என்னிடம் ஒரு குழந்தையை ஏழு ஆண்டுக்கு கொடுங்கள். பின்னர்
கடவுளோ அல்லது சாத்தானோ அக்குழந்தையை எடுத்து செல்லட்டும். ஆனால் அந்த குழந்தையை அவர்களால் மாற்ற முடியாது என்றார் சிறந்த ஆசிரியரான பெஸ்டோலோஸ்ஸி. இதுதான் சிறந்த ஆசிரியரின் சக்தி.
ஒவ்வொரு வாரத்திலும் ஒரு மணி நேரம் சாதனையாளர்களை பற்றி அறிமுகப்படுத்தப்படும் ஒரு வகுப்பு இடம்பெற வேண்டும். இளம் சிந்தனையாளர்களை உயர்த்துவது என்ற அடிப்படையில் இந்த வகுப்பு அமைய வேண்டும். புத்தர், கன்பூசியஸ், செயின்ட் அகஸ்டின், கலீபா உமர், மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன், ஆப்ரஹாம் லிங்கன் உள்ளிட்ட சாதனையாளர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் பற்றியும் நமது நாகரிகம் தொடர்பான விஷயங்களையும் கற்றுத் தர வேண்டும்.
பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துனியுங்கள்.
பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும் போது, தான் காண்பதை தவராக எடைப்போடக் கூடும். பெறும்பாலானோர்களின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால் தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.
நாம் எல்லோரும் ஒரு தெய்வீக நெருப்பாகத் தான் பிறந்துள்ளோம். நாம் அந்த நெருப்பில் நமது சிறகுகளைக் கொடுத்து அதனுடைய நன்மைகளை உலகில் நிரப்ப முயற்சி செய்ய வேண்டும்.
இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!.
கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!.
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!.
கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்.
அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல, உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
கடவுளோ அல்லது சாத்தானோ அக்குழந்தையை எடுத்து செல்லட்டும். ஆனால் அந்த குழந்தையை அவர்களால் மாற்ற முடியாது என்றார் சிறந்த ஆசிரியரான பெஸ்டோலோஸ்ஸி. இதுதான் சிறந்த ஆசிரியரின் சக்தி.
ஒவ்வொரு வாரத்திலும் ஒரு மணி நேரம் சாதனையாளர்களை பற்றி அறிமுகப்படுத்தப்படும் ஒரு வகுப்பு இடம்பெற வேண்டும். இளம் சிந்தனையாளர்களை உயர்த்துவது என்ற அடிப்படையில் இந்த வகுப்பு அமைய வேண்டும். புத்தர், கன்பூசியஸ், செயின்ட் அகஸ்டின், கலீபா உமர், மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன், ஆப்ரஹாம் லிங்கன் உள்ளிட்ட சாதனையாளர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் பற்றியும் நமது நாகரிகம் தொடர்பான விஷயங்களையும் கற்றுத் தர வேண்டும்.
அக்னிச் சிறகுகள்
- அக்னிச் சிறகுகள்: ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் பற்றிய சுயசரிதை (1999) ISBN 8173711461
- நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.
- நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
- நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
- சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
- கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக