http://raajaachandrasekar.blogspot.in/
வியாழன், 25 ஜூன், 2015
புதன், 24 ஜூன், 2015
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7349757.ece?homepage=true
செவ்வாய், 23 ஜூன், 2015
Education System : வித்தகத் தந்திரங்கள் : வே.வசந்தி தேவி
இந்தியக் கல்வி அமைப்பு சாணக்கியத் தந்திரத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
“ஆளும் கருத்துகள், ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே” - கார்ல் மார்க்ஸ்.
புதிர் : ஒரு கோடு கிழிக்கவும். அதில் எந்த மாற்றமும் செய்யாமலே, அதைச் சிறியதாக்க வேண்டும்.
விடை: கோட்டுக்குப் பக்கத்தில் அதைவிட நீளமான கோட்டைக் கிழித்தால், முதல் கோடு சிறியதாகிவிடும்.
ஊர்ப் பொதுக் கிணற்றில் சில சாதியினர் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று விலக்கி வைத்துப் பாகுபாடு காட்டிய காலம் உண்டு. இன்று அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம். ஆனால், ஊரில் வசதி படைத்த சிலர், பக்கத்திலேயே ஒரு பெரிய கிணற்றை வெட்டி, ஏகப்பட்ட தண்ணீரை அதில் சேகரித்து, பழைய கிணற்றின் தண்ணீரையும் இதற்குத் திருப்பிவிட்டு, கிணற்றில் யார் வேண்டுமானாலும் தண்ணீர் எடுக்கலாம்; ஆனால், ஒரு குடம் ரூ.20 என்று நிர்ணயித்துவிட்டால் அது சட்ட விரோதமில்லை. ஆனால், அந்த விலை கொடுத்து யாரால் வாங்க இயலும்?
“எங்களோட ஒரு நாள் கூலி முழுசும் தண்ணிக்கே போயிடுமே! எங்களால எப்படி முடியும்?”
“அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நீங்க தண்ணி எடுக்கக் கூடாதுன்னு நாங்க ஒண்ணும் பாகுபாடு காட்டலையே!”
கதியற்றவர்களின் குரல்
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கூட மிகப் பெரும்பாலான பள்ளிகள், அனைத்து வர்க்க சாதிக் குழந்தைகள் ஒன்றாகக் கற்கும் பொதுப் பள்ளிகளாகத்தான் இருந்தன. அவற்றில் கற்று வெளிவந்த மாணவர் முன் ஒரு சம தளம் இருந்தது. அடித்தட்டு மாணவர்களும் வசதி படைத்தவருடன் சமமாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 70-களின் இறுதியில் தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கி, பல்கிப் பெருகி, இன்று கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை வெவ்வேறு மட்டப் பள்ளிகள். ஆயிரம் உண்டிங்கு சாதி என்பதுபோல், ஆயிரம் மட்டம் கொண்ட அமைப்பு. சாதியப் பிரமிடில் ஒவ்வொரு சாதிக்கும் உரிய இடம் துல்லியமாகக் குறிக்கப்பட்டிருப்பதைப் போல், ஒவ்வொரு மட்டப் பள்ளிக்கும், அது வசூலிக்கும் கட்டணத்தைப் பொறுத்து, கல்விப் பிரமிடில் இடம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலே போகப் போக, கட்டணம் அதிகரிக்க அதிகரிக்க, அது தரம் உயர்ந்த பள்ளி என்று விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தக் கோணத்தில் அடித்தட்டில் ஏழைகளுக்கு மட்டுமேயான, இலவசக் கல்வி அளிப்பவை அரசுப் பள்ளிகள். ஏழைகளுக்கு மட்டுமே உரிய அனைத்தும் தரமற்றவை என்பதும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிட்டதால், அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்பது அரசாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாகிறது. அதனால்தான் அரசுப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை அரசே
`கருணை' கொண்டு தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறது. ஏழைகளுக்கு மட்டுமே ஆனவை கொடுமையான புறக்கணிப்புக்கும் எளிதாக இலக்காகிவிடுகின்றன. அப்பள்ளிகளில் போதுமான ஆசிரியரோ, வகுப்புக்கு ஒரு ஆசிரியரோ, மேல் வகுப்புகளில் பாடத்துக்கேற்ற ஆசிரியரோ, தேவையான கண்காணிப்போ, கட்டுமான வசதிகளோ எவையும் நிறுவ வேண்டிய கட்டாயமில்லை. குரலற்றவர்களின், கதியற்றவர்களின் தேவைகளுக்கு அரசு என்று செவிசாய்த்தது?
புறம்தள்ளும் உத்திகள்
இந்தியக் கல்வி அமைப்பு சாணக்கியத் தந்திரத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிரமிடின் உச்சியில் இருக்கும் 5 முதல் 10 சதவிகிதத்தினர் மட்டுமே வென்றெழுந்து அனைத்து வாய்ப்புகளையும் அள்ளிக்கொண்டு போவதற்கு ஏற்றவண்ணம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மற்றவரின் திறமைகளெல்லாம் அழித்தொழிக்கப்பட்டு, போட்டியிடும் சக்தியை இழக்கின்றனர். கல்வியின் மூலம் சக்தி வாய்ந்த சமுதாய உருவாக்கம் நடக்கின்றது. அதற்குத் தகுந்த பல உத்திகள். பெரும்பான்மையினரை வாய்ப்பு வட்டத்தினின்று புறம்தள்ளும் உத்திகள். ஜனநாயகத்தின் மொழியைப் பயன்படுத்தியே தன் பாகுபடுத்தலை நிறைவேற்றிக்கொள்ளும் உத்திகள். ஏகலைவர்களுக்குக் கற்பிக்க முடியாது என்று இன்றைய துரோணாச்சாரியர்கள் சொல்ல முடியாது. ஆனால், கற்கும்
'தகுதி', 'மெரிட்'
யாருக்கு உண்டு என்பதற்கு விதிகளை, இலக்கணத்தை, வடிகட்டிகளை நிர்ணயிக்கலாம். இன்றைய நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் (ஐ.ஐ.டி. - ஐ.ஐ,எம். நுழைவுத் தேர்வுகள்) இவ்வகையில்தான் வடிவமைக்கப்படுகின்றன. எனக்கு மிகப் பிடித்த கார்ட்டூன் : டென்னிஸ் தெ மெனெஸ் என்ற 5 வயது படுசூட்டிகைச் சிறுவன், தன்னிலும் பொடியவனான ஜோயிக்கு விளையாட்டு ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டு சொல்கிறான்: “இதை நினைவில் வைத்துக்கொள் ஜோயி. விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ ஜெயித்துவிடலாம்.” இந்தியக் கல்வி அமைப்பும், கொள்கையும், விதிகளும் மேல் வர்க்க சாதியினரால் அவர்களது நலனுக்காகவும் அவர்களது ஆதிக்கம் தொடர்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான குழந்தைகளின் இழப்புக்காக, அவர்களை ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை.
ஆங்கிலம்; வெற்றிக்கான மந்திரக்கோல் அல்ல!
ஒரு முக்கிய உத்தி, ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியே தரமானது, தமிழ் வழிக் கல்வி தரமும், தகுதியும் அற்றது என்ற எண்ணம் சமுதாயம் முழுவதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, மாணவர்களெல்லாம் தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிக்கு மாறுகின்றனர். ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாகக் கற்று, அதில் முதன்மை பெற்று, அதன் வழியே போட்டி உலகில் வெற்றிகளைத் தட்டிக்கொண்டு போவது யாருக்கு இயலும்? வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். இன்று தெருவுக்குத் தெரு, சிற்றூர்களில் கூட முளைத்திருக்கும் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பள்ளிகளில் கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் தலித், பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களால் அப்படி ஒன்றும் வாய்ப்புகளைத் தட்டிக்கொண்டு போக முடியவில்லை. இவர்களில் பலர் 8 அல்லது 10 வகுப்புக்குள் பள்ளியிலிருந்து விலகிவிடுகின்றனர். ஆங்கில வழிக் கல்வி வெற்றிக் கதவைத் திறக்கும் மந்திரக் கோல் என்பது இவர்களைப் பொறுத்தவரை உண்மையல்ல.
இருளில் ஒரு தலைமுறை
இதற்குக் காரணம், பெரும் 'எலிட்' பள்ளிகள் தவிர்த்த மற்ற பெரும்பாலான ஆங்கில வழிப் பள்ளிகளின் தரம். ஆங்கில வழிப் பள்ளிகளில்தான் தரமான கல்வி கற்றுத்தரப்படுகிறது என்பது பொய். புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்தப் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார்? குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு கசக்கிப் பிழியப்படும் பெண்கள் பட்டாளம். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் கற்றவர்கள். சொல் புரியாத, பொருள் புரியாத, உச்சரிப்புத் தெரியாத ஓர் ஆங்கிலக் கல்விதான் இவர்கள் கற்றுத் தருவது. மனப்பாடமே கல்வியென்ற சீரழிவுதான் இந்தப் பள்ளிகளில் காண்பது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் நாடாளுமன்றத்தில் பேசினார்: “இந்தியக் கல்வியின் சாபக்கேடு புரியாமை என்னும் கொடுமை.” சபிக்கப்பட்ட வகுப்பறையின் இருளில் ஒரு தலைமுறை உருவாகிறது. எந்த நாட்டிலும் தாய் மொழி அன்றி, வேறு மொழி வழியே கற்பிக்கும் தகுதி வாய்ந்த லட்சக் கணக்கான ஆசிரியர்களை உற்பத்தி செய்யவே முடியாது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தருவதற்குத் தேவையான ஆசிரியரைத்தான் உருவாக்க முடியும்.
ஆதிக்க சக்திகளின் முடிவு
தமிழ் வழிக் கல்வியென்றால், அதில் திறன் பெறுவது அனைவருக்கும் இயலும். ஆங்கில வழி என்றால், மேல் சொன்னவர்களால் மட்டுமே இயலும். தங்களுக்குப் பெரும் அனுகூலம் அளிக்கும் வழியே சிறந்தது என்று அனைவரையும் நம்பவைத்து, அவ்வழியில் கற்க இயலாத பெரும்பான்மைக் குழந்தைகளை அதற்கு இழுத்து வந்து, அதில் அவர்களை மருகிக் கருக வைத்து, தாங்களே சிறந்தவர் என்று வெற்றிவாகை சூடிக்கொள்ளும் வழி.
பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிராக இருப்பவை பல்மட்டப் பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியும் மட்டுமல்ல. கல்வி அமைப்பின் ஒவ்வொரு இழையிலும் பாகுபடுத்தல் பின்னிப் பிணைந்திருக்கிறது. பாடத்திட்ட சுமை, வயதுக்கு அதிகமான, குடும்பத்திலும், டியூஷனிலும் உதவி பெறாமல் கற்க முடியாத சுமை, கற்றல்-கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள், வகுப்பறைச் சூழலும், மொழியும் என அனைத்தும் அடித்தட்டுக் குழந்தைகளை அச்சுறுத்தி விரட்டுபவை. வசதி பெற்ற குழந்தைகளுக்குப் போட்டி உலகில் வெற்றியை உறுதி செய்பவை.
இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஆதிக்க வர்க்க சாதியினர் ரகசியமாகக் கூடி, ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, படிப்படியாக நிறைவேற்றுகின்றனர் என்பது அல்ல பொருள். ஒரு சமுதாயத்தில் ஆதிக்க சக்திகள் கருத்துகளையும், மதிப்பீடுகளையும், சமுதாயத்தின் முடிவுகளையும், பல வகைகளில், ஒளிந்தும், மறைந்தும், வெளிப்படையாகவும் அவ்வாறுதான் ஆட்கொள்கின்றன. இக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள மார்க்ஸின் வார்த்தைகளுக்கு அதுதான் பொருள்.
ஓர் அரசியல்வாதி இவ்வுண்மையை மறைவின்றிச் சொல்கிறார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்யும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவுசெய்கின்றன.” இதற்கு மாற்றினைத் தோற்றுவிக்கும் பூகம்ப சக்தி இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா? இன்று நிச்சயம் இல்லை. நாளை தோன்றுமா?
- வே. வசந்தி தேவி, கல்வியாளர்,
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்,
http://www.imsc.res.in/~knr/facets15/ (maths programme)
http://www.imsc.res.in/~knr/facets15/poster.pdf
டிஜிட்டல் இந்தியா
இது டிஜிட்டல் யுகம். அனைத்து வேலைகளும் உட்கார்ந்த இடத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற வேகம் எல்லா தரப்பினரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.
அதற்கு ஏற்ப ஆன்லைன் வர்த்தக வளர்ச்சியும் வேகமாக முன்னேறிக்கொண்டே இருக்கிறது. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமல்ல அடுத்த வேளை உணவையும் ஆன்லைனில் வாங்கிவிட முடிகிறது. அதற்கு ஏற்ப மத்திய அரசும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்தும் வருகிறது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுவது மட்டுமல்ல, மக்களின் சமூக வளர்ச்சியும் ஏற்றம் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் ஆன்லைன் சேவைகளில் ஒன்றாக மத்திய அரசு சமீபத்தில் டிஜிட்டல் லாக்கர் சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
ஏற்கெனவே இந்திய அரசின் பல்வேறு சேவைகளை செய்து வரும் நிறுவனமான என்எஸ்டிஎல் (National Securities Depository Limited) இ-உயில் முறையை கொண்டு வந்து, அது பரவலான வரவேற்பை பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்த இரண்டு டிஜிட்டல் சேவைகளும் ஆவணப் படுத்துதலில் அடுத்த கட்ட வளர்ச்சி என்று குறிப்பிடலாம். இந்த சேவைகளை பயன்படுத் துவது எப்படி, பயன்கள் என்ன?
இ-உயில்
உயில் எழுதுவதில் உள்ள வழக்கமான நடைமுறைகளை இதற்கு கடைபிடிக்க வேண்டாம். எனவே அதற்கு அலைவது, செலவழிப்பது என்கிற சுமைகள் கிடையாது. மேலும் பேப்பர் வடிவிலான ஆவணத்தை விடவும் டிஜிட்டல் வடிவிலான உயில் ஆவணமாக இருப்பது கூடுதல் பாதுகாப்பு.
பயன்படுத்துவது எப்படி?
உயில் எழுத விரும்புபவர், உயில் குறித்த விவரங்களை முதலில் தெளிவாக எழுதிக்கொள்ள வேண்டும். என்எஸ்டிஎல் இணையதளத்துக்குச் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில் பாலினம், மதம், இருப்பிடம், தொழில், இந்திய குடிமகன் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து குடும்ப உறுப்பினர்கள், சம்பந்தபட்ட சொத்து, பொறுப்பில் உள்ள சொத்து, அதில் உரிமையான பாகம் உடையவர்கள் குறித்த விவரங்களும் கேட்கப்பட்டிருக்கும். இந்த விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு பிறகு நாம் எழுதி வைத்துள்ள உயிலை நகல் செய்து இணைக்க வேண்டும்.
மேலும் உயிலோடு சம்பந்தப்பட்ட இதர ஆவணங்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக் கொண்டவுடன், அதைப் பெற்றுக் கொண்டதற்கு மின்னஞ்சல் வரும்.
இந்த முதல் கட்டம் முடிந்த பிறகு உயிலில் நாம் குறிப்பிட்டுள்ள விவரங்களைச் சோதித்து, அது சரியானதுதானா, இதில் மாற்றங்கள் ஏதும் உள்ளதா என அடுத்த மின்னஞ்சல் அனுப்புவார்கள்.
இதற்கு பிறகும் திருத்தப்பட்ட உயிலின் காப்பி அனுப்பி வைப்பார்கள். இதற்கு நாம் ஒப்புதல் கொடுத்து விட்டால், உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இது சாட்சிகள் முன்னிலையில் உயில் எழுதப்பட்டதற்கு ஒப்பான ஆவணமாகக் கருதப்படும்.
கட்டணம்
இதற்கான கட்டணம் ரூ.4,000. பதிவு செய்யப் பட்ட உயிலை திரும்பவும் மாற்றி எழுதலாம். இதற்கான கட்டணம் முன்பு அளித்த கட்டணத்தில் 40% வரை கட்ட வேண்டும். உயில் பதிவு செய்யப்பட்ட பிறகு, உயிலின் ஆவணங்களை தொலைத்துவிட்டால், மீண்டும் புதிய ஆவணங்களைக் கொடுத்து புதியதாகவே உயில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த இ-உயிலை வாரிசுதாரர்கள் பார்வையிடலாம். இதற்கான கட்டணம் ரூ.250. இந்த கட்டணங்களை நெட் பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு அல்லது வங்கிக் கணக்கு மூலம் செலுத்தலாம். அஞ்சல் மூலமாக பெற கட்டணம் ரூ.500.
வரம்புகள்
இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சம்பந்தப்பட்ட சொத்துக்கு உரிமையுடைய நபர்கள் மட்டுமே பதிவு செய்யலாம். தனிநபருக்கு மட்டு மல்லாமல் நிறுவனங்களுக்கும் இந்தச் சேவை கிடைக்கும்.
பதிவு செய்த வர்களின் தகவல்கள் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும். தேவைப்பட்டால் தகவல்களை மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையை ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் நிறுவன மும் வழங்குகிறது.
இணையதள முகவரி
என்எஸ்டிஎல்: https://www.ezeewill.com/
1980 ஜூன் 23: வி.வி. கிரி: குடியரசுத் தலைவரான போராளி
நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு. பாரபட்சம் இல்லாத கருத்துகளை வெளிப்படையாகச் சொன்னவர்’ என்று வரலாற்றாய்வாளர்களால் புகழப்பட்டவர். இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் வளர்ச்சி பெறுவதற்கு அடித்தளமிட்டவர் வி.வி. கிரி. பின்னாட்களில் மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த வரலாறு அவருடையது. தற்போது ஒடிஸாவில் இருக்கும் பெர்ஹாம்பூரில் 1894 ஆகஸ்ட் 10-ல் பிறந்தவர் வராககிரி வேங்கட கிரி. புகழ்பெற்ற வழக்கறிஞரான அவரது தந்தை வராககிரி ஜோகைய்யா பந்துலு தனது மகனும் சட்டம் பயில வேண்டும் என்று விரும்பினார்.
1913-ல் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள யூனிவர்சிட்டி காலேஜில் சட்டம் பயின்றார் வி.வி. கிரி. இளம் வயதிலிருந்தே தொழிலாளர்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்ட அவர், 1914-ல் லண்டன் சென்றிருந்த காந்தியைச் சந்தித்தார். சட்டம் பயில்வதை விட, விடுதலைப் போராட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்பதுதான் முக்கியம் என்று அவர் உணரத் தொடங்கியது இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான். ‘சின் ஃபெயின்’ எனும் அயர்லாந்து விடுதலை அமைப்பில் பங்கேற்றுத் தீவிரமாகப் போராடிய அவர், சட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே 1916-ல் அயர்லாந்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது போராட்ட அனுபவங்கள் இந்தியாவில் தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கப் பெரிதும் உதவின. இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றார். தொழிலாளர் சங்கத் தலைவர் என்.எம். ஜோஷியுடன் இணைந்து செயலாற்றினார். இந்திய விடுதலைப் போராட்டத்தை நோக்கி, தொழிலாளர் சங்கங்களைக் கொண்டுசென்ற பெருமையும் இவருக்கு உண்டு. லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில், தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
1936-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற அவர், மதராஸ் மாகாணத்தின் தொழிலாளர் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவி யேற்றார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, அமைச்சர் பதவியை உதறிவிட்டு, போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றார். பின்னாட்களில் இலங்கைக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார். இந்திய விடுதலைக்குப் பின்னர், 1957-ல் மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். உத்தரப் பிரதேசம், கேரளம் உட்பட பல மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியிருக்கிறார். 1967-ல் குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனின் மறைவைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவராக இடைக்காலப் பதவியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1974 வரை அப்பதவியில் இருந்தார். 1975-ல் அவருக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. 1980 ஜூன் 23-ல் தனது 86-வது வயதில் சென்னையில் காலமானார் வி.வி. கிரி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)