http://tamil.thehindu.com/opinion/columns/இளம்-வாக்காளர்களுக்கு/article5890334.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication
உங்களைப் போலவே ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 90 ஆயிரம் இளம் வாக்காளர்கள் இணைந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் தகவலைப் பார்த்து வியந்துபோனேன். வாக்களிப்பது மிக முக்கியமான ஒரு ஜனநாயக நடவடிக்கை என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வாக்குதான். கோடீஸ்வரர் என்பதற்காக யாருக்கும் 10 வாக்குகள் கிடையாது. இந்தியர்கள் அனைவரும் சமம் என்பதுதான் இதன் பொருள்.
பொறுப்பான குடிமக்களாக, தங்களது ஜனநாயகக் கடமையை நன்கு உணர்ந்த மக்களாக இன்னமும் முழுமையாக நாம் மாறவில்லை என்பதில் கல்வித் துறைக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பாடத்திட்டத்தில் எதுவும் இருக்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. ஆனாலும், இனம்புரியாத உதாசீனம் வியாபித்திருப்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாதித் தலைவர்கள் பற்றிய வீரவழிபாடு, சகித்துக்கொள்ள முடியாத உயர்வு நவிற்சியோடும் பரவசத்தோடும் பேசப்படும் புராணக் கதைகள் என்று சாதிய அபிமானத்தையும் மத உணர்ச்சிகளையும் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் திணிக்கும் அரசுகளுக்கு நமது ஜனநாயகப் பயணம்குறித்தும் அதன் உண்மையான கதாநாயகர்கள்குறித்தும் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும் என்ற சாதாரண பிரக்ஞைகூட எழாதது ஆச்சரியம்தான்.
நமக்கு ஜே.சி. குமரப்பாவைத் தெரியாது; மாபெரும் புரட்சியை நம் கண்முன் நிகழ்த்திக் காட்டிய ஜகன்நாதன்-கிருஷ்ணம்மாள் இணையரைத் தெரியாது; பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும், அப்பழுக்கற்ற லட்சியவாதிகளாக, மக்கள் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பார்வதி கிருஷ்ணன் போன்ற பல தலைவர்களைத் தெரியாது.
உங்களைப் போலவே ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 90 ஆயிரம் இளம் வாக்காளர்கள் இணைந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் தகவலைப் பார்த்து வியந்துபோனேன். வாக்களிப்பது மிக முக்கியமான ஒரு ஜனநாயக நடவடிக்கை என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வாக்குதான். கோடீஸ்வரர் என்பதற்காக யாருக்கும் 10 வாக்குகள் கிடையாது. இந்தியர்கள் அனைவரும் சமம் என்பதுதான் இதன் பொருள்.
பொறுப்பான குடிமக்களாக, தங்களது ஜனநாயகக் கடமையை நன்கு உணர்ந்த மக்களாக இன்னமும் முழுமையாக நாம் மாறவில்லை என்பதில் கல்வித் துறைக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பாடத்திட்டத்தில் எதுவும் இருக்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. ஆனாலும், இனம்புரியாத உதாசீனம் வியாபித்திருப்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாதித் தலைவர்கள் பற்றிய வீரவழிபாடு, சகித்துக்கொள்ள முடியாத உயர்வு நவிற்சியோடும் பரவசத்தோடும் பேசப்படும் புராணக் கதைகள் என்று சாதிய அபிமானத்தையும் மத உணர்ச்சிகளையும் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் திணிக்கும் அரசுகளுக்கு நமது ஜனநாயகப் பயணம்குறித்தும் அதன் உண்மையான கதாநாயகர்கள்குறித்தும் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும் என்ற சாதாரண பிரக்ஞைகூட எழாதது ஆச்சரியம்தான்.
நமக்கு ஜே.சி. குமரப்பாவைத் தெரியாது; மாபெரும் புரட்சியை நம் கண்முன் நிகழ்த்திக் காட்டிய ஜகன்நாதன்-கிருஷ்ணம்மாள் இணையரைத் தெரியாது; பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும், அப்பழுக்கற்ற லட்சியவாதிகளாக, மக்கள் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பார்வதி கிருஷ்ணன் போன்ற பல தலைவர்களைத் தெரியாது.
சிறப்பான நிர்வாகம்
இன்று இதை நிராகரிக்கவும் புதிய அரசியலை உருவாக்கவும் பெரும்
பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது; முதல்முறை வாக்களிக்க வரும் உங்களுக்கும்
இருக்கிறது. இந்தியா போன்ற எண்ணிலடங்கா மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட நாட்டில்,
அதன் அடிப்படையான பன்முகத்தன்மையை அங்கீகரிக்கவும், கொண்டாடவும் தெரிந்த அரசியல்
கட்சி அவசியம். ஒரே மொழி, ஒரே மதம் இருந்தால் மட்டுமே நாட்டில் ஒற்றுமை இருக்கும்
என்ற அபத்தமான அரசியல் நிலைப்பாடு, சீரழிவை மட்டுமே உறுதி செய்யும் என்பதை நீங்கள்
அறிய வேண்டும். சிறப்பான நிர்வாகம் என்ற சொல்லாடல் உங்களில் பலருக்குப்
புல்லரிப்புகளை ஏற்படுத்தலாம். நிர்வாகம் சிறப்பாக இருப்பது அவசியம்தான்; ஆனால்,
நவீன அரசியலைக் கூர்ந்து நோக்கினால், கடந்த நூறாண்டுகளில் சிறப்பாக நிர்வாகம்
நடைபெற்ற நாடுகள் என்றால் அது ஹிட்லரின் ஜெர்மனி போன்ற ஒருசில நாடுகள்தான். ஆனால்,
அவற்றின் அழிவுகளை நினைத்தாலே மனம் பதறுகிறது. சிறப்பான நிர்வாகம் என்பது மக்கள்
அனைவரையும் பங்கேற்கச் செய்வதுதான். சில தனிநபர்கள் சில பெருமுதலாளிகளின்
கைப்பாவையாகச் செயல்படும் நிர்வாகம் கண்டிப்பாகச் சீரழிவை மட்டுமே தரும்.
சட்டத்தின் எல்லைக்கு உட்பட்டு, கருத்தொற்றுமையின் அடிப்படையில்
நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் ஆளுமைகளை இனம்காண வேண்டும்.
தங்களுக்கென்று எந்த சொத்தும் இல்லாமல், பொதுவாழ்க்கையில் அசாதாரணமான
அர்ப்பணிப்புடன் செயல்படும் மகத்தான தலைவர்கள் நம்மிடம் இன்றும் இருக்கிறார்கள்;
இப்படியும் அரசியல் தலைவர்கள் இருந்தார்களா என்று உங்களில் சிலர் ஆச்சரியப்படும்
அளவுக்குப் பல அப்பழுக்கற்ற மக்கள் தொண்டர்கள் அவர்கள். மக்கள் பிரச்சினைகளுக்காகப்
போராடி சிறை சென்றவர்கள், அதை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயங்கள் தேடத்
தெரியாதவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக