினார்கள். இப்போதோ மழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
“இரட்டை வரிவிதிப்புத் தடுப்பு ஒப்பந்த வாசகங்களைத் தயாரித் தவர்கள் வெளியுறவுத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்குச் சட்டங்களை இயற்றுவது தொடர்பாக அனுபவமோ பயிற்சியோ இருந்திருக்காது. எனவே, அந்த வாசகங்களைச் சரியாக மாற்றியமை யுங்கள்” என்று மத்திய அரசுக்குக் குட்டுவைத்துவிட்டு, உச்ச நீதிமன்றம் விசாரணையை இந்த மாதம் 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்திருக்கிறது.
கருப்புப் பணம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்த்தாலே, நமது ஆட்சியாளர்களைப் பற்றி நாம் எவ்வளவு அப்பாவித்தனமாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது தெரிந்துவிடும். கருப்புப் பணம் என்பது கணக்கில் காட்டப்படாத, வருமான வரி செலுத்தாத பணம். தொழிற்சாலை உற்பத்தி மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ, கள்ளக்கடத்தல், போதை மருந்துக் கடத்தல் போன்ற சமூகவிரோதச் செயல்கள் மூலமோ, அரசு கொள்முதல், ஒப்பந்தங்கள் தொடர்பான பேரங்கள் மூலமோ, லஞ்சம் மூலமோ பெறப்படும் தொகைதான் கருப்புப் பணமாகிறது. அரசை ஏமாற்றும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பெரும் தொழிலதிபர்களும்தான் கருப்புப் பண சாம்ராஜ்யத்தின் அதிபதிகள். கட்சி வேற்றுமையின்றிக் கருப்புப் பணத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது இந்திய அரசியல் சூழல். முக்கியமாக, கருப்புப் பணமின்றி இந்தியாவில் தேர்தல்களே நடக்க முடியாது என்ற சூழல் உருவாகியிருக்கிறது. அப்படியிருக்கும்போது கருப்புப் பணக்காரர்களின் பட்டியல் எப்படி வெளிவரும்? எனவே, பாஜகவின் பதுங்கலில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கருப்புப் பணம் தொடர்பாகப் பொதுநல வழக்கு தொடுத்த ராம் ஜெத்மலானி, இந்தியர்களின் கருப்புப் பண மதிப்பு 75 லட்சம் கோடி ரூபாய் என்கிறார். உண்மையில், பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தின் மதிப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். பொருளாதார நெருக்கடி என்று ஐந்துக்கும் பத்துக்கும் நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சியாளர்கள் கருப்புப் பண விவகாரத்தில் பசப்புவது மக்களுக்கு இழைக்கும் துரோகம் அல்லவா?

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

டீசல் விலை

நீண்ட காலத்துக்குப் பிறகு, டீசல் விலை கணிசமாகக் குறைந்திருக்கும் செய்தி முகத்தில் புன்னகையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே, முதுகில் வலியே தெரியாமல் மயக்க மருந்து தடவிய கத்தியைச் செருகியிருக்கிறது மோடி அரசு.
சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை சரிந்துவிட்ட நிலையில், லிட்டருக்கு ரூ. 3-க்கு மேல் குறைத்து, அந்த மகிழ்ச்சியில் நுகர்வோர் ஆழ்ந்திருக்கும்போதே, டீசல் விலைக் கட்டுப்பாட்டு மீதான தன்னுடைய அதிகாரத்தைக் கைவிட்டிருக்கிறது.
அதாவது, பெட்ரோல் விலையைப் போலவே இனி, டீசல் விலை நிர்ணயத்திலும் அரசு தலையிடாது. அதாவது, அரசு மானியம் தராது; எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலை.
மன்மோகன் சிங் அரசு தொடங்கிய ‘சீர்திருத்தம்’ மோடி அரசிலும் தொடர்கிறது. மழை பெய்யும்போது வீட்டுச் சாக்கடையைத் திறந்து வீதியில் விடும் சாமர்த்தியம்தான் இது. அமெரிக்கப் பயணத்தின்போது, ‘பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்’ தொய்வில்லாமல் தொடரும் என்று மோடி வாக்குறுதி அளித்ததன் தொடர்ச்சியாக இதையெல்லாம் பார்க்கலாம்.
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மானியங்களுக்கான மொத்த செலவு ரூ. 2,46,000 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் மட்டும் ரூ.63,500 கோடி. பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாடு நீக்கத்தால் அரசின் இந்த மானியச் செலவு கணிசமாகக் குறையும்; நிதிப் பற்றாக்குறையும் கணிசமாகக் குறையும் என்று சொல்கின்றன நிதித் துறை வட்டாரங்கள்.
தன்னுடைய பெட்ரோலியத் தேவையில் ஏறத்தாழ 80% அளவுக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் ஒரு நாடு, தன்னுடைய மானியத்தில் பெரும் பகுதியை பெட்ரோலியப் பொருட்களுக்காக அளிக்கும் ஒரு நாடு இது தொடர்பாகச் சீர்திருத்தங்களை யோசிப்பது அவசியமானது. ஆனால், சீர்திருத்தம் என்பது மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு எஸ்யுவி ஆடம்பர காரில் செல்லும் பணக்காரருக்கும் பொதுமக்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச்செல்லும் பேருந்து - லாரிகளுக்கும் ஒரே விலையில் பெட்ரோல் - டீசல் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?
அதிக அளவு பெட்ரோல் தேவைப்படும் வெளிநாட்டு அதிவேக மோட்டார் சைக்கிளில் தன்னுடைய பந்தாவுக்காகச் சுற்றும் ஒரு இளைஞர், நாட்டின் எண்ணெய் தேவைச் சுமையை மேலும் அதிகரிக்கிறார். நகரத்திலிருந்து எல்லாப் பொருட்களையும் அள்ளித் திணித்துக்கொண்டு மொபெட்டில் கிராமம் நோக்கிப் பயணிக்கும் ஒரு விவசாயி அந்தச் சுமையை ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும்? இந்த மாதிரி கேள்விகளிலிருந்து ஒரு மக்கள் நல அரசு எப்படித் தப்பித்துக்கொள்ள முடியும்?
மானியம் என்பது பிச்சை அல்ல; தன்னுடைய கொள்கைகளால் மெலிந்த மக்களுக்கு ஓர் அரசு தரக்கூடிய ஆதரவு. ஒருவகையில் அதை இழப்பீடு என்றும்கூடச் சொல்லலாம். அடுத்த இலக்கு என்ன? உலக வர்த்தக நிறுவனம் வலியுறுத்தும் உணவு மானியச் செலவுக் குறைப்பா?
காங்கிரஸின் தொடர் வீழ்ச்சியைக் கொண்டாடும் மோடி அரசும் பாஜகவும், காங்கிரஸை இந்த அளவுக்கு மக்கள் வெறுப்பதற்கு அது முன்னெடுத்த இப்படியான ‘சீர்திருத்தக் கொள்கைகள்’தான் காரணம் என்பதை உணர வேண்டும்.
*************************** 
The 2014-15 Budget had projected a subsidy burden of Rs.2,46,000 crore, of which petroleum subsidy accounted for Rs.63,500 crore. Thanks to falling oil prices in the last few months and deregulation of diesel now, the petroleum subsidy is expected to be substantially lower than the budgeted level, thus easing the burden on the fisc.
*************************
2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி இரு மாதங்களுக்கு முன்பு வரை மொத்தம் 31 முறை ரூ. 30.10 அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனாலும், கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாலும் டீசல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பு நீங்கி லாபம் கொட்டத் தொடங்கியது. அதன்பயனாகத் தான் டீசல் விலையை 70 மாதங்களில் முதன்முறையாக மத்திய அரசு குறைத்துள்ளது.
அதேவேளையில், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டது. 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.18 மானியம் வழங்கப்பட்டுவந்தது. இந்த மானியம் இப்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இனியும் டீசலுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று நினைத்ததால் தான் டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு, விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதன்மூலம் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறது.
டீசல் விலை உச்சத்தில் இருக்கும்போது விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால், சரியான நேரத்திற்கு காத்திருந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நேரத்தில் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக மக்கள் நலனுக்கு உகந்த முடிவல்ல.
டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக 2008 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற அளவை எட்டியது.
இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்கு உயர்ந்தால், இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.26 வரை அதிகரிக்கும். அவ்வாறு உயர்ந்தால் பாசனத் தேவைக்காக டீசலை நம்பியிருக்கும் விவசாயிகளும், விசைப்படகுகளுக்காக டீசலை நம்பியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும்.
எனவே, டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்றவகையில் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்கள் நலன் கருதி உள்நாட்டில் டீசல் விலையை உயர்த்தாமல் தவிர்க்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
வைகோ வலியுறுத்தல்
இந்த விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "டீசல் விலை அதிகரிக்கும்போது, அதன் தொடர் விளைவாக பண வீக்க விகிதம் உயர்வதும், விலை வாசி ஏறுவதும் மக்கள் மீது சுமையை ஏற்றுகிறது. எனவே மத்திய அரசு, மக்கள் நலன் கருதி டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்திய ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ திட்டத்தை, பாரதிய ஜனதா அரசு வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. முந்தைய அரசு சமையல் எரிவாயு உருளைகள் வழங்குவதற்கு ஆதார் அடையாள அட்டையும், வங்கிக் கணக்கும் அவசியம் என்று அறிவித்தது.
சமையல் எரிவாயு உருளைகளை மானியம் இல்லாமல் விலை கொடுத்து வாங்கிக் கொண்டால், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் மத்திய அரசே மானியத் தொகையை செலுத்திவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், இத்திட்டம் நடைமுறையில் தோல்வி கண்டது. மேலும், சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை படிப்படியாக ரத்து செய்யவே காங்கிரஸ் கூட்டணி அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. தற்போது மோடி அரசும் ஆதார் அட்டைக்குப் பதில், வங்கிக் கணக்கு இருந்தாலே போதும், மத்திய அரசு மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிடும் என்று கூறுகிறது.
உலக வர்த்தக நிறுவனமும், உலக வங்கியும் இதுபோன்ற மானியங்களை இரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால், எதிர்காலத்தில் சமையல் எரிவாயு மட்டுமல்லாமல், பொது விநியோக முறையில் வழங்கப்பட்டு வரும் மண்ணென்ணெய், அரிசி, கோதுமை போன்ற பொருள்களுக்கும், உர மானியத்திற்கும் மத்திய அரசின் நேரடி பணப் பட்டுவாடா திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். இதனால், அரசின் மானியங்கள் முழுமையாக விலக்கப்பட்டுவிடும் நிலைமை ஏற்படும்.
எனவே, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள முறையில் மானிய உதவியுடன் சமையல் எரிவாயு உருளைகள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

கருப்புப் பணம்

வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டுக்கு தவறான தகவல் அளித்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்ற வாக்குறுதி அளித்த பாஜக இப்போது முற்றிலும் பல்டி அடிக்கிறது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட 1995-ம் ஆண்டு இந்தியாவும் ஜெர்மனியும் கையெழுத்திட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தடுக்கிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருப்பதை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்கள் லீச்டென்ஸ்டைன் நாட்டிலுள்ள வங்கிகள் மற்றும் சுவிட்சர்லாந் திலுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி ஆகியவற்றில் இருந்து கிடைத்துள்ளன.
ஜெர்மனி அரசு அளித்த லீச்டென்ஸ்டைன் நாட்டிலுள்ள வங்கிகள் தொடர்பான தகவல்களை வெளியிட மேற்கூறிய ஒப்பந்தம் தடுக்கிறது என்ற முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஜூலை 4, 2011-ல் அளித்த தீர்ப்பில் நிராகரித்துள்ளது.
இந்தத் தகவல்களை வெளியிட ஜெர்மனி ஆட்சேபம் தெரிவித்துள்ளது என்று ஜேட்லி கூறியுள்ள தகவலும் தவறானது. லீச்டென்ஸ்டைன் நாடு சுதந்திரமான ஆதிபத்தியம் கொண்ட நாடு என்பதால் அந்நாட்டில் உள்ள வங்கிகள் தொடர்பான தகவல்களை வெளியிட ஜெர்மனி – இந்தியா ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது. இதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியுள்ளது. இதுவரை மத்தியில் வந்துள்ள அரசுகள் ஜெர்மனியின் ஆட்சேபம் தொடர் பாக எந்த ஆதாரத்தையும் அளிக்க வில்லை.
சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கித் தகவல்களைப் பொறுத்தமட்டில், ஐ.நா.வின் ஊழலுக்கு எதிரான சாசனத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன. இந்த சாசனத்தின்படி வங்கிக் கணக்கு களின் ரகசிய சட்டங்கள் எதுவும் கட்டுப்படுத்தாது. எனவே சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு பேசி எதோ சாதித்துவிட்டதாக ஜேட்லி பெருமைப்பட்டுக் கொள்வது அபத்தமானதாகும். மேலும் இந்தத் தகவல்கள் நமக்கு சுவிட்சர்லாந்து அரசிடமிருந்து கிடைக்கவில்லை, இதர வழிகளில்தான் கிடைத்தன.
ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களில் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக, இப்போது முற்றிலும் பல்டி அடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நரேந்திர மோடி அரசு, முந்தைய அரசு போலவே சாக்குபோகுகள் சொல்லிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.