அமெரிக்கர் வியந்த தொழில்நுட்பம் - 'சென்னானேரி'
Banking Jobs - Over 32,500 IFBI-trained students placed in leading banks ! ifbi.com/Limited-Seats-Register-Now
சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் சென்னானேரி.
Banking Jobs - Over 32,500 IFBI-trained students placed in leading banks ! ifbi.com/Limited-Seats-Register-Now

சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் சென்னானேரி.
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
குழந்தைகளை நேசிப்பதுபோல ஏரி, குளங்களை நேசித்தவர்கள் நம் முன்னோர்கள். தாங்கள் வெட்டிய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் பிடித்தமான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். மலர்கள் சூழ்ந்த குளங்களை பூங்குளம், அல்லிக்குளம், ஆம்பக்குளம், குறிஞ்சிக்குளம் என்றும், மரங்கள் சூழ்ந்த குளங்களை மாங்குளம், இலுப்பைக் குளம், பலாக்குளம், விளாங்குளம், வாகைக்குளம் என்றும் அழைத்தனர். தெய்வத்தின் பெயர்களிலும் குளங்கள் அழைக்கப்பட்டன.
நீர்நிலைகள் மீது அக்கறையோடு மிகுந்த நேசமும் வைத்திருந்ததால்தான், அதை வெறும் குளம், குட்டை என்று அழைக்காமல் பாசத்தோடு பெயர் வைத்து அழைத்தனர். ஆனால், நவீன தொழில்நுட்பங்களில் முன்னேறிவிட்ட நாம், நமக்கு நினைவு தெரிந்து கடந்த 50 ஆண்டுகளில் ஒற்றைக் குளத்தை யாவது உருவாக்கி பெயர் சூட்டி யிருப்போமா?
ஆற்றின் கால்வாய்கள், வெள்ள நீர் வடிகால்களை எப்படி எல்லாம் சீரழித்தோம் என்று நேற்று பார்த்தோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட அந்த வடிகால் கள். அரிகேசரி ஆறு, வல்லபப் பேராறு, நாட்டாறு, பராக்கிரமப் பேராறு இவை எல்லாம் வைகை ஆற்றுக் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட பெயர்கள். ஆனால், இவை ஆறுகளின் பெயர்கள் அல்ல. வைகையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்களின் பெயர்கள். கால்வாய்களே ஆறுபோல பெரிய அளவில் வெட்டப்பட்டன என்பதை கல்வெட்டுக் குறிப்புகள் உணர்த்து கின்றன.
இவ்வாறாக மொத்தம் 3 வகை கால்வாய்கள் அமைக்கப்பட்டன. முதலாவது, வரத்துக் கால்வாய் (Supply Channel). இவற்றில் வரத்துக் கால்வாய்களின் தொழில்நுட்பம் அபாரமானது. ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப் பட்டன. அப்படி வெட்டும்போது ஆற்றில் இருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்பட்டது. தவிர, ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில்கூட தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் சென்றது. இதற்கு இன்றும் உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்.
இரண்டாவது, மறுகால் அல்லது வெள்ள வடிகால் (Surplus Channel). வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவிய தொழில்நுட்பம் இது.
மூன்றாவது, பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel). ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப் பட்ட இந்த கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து விநியோகிக்கப்பட்டது. நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இவற்றின் தொழில்நுட்பத்தைக் கண்டு இன்றைய நவீன நீரியல் நிபுணர்களே வியக்கின்றனர்.
நெல் பயிரிடுவதற்கு மிருதுவான நிலம் தேவை. அதற்காக நிலத்தை மிருதுவாக்கவும், சமப்படுத்தவும் அதிக அளவில் நீர் தேக்கப்பட்டது. சில நாட்களுக்குப்பிறகு, அதை உழுது நீரை வடித்து விட்டு, நெற்பயிரை நடுவார்கள். இப்படி வடிக்கும்போது கிடைக்கும் உபரி நீரையும், கூடுதலாக கிடைக்கும் மழைநீரையும் வடிகால் வாய்க்கால் களில் சேகரித்து, அடுத்தடுத்த வயல் களுக்கு விடுவார்கள். இது மிகச் சிறந்த நீர் சிக்கன மேலாண்மை. இதற்கேற்ற மிக நுட்பமான நில மட்ட அளவுகளில் பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இதற்கு உதாரணமாக திகழ்ந்தது சென்னானேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி - கள்ளப்பனை கிராமங்களுக்கு இடையே இருக்கிறது. ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியியல் அறிஞர்கள் ச.மா.ரத்னவேல், கள்ளபிரான் ஆகியோர் இந்த ஏரியை நேரில் ஆய்வு செய்து, இதன் தொழில்நுட்பம் பற்றி ஏராளமான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
ஏரியின் பாசனப் பரப்புகள் மேற்கில் இருந்து கிழக்காக மிதமான சரிவுடனும், தெற்கில் இருந்து வடக்காக கூடுதல் சரிவுடனும் உள்ளன. கால்வாய்கள் வழியாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் விடப்பட்டபோது தண்ணீர் வேகமாக பாய்ந்து, வளமான மேல் பகுதி வண்டலை அரித்துச் செல்லாதபடி விடப் பட்டன. தெற்குப் பகுதியின் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் வயலுக்குச் செல்கிறது. வடக்குப் பகுதி யின் வாய்க்கால் உபரிநீரை வடிக்கிறது. இன்றைய நவீன பொறியாளர்களின் கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்பம் இது.
அமெரிக்க பொறியியல் வல்லுநர் கில்பர்ட் லாவேன் (Gilbert Lavine) தனது ‘Irrigation and Agricultural Development of Asia’ நூலில் மேற் கண்ட தொழில்நுட்பத்தை எப்படி சிலாகிக்கிறார் தெரியுமா?
‘‘மிதமான சாய்வு தளமாக உள்ள நிலப்பரப்பில் மேல் வரிசைப் பயிர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு முதலில் நீர் பாய்ச்சப்படுகிறது. பிறகு சுழற்சி முறையில், அடுத்த வரிசை களில் அமைந்த பாத்திகளுக்கு படிப் படியாக நீர் அளவைக் குறைத்து பாய்ச்சப்படுகிறது. மேல் பாத்திகளுக்கு ஊற்றப்படும் நீர், கீழ் பாத்திகளுக்கும் வழிந்தோ, கசிந்தோ வரும் என்பதால் நீர் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் எல்லா அடுக்குகளிலும் உள்ள பயிர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கிறது. எல்லா பாத்திகளுக்கும் சம அளவில் தண்ணீர் பாய்ச்சாமல் தண்ணீரை சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த முடிகிறது. மிகவும் சிக்கனமான, பயனுள்ள இந்த நீர் மேலாண்மை வளரும் நாடுகளில்கூட புழக்கத்தில் இல்லை!’’ என்கிறார் அவர்.
ஒரு அமெரிக்கப் பொறியாளருக்கு தெரிந்த அருமை நமக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சென்னானேரியை பார்க்க பணகுடி கிராமத்துக்கு சென்றோம். ஏரியின் பெயரைச் சொல்லிக் கேட்டால் ஊரில் யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு ஏரியே இல்லை என்றார்கள்.
கடைசியில், ஜெபக்குமார் என்ற பள்ளித் தலைமை ஆசிரியர், ‘‘சென்னா னேரி என்ற பெயரை எல்லாம் மக்கள் மறந்து பல ஆண்டுகள் ஆகிறது. பராமரிப்பும் இல்லாமல் பாழாகிக் கிடக்கிறது ஏரி’’ என்றார். நம்மை ஏரிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.
கடல்போல பரந்திருந்தது ஏரி. இப்போது பெய்த மழையில் ஏரி நிரம்பி இருந்தாலும் உள்ளே சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன.
வெளிநாட்டு பொறியாளர்களையும் வியக்கவைத்த தொழில்நுட்பக் கால்வாய்கள் மண்மூடிப் போய் அனாதையாய்க் கிடந்தன. மதகுகளும் பராமரிப்பின்றிக் கிடந்தன.
‘‘ஏரி முழுக்க தண்ணியிருந்தும், என்ன பிரயோசனம்.. பெருசா பாசனம் ஒண்ணும் இல்லீங்க’’ என்று அங்க லாய்த்தார் அங்கு வந்த உள்ளூர்க்காரர்.
எப்படி இருக்கும் பாசனம்? நாம்தான் கண் இருந்தும், பார்வையற்றவர்களாக அல்லவா இருக்கிறோம்!
*
குழந்தைகளை நேசிப்பதுபோல ஏரி, குளங்களை நேசித்தவர்கள் நம் முன்னோர்கள். தாங்கள் வெட்டிய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் பிடித்தமான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். மலர்கள் சூழ்ந்த குளங்களை பூங்குளம், அல்லிக்குளம், ஆம்பக்குளம், குறிஞ்சிக்குளம் என்றும், மரங்கள் சூழ்ந்த குளங்களை மாங்குளம், இலுப்பைக் குளம், பலாக்குளம், விளாங்குளம், வாகைக்குளம் என்றும் அழைத்தனர். தெய்வத்தின் பெயர்களிலும் குளங்கள் அழைக்கப்பட்டன.
நீர்நிலைகள் மீது அக்கறையோடு மிகுந்த நேசமும் வைத்திருந்ததால்தான், அதை வெறும் குளம், குட்டை என்று அழைக்காமல் பாசத்தோடு பெயர் வைத்து அழைத்தனர். ஆனால், நவீன தொழில்நுட்பங்களில் முன்னேறிவிட்ட நாம், நமக்கு நினைவு தெரிந்து கடந்த 50 ஆண்டுகளில் ஒற்றைக் குளத்தை யாவது உருவாக்கி பெயர் சூட்டி யிருப்போமா?
ஆற்றின் கால்வாய்கள், வெள்ள நீர் வடிகால்களை எப்படி எல்லாம் சீரழித்தோம் என்று நேற்று பார்த்தோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட அந்த வடிகால் கள். அரிகேசரி ஆறு, வல்லபப் பேராறு, நாட்டாறு, பராக்கிரமப் பேராறு இவை எல்லாம் வைகை ஆற்றுக் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட பெயர்கள். ஆனால், இவை ஆறுகளின் பெயர்கள் அல்ல. வைகையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்களின் பெயர்கள். கால்வாய்களே ஆறுபோல பெரிய அளவில் வெட்டப்பட்டன என்பதை கல்வெட்டுக் குறிப்புகள் உணர்த்து கின்றன.
இவ்வாறாக மொத்தம் 3 வகை கால்வாய்கள் அமைக்கப்பட்டன. முதலாவது, வரத்துக் கால்வாய் (Supply Channel). இவற்றில் வரத்துக் கால்வாய்களின் தொழில்நுட்பம் அபாரமானது. ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப் பட்டன. அப்படி வெட்டும்போது ஆற்றில் இருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்பட்டது. தவிர, ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில்கூட தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் சென்றது. இதற்கு இன்றும் உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்.
இரண்டாவது, மறுகால் அல்லது வெள்ள வடிகால் (Surplus Channel). வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவிய தொழில்நுட்பம் இது.
மூன்றாவது, பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel). ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப் பட்ட இந்த கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து விநியோகிக்கப்பட்டது. நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இவற்றின் தொழில்நுட்பத்தைக் கண்டு இன்றைய நவீன நீரியல் நிபுணர்களே வியக்கின்றனர்.
நெல் பயிரிடுவதற்கு மிருதுவான நிலம் தேவை. அதற்காக நிலத்தை மிருதுவாக்கவும், சமப்படுத்தவும் அதிக அளவில் நீர் தேக்கப்பட்டது. சில நாட்களுக்குப்பிறகு, அதை உழுது நீரை வடித்து விட்டு, நெற்பயிரை நடுவார்கள். இப்படி வடிக்கும்போது கிடைக்கும் உபரி நீரையும், கூடுதலாக கிடைக்கும் மழைநீரையும் வடிகால் வாய்க்கால் களில் சேகரித்து, அடுத்தடுத்த வயல் களுக்கு விடுவார்கள். இது மிகச் சிறந்த நீர் சிக்கன மேலாண்மை. இதற்கேற்ற மிக நுட்பமான நில மட்ட அளவுகளில் பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இதற்கு உதாரணமாக திகழ்ந்தது சென்னானேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி - கள்ளப்பனை கிராமங்களுக்கு இடையே இருக்கிறது. ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியியல் அறிஞர்கள் ச.மா.ரத்னவேல், கள்ளபிரான் ஆகியோர் இந்த ஏரியை நேரில் ஆய்வு செய்து, இதன் தொழில்நுட்பம் பற்றி ஏராளமான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
ஏரியின் பாசனப் பரப்புகள் மேற்கில் இருந்து கிழக்காக மிதமான சரிவுடனும், தெற்கில் இருந்து வடக்காக கூடுதல் சரிவுடனும் உள்ளன. கால்வாய்கள் வழியாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் விடப்பட்டபோது தண்ணீர் வேகமாக பாய்ந்து, வளமான மேல் பகுதி வண்டலை அரித்துச் செல்லாதபடி விடப் பட்டன. தெற்குப் பகுதியின் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் வயலுக்குச் செல்கிறது. வடக்குப் பகுதி யின் வாய்க்கால் உபரிநீரை வடிக்கிறது. இன்றைய நவீன பொறியாளர்களின் கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்பம் இது.
அமெரிக்க பொறியியல் வல்லுநர் கில்பர்ட் லாவேன் (Gilbert Lavine) தனது ‘Irrigation and Agricultural Development of Asia’ நூலில் மேற் கண்ட தொழில்நுட்பத்தை எப்படி சிலாகிக்கிறார் தெரியுமா?
‘‘மிதமான சாய்வு தளமாக உள்ள நிலப்பரப்பில் மேல் வரிசைப் பயிர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு முதலில் நீர் பாய்ச்சப்படுகிறது. பிறகு சுழற்சி முறையில், அடுத்த வரிசை களில் அமைந்த பாத்திகளுக்கு படிப் படியாக நீர் அளவைக் குறைத்து பாய்ச்சப்படுகிறது. மேல் பாத்திகளுக்கு ஊற்றப்படும் நீர், கீழ் பாத்திகளுக்கும் வழிந்தோ, கசிந்தோ வரும் என்பதால் நீர் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் எல்லா அடுக்குகளிலும் உள்ள பயிர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கிறது. எல்லா பாத்திகளுக்கும் சம அளவில் தண்ணீர் பாய்ச்சாமல் தண்ணீரை சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த முடிகிறது. மிகவும் சிக்கனமான, பயனுள்ள இந்த நீர் மேலாண்மை வளரும் நாடுகளில்கூட புழக்கத்தில் இல்லை!’’ என்கிறார் அவர்.
ஒரு அமெரிக்கப் பொறியாளருக்கு தெரிந்த அருமை நமக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சென்னானேரியை பார்க்க பணகுடி கிராமத்துக்கு சென்றோம். ஏரியின் பெயரைச் சொல்லிக் கேட்டால் ஊரில் யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு ஏரியே இல்லை என்றார்கள்.
கடைசியில், ஜெபக்குமார் என்ற பள்ளித் தலைமை ஆசிரியர், ‘‘சென்னா னேரி என்ற பெயரை எல்லாம் மக்கள் மறந்து பல ஆண்டுகள் ஆகிறது. பராமரிப்பும் இல்லாமல் பாழாகிக் கிடக்கிறது ஏரி’’ என்றார். நம்மை ஏரிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.
கடல்போல பரந்திருந்தது ஏரி. இப்போது பெய்த மழையில் ஏரி நிரம்பி இருந்தாலும் உள்ளே சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன.
வெளிநாட்டு பொறியாளர்களையும் வியக்கவைத்த தொழில்நுட்பக் கால்வாய்கள் மண்மூடிப் போய் அனாதையாய்க் கிடந்தன. மதகுகளும் பராமரிப்பின்றிக் கிடந்தன.
‘‘ஏரி முழுக்க தண்ணியிருந்தும், என்ன பிரயோசனம்.. பெருசா பாசனம் ஒண்ணும் இல்லீங்க’’ என்று அங்க லாய்த்தார் அங்கு வந்த உள்ளூர்க்காரர்.
எப்படி இருக்கும் பாசனம்? நாம்தான் கண் இருந்தும், பார்வையற்றவர்களாக அல்லவா இருக்கிறோம்!
சென்னையின் சேதத்துக்கு காரணம் என்ன?

பெருக்கெடுத்து பொங்கி ஓடும் அடையாறு

பெருக்கெடுத்து பொங்கி ஓடும் அடையாறு
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் பாய்வதை மக்கள் மிரட்சியோடு பார்க்கின்றனர். உயிர்ப்பலி உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால், சென்னைக்கு புயல் புதிது அல்ல. காலம்காலமாக கடும் புயல்களை தாங்கியது அது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு தாக்குதலின்போதும் சென்னை தன் னைத் தானாக தகவமைத்துக் கொண்டது. முதல் உலகப் போர் காலகட்டம்வரை இது நீடித்தது. அதன் பிந்தைய நகர மயமாக்கல்தான் சென்னையின் இயல் பான நீரோட்டத்தை சிதைக்கத் தொடங்கியது.
சென்னையின் அடிப்படை அமைப் பைப் பார்ப்போம். இங்கு ஆண்டு சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர். (தென்மேற்கு பருவமழை 400 மி.மீ, வடகிழக்கு பருவமழை 700 மி. மீ) கடந்த 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் பதிவான 2,566 மி.மீ. மழையே சென்னையில் பதிவான அதிகபட்ச மழை. நகரில் 24 மணி நேரத்துக்கு தொடர்ந்து 20 மி.மீ. மழை பெய்தாலே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பிவிடும். 1943, 76, 85, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் அடை யாறு ஆற்றிலும் 1943, 76 ஆகிய ஆண்டு களில் கூவத்திலும் வெள்ளம் பெருக் கெடுத்திருக்கிறது. கொளத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும் பாக்கம், வள்ளுவர் கோட்டம், வேளச் சேரி, மாம்பலம் உள்ளிட்ட 36 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சென்னையில் ஓடும் ஆறுகள் கொசஸ்தலை, கூவம், அடையாறு. சோளிங்கர் மலையடிவாரத்தில் (கிருஷ்ணாபுரம், நகரி) உற்பத்தியாகும் தண்ணீரும் காவேரிப்பாக்கம் ஏரி வழியாக வெளியேறும் பாலாற்றின் உபரி நீரும் சேர்ந்தது கொசஸ்தலை ஆறு. இதன் உபரி நீர், கேசவரம் அணைக் கட்டுக்கு செல்லும்போது உருவானது கூவம். பொத்தேரி, வல்லக்கோட்டை பகுதிகளின் தண்ணீரானது மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் சேர்ந்து உற்பத்தியாவது அடையாறு. இந்த 3 ஆறுகளும் மேடான மேற்கிலிருந்து பள்ளமான கிழக்கை நோக்கி ஓடி வந்து கடலில் கலக்கின்றன. அப்படி ஓடி வரும் ஆறுகளை நம் முன்னோர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் மூலம் இணைத்தனர்.
ஒவ்வொரு ஆற்றிலும் நீர்மட்டத்தை கணக்கிட அளவுகோல்கள் இருந்தன. மழைக் காலங்களில் நீர்மட்டம் உயரும் போது ஏரிகளின் மதகுகள் திறந்து விடப்பட்டன. ஒரு ஆற்றின் தண்ணீர், ஏரிகளின் வழியாக மற்றொரு ஆற்றுக்கு சென்றது. ஏரிகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘வாக்கம்’ என்றும் ஆறுகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘பாக்கம்’ என்றும் அழைக்கப்பட்டன. 2 அல்லது 3 ‘வாக்கம்’களுக்கு இடையே ஒரு ‘பாக்கம்’ இருந்தது. பாக்கங்களை (ஆறுகளை) வாக்கங்கள் (ஏரிகள்) இணைத்தன. சென்னையில் இந்த நீர்வழித் தடத்தை இன்றும் பார்க்கலாம். ஏரிகளாக இருந்த வில்லிவாக்கம், புரசைவாக்கம் பகுதிகளின் தண்ணீர் இப்போதும் நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றில் கலக்கிறது.
இப்படியாக கொசஸ்தலை கொந் தளித்தால் கூவம் கூப்பிட்டுக்கொள்ளும். கூவம் பொங்கினால் அடையாறு அழைத் துக் கொள்ளும் இந்த மூன்றையும் முகத் துவாரங்களில் வாங்கிக்கொண்டது வங்காள விரிகுடா. இந்த நீர்வழித்தட அமைப்பு காரணமாக புயல், வெள்ளங்க ளின்போது ஊருக்குள் பெரியளவில் வெள்ளம் புகாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால், இந்த நீர்வழித் தடங்களை எல்லாம் நாம் அழித்துவிட்டோம்.
கோவளம் பூஞ்சேரியில் தொடங்கி முட்டுக்காடு, பள்ளிக்கரணை, பல்லா வரம், பொழிச்சலூர் வரை இருந்த ஏராள மான ஏரிகள், குளங்கள் எல்லாம் இருப்புப் பாதைகளாகவும் நெடுஞ்சாலை களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. வல்லக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அடையாறு ஆறு தொடங்கும் மாகாணியம் மலையப்பட்டு வரை இருந்த ஏரிகள், குளங்களைக் கொண்ட நீர்வழித்தடம் நகரங்களாக வளர்ந்து நிற்கின்றன. பொத்தேரி முதல் முடிச்சூர், மணிமங்கலம், ஆதனூர் வழியாக அடையாறு வரையிருந்த நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. ரெட்டேரியின் வியாசர்பாடி நீர்வழித்தடத்தில் இருந்த ஏரிகளில் ஒன்றுகூட இன்றைக்கு இல்லை. வேப்பேரியின் தண்ணீர் சேத்துப்பட்டு வழியாக எண்ணூர் - கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. அதுவும் இன்று காணாமல்போய்விட்டது.
நந்தனம் தொடங்கி வள்ளுவர் கோட்டம் தாண்டியும் பரந்துவிரிந்திருந் தது பெரிய ஏரி (Long tank). மழைக் காலங்களில் கூவம் பொங்கினால் பெரிய ஏரி வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் தஞ்சமடையும். எதையும் மிச்சம் வைக்காமல் அழித்துவிட்டோம். மேற்குமாம்பலத்தில் அந்த ஏரியின் எச்சமாக இப்போது இருப்பது ‘லேக் வியூ’ சாலை எனப்படும் ஏரிக்கரைச் சாலை மட்டுமே.
நாம் அழித்துவிட்ட நீர்வழிப்பாதை களில் மீண்டும் ஏரிகள், குளங்களை உருவாக்க முடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் மீண்டும் ஆறுகளை இணைப்பதே சென்னையின் வெள் ளப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமை யும். இதுபற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை தயாரித் துள்ளது பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளரான காந்திமதிநாதன் மற்றும் நீரியல் நிபுணர் ஒடிஸா பாலு உள்ளிட்டோர் அடங்கிய குழு. சென்னை யின் ஆறுகள் ஓடிய ஏரி, குளங்களின் நீர்வழித்தடத்தில் மீண்டும் ஏரிகளை யும் குளங்களையும் வெட்ட முடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் இருக்கும் கால்வாய்களை பயன்படுத்தியும், குழாய்களை அமைத்தும் மீண்டும் அந்த ஆறுகளை இணைக்கலாம் என்கிறது அவர்களது அறிக்கை.
அதன்படி, வாலாஜா அணைக் கட்டு - கோவிந்தவாடி கால்வாய் - காவேரிப்பாக்கம் ஏரி - கேசவரம் அணைக்கட்டு வழியாக பாலாற்றை கொசஸ்தலை ஆற்றுடன் இணைக்க லாம். இன்னொரு பக்கம் கோவிந்தவாடி கால்வாய் - கம்பக்கல் வாய்க்கால் - ஸ்ரீபெரும்புதூர் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாற்றுடனும் பாலாற்றை இணைக்கலாம்.
ஆரணி ஆற்றை கொசஸ்தலை ஆறு - கண்டலேறு - பூண்டி கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கதுடன் இணைக் கலாம். கூவத்தை ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டு - புது பங்காரு கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாறு ஆற்றுடன் இணைக்கலாம்.
இன்றைய சென்னை திட்டமிடப்படாத நகரம். அவசர கதியில் அசுரனைபோல வளர்ந்து நிற்கிறது அது. ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த ரத்த நாளங்களை நாம் அறுத்து எறிந்துவிட்டோம். அறுக் கப்பட்ட கோபத்தில் நம் மீது பாய்கிறது ஆறு. அதன் ஆவேசத்தை தாங்காமல் வெள்ளத்தில் மிதக்கிறோம். மீண்டும் அவற்றை இணைத்து வைப்பதே கடந்தகால பாவத்துக்கு தேடிக் கொள்ளும் பரிகாரமாக அமையும்.
(நீர் அடிக்கும்)
*
சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் பாய்வதை மக்கள் மிரட்சியோடு பார்க்கின்றனர். உயிர்ப்பலி உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால், சென்னைக்கு புயல் புதிது அல்ல. காலம்காலமாக கடும் புயல்களை தாங்கியது அது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு தாக்குதலின்போதும் சென்னை தன் னைத் தானாக தகவமைத்துக் கொண்டது. முதல் உலகப் போர் காலகட்டம்வரை இது நீடித்தது. அதன் பிந்தைய நகர மயமாக்கல்தான் சென்னையின் இயல் பான நீரோட்டத்தை சிதைக்கத் தொடங்கியது.
சென்னையின் அடிப்படை அமைப் பைப் பார்ப்போம். இங்கு ஆண்டு சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர். (தென்மேற்கு பருவமழை 400 மி.மீ, வடகிழக்கு பருவமழை 700 மி. மீ) கடந்த 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் பதிவான 2,566 மி.மீ. மழையே சென்னையில் பதிவான அதிகபட்ச மழை. நகரில் 24 மணி நேரத்துக்கு தொடர்ந்து 20 மி.மீ. மழை பெய்தாலே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பிவிடும். 1943, 76, 85, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் அடை யாறு ஆற்றிலும் 1943, 76 ஆகிய ஆண்டு களில் கூவத்திலும் வெள்ளம் பெருக் கெடுத்திருக்கிறது. கொளத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும் பாக்கம், வள்ளுவர் கோட்டம், வேளச் சேரி, மாம்பலம் உள்ளிட்ட 36 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சென்னையில் ஓடும் ஆறுகள் கொசஸ்தலை, கூவம், அடையாறு. சோளிங்கர் மலையடிவாரத்தில் (கிருஷ்ணாபுரம், நகரி) உற்பத்தியாகும் தண்ணீரும் காவேரிப்பாக்கம் ஏரி வழியாக வெளியேறும் பாலாற்றின் உபரி நீரும் சேர்ந்தது கொசஸ்தலை ஆறு. இதன் உபரி நீர், கேசவரம் அணைக் கட்டுக்கு செல்லும்போது உருவானது கூவம். பொத்தேரி, வல்லக்கோட்டை பகுதிகளின் தண்ணீரானது மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் சேர்ந்து உற்பத்தியாவது அடையாறு. இந்த 3 ஆறுகளும் மேடான மேற்கிலிருந்து பள்ளமான கிழக்கை நோக்கி ஓடி வந்து கடலில் கலக்கின்றன. அப்படி ஓடி வரும் ஆறுகளை நம் முன்னோர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் மூலம் இணைத்தனர்.
ஒவ்வொரு ஆற்றிலும் நீர்மட்டத்தை கணக்கிட அளவுகோல்கள் இருந்தன. மழைக் காலங்களில் நீர்மட்டம் உயரும் போது ஏரிகளின் மதகுகள் திறந்து விடப்பட்டன. ஒரு ஆற்றின் தண்ணீர், ஏரிகளின் வழியாக மற்றொரு ஆற்றுக்கு சென்றது. ஏரிகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘வாக்கம்’ என்றும் ஆறுகளைச் சுற்றியிருந்த பகுதிகள் ‘பாக்கம்’ என்றும் அழைக்கப்பட்டன. 2 அல்லது 3 ‘வாக்கம்’களுக்கு இடையே ஒரு ‘பாக்கம்’ இருந்தது. பாக்கங்களை (ஆறுகளை) வாக்கங்கள் (ஏரிகள்) இணைத்தன. சென்னையில் இந்த நீர்வழித் தடத்தை இன்றும் பார்க்கலாம். ஏரிகளாக இருந்த வில்லிவாக்கம், புரசைவாக்கம் பகுதிகளின் தண்ணீர் இப்போதும் நுங்கம்பாக்கம் கூவம் ஆற்றில் கலக்கிறது.
இப்படியாக கொசஸ்தலை கொந் தளித்தால் கூவம் கூப்பிட்டுக்கொள்ளும். கூவம் பொங்கினால் அடையாறு அழைத் துக் கொள்ளும் இந்த மூன்றையும் முகத் துவாரங்களில் வாங்கிக்கொண்டது வங்காள விரிகுடா. இந்த நீர்வழித்தட அமைப்பு காரணமாக புயல், வெள்ளங்க ளின்போது ஊருக்குள் பெரியளவில் வெள்ளம் புகாமல் தவிர்க்கப்பட்டது. ஆனால், இந்த நீர்வழித் தடங்களை எல்லாம் நாம் அழித்துவிட்டோம்.
கோவளம் பூஞ்சேரியில் தொடங்கி முட்டுக்காடு, பள்ளிக்கரணை, பல்லா வரம், பொழிச்சலூர் வரை இருந்த ஏராள மான ஏரிகள், குளங்கள் எல்லாம் இருப்புப் பாதைகளாகவும் நெடுஞ்சாலை களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. வல்லக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அடையாறு ஆறு தொடங்கும் மாகாணியம் மலையப்பட்டு வரை இருந்த ஏரிகள், குளங்களைக் கொண்ட நீர்வழித்தடம் நகரங்களாக வளர்ந்து நிற்கின்றன. பொத்தேரி முதல் முடிச்சூர், மணிமங்கலம், ஆதனூர் வழியாக அடையாறு வரையிருந்த நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. ரெட்டேரியின் வியாசர்பாடி நீர்வழித்தடத்தில் இருந்த ஏரிகளில் ஒன்றுகூட இன்றைக்கு இல்லை. வேப்பேரியின் தண்ணீர் சேத்துப்பட்டு வழியாக எண்ணூர் - கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. அதுவும் இன்று காணாமல்போய்விட்டது.
நந்தனம் தொடங்கி வள்ளுவர் கோட்டம் தாண்டியும் பரந்துவிரிந்திருந் தது பெரிய ஏரி (Long tank). மழைக் காலங்களில் கூவம் பொங்கினால் பெரிய ஏரி வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் தஞ்சமடையும். எதையும் மிச்சம் வைக்காமல் அழித்துவிட்டோம். மேற்குமாம்பலத்தில் அந்த ஏரியின் எச்சமாக இப்போது இருப்பது ‘லேக் வியூ’ சாலை எனப்படும் ஏரிக்கரைச் சாலை மட்டுமே.
நாம் அழித்துவிட்ட நீர்வழிப்பாதை களில் மீண்டும் ஏரிகள், குளங்களை உருவாக்க முடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் மீண்டும் ஆறுகளை இணைப்பதே சென்னையின் வெள் ளப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமை யும். இதுபற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை தயாரித் துள்ளது பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளரான காந்திமதிநாதன் மற்றும் நீரியல் நிபுணர் ஒடிஸா பாலு உள்ளிட்டோர் அடங்கிய குழு. சென்னை யின் ஆறுகள் ஓடிய ஏரி, குளங்களின் நீர்வழித்தடத்தில் மீண்டும் ஏரிகளை யும் குளங்களையும் வெட்ட முடியாது. ஆனால், அந்த வழித்தடத்தில் இருக்கும் கால்வாய்களை பயன்படுத்தியும், குழாய்களை அமைத்தும் மீண்டும் அந்த ஆறுகளை இணைக்கலாம் என்கிறது அவர்களது அறிக்கை.
அதன்படி, வாலாஜா அணைக் கட்டு - கோவிந்தவாடி கால்வாய் - காவேரிப்பாக்கம் ஏரி - கேசவரம் அணைக்கட்டு வழியாக பாலாற்றை கொசஸ்தலை ஆற்றுடன் இணைக்க லாம். இன்னொரு பக்கம் கோவிந்தவாடி கால்வாய் - கம்பக்கல் வாய்க்கால் - ஸ்ரீபெரும்புதூர் ஏரி - செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாற்றுடனும் பாலாற்றை இணைக்கலாம்.
ஆரணி ஆற்றை கொசஸ்தலை ஆறு - கண்டலேறு - பூண்டி கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கதுடன் இணைக் கலாம். கூவத்தை ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டு - புது பங்காரு கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாறு ஆற்றுடன் இணைக்கலாம்.
இன்றைய சென்னை திட்டமிடப்படாத நகரம். அவசர கதியில் அசுரனைபோல வளர்ந்து நிற்கிறது அது. ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த ரத்த நாளங்களை நாம் அறுத்து எறிந்துவிட்டோம். அறுக் கப்பட்ட கோபத்தில் நம் மீது பாய்கிறது ஆறு. அதன் ஆவேசத்தை தாங்காமல் வெள்ளத்தில் மிதக்கிறோம். மீண்டும் அவற்றை இணைத்து வைப்பதே கடந்தகால பாவத்துக்கு தேடிக் கொள்ளும் பரிகாரமாக அமையும்.
(நீர் அடிக்கும்)
பரிசாகக் கிடைத்த பழந்தொழி போனது எங்கே?
Class 1-10 GK Questions - Important Problems, Model Answers, Question Bank. Join Now for Free!www.meritnation.com/GK-QA

Class 1-10 GK Questions - Important Problems, Model Answers, Question Bank. Join Now for Free!www.meritnation.com/GK-QA

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
தூத்துக்குடியின் நட்டாத்திக் கிராமத்தில் இருக்கிறார் நயினார் குலசேகரன். தனது வாழ்நாள் முழு வதையும் தாமிரபரணி நதிக்காக அர்ப் பணித்த அறப்போராளி அவர். ஸ்ரீவைகுண் டம் அணை தூர் வாருவதைக் கண்காணிக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் தோழர் நல்லக்கண்ணு உள்ளிட்டோரில் இவரும் ஒருவர். வயது 91-ஐ கடந்துவிட்டது. தள்ளாமையில் கரங்கள் நடுங்குகின்றன. பார்வை மங்கிவிட்டது. காது கேட்கும் திறனும் குறைந்துவிட்டது. பேச்சும் வரவில்லை, திக்கித் திணறித்தான் பேசுகிறார். ஆனால், இந்த நிலையிலும் நீர் நிலைகளைக் காக்க அரசு அலுவலகங்களின் படியேறிக் கொண்டி ருக்கிறார்.
“யப்பா, தாமிரபரணி ஆத்துல ஆதிச்சநல்லூர்கிட்ட சின்னதா ஒரு தடுப்பணை கட்டணும்னு மனு கொடுத்தேன். அது முடியாதுன்னு சொல் றாங்க. ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுப்பா. அதேபோல இந்தப் பயலுக தூர் அள்ளுறேன்னு மணலை பூரா கொள்ளையடிக்கிறானுங்க. ஊர்க்காரங் களுக்கும் உணர்வில்லாமப் போச்சு. கால்வாயை எல்லாம் ஆக்கிரமிச்சிருக் காங்க…” என்று உடன் வந்திருந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விடம் சொல்கிறார். உண்மைதான், நமக்குதான் உணர்வு வற்றிவிட்டது. தூத்துக்குடியில் நமது முன்னோர் உருவாக்கி வைத்த கால்வாய்களையும் வெள்ள நீர் வடிகால்களையும் ஆக்கிர மித்து, பராமரிக்காமல் சீரழித்து வைத் திருக்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிர பரணியின் மூலம் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆற்றில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல பிரதான கால்வாய்களும், வெள்ளக் காலங்களில் விவசாய நிலங் களில் இருந்து உபரி நீரை வெளியேற்ற வெள்ள நீர் வடிகால்களும் இருக்கின்றன. ஆற்றில் இருந்து பாசனத்துக்காக கால் வாய்க்குச் செல்லும் தண்ணீர் மீண்டும் ஆற்றில் கலந்துவிடும் தொழில்நுட்ப அமைப்புடன் கட்டப்பட்ட கால்வாய்கள் அவை. அவற்றில் முக்கியமானவை, செய்துங்கநல்லூர் - ஆலங்கால் வடி கால், தூதுகுழி வடிகால், நாசரேத் - சர்க்கார் ஓடை வடிகால், குரும்பூர் - ‘கடல்பாதி கடம்பா பாதி’ எனப்படும் கடம்பா குளம் வடிகால்.
மேற்கண்ட வடிகால்கள் எல்லாம் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தன. தவிர ஏராளமான ஆக்கிரமிப்புகள். நயினார் குலசேகரன் போன்றவர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 1996 - 2001 காலகட்டத்தில் இவை தூர் வாரி சீரமைக்கப்பட்டன. இவற்றில் முத்தாலங்குறிச்சி - ஆலங்கால் கால் வாயின் அகலம் 10 அடி. ஆக்கிரமிப்பை அகற்றாதபோது அது ஒரு அடியாக சுருங்கியிருந்தது. ஆனால், ஆக்கி ரமிப்பை அகற்றியபோதும், பின்பும், இப்போதும் அது நான்கு அடியாக மட்டுமே இருக்கிறது. சுமார் ஆறடி வாய்க்கால் வயல்வெளிகளாக மாறி விட்டது. தூதுகுழி கால்வாய் 20 அடி அகலம் கொண்டது. இந்தக் கால்வாய் தூர் வாரிய பிறகு சில ஆண்டுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டது. அதன் பின்பு மீண்டும் இதில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிவிட்டன.
மருதூர் மேலக்கால்வாயில் இருந்து தென்கரை குளத்துக்குத் தண்ணீர் செல் கிறது. அங்கிருந்து முதலாம் மொழிக் குளம், நொச்சிக்குளம், புதுக்குளம், தேர்க்கன்குளம், வெள்ளரிக்காயூரணி குளம் நிரம்பி சர்க்கார் ஓடையாகப் பாய்ந்து, கடம்பா குளத்துக்குச் செல் கிறது. ஆனால், தூர் வாரப்பட்டப் பின்பு அதனைப் பராமரிக்காததால் 15 அடி அகலம் கொண்ட சர்க்கார் ஓடை இன்று முழுவதுமாக தூர்ந்துக்கிடக்கிறது. கடம்பா குளம் தண்ணீர் குரும்பூர், அங்கமங்கலம், புறையூர் வழியாக ஆத்தூர் கால்வாய்க்குச் செல்கிறது. இதில் வெள்ளக் காலங்களில் கடம்பா குளத்தின் உபரி நீர் செல்வதற்கான கடம்பா குளம் வடிகால் முழுமையாக தூர்ந்துக்கிடக்கிறது. இதனால், வெள்ளக் காலங்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்துவிடுகிறது. மேற்கண்ட சீரழிவுகளால் நமது சாகு படியே மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.
கால்வாய்களும் வெள்ள வடிகால்களும் நன்றாக இருந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 15 முதல் மார்ச் வரை பிசான சாகுபடி நடந்தது. ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கார் சாகுபடி நடந்தது. இவைத் தவிர, பாபநாசம் அணையின் தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் பழந்தொழி (முன் கார்) சாகுபடி நடந்தது. ஆனால், இப்போது பல பகுதிகளில் பிசான சாகுபடி மட்டுமே நடக்கிறது. மற்ற இரண்டும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. காரணம், நாம் கால்வாய்களையும் வடிகால்களையும் பராமரிக்கவில்லை; ஆக்கிரமித்திருக்கிறோம். அரசு நிர்வாகங்களின் மீது தவறு இருக்கி றதுதான். அதிகாரிகளைக் குறை சொல்லலாம்தான். ஆனால், நமக்கும் அக்கறை வேண்டும் அல்லவா. தூர் வார செலவிடப்பட்ட பணம் விவசாயி களின் வரிப் பணம்தானே. அவரவர் வயலையொட்டியாவது அவற்றைப் பராமரித்து வந்திருந்தால் இன்று இவ்வளவு சாகுபடியை இழந்திருப் போமா? பல இடங்களில் வயல்களே வடிகாலுக்குள் இருக்கின்றன. பல இடங்களில் குப்பைகள் கொட்டப் பட்டிருக்கின்றன. பக்கத்து மாநிலத்தில் இருந்தா வந்து கொட்டினார்கள்?
மண்ணை, நீர் நிலைகளை நேசித்த மக்கள் வாழ்ந்த மண் தூத்துக்குடி. முன்கார் எனப்படும் பழந்தொழி சாகுபடி திருநெல்வேலி மாவட்ட விவசாயி களுக்குக் கிடையாது. அது தூத்துக்குடி விவசாயிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட உரிமை, பரிசு. இன்றைய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் அப்பாக்களும் தாத்தாக்களும் கொட்டிய உழைப்பில் கிடைத்தது அது. 1950-களில் மணிமுத்தாறு தாமிரபரணியில் கலந்து வெள்ளமாக ஓடி கடலுக்குச் சென்றுவிடும். இதனால், கோடை காலத்தில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, மணிமுத்தாற்றில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள். இதனை அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம், காமராஜருடைய கவனத்துக்குக் கொண்டுச் சென்றார். ஆனால், அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. எனவே, மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அணையைக் கட்ட லாம் என்றார் காமராஜர். சொன்ன மறு நாளே அள்ளிக்கொடுத்தார்கள் தூத்துக் குடி விவசாயிகள். நிலத்தை விற்று நிதி கொடுத்தவர்கள் பலர். இதைத் தொடர்ந்துதான் 1956-ல் அணை கட்டப்பட்டது.
நயினார் குலசேகரன் | நீர் நிரம்பிய நிலையில் மணிமுத்தாறு அணை
அணையில் 80 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தால் முதலாம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு வழங்கப்பட்டது. இது போக கோடைக் காலத்தில் அணையில் 80 அடிக்கு கீழே தண்ணீர் இருக்கும் பட்சத்தில் நீர் வரத்து, இருப்பைப் பொறுத்து அது தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் பழந்தொழி சாகுபடிக்காக பயன்படுத்திக்கொள்ள உரிமை அளிக்கப்பட்டது. நிதி கொடுத்த தற்கான பரிசு இது. கூடுதல் சாகுபடி இது. கூடுதல் லாபம் இது. ஆனால், நம் அக்கறையின்மையால் முன்னோர்கள் வாங்கிக் கொடுத்த பரிசைக் கூட இழந்துவிட்டுத் தவிக்கிறோம்.
(நீர் அடிக்கும்)
*
தூத்துக்குடியின் நட்டாத்திக் கிராமத்தில் இருக்கிறார் நயினார் குலசேகரன். தனது வாழ்நாள் முழு வதையும் தாமிரபரணி நதிக்காக அர்ப் பணித்த அறப்போராளி அவர். ஸ்ரீவைகுண் டம் அணை தூர் வாருவதைக் கண்காணிக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவில் தோழர் நல்லக்கண்ணு உள்ளிட்டோரில் இவரும் ஒருவர். வயது 91-ஐ கடந்துவிட்டது. தள்ளாமையில் கரங்கள் நடுங்குகின்றன. பார்வை மங்கிவிட்டது. காது கேட்கும் திறனும் குறைந்துவிட்டது. பேச்சும் வரவில்லை, திக்கித் திணறித்தான் பேசுகிறார். ஆனால், இந்த நிலையிலும் நீர் நிலைகளைக் காக்க அரசு அலுவலகங்களின் படியேறிக் கொண்டி ருக்கிறார்.
“யப்பா, தாமிரபரணி ஆத்துல ஆதிச்சநல்லூர்கிட்ட சின்னதா ஒரு தடுப்பணை கட்டணும்னு மனு கொடுத்தேன். அது முடியாதுன்னு சொல் றாங்க. ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுப்பா. அதேபோல இந்தப் பயலுக தூர் அள்ளுறேன்னு மணலை பூரா கொள்ளையடிக்கிறானுங்க. ஊர்க்காரங் களுக்கும் உணர்வில்லாமப் போச்சு. கால்வாயை எல்லாம் ஆக்கிரமிச்சிருக் காங்க…” என்று உடன் வந்திருந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விடம் சொல்கிறார். உண்மைதான், நமக்குதான் உணர்வு வற்றிவிட்டது. தூத்துக்குடியில் நமது முன்னோர் உருவாக்கி வைத்த கால்வாய்களையும் வெள்ள நீர் வடிகால்களையும் ஆக்கிர மித்து, பராமரிக்காமல் சீரழித்து வைத் திருக்கிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிர பரணியின் மூலம் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆற்றில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல பிரதான கால்வாய்களும், வெள்ளக் காலங்களில் விவசாய நிலங் களில் இருந்து உபரி நீரை வெளியேற்ற வெள்ள நீர் வடிகால்களும் இருக்கின்றன. ஆற்றில் இருந்து பாசனத்துக்காக கால் வாய்க்குச் செல்லும் தண்ணீர் மீண்டும் ஆற்றில் கலந்துவிடும் தொழில்நுட்ப அமைப்புடன் கட்டப்பட்ட கால்வாய்கள் அவை. அவற்றில் முக்கியமானவை, செய்துங்கநல்லூர் - ஆலங்கால் வடி கால், தூதுகுழி வடிகால், நாசரேத் - சர்க்கார் ஓடை வடிகால், குரும்பூர் - ‘கடல்பாதி கடம்பா பாதி’ எனப்படும் கடம்பா குளம் வடிகால்.
மேற்கண்ட வடிகால்கள் எல்லாம் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தன. தவிர ஏராளமான ஆக்கிரமிப்புகள். நயினார் குலசேகரன் போன்றவர்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 1996 - 2001 காலகட்டத்தில் இவை தூர் வாரி சீரமைக்கப்பட்டன. இவற்றில் முத்தாலங்குறிச்சி - ஆலங்கால் கால் வாயின் அகலம் 10 அடி. ஆக்கிரமிப்பை அகற்றாதபோது அது ஒரு அடியாக சுருங்கியிருந்தது. ஆனால், ஆக்கி ரமிப்பை அகற்றியபோதும், பின்பும், இப்போதும் அது நான்கு அடியாக மட்டுமே இருக்கிறது. சுமார் ஆறடி வாய்க்கால் வயல்வெளிகளாக மாறி விட்டது. தூதுகுழி கால்வாய் 20 அடி அகலம் கொண்டது. இந்தக் கால்வாய் தூர் வாரிய பிறகு சில ஆண்டுகள் மட்டுமே பராமரிக்கப்பட்டது. அதன் பின்பு மீண்டும் இதில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிவிட்டன.
மருதூர் மேலக்கால்வாயில் இருந்து தென்கரை குளத்துக்குத் தண்ணீர் செல் கிறது. அங்கிருந்து முதலாம் மொழிக் குளம், நொச்சிக்குளம், புதுக்குளம், தேர்க்கன்குளம், வெள்ளரிக்காயூரணி குளம் நிரம்பி சர்க்கார் ஓடையாகப் பாய்ந்து, கடம்பா குளத்துக்குச் செல் கிறது. ஆனால், தூர் வாரப்பட்டப் பின்பு அதனைப் பராமரிக்காததால் 15 அடி அகலம் கொண்ட சர்க்கார் ஓடை இன்று முழுவதுமாக தூர்ந்துக்கிடக்கிறது. கடம்பா குளம் தண்ணீர் குரும்பூர், அங்கமங்கலம், புறையூர் வழியாக ஆத்தூர் கால்வாய்க்குச் செல்கிறது. இதில் வெள்ளக் காலங்களில் கடம்பா குளத்தின் உபரி நீர் செல்வதற்கான கடம்பா குளம் வடிகால் முழுமையாக தூர்ந்துக்கிடக்கிறது. இதனால், வெள்ளக் காலங்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்துவிடுகிறது. மேற்கண்ட சீரழிவுகளால் நமது சாகு படியே மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.
கால்வாய்களும் வெள்ள வடிகால்களும் நன்றாக இருந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 15 முதல் மார்ச் வரை பிசான சாகுபடி நடந்தது. ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கார் சாகுபடி நடந்தது. இவைத் தவிர, பாபநாசம் அணையின் தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் பழந்தொழி (முன் கார்) சாகுபடி நடந்தது. ஆனால், இப்போது பல பகுதிகளில் பிசான சாகுபடி மட்டுமே நடக்கிறது. மற்ற இரண்டும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. காரணம், நாம் கால்வாய்களையும் வடிகால்களையும் பராமரிக்கவில்லை; ஆக்கிரமித்திருக்கிறோம். அரசு நிர்வாகங்களின் மீது தவறு இருக்கி றதுதான். அதிகாரிகளைக் குறை சொல்லலாம்தான். ஆனால், நமக்கும் அக்கறை வேண்டும் அல்லவா. தூர் வார செலவிடப்பட்ட பணம் விவசாயி களின் வரிப் பணம்தானே. அவரவர் வயலையொட்டியாவது அவற்றைப் பராமரித்து வந்திருந்தால் இன்று இவ்வளவு சாகுபடியை இழந்திருப் போமா? பல இடங்களில் வயல்களே வடிகாலுக்குள் இருக்கின்றன. பல இடங்களில் குப்பைகள் கொட்டப் பட்டிருக்கின்றன. பக்கத்து மாநிலத்தில் இருந்தா வந்து கொட்டினார்கள்?
மண்ணை, நீர் நிலைகளை நேசித்த மக்கள் வாழ்ந்த மண் தூத்துக்குடி. முன்கார் எனப்படும் பழந்தொழி சாகுபடி திருநெல்வேலி மாவட்ட விவசாயி களுக்குக் கிடையாது. அது தூத்துக்குடி விவசாயிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட உரிமை, பரிசு. இன்றைய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் அப்பாக்களும் தாத்தாக்களும் கொட்டிய உழைப்பில் கிடைத்தது அது. 1950-களில் மணிமுத்தாறு தாமிரபரணியில் கலந்து வெள்ளமாக ஓடி கடலுக்குச் சென்றுவிடும். இதனால், கோடை காலத்தில் தூத்துக்குடி விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, மணிமுத்தாற்றில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள். இதனை அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம், காமராஜருடைய கவனத்துக்குக் கொண்டுச் சென்றார். ஆனால், அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. எனவே, மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அணையைக் கட்ட லாம் என்றார் காமராஜர். சொன்ன மறு நாளே அள்ளிக்கொடுத்தார்கள் தூத்துக் குடி விவசாயிகள். நிலத்தை விற்று நிதி கொடுத்தவர்கள் பலர். இதைத் தொடர்ந்துதான் 1956-ல் அணை கட்டப்பட்டது.

நயினார் குலசேகரன் | நீர் நிரம்பிய நிலையில் மணிமுத்தாறு அணை
அணையில் 80 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தால் முதலாம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு வழங்கப்பட்டது. இது போக கோடைக் காலத்தில் அணையில் 80 அடிக்கு கீழே தண்ணீர் இருக்கும் பட்சத்தில் நீர் வரத்து, இருப்பைப் பொறுத்து அது தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டும் பழந்தொழி சாகுபடிக்காக பயன்படுத்திக்கொள்ள உரிமை அளிக்கப்பட்டது. நிதி கொடுத்த தற்கான பரிசு இது. கூடுதல் சாகுபடி இது. கூடுதல் லாபம் இது. ஆனால், நம் அக்கறையின்மையால் முன்னோர்கள் வாங்கிக் கொடுத்த பரிசைக் கூட இழந்துவிட்டுத் தவிக்கிறோம்.
(நீர் அடிக்கும்)
குளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமில்லை கோவை மக்களின் வியர்வையும்தான்!
Application Forms Online - Ranked #5 Among The Private Engg Colleges. Admission Open 2016!manipal.edu/BTech_Admissions_2016
Application Forms Online - Ranked #5 Among The Private Engg Colleges. Admission Open 2016!manipal.edu/BTech_Admissions_2016
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
தண்ணீரின் இயல்பு குளிர்ச்சி. மனிதனுக்கு உணர்வை தருகிறது தண்ணீர். நல்ல மனதை தருகிறது தண்ணீர். மனித மனங்களில் அன்பை ஊற்றெடுக்க வைக்கிறது தண்ணீர். ஒவ்வொரு நாளும் நம்மை புதிதாய் பிறக்க வைக்கிறது தண்ணீர். ஒரு சமூகத்தின் மனநிலையைக் கண்ணாடியாகப் பிரதிபலிக் கிறது தண்ணீர். வானமும், பூமியும், காற்றும், நீர் நிலைகளும், பசுஞ்சோலைகளும், புல் வெளிகளும்தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. தண்ணீர் இல்லை என்றால் எதுவும் இல்லை. தண்ணீர் இல்லாத சமூகம் வறண்டுபோகும். வறட்சி யின் வெம்மையில் பிறக்கிறது வெறுப்பு. அடங்காத தாகத்தில் பிறக்கிறது கோபம். இல்லாத வேதனையில் பிறக்கிறது பொறாமை. எல்லாமுமாகச் சேர்ந்து உருவெடுக்கிறது வன்முறை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இவ்வளவு அழகான இயற்கையை அழித்துவிட்டு நாம் புதிதாய் வேறு எதை உருவாக்கப்போகிறோம்?
நம்மால் இன்னொரு மனிதனைத் தவிர உயிர்ப்போடு எதையாவது உருவாக்க முடியுமா? ஒரு துளித் தண்ணீரை? ஒரு பிடி மண்ணை? ஒரு நொடி சுவா சத்துக்கான காற்றை? அழகாய் பூக் கும் மலரை? இதில் ஒன்றையாவது நம்மால் உருவாக்க முடியுமா? நவீன தொழில்நுட்பங்களில் நாம் உரு வாக்கியது எல்லாம் இயற்கையின் மாதிரிகளே. இயற்கைதான் எல்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அந்த இயற் கையை அழித்துவிட்டு எதை சாதிக்கப் போகிறோம் நாம்? பேராசை வெறியில் நம் கழுத்தை, நாமே அறுத்து ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறோம்!
அன்றைக்கு நொய்யல் ஆற்றிலும் அப்படிதான் நடந்தது. “இனி குளத்துக்குத் தண்ணீர் வருவது சிரமம். இங்கே ஒரு கும்பல் வந்து ஏராளமான இடங்களில் கால்வாய் கரைகளை உடைத்துவிட்டு போய்விட்டார்கள். வேக மாக வந்த தண்ணீர் உடைப்புகளில் வெளியேறிவிட்டது. ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் இனி கோவை நகரம் வரை தண்ணீர் வர சாத்தியமே இல்லை” என்றார்கள். குளத்தைத் தூர் வாரும் தகவல் கிடைத்ததும் சிலருக் குத் தூக்கம் கெட்டது. அவர்கள் நொய் யல் ஆற்றையும், கரையோரங்களையும், குளத்துக்குத் தண்ணீர் வரும் கால் வாயையும் குளத்தையுமே ஆக்கிரமித் திருந்தனர். குளத்தில் மட்டும் சுமார் 1,000 குடியிருப்புகள் ஆக்கிரமித்திருந்தன. தண்ணீர் வந்தால் பாதிப்பு நமக்கு தான் என்று அஞ்சினார்கள் ஆக்கிரமிப் பாளர்கள். அதனாலேயே கரைகளை உடைத்துப்போட்டார்கள். இந்தத் தகவல் வந்தபோது நள்ளிரவு 12 மணி. மண்வெட்டிப் பிடித்து குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் வெடித்திருந்தன. தங்கள் வீடுகளில்கூட அவர்கள் அப்படி வேலை செய்திருக்க மாட்டார்கள். லட்சம் பேரின் உழைப்பு அது. ஒரு சமூகத் தின் கனவு அது. நள்ளிரவில் அத்தனை பேரும் கலங்கி அழுதார்கள். குளத்தின் வறண்ட மண்ணில் மழையாகப் பொழிந் தது மக்களின் கண்ணீர்.
ஆனால், அதுவே அவர்களை வைராக் கியம் கொள்ளச் செய்தது. நள்ளிரவு என்றும் பார்க்காமல் அப்போதே கிளம் பினார்கள். வாய்க்கால் வழியில் வீறு நடை போட்டது பெரும் படை. இன் னொரு பக்கம் மாநகராட்சி, பொதுப் பணித்துறை, காவல் துறைகள் கைகோத் தன. விடியற்காலை 3 மணிக்கு உடைப் பெடுத்த இடங்களை அடைந்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உடைக் கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக செங்கல், சிமெண்ட், மணல் மூட்டைகள் குவிந்தன. அந்த நிமிடமே தொடங்கியது கட்டுமானப் பணி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தார்கள். புதிய கரையைத் தண்ணீர் கரைக்காமல் இருக்க நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. அதற்கு பின்னால் கரை கட்டப்பட்டது. வேலை முடித்து நிமிர்ந்தபோது சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வை உணர்ந்தது இயற்கை. பெரு மழை கொட்டத் தொடங் கியது. மெதுவாய் பாம்புபோல ஊர்ந்து வந்த தண்ணீர் பாதங்களுடன் மக்கள் இதயங்களையும் நனைத்தது. சிறிது நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு நகரத்தின் குளத்துக் குள் வந்துச் சேர்ந்தது தண்ணீர். மக்கள் மலர்களைத் தூவி ஆரவாரித்தார்கள். உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். பல ஆண்டுக ளுக்குப் பிறகு நிரம்பியது கோவை பெரிய குளம். இப்போது அந்தக் குளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் வியர் வையும் ஆனந்தக் கண்ணீரும்தான்!
தயவுசெய்து மீண்டும் அதில் சாக்கடையைக் கலக்காதீர்கள்.
கோவையில் இன்னொரு சாதனையும் நடந்திருக்கிறது. அதையும் பார்த்து விடுவோம். ஒருகாலத்தில் நொய்யலாறு 34 சிற்றாறுகளைத் தனது நாடி நரம்பு களாகக் கொண்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சிப் பொங்க அவை ஓடின. காலப்போக்கில் அந்த நாடி நரம்புகள் வெட்டி எறியப்பட்டன. மண் ணுக்குள் புதைக்கப்பட்டன. இன்று எஞ்சியவை நண்டங்கரை, முண்டந் துறை, இருட்டுப்பள்ளம் இவை மூன்றும் தான். குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் இந்த ஓடைகளை எட்டிப் பார்க்க அஞ்சுகிறது தண்ணீர். இதில் சிறுவாணி அடிவாரத்தில் இருக்கும் நண்டங்கரை ஓடையைதான் ‘சிறுதுளி’ உயிர்ப்பித்திருக்கிறது.
ஓர் ஆண்டுக்கு முன்பு அவர்கள் அந்த ஓடைக்குச் சென்றபோது அங்கே ஓடை ஓடியதற்கான தடயமே இல்லை. நிச்சயம் அந்த ஓடை இங்கு இல்லை என்றுதான் நினைத்தார்கள். அப்பகுதி விவசாயிகள்தான் ‘இல்லை, நண்டங்கரை ஓடை இங்கேதான் ஓடியது’ என்று படம் வரைந்து பாகம் குறித்துக் காட்டினார்கள். அதுமட்டுமல்ல; மீண்டும் ஓடையைத் தூர் வாரினாலும் தண்ணீர் வரவே வராது என்று சத்தியம் செய் தார்கள். ஆனது ஆகட்டும், முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று களமிறங்கியது ‘சிறுதுளி’. மக்களும் கைகோத்தார்கள். ஊரக வளர்ச்சித் துறையின் ‘நமக்கு நாமே’ திட்டம் கைகொடுத்தது. அரசாங்கம் 49 % மக் கள் 51 % அடிப்படையில் நிதி சேர்ந்தது.
சந்தேகமாகத்தான் ஓடையைத் தோண்டினார்கள். ஆனால், சில அடி கள் தோண்டும்போதே தண்ணீர் ஊற் றெடுத்துப் பொங்கியது. அடைத்து வைத்த கோபத்தில் பீய்ச்சியடித்தது தண்ணீர். ஓடையில் வரும் தண்ணீரைச் சேகரிக்க சிறிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. எட்டு மாதங்கள் தீவிரமாக பணிகள் நடைபெற்றன. தடுப் பணை முழுவதும் நீர் நிரம்பியது. சுமார் ஐந்தாண்டுகள் அந்தப் பகுதியில் தண் ணீர் இல்லாமல் தவித்தார்கள் மக்கள். ஓடையும் தடுப்பணையும் வந்தபிறகு வீட்டுக் கிணறுகளின் தண்ணீரை மொண் டுக் குடிக்கிறார்கள் அவர்கள். சிறுவாணி ஊற்றல்லவா அது!
(நீர் அடிக்கும்)
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மகா மண்டபத்தின் வடக்கு சுவரில் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. கி.பி.1224-ம் ஆண்டு கொங்கு மண்டலத்தை ஆட்சிபுரிந்த வீர ராஜேந்திரனின் நீர் நிர்வாகம் பற்றிய கல்வெட்டு அது. சோழர்கள் நொய்யல் ஆற்றில் இருபுறமும் வரிசையாக சங்கிலித் தொடர் குளங்களை வெட்டினார்கள். கழுகுப் பார்வையில் பார்த்தால் ஆற்றுக்கு மாலை அணிவித்ததுபோல இருக்கும் குளங்களின் தோற்றம். அதில் தேவிசிறை என்கிற குளம் ஆற்றின் மேல் பகுதியிலும், கோளூர் அணை ஆற்றின் கீழ் பகுதியிலும் கட்டப்பட்டன. மேலே ஊர்க்காரர்கள் தங்கள் குளத்தில் முதலில் தண்ணீரை நிரப்பியதால் கீழே இருந்த குளத்துக்குத் தண்ணீர் வரத்துத் தடைபட்டது. கோளூர் மக்கள் மன்னனிடம் முறையிட்டார்கள்.
அப்போது மன்னன், “தங்களுரெல்லையில் தேவிசிறை என்கிற அணை யடைத்து வாய்க்காலும் வெட்டிக் கோளூரணைக்கு சேதம் வராதபடி அவ்வணைக்குப் பின்பாக நீர் விட்டுக்கொள்வாராகவும்” என்று உத்தர விட்டான். மன்னனின் உத்தரவு கல் வெட்டிலும் பொறிக்கப்பட்டது. அதாவது, கீழேயிருக்கும் கோளூர் அணை நிரம்பிய பின்பே மேலே இருக்கும் தேவிசிறை அணையில் நீரை தேக்க வேண்டும் என்கிறது அந்த உத்தரவு. நீர்ப் பங்கீட்டிலும் நீர் நிலைகள் பராம ரிப்பிலும் சிறந்து விளங்கினார்கள் கொங்கு சோழர்கள்.
ஆனால், இன்று அந்தக் குளங்கள் எல்லாம் குப்பை மேடுகளாகவும் சாக் கடைகளாகவும் அழிந்து கொண்டிருக்கின்றன. அரசே பல இடங்களில் குளங்களை ஆக்கிரமித்தது. இந்த நிலையில்தான் கோவையின் ‘சிறு துளி’அமைப்பு மூலம் குளங்களுக்கு விடியல் தொடங்கியது. இந்த அமைப் பினர் ஆரம்பத்தில் கிருஷ்ணம்பதி, உக்கடம் பெரியகுளம், செல்வம்பதி, முத்தண்ணன், செல்வ சிந்தாமணி, வாலாங்குளம் உள்ளிட்ட குளங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும், சீரழிவுகள் தொடர்ந்ததால் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
ஒருகட்டத்தில் உக்கடத்தில் 325 ஏக்கர் கொண்ட பெரிய குளம் முற்றிலு மாக வற்றியது. அது இருந்த தடமே தெரி யாமல் மண் மூடியது. சீமைக் கருவேலங் கள் மண்டின. அந்த சமயத்தில்தான் 2013 ஏப்ரல் மாதம் குளத்தைக் கையிலெடுத்தது ‘சிறு துளி’ அமைப்பு. முதலில் 20 பேர் களம் இறங்கினார்கள். தோண்டத் தோண்ட வந்தன கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள். புதைகுழி போல சாக்கடை தேங்கியதால் உள் ளேயே செல்ல முடியவில்லை. ஆரம்பத் தில் அவர்களால் அரை ஏக்கரைக்கூட சீரமைக்க முடியவில்லை. 325 ஏக்கரை யும் வெட்டி முடிப்பது எப்படி என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள் அவர்கள்.
மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய பணி சாத்தியாமாகும் என்று முடிவு செய்தார் ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன். ‘ஒரு கைப்பிடி மண் எடுத்து போடுங்கள்’ என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஞாயிறுகளில் மட்டுமே வேலை செய்யலாம் என்று முடிவானது. முதல் வாரம் சுமார் 200 பேர் வருவார்கள் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 ஆயிரம் பேர் வந்து குவிந்தார்கள். ஆனால், அத்தனைப் பேரும் வேலை பார்க்க மண்வெட்டி, மண் சட்டி இல்லை. தகவல் கேள்விப்பட்ட கோவை ‘சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ மண் சட்டிகளையும் மண் வெட்டிகளையும் கொண்டுவந்து குவித்தது முதல் நாளே மளமள வென நடந்தன வேலைகள்.
கோவை பேரூர் ஆதினம் மடத்தில் அடிக்கடி அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளும் மத நல்லிணக்கக் கூட்டம் நடக்கும். அந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஆன்மிக அன்பர்கள் இதைப் பற்றி ஆலோசித்தார்கள். ‘நீர் நிலைகளை சீரமைப்பதும் ஆன்மிகத் தொண்டுதான்’ என்று வலியுறுத்தப்பட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் குடும்பத் தோடு குவிந்துவிட்டார்கள். இரண் டாவது வாரமே சுமார் 6 ஆயிரம் பேர் திரண்டார்கள். அந்தப் பகுதியைக் கடந்த வர்கள் எல்லாம் கூட்டத்தைப் பார்த்து திகைத்து, வண்டிகளை ஓரம்கட்டிவிட்டு பணியில் ஈடுபட்டார்கள். பலரிடம் இருந்து மோர், இளநீர், குளுகோஸ், பிஸ் கெட் பாக்கெட்டுகள் வந்து குவிந்தன. முகம் தெரியாத, பெயர் அறியாத ஆயிரக்கணக்கான மக்களை உணர்வால் இணைத்தது குளம். தன்னிச்சையாக உணர்வுப் பெற்றார்கள் மக்கள்.
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. மக்க ளின் உணர்வைக் கண்டு வியந்த காவல் துறையின் அன்றைய மாநகர ஆணை யர் ஏ.கே.விஸ்வாதன் ஆயிரம் காவலர் களைக் குளத்துக்கு அனுப்பினார். வெள்ளலூர் விரைவு அதிரடி படை முகாமில் இருந்து 300 வீரர்கள் களத்தில் இறங்கினார்கள். சீமை கருவேல மரங்கள், புதர்கள், மண் மேடுகள் மின்னல் வேகத்தில் மறைந்தன. அடுத்த வாரம் கோவை மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கின. நேரில் வந்து மண் அள்ளினார் மேயர். அரசுத் துறைகள் அதிகாரிகள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பத்திரிகை யாளர்கள் பலரும் பணியில் ஈடுபட்டார்கள். கடைசி வாரம் மட்டும் சுமார் 15ஆயிரம் பேருடன் மனிதர்களால் நிரம்பியிருந்தது குளம்.
குளம் மொத்தம் மூன்றரை அடி ஆழப்படுத்தப்பட்டது. குளத்தில் தோண்டிய மண்ணைக் கொண்டே நடுவே தீவுகளை அமைத்தார்கள். கரைகள் பலப்படுத்தப்பட்டன. குளத் துக்குத் தண்ணீரைக் கொண்டுவரும் வாய்க்காலும் தூர்வாரப்பட்டது. மொத்தமாக சீரமைக்கப்பட்டது குளம். சில நாட்கள் முன்புதான் மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழையும் தொடங்கியிருந்தது. நொய்யலும் பெருக்கெடுத்திருந்தது. பக்கத்து ஊரில் இருந்து தகவல் வந்தது, ‘ஆற்று வெள்ளம் சீறிப் பாய்கிறது; இன்னும் ஒரு மணி நேரத்தில் குளத்துக்குத் தண் ணீர் வந்துவிடும்’ என்றார்கள்.
அன்று அந்தி சாய்ந்தது. ஊரே திரண்டு அகல் விளக்குகளை ஏந்தி நின்றது. பெண்கள் ஆரத்தி கரைத்து வைத்திருந்தார்கள். தவழ்ந்து வரும் தண்ணீரை வரவேற்க மலர்களுடன் காத்திருந்தார்கள் குழந்தைகள். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமாகியது. மூன்று மணி நேரமானது. இரவு மணி 10 ஆகியும் தண்ணீர் வரவில்லை. மீண்டும் ஒரு தகவல் வந்தது. ‘தண்ணீர் வர வாய்ப்பே இல்லை’ என்றார்கள் கண் ணீருடன். என்ன ஆனது நொய்யலுக்கு? அங்கே ஒரு சதி அரங்கேறியிருந்தது.
(நீர் அடிக்கும்)
*********
தண்ணீரின் இயல்பு குளிர்ச்சி. மனிதனுக்கு உணர்வை தருகிறது தண்ணீர். நல்ல மனதை தருகிறது தண்ணீர். மனித மனங்களில் அன்பை ஊற்றெடுக்க வைக்கிறது தண்ணீர். ஒவ்வொரு நாளும் நம்மை புதிதாய் பிறக்க வைக்கிறது தண்ணீர். ஒரு சமூகத்தின் மனநிலையைக் கண்ணாடியாகப் பிரதிபலிக் கிறது தண்ணீர். வானமும், பூமியும், காற்றும், நீர் நிலைகளும், பசுஞ்சோலைகளும், புல் வெளிகளும்தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. தண்ணீர் இல்லை என்றால் எதுவும் இல்லை. தண்ணீர் இல்லாத சமூகம் வறண்டுபோகும். வறட்சி யின் வெம்மையில் பிறக்கிறது வெறுப்பு. அடங்காத தாகத்தில் பிறக்கிறது கோபம். இல்லாத வேதனையில் பிறக்கிறது பொறாமை. எல்லாமுமாகச் சேர்ந்து உருவெடுக்கிறது வன்முறை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இவ்வளவு அழகான இயற்கையை அழித்துவிட்டு நாம் புதிதாய் வேறு எதை உருவாக்கப்போகிறோம்?
நம்மால் இன்னொரு மனிதனைத் தவிர உயிர்ப்போடு எதையாவது உருவாக்க முடியுமா? ஒரு துளித் தண்ணீரை? ஒரு பிடி மண்ணை? ஒரு நொடி சுவா சத்துக்கான காற்றை? அழகாய் பூக் கும் மலரை? இதில் ஒன்றையாவது நம்மால் உருவாக்க முடியுமா? நவீன தொழில்நுட்பங்களில் நாம் உரு வாக்கியது எல்லாம் இயற்கையின் மாதிரிகளே. இயற்கைதான் எல்லாம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அந்த இயற் கையை அழித்துவிட்டு எதை சாதிக்கப் போகிறோம் நாம்? பேராசை வெறியில் நம் கழுத்தை, நாமே அறுத்து ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறோம்!
அன்றைக்கு நொய்யல் ஆற்றிலும் அப்படிதான் நடந்தது. “இனி குளத்துக்குத் தண்ணீர் வருவது சிரமம். இங்கே ஒரு கும்பல் வந்து ஏராளமான இடங்களில் கால்வாய் கரைகளை உடைத்துவிட்டு போய்விட்டார்கள். வேக மாக வந்த தண்ணீர் உடைப்புகளில் வெளியேறிவிட்டது. ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் இனி கோவை நகரம் வரை தண்ணீர் வர சாத்தியமே இல்லை” என்றார்கள். குளத்தைத் தூர் வாரும் தகவல் கிடைத்ததும் சிலருக் குத் தூக்கம் கெட்டது. அவர்கள் நொய் யல் ஆற்றையும், கரையோரங்களையும், குளத்துக்குத் தண்ணீர் வரும் கால் வாயையும் குளத்தையுமே ஆக்கிரமித் திருந்தனர். குளத்தில் மட்டும் சுமார் 1,000 குடியிருப்புகள் ஆக்கிரமித்திருந்தன. தண்ணீர் வந்தால் பாதிப்பு நமக்கு தான் என்று அஞ்சினார்கள் ஆக்கிரமிப் பாளர்கள். அதனாலேயே கரைகளை உடைத்துப்போட்டார்கள். இந்தத் தகவல் வந்தபோது நள்ளிரவு 12 மணி. மண்வெட்டிப் பிடித்து குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் வெடித்திருந்தன. தங்கள் வீடுகளில்கூட அவர்கள் அப்படி வேலை செய்திருக்க மாட்டார்கள். லட்சம் பேரின் உழைப்பு அது. ஒரு சமூகத் தின் கனவு அது. நள்ளிரவில் அத்தனை பேரும் கலங்கி அழுதார்கள். குளத்தின் வறண்ட மண்ணில் மழையாகப் பொழிந் தது மக்களின் கண்ணீர்.
ஆனால், அதுவே அவர்களை வைராக் கியம் கொள்ளச் செய்தது. நள்ளிரவு என்றும் பார்க்காமல் அப்போதே கிளம் பினார்கள். வாய்க்கால் வழியில் வீறு நடை போட்டது பெரும் படை. இன் னொரு பக்கம் மாநகராட்சி, பொதுப் பணித்துறை, காவல் துறைகள் கைகோத் தன. விடியற்காலை 3 மணிக்கு உடைப் பெடுத்த இடங்களை அடைந்தார்கள். பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உடைக் கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக செங்கல், சிமெண்ட், மணல் மூட்டைகள் குவிந்தன. அந்த நிமிடமே தொடங்கியது கட்டுமானப் பணி. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தார்கள். புதிய கரையைத் தண்ணீர் கரைக்காமல் இருக்க நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. அதற்கு பின்னால் கரை கட்டப்பட்டது. வேலை முடித்து நிமிர்ந்தபோது சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வை உணர்ந்தது இயற்கை. பெரு மழை கொட்டத் தொடங் கியது. மெதுவாய் பாம்புபோல ஊர்ந்து வந்த தண்ணீர் பாதங்களுடன் மக்கள் இதயங்களையும் நனைத்தது. சிறிது நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு நகரத்தின் குளத்துக் குள் வந்துச் சேர்ந்தது தண்ணீர். மக்கள் மலர்களைத் தூவி ஆரவாரித்தார்கள். உணர்ச்சிப் பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். பல ஆண்டுக ளுக்குப் பிறகு நிரம்பியது கோவை பெரிய குளம். இப்போது அந்தக் குளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் வியர் வையும் ஆனந்தக் கண்ணீரும்தான்!
தயவுசெய்து மீண்டும் அதில் சாக்கடையைக் கலக்காதீர்கள்.
கோவையில் இன்னொரு சாதனையும் நடந்திருக்கிறது. அதையும் பார்த்து விடுவோம். ஒருகாலத்தில் நொய்யலாறு 34 சிற்றாறுகளைத் தனது நாடி நரம்பு களாகக் கொண்டிருந்தது. பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சிப் பொங்க அவை ஓடின. காலப்போக்கில் அந்த நாடி நரம்புகள் வெட்டி எறியப்பட்டன. மண் ணுக்குள் புதைக்கப்பட்டன. இன்று எஞ்சியவை நண்டங்கரை, முண்டந் துறை, இருட்டுப்பள்ளம் இவை மூன்றும் தான். குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் இந்த ஓடைகளை எட்டிப் பார்க்க அஞ்சுகிறது தண்ணீர். இதில் சிறுவாணி அடிவாரத்தில் இருக்கும் நண்டங்கரை ஓடையைதான் ‘சிறுதுளி’ உயிர்ப்பித்திருக்கிறது.
ஓர் ஆண்டுக்கு முன்பு அவர்கள் அந்த ஓடைக்குச் சென்றபோது அங்கே ஓடை ஓடியதற்கான தடயமே இல்லை. நிச்சயம் அந்த ஓடை இங்கு இல்லை என்றுதான் நினைத்தார்கள். அப்பகுதி விவசாயிகள்தான் ‘இல்லை, நண்டங்கரை ஓடை இங்கேதான் ஓடியது’ என்று படம் வரைந்து பாகம் குறித்துக் காட்டினார்கள். அதுமட்டுமல்ல; மீண்டும் ஓடையைத் தூர் வாரினாலும் தண்ணீர் வரவே வராது என்று சத்தியம் செய் தார்கள். ஆனது ஆகட்டும், முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று களமிறங்கியது ‘சிறுதுளி’. மக்களும் கைகோத்தார்கள். ஊரக வளர்ச்சித் துறையின் ‘நமக்கு நாமே’ திட்டம் கைகொடுத்தது. அரசாங்கம் 49 % மக் கள் 51 % அடிப்படையில் நிதி சேர்ந்தது.
சந்தேகமாகத்தான் ஓடையைத் தோண்டினார்கள். ஆனால், சில அடி கள் தோண்டும்போதே தண்ணீர் ஊற் றெடுத்துப் பொங்கியது. அடைத்து வைத்த கோபத்தில் பீய்ச்சியடித்தது தண்ணீர். ஓடையில் வரும் தண்ணீரைச் சேகரிக்க சிறிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. எட்டு மாதங்கள் தீவிரமாக பணிகள் நடைபெற்றன. தடுப் பணை முழுவதும் நீர் நிரம்பியது. சுமார் ஐந்தாண்டுகள் அந்தப் பகுதியில் தண் ணீர் இல்லாமல் தவித்தார்கள் மக்கள். ஓடையும் தடுப்பணையும் வந்தபிறகு வீட்டுக் கிணறுகளின் தண்ணீரை மொண் டுக் குடிக்கிறார்கள் அவர்கள். சிறுவாணி ஊற்றல்லவா அது!
(நீர் அடிக்கும்)
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மகா மண்டபத்தின் வடக்கு சுவரில் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. கி.பி.1224-ம் ஆண்டு கொங்கு மண்டலத்தை ஆட்சிபுரிந்த வீர ராஜேந்திரனின் நீர் நிர்வாகம் பற்றிய கல்வெட்டு அது. சோழர்கள் நொய்யல் ஆற்றில் இருபுறமும் வரிசையாக சங்கிலித் தொடர் குளங்களை வெட்டினார்கள். கழுகுப் பார்வையில் பார்த்தால் ஆற்றுக்கு மாலை அணிவித்ததுபோல இருக்கும் குளங்களின் தோற்றம். அதில் தேவிசிறை என்கிற குளம் ஆற்றின் மேல் பகுதியிலும், கோளூர் அணை ஆற்றின் கீழ் பகுதியிலும் கட்டப்பட்டன. மேலே ஊர்க்காரர்கள் தங்கள் குளத்தில் முதலில் தண்ணீரை நிரப்பியதால் கீழே இருந்த குளத்துக்குத் தண்ணீர் வரத்துத் தடைபட்டது. கோளூர் மக்கள் மன்னனிடம் முறையிட்டார்கள்.
படகு சவாரி முன்னே... பாசனம் பின்னே!
R&S® Spectrum Analyzer - The perfect multipurpose tool for lab & field. More information here!value.rohde-schwarz.com/Spectrum

R&S® Spectrum Analyzer - The perfect multipurpose tool for lab & field. More information here!value.rohde-schwarz.com/Spectrum

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதை அகநானூறு (252),
‘துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்
தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே’
என்கிறது. அதாவது, ‘அடர்ந்த பனியிலும் அடைமழையிலும் நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல ஓர் அன்னை தன் தூக்கத்தை மறந்தாள்’ என்கிறது பாடல். ஏரியின் காவலனைத் தாயுடன் ஒப்பிட்டுப் பெருமை சேர்க்கும் வரிகள் இவை. அப்படியெனில் ஏரிக் காவலர்கள் எவ்வளவு விழிப்போடு இருந்திருப்பார்கள்!
நிகழ்காலத்துக்கு வருவோம். பாலுட்டி வளர்த்த அன்னையைக் கைவிட்டதுபோல ஏரிகளைக் கைவிட்டு விட்டோம். ஊருக்கெல்லாம் சோறிட்ட ஏரிகள் அநாதைகளாகப் பரிதவிக் கின்றன. தாய் மடி எங்கும் கருவேல முட்செடிகளின் வேர்கள் ஊடுருவி ரத்தம் உறிஞ்சுகின்றன. ஏரிக்கு காவல் யாருமில்லை. ஏரிகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொதுப் பணித் துறையிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியைப் பராமரிக்க என்று தனியாக ஒரு பணியாளர்கூட கிடையாது. கூடுதல் பொறுப்பாகதான் ஏரிகளை உதவிப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?
ஏனோ தெரியவில்லை, ஏரிகள் விஷயத்தில் அரசுக்கு ஏக குழப்பம். ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றுமில்லை. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா? ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கலுங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால், ஏரிக்கு ஒரு பிரச் சினை என்றால் மட்டும் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை. ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் பலவும் ஏரிகளை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றன தெரியுமா?
கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணை யத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.
மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’, ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’, உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’, ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன. அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம், ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்ஷன் சமிதி’, இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment), ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
தமிழகத்துக்கு வருவோம். மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன. தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது. எந்தெந்த ஏரிகள் தெரியுமா? ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள். விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா!
(நீர் அடிக்கும்)
***********************************
*
பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதை அகநானூறு (252),
‘துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்
தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே’
என்கிறது. அதாவது, ‘அடர்ந்த பனியிலும் அடைமழையிலும் நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல ஓர் அன்னை தன் தூக்கத்தை மறந்தாள்’ என்கிறது பாடல். ஏரியின் காவலனைத் தாயுடன் ஒப்பிட்டுப் பெருமை சேர்க்கும் வரிகள் இவை. அப்படியெனில் ஏரிக் காவலர்கள் எவ்வளவு விழிப்போடு இருந்திருப்பார்கள்!
நிகழ்காலத்துக்கு வருவோம். பாலுட்டி வளர்த்த அன்னையைக் கைவிட்டதுபோல ஏரிகளைக் கைவிட்டு விட்டோம். ஊருக்கெல்லாம் சோறிட்ட ஏரிகள் அநாதைகளாகப் பரிதவிக் கின்றன. தாய் மடி எங்கும் கருவேல முட்செடிகளின் வேர்கள் ஊடுருவி ரத்தம் உறிஞ்சுகின்றன. ஏரிக்கு காவல் யாருமில்லை. ஏரிகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொதுப் பணித் துறையிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியைப் பராமரிக்க என்று தனியாக ஒரு பணியாளர்கூட கிடையாது. கூடுதல் பொறுப்பாகதான் ஏரிகளை உதவிப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?
ஏனோ தெரியவில்லை, ஏரிகள் விஷயத்தில் அரசுக்கு ஏக குழப்பம். ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றுமில்லை. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா? ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கலுங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால், ஏரிக்கு ஒரு பிரச் சினை என்றால் மட்டும் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை. ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் பலவும் ஏரிகளை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றன தெரியுமா?
கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணை யத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.
மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’, ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’, உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’, ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன. அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம், ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்ஷன் சமிதி’, இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment), ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
தமிழகத்துக்கு வருவோம். மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன. தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது. எந்தெந்த ஏரிகள் தெரியுமா? ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள். விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா!
(நீர் அடிக்கும்)
***********************************
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
கடல்கள், ஆறுகள், ஏரிகள் போலவே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை சதுப்பு நிலங்கள் (Wet lands). கடல்களுக்கும் ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும், சதுப்பு நிலங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆறுகள் மற்றும் ஏரிகளின் உபரி நீர் நீண்டகாலம் தொடர்ச்சியாக வெளியேறும் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் உருவாகின்றன. இவை மூன்று மீட்டருக்கு குறைவான ஆழம் கொண்டவை. கனிமவளம் மிகுந்தவை. நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் சதுப்பு நிலங்களின் பங்கு அபாரமானது. அவை தங்க ளதுபரப்பளவைப் போல சுற்றுப் பகுதியில் பத்து மடங்குப்பரப்பளவுக்கு நிலத்தடி நீரை வற்றாமல் பாதுகாக் கின்றன. தவிர, வலசைசெல்லும் பறவை களுக்கு இனப் பெருக்க பூமியாகவும் திகழ்கின்றன. ஏராளமான நீர் தாவரங்கள், மீன்கள், நுண்ணிய முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் வசிக்கும் பல்லுயிர் சூழல் முக்கியத் துவம் வாய்ந்த பகுதி இவை.
இவற்றின் முக்கியத்துவத்தை சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள். கெய்ரோ நகருக்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் 1800 சதுர கி.மீ பரப்பளவில் ஃபாயூம் (Fayum) என்கிற சதுப்பு நிலம் இருந்தது. இதன் அருகில் இருந்த ஒரு மலை இடுக்கு வழியாக நைல் நதியின் தண்ணீர் சதுப்பு நிலத்துக்கு வந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் இதற்கு தண்ணீர் வந்துகொண்டிருந்த பாதை தூர்ந்துபோனது. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்ததால் சதுப்பு நிலம் வறண்டு பாளம் பாளமாக வெடித்தது. பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் அழிந்தன. பாலைவனமாக மாறியது சதுப்பு நிலம்.
கி.மு. 1877 - 1870ம் ஆண்டுகளில் எகிப்தை ஆண்ட மன்னன் இரண்டாம் செனுஸ்ரெட்டுக்கு (Senusret - 2) இந்தத் தகவல் சென்றது. உடனடியாக சதுப்பு நிலத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது. மராமத்துப் பணியில் மக்களும் ஈடுபட்டார்கள். முதல்கட்டமாக பல மைல் தூரம் கொண்ட தூர்ந்துப்போன ஆற்றுப் பாதை ஆழப்படுத்தப்பட்டது. அதன் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டன. அடுத்ததாக, சதுப்பு நிலத்தையும் நைல் நதியையும் இணைத்த மலை இடுக்கில் அணை ஒன்று கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் சதுப்பு நிலத்துக்கு சீரான அளவில் தண்ணீர் செலுத்தப்பட்டது. சில மாதங்களிலேயே பாலைவனத்தில் பசுமைத் துளிர்த்தது. நீர்த் தாவரங்கள், பாசிகள், பறவைகள், உயிரினங்கள் பல்கிப் பெருகின. இதன் தொடர்ச்சியாக புத்துயிர் பெற்றது சதுப்பு நிலம். இத்தோடு விட்டுவிடவில்லை அவர்கள். சதுப்பு நிலத்தில் சற்று மேடான பகுதிகளைப் பன் படுத்தினார்கள். கால்வாய்கள் வெட்டினார்கள். கணிசமான பகுதியில் விவசாயம் செய்தார்கள். ஆனால், நாகரிக சமூகம் என்று கூறிக்கொள்ளும் நாம் என்ன செய்கிறோம்?
நமது அதிகாரிகள் சதுப்பு நிலங்களை எதற்கும் உதவாத நிலம் (Waste land) என்று குறிப்பு எழுதினார்கள். கடந்த 1985-86ம் ஆண்டுதான் மத்திய அரசு இதன் முக்கியத் துவத்தை உணர்ந்தது. தேசிய சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக திட்டம் உருவாக்கப் பட்டது. அதன் கீழ் நாட்டில் உள்ள 94 சதுப்பு நிலங்கள் கொண்டுவரப்பட்டன.
தமிழகத்தில் சென்னை - பள்ளிக்கரணை, விழுப்புரம் - கழுவெளி, நாகப்பட்டினம் - கோடியக் கரை (Point Calimere) ஆகிய சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவற்றில் பள்ளிக் கரணையும் கழுவெளியும் நன்னீர் சதுப்பு நிலங்கள். அரிதி னும் அரிதானவை இவை. மதிப்புமிக்கவை. நமது சதுப்பு நிலங்களில் நெடுங்கால் உள்ளான், முக்குளிப்பான்கள், தண்ணீர்க் கோழிகள், நாமக் கோழிகள், நீளவால் இலைக் கோழிகள், நீலத் தாழைக் கோழிகள், நாமக் கோழிகள், சீழ்க்கைச் சிறகி, பூநாரைகள், கதிர்க் குருவிகள், சாம்பல் கதிர்க் குருவி, கள்ளப்பருந்து, கரிச்சான், சாம்பல் ஆள்காட்டி, கூழைக்கடா போன்ற பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
ஆனால், நாட்டிலேயே மிக, மிக மோசமாக பாதிக்கப்பட்டது பள்ளிக்கரணை சதுப்பு நிலம்தான். சமகாலத்தில் நம் கண் முன்னால் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அரிய பொக்கிஷம் அது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இது 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்தது. சுற்றுவட்டாரங்களில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நிலத்தடி நீர் செறிவுடன் காணப்பட்டது. ஆனால், இன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பளவு 500 ஹெக்டேருக்கும் குறைவே. பத்தில் ஒரு பங்கைக்கூட விட்டு வைக்காமல் வெறிகொண்டு விழுங்கிவிட்டோம். சதுப்பு நிலத்தைப் பிளந்துச் செல்கின்றன சாலைகள். கலந்துநிற்கின்றன சாக்கடைகள்.
கான்கிரிட் கட்டிடங்களைக் கட்டி பூமித்தாயை உயிரோடு புதைத்துவிட்டோம். நிலத்துக்குள் தண்ணீர் ஊடுருவ முடியவில்லை. தாகத்தில் மூச்சடைத்து தவிக்கிறாள் தாய்.
சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் கொடுத்த ஏராளமான மதகுகளைக் காணவில்லை. எல்லாவற்றையும் விட கொடுமையாக சென்னை மாநகராட்சியே அங்கே மலைபோல குப்பையைக் கொட்டி வைத்திருக்கிறது. மருத்துவமனை கழிவுகள் தொடங்கி இறைச்சிக் கழிவுகள் வரை அங்கே பகிரங்கமாகக் கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனமான தேசிய கடல் தொழில்நுட்பக் கழகமே சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. 2007-ம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்ட பின்பும் இது தொடர்வதுதான் வேதனை. இனியும் இது நீடித்தால் பள்ளிக்கரணை பாலையாகும் நாள் வெகுதூரமில்லை.
சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்களுக்கு இருந்த விழிப்புணர்வு, நவீன சமூகமாகிய நமக்கு இல்லை என்பதுதான் வெட்கித் தலைக்குனிய வேண்டிய விஷயம்!
உங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்தது ஏன் ?
சென்னையை விடிய விடிய வடிய வைத்து அடிக்கிறது மழை. நகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி (கொள்ளளவு 3.1 டி.எம்.சி), செம்பரம்பாக்கம் (3.3 டி.எம்.சி), புழல் (3.6 டி.எம்.சி), சோழவரம் (0.8 டி.எம்.சி) ஆகிய ஏரிகள் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்பட்டுள்ளன. இவை கொசஸ்தலை, அடையாறு வழியாக கடலில் சென்று கலக்கின்றன. அதாவது, குடிநீரை கடலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இந்த நான்கு ஏரிகளின் வழித் தடத்தில் மட்டும் சுமார் 36 சங்கிலித் தொடர் ஏரிகள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இவை இல்லாமல் மடிப்பாக்கம், அம்பத்தூர், ரெட்டை ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பி வழிந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அடையாறு கரையோரப் பகுதிகள், தாம்பரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு அன்றாட உணவே அரிதாகிவிட்டது.
சென்னையின் இன்றைய வெள்ளத்துக்கு மிக, மிக முக்கியமான காரணம் கீழ்கண்ட ஏரிகளின் ஆக்கிரமிப்புகள்தான். இதை அப்புறப்படுத்த அரசு முன்வருமா?

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
இயற்கைச் சீற்றங்கள் உலகுக்குப் புதிது அல்ல. நம் முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியை யும் போராடியே கடந்தார்கள். அந்த போராட் டங்களில் இயற்கையின் இயல்புகளை கண்டுகொண்டார்கள். அதற்கேற்ப தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார்கள். இயற்கை யுடன் இசைந்து வாழ்ந்தார்கள். விலங்குகளும் கூட நுண்ணறிவின் மூலம் இயற்கை சீற்றங் களை முன்கூட்டியே உணர்ந்து கொள் கின்றன. ஆனால், செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் நாம்தான் சாலைகளில் படகு விடுகிறோம்.
ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக ஓடிய நைல் நதியை மனிதர்கள் கையாண்ட விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. எகிப்து நாட்டின் ஒரே ஜீவாதாரம் நைல் நதி மட்டுமே. நைல் நதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும். அதற்கு முன்னதாகவே ஆற்றின் இரு கரைகளிலும் 3 மீட்டர் வரை ஆழம் கொண்ட பெரிய பாத்திகளை வெட்டி விடுவார்கள். இப்படி ஆயிரக்கணக்கான பாத்திகள் வெட்டப்பட்டு, கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. இவை வெள்ளம் ஊருக்குள் புகாமல் பாது காத்தன. இதில் சேகரமாகும் தண்ணீர் இரு மாதங்கள் வரை தேங்கி நின்றது. கூடவே பாத்திகளில் வளமான வண்டலும் சேர்ந்தது.
சோழர்களின் குளங்கள்
எகிப்தியர்களுடன் எந்தத் தொடர் பும் இல்லாத நிலையில் இதே தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத் தினர் சோழர்கள். அவர்கள் தற்காலிக பாத்திகளாக அல்லாமல் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் 30-க்கும் மேற் பட்ட குளங்களை வெட்டினர். அவை இன்றளவும் நிலைத்து நிற்பதே சோழர் களின் கட்டுமான திறமைக்கு சாட்சி. இந்தக் குளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நொய்யலின் தண்ணீர் ஒவ்வொரு குளமாக நிரப்பி விட்டு மீண்டும் ஆற்றுக்கே சென்றது.
கி.மு. 3000-ம் ஆண்டில் நைல் நதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேரழிவுகள் ஏற்பட்டன. ஊரெங் கும் வெள்ளம் ஓடியதால் பஞ்சங்கள் ஏற்பட்டன. இதனால், நைல் நதியின் கரையெங்கும் வரிசையாக நீர் மட்டத்தை அளக்கும் அளவுகோல்களை நட்டார்கள். தவிர, ஆறுகளின் சில இடங்களில் படித்துறைகளை கட்டி நீர்மட்டத்தை படிகள் மூலம் அளந்தார்கள். ஆற் றோரக் கரைகளில் கோயில்களை கட்டி கோயில் சுவர்களிலும் அளவு கோலை செதுக்கினார்கள். இந்த அளவுகோல்கள் ‘நைலோ மீட்டர்’ (Nilo meter) என்றழைக்கப்பட்டன. கி.பி. 715 ரோடா என்கிற இடத்தில் அமைக்கப் பட்ட நைலோ மீட்டரில் கி.பி.1890 வரை நைல் நதியின் நீர்மட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடிப்படையாக கொண்டு உருவானது தான் இப்போது நாம் பயன்படுத்தும் 365 நாட்கள் கொண்ட நாள்காட்டி.
‘நைலோ மீட்டர்’ போலவே 2000 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர்களும் ஆறு மற்றும் ஏரிகளின் கரைகளில் பல்வேறு அளவுகோல் களை அமைத்தார்கள். தாமிரபரணி யில் அமைக்கப்பட்ட பல்வேறு படித் துறைகள், கோயில் சுவர்கள் ஆற்றின் வெள்ள அபாயங்களை கணக்கிட உதவும் கருவிகளாகவும் பயன்பட்டன. இன்றும் தென்மாவட்டங்களில் இருக்கும் பல ஏரிகளின் மதகுகளில் ‘ஃ’ வடிவத்தில் இருக்கும் துளைகள் நீர்மட்டத்தை அளக்க உதவுகின்றன.
படித்துறைகள் மூலம் நீர்மட்டத்தை கணக்கிடும் நைலோ மீட்டர்.
தொன்மையான அணை
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ‘காராவி’ (Garawi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘சாத் எல் - காஃபாரா’ (Sadd El-Kafara) அணைதான் உலகிலேயே மிகத் தொன்மையான அணை. இதன் நீளம் 348 அடி. இதன் அடிப்பாகம் 265 அடி அகலம் கொண்டது. ஆற்றின் ஆழமான இடத்திலிருந்து அணையின் மேல்மட்டம் 37 அடி உயரம் கொண்டது. இது சுவர்கள் அமைத்து கட்டப்பட்ட அணை அல்ல. ஆற்றின் குறுக்கே 37 அடி உயரமும் அடிப்பகுதி 78 அடி பருமனும் கொண்ட பெரும் கற்கள் 120 அடி இடைவெளி விட்டு பெரும் கற்சுவர்களை போல எழுப்ப பட்டன. அந்த இடைவெளியின் அடிப் பாகம் 60 ஆயிரம் டன் எடை கொண்ட கூழாங்கற்களால் நிரப்பப் பட்டன. அணையைக் கட்ட எந்த காரைப் பொருட்களும் பயன்படுத்தப் படவில்லை. வெறும் கற்களை ஆற்றில் அடுக்கியே கட்டப்பட்ட இந்த அணையில் கலிங்குகள், வெள்ளப்போக்கிகள் எதுவும் கிடையாது. கரிமப் படிவ ஆய்வு (Carbon dating) மற்றும் தொல் லியல் ஆய்வுகள் இந்த அணையின் வயது சுமார் 4600 ஆண்டுகள் என்று தெரிவிக்கின்றன. ‘இயற்கையை வழிபடு வோரின் அணை’ என்று அழைக்கப் படும் இந்த அணை கி.மு.2650-களில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால், இந்த அணை இன்று இல்லை, அதன் எச்சங்கள் மட்டுமே பொக்கிஷங்களாக பாதுகாக்கப் படுகின்றன.
அழிந்துபோன தங்கள் அணையின் தொழில்நுட்பம் உலகில் வேறெங்கேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பிற்காலத்தில் எகிப்தின் நீரியல் வல்லுநர்கள் உலகெங்கும் தேடி அலைந் தார்கள். எங்கு தேடியும் ‘சாத் எல் - காஃபாரா’வின் சாயலைகூட அவர் களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா வந்தார்கள். மிகுந்த சிரமங்களுக்குkf பிறகு ஓர் அணையை கண்டுபிடித்து ஆச்சர்யத் தில் உறைந்துபோனார்கள். அதுதான் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணை.
செயற்கையான காரை எதுவும் பூசாமல் கற்களை ஆற்றில் நிரப்பியே கட்டப்பட்ட அணை கல்லணை. ஓடும் நீரில் ஆற்றின் படுகையில் ஒவ்வொரு கல்லாக போட்டு நிரப்பினார்கள். அவை மணலின் அடியாழத்துக்குச் சென்று அகலமான அடிப்பாகமாக சென்று இயற்கையான அடிதளத்தை உருவாக்கின. அடுத்தடுத்த மேலே போடப்பட்ட கற்கள் இயற்கை சுவர் களாக அமைந்தன. இப்படியாக ஓடும் நீரில் அடியில் மணல்படுகையில் எழுப்பப் பட்ட உறுதியான கருங்கல் தளத்தின் மீது எழுந்து நின்றது கல்லணை. இந்த அணையின் தொழில்நுட்பத்தை பின்பற்றிதான் ஆர்தர் காட்டன் 1874-ல் ஆந்திராவின் கோதாவரியில் தெளலீஸ் வரம் அணையை கட்டினார்.
உலகின் தொன்மையான அணை ‘சாத் எல் - காஃபாரா’ இன்று இல்லை. ஆனால், கிட்டத்தட்ட அதே தொழில்நுட்பத்தில் சோழர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கிறது. வாருங்கள், நம் முன்னோர்களிடமிருந்து பாடம் கற்போம்.
***********
வரலாற்றை முழுமையாகப் பார்த்து விடுவோம். நீர் மேலாண்மையில் உலகுக்கே முன்னோடிகளாக திகழ்ந்தது எகிப்தியர்கள். தொடர்ந்து சுமேரி யர்களும், சீனர்களும், தமிழர்களும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். இதைப் பற்றியெல்லாம் தனது விரிவான ஆய்வுகள் மூலம் பதிவுசெய்திருக்கிறார் மறைந்த பழ.கோமதிநாயகம். அவரைப் பற்றி நினைவுக்கூர்வது நமது கடமை. பழ.நெடு மாறனின் சகோதரர்தான் பழ.கோமதிநாயகம். நீரியல் அறிஞரான அவர், தமிழகத்தின் நீர் நிலைகளின் மீது மிகுந்த அக்கறை காட்டி னார். பொதுப் பணித்துறையில் உயர் அதிகாரி யாக அவர் பணிபுரிந்தபோது தமிழகத்தின் நீர் நிலைகளை மேம்படுத்த ஏராளமான திட்டங்களை வகுத்துத் தந்தார். அதே போல பொதுப் பணித்துறையில் பணியாற்றிய ராமலிங்கம், தேவி கவுண்டர், வீரப்பன் உள்ளிட்டோரும் சென்னையின் நீர் நிலை களை மேம்படுத்தவும் வெள்ளங்களைத் தடுக் கவும் ஏராளமான திட்டங்களை வகுத்துத் தந்த னர். இவர்களை எல்லாம் தமிழகத்தின் ஆட்சி யாளர்கள் கண்டுக்கொள்ளவே இல்லை.
முன்பு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சி.எம்.டி.ஏ) நீர் நிலைகளைப் பரா மரித்து மேம்படுத்தவும், அவற்றில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் ‘நியூக் கிலியஸ் செல்’ (Nucleus cell) என்ற பிரிவு இருந்தது. காவல் துறையினரைப் போல தனிப்படை கொண்ட அமைப்பு அது. இடுப்பில் வாக்கி டாக்கியுடன் மொத்த நீர் நிலைகளையும் கண்காணித்தது அந்தப் படை. எங்கேனும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டால் உடனடியாக காவல் துறையினருடன் கைகோத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதேபோல நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்ட சி.எம்.டி.ஏ-வின் கட்டுமானப் பிரிவு அனுமதி அளித்தால் அதனை ஆட் சேபித்தது நியூக்கிலியஸ் செல். அரசியல் தலையீடுகள் ஏதுமற்ற சி.எம்.டி.ஏ-வின் பொற்காலம் அது. இன்றைய சி.எம்.டி.ஏ-வின் நிலையை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. பல இடங்களில் நீர் நிலைகளின் மீது கட்டிடங்கள் கட்ட சி.எம்.டி.ஏ-வே அனு மதியளித்திருக்கும் கொடுமையை எங்கே போய் முறையிடுவது?
ஆனால், 2700 ஆண்டுகளுக்கு முன்பு எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படாத காலத்தில் மனிதன் நீர் நிலைகளைத் தெய்வமாக வணங்கினான். அரசன் தொடங்கி நாட்டின் ஒவ் வொரு குடிமகனுக்கும் நீர் நிலைகளின் மீது அக்கறை இருந்தது. எகிப்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் அரச முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது எகிப்திய மன்னன் ஸ்கார்ப்பியனின் (King Scorpion - 3200 BC) முத்திரை. அதில் மன்னன் ஸ்கார்ப்பியன் தனது கையில் ஒரு மண்வெட்டியை வைத்திருக்கிறான். அருகில் மற்றொருவன் கூடையைச் சுமந்துக்கொண்டிருக்கிறான். அதாவது நீர் நிலைகளின் குடி மராமத்துப் பணிகளின்போது நாட்டின் மன்னனே களத்தில் இறங்கி வேலை செய்தான் என்பதை விளக்குகிறது முத்திரைச் சின்னம். மன்னனே இறங்கி வேலை செய் வதைப் பார்த்த மக்கள் அனைவரும் ஓடோடி வந்து குடி மராமத்துப் பணிகளை செய்தார்கள் என்கிறது வர லாறு. நம் பழந்தமிழர் சமூகத்திலும் இந்த முறை இருந்துள்ளது. ‘பிட்டுக்காக மண் சுமந்த சிவன்’கதையும் இதையே உணர்த்துகிறது. எகிப்தில் கடந்த 19-ம் நூற்றாண்டுவரை பாத்திகளில் ஆற்று நீரைப் பாய்ச்சும் சடங்கை ‘ஆறு வெட்டும் நாள்’ என்று விவசாயிகள் கொண்டாடியிருக்கிறார்கள்.
உலகின் தொன்மையான அணை ‘சாத் எல் - காஃபாரா’ என்பதைப் பார்த்தோம். அதற்கு அடுத்ததாக தொன்மையான அணை கல்லணை. கண்ணில் பார்க்க முடியாமல் பூமிக்குள் ஆற்றின் அடி யில் கட்டப்பட்ட கல்லணையின் பெருமை உலகம் அறியும். ஆனால், கல்ல ணையின் சமகாலத்தில் கண்ணில் பார்க்கும்படியாக கட்டப்பட்ட மற்று மொரு தொன்மையான அணையும் நம்மிடம் இருக்கிறது. வெளியுலகம் உணராமல்போன உலக அதிசயம் அது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் அழிசியின் மகன் சேந்தன் என்பவன் கட்டியதுஅது. அபார தொழில்நுட்பங்கள் கொண்டதும்கூட.
கல்லணையின் கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றில் திருக் காட்டுப்பள்ளிக்கு அருகே கச்சமங்கலம் கிராமத்தில் இப்போதும் கம்பீரமாக இருக்கிறது அந்த அணை. ஒரு காலத்தில் இந்த இடத்தில் மூன்று மைல் தொலைவுக்கு ஏராளமான பாறைகளுடன் கூடிய தொடர்ச்சியான மலைக்குன்றுகள் அமைந்திருந்தன. துவாக்குடி மலையின் தொடர்ச்சி இது. அதிலிருந்த மலைக் குன்று ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்து அதனை கொஞ்சம் தள்ளி வைத்து பாறை களை குடைந்து தடுப்பு சுவர் போல வைத்துவிட்டார்கள். பெயர்த் தெடுக்கப்பட்ட குன்று இருந்த இடம் பள்ளமாக அமைந்துவிட்டது. இருபக்க மும் பாறைகளாலான சுவர் தயார். இதனை கற்சிறை என்றும் குறிப்பிடு கிறார்கள் சோழர்கள்.
வெண்ணாற்றின் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியவுடன் அணையின் தென்கரை மதகு திறக்கப்பட்டு தண் ணீர் ஆனந்த காவிரி கால்வாய் மூலம் ராஜசுந்தரி சதுர்வேதமங்கலம் ஏரிக்குச் சென்றது. அந்த ஏரியின் தற்போதையப் பெயர் கள்ளப் பெரம்பூர் ஏரி. காவிரிக்கும் வெண்ணாற்றுக்கு இடைப்பட்ட அந்தப் பகுதியின் பெயர் ஆற்காட்டுக் கூற்றம். மேட்டு நிலம் அது. தற்போது தஞ்சை - திருவாரூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இந்தப் பகுதி. அந்த காலத்தில் அங்கே தாழ்வான பகுதியில் வெண்ணையாறு ஓடியது. இதனால் மக்கள் பாசன செய்ய முடியாமல் தவித்தனர். பஞ்சங் களும் நேரிட்டன. அந்த சமயத்தில் கச்சமங்கலம் அணையில் இருந்து ஏரிக்கு வந்த தண்ணீர் இதற்கு தீர்வாக அமைந்தது.
இதனால், சங்க காலத்திலேயே இந்தப் பகுதி வளமுடன் இருந்ததாக நற்றிணை, குறுந்தொகை இலக்கியங் கள் குறிப்பிடுகின்றன.
இந்த ஏரியின் தண்ணீர் நிரம்பியவுடன் அணையின் வடகரையின் மதகு மூலம் பிள்ளைக் கால்வாய் வழியாக தண்ணீர் வீரசிகாமணி பேரேரிக்குச் சென்றது. இந்த ஏரியின் தற்போதையப் பெயர் அல்லூர் அழிசிகுடி ஏரி. வீராணம் ஏரியை வெட்டிய பராந்தகச் சோழன்தான் இந்த ஏரியையும் வெட்டி னான். வடகரை மதகு 16-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் காலத்தில் செப்பனிடப்பட்டிருக்கிறது. அதற்கான கல்வெட்டு இப்போதும் மதகில் இருக்கிறது. மேற்கண்ட அணையின் தொன்மை மற்றும் தொழில்நுட்பம் இவை எல்லாம் நீண்டகாலமாக நம் சமூகம் அறிந்தி ருக்கவில்லை. இன்றும் பலருக்கு தெரியாது. வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் செந் தலை சுந்தரேஸ்வர் கோயில் கல்வெட்டு களை ஆய்வு செய்து இந்த அதிசயத் தைக் கண்டுபிடித்திருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டிருக் கிறோம்.
நம் முன்னோர்கள் மலையை பெயர்த்து அணையை கட்டினார்கள். அந்த அணை 2,000 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் நமக்கு சோறிடுகிறது. ஆனால், இன்றைய மனிதன் அதே மலையைப் பெயர்த்தெடுத்து ரொட்டித் துண்டுகளைப் போல வெட்டி வெளி நாடுகளுக்கு விற்று காசு பார்க்கிறான். இயற்கை நம் மீது ஏன் சீற்றம் கொள்ளாது?
(நீர் அடிக்கும்)
***************
லத்தில் அரசை எதிர்பார்க்காமல் மக்களே நீர் நிலைகளை சீரமைத்த வரலாற்றைப் பார்த்தோம். உண்மையில் தொடக்கக் காலத்தில் ஏரிகள், குளங்கள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இவை ஊர் பொது சொத்தாகக் கருதப்பட்டன. ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்ட மடைக் குடும்பத்தினர் மட்டுமின்றி குளத்துப் பள்ளர்கள், குளக் காப்பாளர்கள், நீராணிக்கர்கள், நீர்க்கட்டியார், கரையார் ஆகியோரும் நீர் நிலைகளைப் பராமரித்தனர்.
வெள்ளக் காலங்களில் இந்த நீர் நிலைகளின் உடைப்புகளை அடைக்கச் சென்று உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நஷ்ட ஈடாக நிலம் கொடுக்கப்பட்டது. அதன் பெயர் உதிரப்பட்டி. கி.பி. 1302-ல் ராமநாதபுரம் மாவட்டம், கருங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டபோது அதை அடைக்கச் சென்ற பெருந்தேவப் பள்ளன் வெள்ளத்தில் இறந்தான். அவனது தியாகத்தைப் போற்றும் வகையில் அவனுக்கு நினைவுக் கல்லை நட்டு உதிரப்பட்டி நிலமும் அளிக்கப்பட்டது. இந்த விவரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட ‘தமிழ்நாட்டு வரலாறு பாண்டியர் பெருவேந்தர் காலம்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த நீர் நிலைகள் மக்கள் கையில் இருந்தவரை மட்டுமே நன்றாக இருந்தன. என்றைக்கு அவை அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதோ அன்றே அவற்றின் அழிவுக் காலம் தொடங்கியது. ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு தொடங்கியதும் அப்போதுதான்.
தொடக்கக் காலத்தில் குடும்பங்களுக்கு என தனி சொத்து இல்லை. நீர், நிலம், வனம் எல்லாம் சமூகத்துக்குப் பொதுவானது. பிறகு இது மெல்ல மாறியது. ஊர்களை உள்ளடக்கிய நாடுகள் உருவாயின. வேளாண்மை மரபினரிடம் இருந்த ஊர் நிர்வாகம் போர் மரபினருக்குச் சென்றது. படைத் தலைவர்கள் வரி வசூலித்தார்கள். இவர்களுக்கு விவசாயம், பாசனம், நீர் நிலை பராமரிப்பு பற்றித் தெரியாவிட்டாலும் நீர் நிலைகளின் அருமைகளை அறிந்திருந்தனர். புதிய நீர் நிலைகள் தொடர்ந்து உருவாக்கினார்கள். இது தவறிய இடங்களில் மக்கள் மன்னனிடம் முறையிட்டு முடிந்தவரை பாசன அமைப்புகளைப் பாதுகாத்தார்கள்.
பின்பு ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. நமது பாரம்பரியப் பராமரிப்பு முறைகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டியது அவர்கள்தான். தமிழகத்தில் ‘ரயத்துவாரி’ முறை அமல் படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், வனங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசு சொத்துகளாக மாற்றப்பட்டன. மலைகளில் வனங்கள் அழிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் மலைவாசஸ்தலங்களாகவும் தேயிலைத் தோட்டங்களாகவும் மாற்றப்பட்டன. மலைகளில் இருந்த நீர் வழித்தடங்கள் அழிந்துப்போயின. சமவெளிகளில் இருக்கும் நீர் நிலைகளுக்கான நீர்வரத்துக் குறைந்துப்போனது.
ஊருக்குள் நீர் நிலைகளைப் பராமரித்த மடையர்கள், பள்ளர்கள், நீராணிக்கர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். விவசாயிகள் விளை பொருளில் அவர்களுக்குப் பங்கு தரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. நீர் நிலைகளுக்கும் அவர்களுக்குமான உரிமை பறிக்கப்பட்டது. உயிரையே பறிகொடுத்ததுபோல துடித்தார்கள் அவர்கள். குளங்களையே குழந்தைகளாக பாவித்த சமூகம் பசியிலும் பஞ்சத்திலும் வாடியது. ஒருகட்டத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைத்த வேலையைச் செய்யப் பழகிக்கொண்டன அந்தச் சமூகங்கள். தமிழகத்தின் நீர் நிலை சமூகங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்ட வரலாற்றுப் பிழை அரங்கேறியது அப்போதுதான்.
வருவாய் துறை உருவாக்கப்பட்டு ஏரிகள், குளங்கள் அந்தத் துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்றன. அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு நமது பாரம்பரிய தொழில்நுட்பங்கள் புரியவில்லை. இதனால் ஏரிகளைப் பராமரிக்க ராணுவம் வந்தது. ராணுவப் பொறியாளர்களுக்கும் பிடிபடவில்லை நமது தொழில்நுட்பம். அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏரிகள் வலுவிழந்தன. அடிக்கடி வெள்ளம் வந்தது. வறட்சி தலைதூக்கியது. 1850-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் இறந்தார்கள்.
நிலைமையை சமாளிக்க 1878-80ல் ஆங்கிலேய அரசு ஓர் ஆணையம் அமைத்தது. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் அரசு செப்பனிட வேண்டும். 200 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட ஏரிகளை அரசு வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் குறைவான ஆயக்கட்டுகளைக் கொண்ட ஏரிகளை மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஏரிகளைப் பராமரிக்க ஏரி மராமத்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொதுப் பணித்துறை உருவான வரலாறு இதுதான். இதன் நீட்சியாகவே இன்று 100 ஏக்கருக்கு அதிகமான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும் அதற்கும் குறைவான ஆயக்கட்டு கொண்ட ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் (மக்கள் பிரதிநிதிகள்) கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.
தொடர்ந்து 1858-ல் ‘சென்னை கட்டாய வேலையாட்கள் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதன்படி ஏரிகளைப் பராமரிப்பது உட்பட பாசனம் தொடர்பான அனைத்து வேலை களுக்கும் நிலம் வைத்திருப்பவர்கள் வேலையாட் களைக் கட்டாயமாக அனுப்ப வேண்டும். தவறியவர்களுக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய வேலையாட்களுக்கான கூலியில் இருமடங்கு அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 1901-ல் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
நாடு விடுதலை அடைந்தது. ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதிலும் அணை களைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளித்தார் கள். பாரம்பரிய ஏரிகள், குளங்கள் புறக்கணிக் கப்பட்டன. எரிபொருள் தேவைக்காக கருவேல முட்செடிகளை இறக்குமதி செய்தார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை ஏரிகள்தான். ஏனெனில் வற்றாத ஜீவ நதிகளைப் போன்று வற்றாத ஏரிகளும் உண்டு. 10 அடி ஆழத்துக்கும் அதிகம் கொண்ட ஏரிகளில் இயற்கையான ஊற்றுகள் இருந்தன. அவை கோடைக் காலங்களில் கொஞ்சமேனும் தண்ணீர் வைத்திருந்தன. அதுவும் வற்றினால் மக்கள் பள்ளம் பறித்து குடிநீர் எடுத்தார்கள். ஆனால், கருவேலம் முட்செடிகள் நிலத்தடி நீரை அதிவேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல ஏரியின் நிலத்தடி நீரை எல்லாம் உறிஞ்சிவிட்டன. எதற்கும் பயனில்லாமல் போனது ஏரிகள். மக்களுக்கும் படிப்படியாக ஏரிகள் மீது பிடிப்பில்லாமல் போனது. ஒடுக்கப்பட்டது சமூகங்கள் மட்டுமில்லை, நீர் நிலைகளும்தான்!
(நீர் அடிக்கும்)
*
இயற்கைச் சீற்றங்கள் உலகுக்குப் புதிது அல்ல. நம் முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியை யும் போராடியே கடந்தார்கள். அந்த போராட் டங்களில் இயற்கையின் இயல்புகளை கண்டுகொண்டார்கள். அதற்கேற்ப தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார்கள். இயற்கை யுடன் இசைந்து வாழ்ந்தார்கள். விலங்குகளும் கூட நுண்ணறிவின் மூலம் இயற்கை சீற்றங் களை முன்கூட்டியே உணர்ந்து கொள் கின்றன. ஆனால், செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் நாம்தான் சாலைகளில் படகு விடுகிறோம்.
ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக ஓடிய நைல் நதியை மனிதர்கள் கையாண்ட விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. எகிப்து நாட்டின் ஒரே ஜீவாதாரம் நைல் நதி மட்டுமே. நைல் நதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும். அதற்கு முன்னதாகவே ஆற்றின் இரு கரைகளிலும் 3 மீட்டர் வரை ஆழம் கொண்ட பெரிய பாத்திகளை வெட்டி விடுவார்கள். இப்படி ஆயிரக்கணக்கான பாத்திகள் வெட்டப்பட்டு, கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. இவை வெள்ளம் ஊருக்குள் புகாமல் பாது காத்தன. இதில் சேகரமாகும் தண்ணீர் இரு மாதங்கள் வரை தேங்கி நின்றது. கூடவே பாத்திகளில் வளமான வண்டலும் சேர்ந்தது.
சோழர்களின் குளங்கள்
எகிப்தியர்களுடன் எந்தத் தொடர் பும் இல்லாத நிலையில் இதே தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத் தினர் சோழர்கள். அவர்கள் தற்காலிக பாத்திகளாக அல்லாமல் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் 30-க்கும் மேற் பட்ட குளங்களை வெட்டினர். அவை இன்றளவும் நிலைத்து நிற்பதே சோழர் களின் கட்டுமான திறமைக்கு சாட்சி. இந்தக் குளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நொய்யலின் தண்ணீர் ஒவ்வொரு குளமாக நிரப்பி விட்டு மீண்டும் ஆற்றுக்கே சென்றது.
கி.மு. 3000-ம் ஆண்டில் நைல் நதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேரழிவுகள் ஏற்பட்டன. ஊரெங் கும் வெள்ளம் ஓடியதால் பஞ்சங்கள் ஏற்பட்டன. இதனால், நைல் நதியின் கரையெங்கும் வரிசையாக நீர் மட்டத்தை அளக்கும் அளவுகோல்களை நட்டார்கள். தவிர, ஆறுகளின் சில இடங்களில் படித்துறைகளை கட்டி நீர்மட்டத்தை படிகள் மூலம் அளந்தார்கள். ஆற் றோரக் கரைகளில் கோயில்களை கட்டி கோயில் சுவர்களிலும் அளவு கோலை செதுக்கினார்கள். இந்த அளவுகோல்கள் ‘நைலோ மீட்டர்’ (Nilo meter) என்றழைக்கப்பட்டன. கி.பி. 715 ரோடா என்கிற இடத்தில் அமைக்கப் பட்ட நைலோ மீட்டரில் கி.பி.1890 வரை நைல் நதியின் நீர்மட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடிப்படையாக கொண்டு உருவானது தான் இப்போது நாம் பயன்படுத்தும் 365 நாட்கள் கொண்ட நாள்காட்டி.
‘நைலோ மீட்டர்’ போலவே 2000 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர்களும் ஆறு மற்றும் ஏரிகளின் கரைகளில் பல்வேறு அளவுகோல் களை அமைத்தார்கள். தாமிரபரணி யில் அமைக்கப்பட்ட பல்வேறு படித் துறைகள், கோயில் சுவர்கள் ஆற்றின் வெள்ள அபாயங்களை கணக்கிட உதவும் கருவிகளாகவும் பயன்பட்டன. இன்றும் தென்மாவட்டங்களில் இருக்கும் பல ஏரிகளின் மதகுகளில் ‘ஃ’ வடிவத்தில் இருக்கும் துளைகள் நீர்மட்டத்தை அளக்க உதவுகின்றன.

படித்துறைகள் மூலம் நீர்மட்டத்தை கணக்கிடும் நைலோ மீட்டர்.
தொன்மையான அணை
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ‘காராவி’ (Garawi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘சாத் எல் - காஃபாரா’ (Sadd El-Kafara) அணைதான் உலகிலேயே மிகத் தொன்மையான அணை. இதன் நீளம் 348 அடி. இதன் அடிப்பாகம் 265 அடி அகலம் கொண்டது. ஆற்றின் ஆழமான இடத்திலிருந்து அணையின் மேல்மட்டம் 37 அடி உயரம் கொண்டது. இது சுவர்கள் அமைத்து கட்டப்பட்ட அணை அல்ல. ஆற்றின் குறுக்கே 37 அடி உயரமும் அடிப்பகுதி 78 அடி பருமனும் கொண்ட பெரும் கற்கள் 120 அடி இடைவெளி விட்டு பெரும் கற்சுவர்களை போல எழுப்ப பட்டன. அந்த இடைவெளியின் அடிப் பாகம் 60 ஆயிரம் டன் எடை கொண்ட கூழாங்கற்களால் நிரப்பப் பட்டன. அணையைக் கட்ட எந்த காரைப் பொருட்களும் பயன்படுத்தப் படவில்லை. வெறும் கற்களை ஆற்றில் அடுக்கியே கட்டப்பட்ட இந்த அணையில் கலிங்குகள், வெள்ளப்போக்கிகள் எதுவும் கிடையாது. கரிமப் படிவ ஆய்வு (Carbon dating) மற்றும் தொல் லியல் ஆய்வுகள் இந்த அணையின் வயது சுமார் 4600 ஆண்டுகள் என்று தெரிவிக்கின்றன. ‘இயற்கையை வழிபடு வோரின் அணை’ என்று அழைக்கப் படும் இந்த அணை கி.மு.2650-களில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால், இந்த அணை இன்று இல்லை, அதன் எச்சங்கள் மட்டுமே பொக்கிஷங்களாக பாதுகாக்கப் படுகின்றன.
அழிந்துபோன தங்கள் அணையின் தொழில்நுட்பம் உலகில் வேறெங்கேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பிற்காலத்தில் எகிப்தின் நீரியல் வல்லுநர்கள் உலகெங்கும் தேடி அலைந் தார்கள். எங்கு தேடியும் ‘சாத் எல் - காஃபாரா’வின் சாயலைகூட அவர் களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா வந்தார்கள். மிகுந்த சிரமங்களுக்குkf பிறகு ஓர் அணையை கண்டுபிடித்து ஆச்சர்யத் தில் உறைந்துபோனார்கள். அதுதான் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணை.
செயற்கையான காரை எதுவும் பூசாமல் கற்களை ஆற்றில் நிரப்பியே கட்டப்பட்ட அணை கல்லணை. ஓடும் நீரில் ஆற்றின் படுகையில் ஒவ்வொரு கல்லாக போட்டு நிரப்பினார்கள். அவை மணலின் அடியாழத்துக்குச் சென்று அகலமான அடிப்பாகமாக சென்று இயற்கையான அடிதளத்தை உருவாக்கின. அடுத்தடுத்த மேலே போடப்பட்ட கற்கள் இயற்கை சுவர் களாக அமைந்தன. இப்படியாக ஓடும் நீரில் அடியில் மணல்படுகையில் எழுப்பப் பட்ட உறுதியான கருங்கல் தளத்தின் மீது எழுந்து நின்றது கல்லணை. இந்த அணையின் தொழில்நுட்பத்தை பின்பற்றிதான் ஆர்தர் காட்டன் 1874-ல் ஆந்திராவின் கோதாவரியில் தெளலீஸ் வரம் அணையை கட்டினார்.
உலகின் தொன்மையான அணை ‘சாத் எல் - காஃபாரா’ இன்று இல்லை. ஆனால், கிட்டத்தட்ட அதே தொழில்நுட்பத்தில் சோழர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கிறது. வாருங்கள், நம் முன்னோர்களிடமிருந்து பாடம் கற்போம்.
***********
வரலாற்றை முழுமையாகப் பார்த்து விடுவோம். நீர் மேலாண்மையில் உலகுக்கே முன்னோடிகளாக திகழ்ந்தது எகிப்தியர்கள். தொடர்ந்து சுமேரி யர்களும், சீனர்களும், தமிழர்களும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். இதைப் பற்றியெல்லாம் தனது விரிவான ஆய்வுகள் மூலம் பதிவுசெய்திருக்கிறார் மறைந்த பழ.கோமதிநாயகம். அவரைப் பற்றி நினைவுக்கூர்வது நமது கடமை. பழ.நெடு மாறனின் சகோதரர்தான் பழ.கோமதிநாயகம். நீரியல் அறிஞரான அவர், தமிழகத்தின் நீர் நிலைகளின் மீது மிகுந்த அக்கறை காட்டி னார். பொதுப் பணித்துறையில் உயர் அதிகாரி யாக அவர் பணிபுரிந்தபோது தமிழகத்தின் நீர் நிலைகளை மேம்படுத்த ஏராளமான திட்டங்களை வகுத்துத் தந்தார். அதே போல பொதுப் பணித்துறையில் பணியாற்றிய ராமலிங்கம், தேவி கவுண்டர், வீரப்பன் உள்ளிட்டோரும் சென்னையின் நீர் நிலை களை மேம்படுத்தவும் வெள்ளங்களைத் தடுக் கவும் ஏராளமான திட்டங்களை வகுத்துத் தந்த னர். இவர்களை எல்லாம் தமிழகத்தின் ஆட்சி யாளர்கள் கண்டுக்கொள்ளவே இல்லை.
முன்பு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சி.எம்.டி.ஏ) நீர் நிலைகளைப் பரா மரித்து மேம்படுத்தவும், அவற்றில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் ‘நியூக் கிலியஸ் செல்’ (Nucleus cell) என்ற பிரிவு இருந்தது. காவல் துறையினரைப் போல தனிப்படை கொண்ட அமைப்பு அது. இடுப்பில் வாக்கி டாக்கியுடன் மொத்த நீர் நிலைகளையும் கண்காணித்தது அந்தப் படை. எங்கேனும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டால் உடனடியாக காவல் துறையினருடன் கைகோத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதேபோல நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்ட சி.எம்.டி.ஏ-வின் கட்டுமானப் பிரிவு அனுமதி அளித்தால் அதனை ஆட் சேபித்தது நியூக்கிலியஸ் செல். அரசியல் தலையீடுகள் ஏதுமற்ற சி.எம்.டி.ஏ-வின் பொற்காலம் அது. இன்றைய சி.எம்.டி.ஏ-வின் நிலையை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. பல இடங்களில் நீர் நிலைகளின் மீது கட்டிடங்கள் கட்ட சி.எம்.டி.ஏ-வே அனு மதியளித்திருக்கும் கொடுமையை எங்கே போய் முறையிடுவது?
ஆனால், 2700 ஆண்டுகளுக்கு முன்பு எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படாத காலத்தில் மனிதன் நீர் நிலைகளைத் தெய்வமாக வணங்கினான். அரசன் தொடங்கி நாட்டின் ஒவ் வொரு குடிமகனுக்கும் நீர் நிலைகளின் மீது அக்கறை இருந்தது. எகிப்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் அரச முத்திரை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது எகிப்திய மன்னன் ஸ்கார்ப்பியனின் (King Scorpion - 3200 BC) முத்திரை. அதில் மன்னன் ஸ்கார்ப்பியன் தனது கையில் ஒரு மண்வெட்டியை வைத்திருக்கிறான். அருகில் மற்றொருவன் கூடையைச் சுமந்துக்கொண்டிருக்கிறான். அதாவது நீர் நிலைகளின் குடி மராமத்துப் பணிகளின்போது நாட்டின் மன்னனே களத்தில் இறங்கி வேலை செய்தான் என்பதை விளக்குகிறது முத்திரைச் சின்னம். மன்னனே இறங்கி வேலை செய் வதைப் பார்த்த மக்கள் அனைவரும் ஓடோடி வந்து குடி மராமத்துப் பணிகளை செய்தார்கள் என்கிறது வர லாறு. நம் பழந்தமிழர் சமூகத்திலும் இந்த முறை இருந்துள்ளது. ‘பிட்டுக்காக மண் சுமந்த சிவன்’கதையும் இதையே உணர்த்துகிறது. எகிப்தில் கடந்த 19-ம் நூற்றாண்டுவரை பாத்திகளில் ஆற்று நீரைப் பாய்ச்சும் சடங்கை ‘ஆறு வெட்டும் நாள்’ என்று விவசாயிகள் கொண்டாடியிருக்கிறார்கள்.
உலகின் தொன்மையான அணை ‘சாத் எல் - காஃபாரா’ என்பதைப் பார்த்தோம். அதற்கு அடுத்ததாக தொன்மையான அணை கல்லணை. கண்ணில் பார்க்க முடியாமல் பூமிக்குள் ஆற்றின் அடி யில் கட்டப்பட்ட கல்லணையின் பெருமை உலகம் அறியும். ஆனால், கல்ல ணையின் சமகாலத்தில் கண்ணில் பார்க்கும்படியாக கட்டப்பட்ட மற்று மொரு தொன்மையான அணையும் நம்மிடம் இருக்கிறது. வெளியுலகம் உணராமல்போன உலக அதிசயம் அது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் அழிசியின் மகன் சேந்தன் என்பவன் கட்டியதுஅது. அபார தொழில்நுட்பங்கள் கொண்டதும்கூட.
கல்லணையின் கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றில் திருக் காட்டுப்பள்ளிக்கு அருகே கச்சமங்கலம் கிராமத்தில் இப்போதும் கம்பீரமாக இருக்கிறது அந்த அணை. ஒரு காலத்தில் இந்த இடத்தில் மூன்று மைல் தொலைவுக்கு ஏராளமான பாறைகளுடன் கூடிய தொடர்ச்சியான மலைக்குன்றுகள் அமைந்திருந்தன. துவாக்குடி மலையின் தொடர்ச்சி இது. அதிலிருந்த மலைக் குன்று ஒன்றை அப்படியே பெயர்த்தெடுத்து அதனை கொஞ்சம் தள்ளி வைத்து பாறை களை குடைந்து தடுப்பு சுவர் போல வைத்துவிட்டார்கள். பெயர்த் தெடுக்கப்பட்ட குன்று இருந்த இடம் பள்ளமாக அமைந்துவிட்டது. இருபக்க மும் பாறைகளாலான சுவர் தயார். இதனை கற்சிறை என்றும் குறிப்பிடு கிறார்கள் சோழர்கள்.
வெண்ணாற்றின் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியவுடன் அணையின் தென்கரை மதகு திறக்கப்பட்டு தண் ணீர் ஆனந்த காவிரி கால்வாய் மூலம் ராஜசுந்தரி சதுர்வேதமங்கலம் ஏரிக்குச் சென்றது. அந்த ஏரியின் தற்போதையப் பெயர் கள்ளப் பெரம்பூர் ஏரி. காவிரிக்கும் வெண்ணாற்றுக்கு இடைப்பட்ட அந்தப் பகுதியின் பெயர் ஆற்காட்டுக் கூற்றம். மேட்டு நிலம் அது. தற்போது தஞ்சை - திருவாரூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இந்தப் பகுதி. அந்த காலத்தில் அங்கே தாழ்வான பகுதியில் வெண்ணையாறு ஓடியது. இதனால் மக்கள் பாசன செய்ய முடியாமல் தவித்தனர். பஞ்சங் களும் நேரிட்டன. அந்த சமயத்தில் கச்சமங்கலம் அணையில் இருந்து ஏரிக்கு வந்த தண்ணீர் இதற்கு தீர்வாக அமைந்தது.
இதனால், சங்க காலத்திலேயே இந்தப் பகுதி வளமுடன் இருந்ததாக நற்றிணை, குறுந்தொகை இலக்கியங் கள் குறிப்பிடுகின்றன.
இந்த ஏரியின் தண்ணீர் நிரம்பியவுடன் அணையின் வடகரையின் மதகு மூலம் பிள்ளைக் கால்வாய் வழியாக தண்ணீர் வீரசிகாமணி பேரேரிக்குச் சென்றது. இந்த ஏரியின் தற்போதையப் பெயர் அல்லூர் அழிசிகுடி ஏரி. வீராணம் ஏரியை வெட்டிய பராந்தகச் சோழன்தான் இந்த ஏரியையும் வெட்டி னான். வடகரை மதகு 16-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் காலத்தில் செப்பனிடப்பட்டிருக்கிறது. அதற்கான கல்வெட்டு இப்போதும் மதகில் இருக்கிறது. மேற்கண்ட அணையின் தொன்மை மற்றும் தொழில்நுட்பம் இவை எல்லாம் நீண்டகாலமாக நம் சமூகம் அறிந்தி ருக்கவில்லை. இன்றும் பலருக்கு தெரியாது. வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் செந் தலை சுந்தரேஸ்வர் கோயில் கல்வெட்டு களை ஆய்வு செய்து இந்த அதிசயத் தைக் கண்டுபிடித்திருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டிருக் கிறோம்.
நம் முன்னோர்கள் மலையை பெயர்த்து அணையை கட்டினார்கள். அந்த அணை 2,000 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் நமக்கு சோறிடுகிறது. ஆனால், இன்றைய மனிதன் அதே மலையைப் பெயர்த்தெடுத்து ரொட்டித் துண்டுகளைப் போல வெட்டி வெளி நாடுகளுக்கு விற்று காசு பார்க்கிறான். இயற்கை நம் மீது ஏன் சீற்றம் கொள்ளாது?
(நீர் அடிக்கும்)
***************
லத்தில் அரசை எதிர்பார்க்காமல் மக்களே நீர் நிலைகளை சீரமைத்த வரலாற்றைப் பார்த்தோம். உண்மையில் தொடக்கக் காலத்தில் ஏரிகள், குளங்கள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இவை ஊர் பொது சொத்தாகக் கருதப்பட்டன. ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்ட மடைக் குடும்பத்தினர் மட்டுமின்றி குளத்துப் பள்ளர்கள், குளக் காப்பாளர்கள், நீராணிக்கர்கள், நீர்க்கட்டியார், கரையார் ஆகியோரும் நீர் நிலைகளைப் பராமரித்தனர்.உணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்!
Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

நிரம்பி வழியும் மூக்கனேரி. | படம்: எஸ்.குருபிரசாத்
Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

நிரம்பி வழியும் மூக்கனேரி. | படம்: எஸ்.குருபிரசாத்
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
சேர்வராயன் மலையில் தொலை நோக்கி பார்வை மையத்துக்கு மேலே மலை உச்சியில் இருக் கிறது ஒரு முகடு. அங்கிருந்து பார்த்தால் சேலம் மாவட்டம் முழுவதையும் கழுகுப் பார்வையில் காணலாம். 20 ஆண்டு களுக்கு முன்பு அங்கிருந்து பார்க்கும் போது கீழே சுமார் 60 ஏரிகள் சூரிய வெளிச்சம் பட்டு நீல வண்ணத்தில் ஜொலிக்கும். பூமித் தாய்க்கு நீலக்கல் அணிவித்தது போன்று கண்கொள்ளாக் காட்சி அது!
இப்போது அங்கு சென்று பார்த்த போது அந்த நீலக்கற்கள் பெருமளவு களவு போயிருந்தன. 10 ஏரிகளைக்கூட பார்க்க முடியவில்லை.
சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் மன்னார் பாளையம், கருப்பூர், வாழப்பாடி ஆகிய மூன்று பிரதான வழிகளில் வழிந்தோடி சங்கிலித் தொடர் ஏரிகளை நிரப்பிச் சென்றது. மன்னார்பாளையம் வழியாக வழிந்த தண்ணீர் திருமணிமுத்தாறு கால்வாய்கள் மூலம் கன்னங்குறிச்சி - புது ஏரி, மூக்கனேரி, சக்கிலி (பேராந்தி) ஏரி, அச்சுவான் ஏரி, பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலாவரி ஏரி, நகரமலை இஸ்மான்கான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகிய ஏரிகளை நிறைத்தது. வாழப்பாடி வழியாக வழிந்தோடிய தண்ணீர் வலசையூர் தொட்டில் ஏரி, அணைவாரி முட்டல் ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, நெய்க்காரன்ப்பட்டி ஏரி, செந்தாரப்பட்டி ஏரிகளை நிறைத்தது. கருப்பூர் வழியாக வழிந்தோடிய தண்ணீர் காமலாபுரம் பெரிய ஏரி, டேனிஷ்பேட்டை செட்டி ஏரி, காடையாம்பட்டி குள்ளமுடையான் ஏரி, குருக்குப்பட்டி ஏரி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரி ஆகியவற்றை நிறைத்தது.
ஆனால், இன்று பல ஏரிகளைக் காணவில்லை. அச்சுவான் ஏரி புதிய பேருந்து நிலையமாகிவிட்டது. பேராந்தி ஏரி விளையாட்டு மைதானமாகிவிட்டது. தாதுபாய் குட்டை, கொல்லங்குட்டை, பஞ்சந்தாங்கி, பச்சைப்பட்டி, சீலாவரி இவை எல்லாம் மண்ணுக்குள் மூச்சடக்கி வெகு காலமாகிவிட்டன. பூலாவரி ஏரிக்கு நீர் செல்ல சோழர் காலத்தில் கட்டப்பட்ட ராஜசேகரன் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் சாக்கடை ஓடுகிறது. 17-ம் நூற்றாண்டில் இருங்கூர் பட்டையக்காரன் திருமலை அல்லாள இளைய நாயக்கனால் கட்டப்பட்ட 32 மைல் நீளமுள்ள ராஜா வாய்க்கால் எங்கே என்று தெரியவில்லை.
இவ்வளவு அழிவுகள் நடந்த அதே சேலத்தில்தான் தமிழகத்திலேயே முதல்முறையாக ஏரிகளுக்கு மீண்டும் ஒரு பொற்காலம் பிறந்துள்ளது. கடந்த கால தவறுகளுக்குப் பரிகாரம் தேடி யதைப் போல தூர்ந்துப்போய், குப்பைமேடுகளாவும் சாக்கடையாகவும் இருந்த ஏரி, குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து புனரமைத்துள்ளனர். மக்களை ஒருங்கிணைத்தது விழிப்புணர்வை ஏற்படுத்தியது ‘சேலம் மக்கள் குழு’.
கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு கன்னங்குறிச்சி - மூக்கனேரி கருவேல முட்செடிகள் மண்டி பெருமளவில் ஆக்கி ரமிப்பில் இருந்தது. அதன் கரைகள் மலம் கழிக்கப் பயன்பட்டன. ஏரியில் பல இடங்கள் தூர்ந்து குப்பைகள் கொட் டப்பட்டன. துர்நாற்றம், சமூக விரோதச் செயல்கள் காரணமாக அந்தப் பக்கம் செல்லவே மக்கள் அஞ்சினார்கள்.
2009-ம் ஆண்டு அரசு அனுமதியுடன் அந்த ஏரியைத் தத்தெடுத்தது ‘சேலம் மக்கள் குழு’. ஏரியை மீட்பது குறித்து சேலம் நகரம் முழுக்க பிரச் சாரம் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களி டம் இந்தப் பிரச்சினை முன் வைக்கப் பட்டது. சில நாட்களிலேயே உணர்வால் ஒன்றுபட்டார்கள் மக்கள். பிரச்சாரம் எழுச்சியுற்றது. முதலில் உள்ளூர் வாசிகள் அங்கே அசுத்தம் செய்வதைத் தவிர்த்தனர். பணிகள் தொடங்கின. ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண் கள், பெண்கள் என மக்கள் 500 பேர் வரை கூடினார்கள். சில்லறை காசுகள் தொடங்கி ரொக்கம் வரை கையில் இருந்த காசை போட்டார்கள். தினக் கூலிக்கு செல்பவர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு வந்து கரைகளை சீரமைத் தார்கள். ஏரியில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நூற்றுக்கணக் கான லாரிகளில் அப்புறத்தப்படுத்தப் பட்டன. கருவேல முட்செடிகள் வேராடு பிடுங்கப்பட்டன. தூர்ந்திருந்தப் பகுதிகள் எல்லாம் தூர் வாரப்பட்டன.
தூர் வாரியதில் மலை போல குவிந்தது வண்டல் மண். அதனை வீணாக்காமல் ஏரியின் நடுவே கொட்டி சிறு தீவு அமைத்தார்கள். 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன. இந்தத் தீவு சூழலியல்ரீதியாக தண்ணீரை சேமிக்கும் தன்மைக் கொண்டதாக அமைந்தது. 30 வாரங்களில் இந்தப் பணிகள் நடந்து முடிந்தன. ரூ.53 லட்சம் செலவானது. தொடர்ந்து 2010-ம் ஆண்டிலேயே ஏரி முழுமையாக நிரம்பியது. நடுவே இருந்த தீவில் மரங்கள் அடர்ந்து பறவைகள் சரணாலயமாக மாறியது. மக்கள் செல்லவே அஞ்சிய அந்தப் பகுதிக்கு இன்று குடும்பத்துடன் சென்று ரசிக்கிறார்கள்.
இதைவிட மோசமாக கிடந்தது அம்மாப்பேட்டை - குமரகிரி ஏரி. 29 ஏக்கர் பரப்பளவு கொண்டது அது. அம்மாப் பேட்டையின் சாக்கடை அனைத்தும் ஏரிக்குள் விடப்பட்டிருந்தன. சேலம் மாநகராட்சியே ஏரிக்குள் குப்பைகளைக் கொட்டியது. 2013-ம் ஆண்டு இதனை கையில் எடுத்தது சேலம் மக்கள் குழு. மூக்கனேரியில் செய்ததுபோலவே வேலை செய்தார்கள். 40 வார விடுமுறை நாட்களில் பணிகள் நடந்தன. இன்று அந்த ஏரியும் நடுவில் பசுமைத் தீவுகளுடன் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
சேலம் நகரில் அரிசிப்பாளையத்தில் முக்கால் ஏக்கர் பரப்பளவில் தெப்பக் குளம் ஒன்று இருக்கிறது. 1640-களில் ராபர்ட் நோப்ளி என்பவரால் கட்டப்பட்ட இது, 1860-களில் சேலம் ஆட்சியராக இருந்த லாங்லி என்பவரால் புனர மைக்கப்பட்டது. மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட இந்தக் குளம், 1980-களின் தொடக்கத்தில் அழியத் தொடங்கியது. குளம் குப்பைகளால் மேடிட்டு அந்தப் பகுதி எங்கும் சுகாதார சீர்கேட்டை பரப்பியது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் அந்தக் குளத்தைக் கையிலெடுத்தது சேலம் மக்கள் குழு. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நீர் நிரம்பியிருக்கிறது தெப்பக்குளம். அடுத்ததாக கடும் சீரழிவில் இருக்கும் பள்ளப்பட்டி ஏரியைத் தத்தெடுக்க இருக்கிறது சேலம் மக்கள் குழு.
அரசை மட்டுமே நம்பியிருக்காமல் மக்கள் மனது வைத்தால் நமது நீர் நிலைகளை மீட்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது சேலம்.
(நீர் அடிக்கும்)
சேர்வராயன் மலையில் தொலை நோக்கி பார்வை மையத்துக்கு மேலே மலை உச்சியில் இருக் கிறது ஒரு முகடு. அங்கிருந்து பார்த்தால் சேலம் மாவட்டம் முழுவதையும் கழுகுப் பார்வையில் காணலாம். 20 ஆண்டு களுக்கு முன்பு அங்கிருந்து பார்க்கும் போது கீழே சுமார் 60 ஏரிகள் சூரிய வெளிச்சம் பட்டு நீல வண்ணத்தில் ஜொலிக்கும். பூமித் தாய்க்கு நீலக்கல் அணிவித்தது போன்று கண்கொள்ளாக் காட்சி அது!
இப்போது அங்கு சென்று பார்த்த போது அந்த நீலக்கற்கள் பெருமளவு களவு போயிருந்தன. 10 ஏரிகளைக்கூட பார்க்க முடியவில்லை.
சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் மன்னார் பாளையம், கருப்பூர், வாழப்பாடி ஆகிய மூன்று பிரதான வழிகளில் வழிந்தோடி சங்கிலித் தொடர் ஏரிகளை நிரப்பிச் சென்றது. மன்னார்பாளையம் வழியாக வழிந்த தண்ணீர் திருமணிமுத்தாறு கால்வாய்கள் மூலம் கன்னங்குறிச்சி - புது ஏரி, மூக்கனேரி, சக்கிலி (பேராந்தி) ஏரி, அச்சுவான் ஏரி, பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலாவரி ஏரி, நகரமலை இஸ்மான்கான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகிய ஏரிகளை நிறைத்தது. வாழப்பாடி வழியாக வழிந்தோடிய தண்ணீர் வலசையூர் தொட்டில் ஏரி, அணைவாரி முட்டல் ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, நெய்க்காரன்ப்பட்டி ஏரி, செந்தாரப்பட்டி ஏரிகளை நிறைத்தது. கருப்பூர் வழியாக வழிந்தோடிய தண்ணீர் காமலாபுரம் பெரிய ஏரி, டேனிஷ்பேட்டை செட்டி ஏரி, காடையாம்பட்டி குள்ளமுடையான் ஏரி, குருக்குப்பட்டி ஏரி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரி ஆகியவற்றை நிறைத்தது.
ஆனால், இன்று பல ஏரிகளைக் காணவில்லை. அச்சுவான் ஏரி புதிய பேருந்து நிலையமாகிவிட்டது. பேராந்தி ஏரி விளையாட்டு மைதானமாகிவிட்டது. தாதுபாய் குட்டை, கொல்லங்குட்டை, பஞ்சந்தாங்கி, பச்சைப்பட்டி, சீலாவரி இவை எல்லாம் மண்ணுக்குள் மூச்சடக்கி வெகு காலமாகிவிட்டன. பூலாவரி ஏரிக்கு நீர் செல்ல சோழர் காலத்தில் கட்டப்பட்ட ராஜசேகரன் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் சாக்கடை ஓடுகிறது. 17-ம் நூற்றாண்டில் இருங்கூர் பட்டையக்காரன் திருமலை அல்லாள இளைய நாயக்கனால் கட்டப்பட்ட 32 மைல் நீளமுள்ள ராஜா வாய்க்கால் எங்கே என்று தெரியவில்லை.
இவ்வளவு அழிவுகள் நடந்த அதே சேலத்தில்தான் தமிழகத்திலேயே முதல்முறையாக ஏரிகளுக்கு மீண்டும் ஒரு பொற்காலம் பிறந்துள்ளது. கடந்த கால தவறுகளுக்குப் பரிகாரம் தேடி யதைப் போல தூர்ந்துப்போய், குப்பைமேடுகளாவும் சாக்கடையாகவும் இருந்த ஏரி, குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து புனரமைத்துள்ளனர். மக்களை ஒருங்கிணைத்தது விழிப்புணர்வை ஏற்படுத்தியது ‘சேலம் மக்கள் குழு’.
கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு கன்னங்குறிச்சி - மூக்கனேரி கருவேல முட்செடிகள் மண்டி பெருமளவில் ஆக்கி ரமிப்பில் இருந்தது. அதன் கரைகள் மலம் கழிக்கப் பயன்பட்டன. ஏரியில் பல இடங்கள் தூர்ந்து குப்பைகள் கொட் டப்பட்டன. துர்நாற்றம், சமூக விரோதச் செயல்கள் காரணமாக அந்தப் பக்கம் செல்லவே மக்கள் அஞ்சினார்கள்.
2009-ம் ஆண்டு அரசு அனுமதியுடன் அந்த ஏரியைத் தத்தெடுத்தது ‘சேலம் மக்கள் குழு’. ஏரியை மீட்பது குறித்து சேலம் நகரம் முழுக்க பிரச் சாரம் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களி டம் இந்தப் பிரச்சினை முன் வைக்கப் பட்டது. சில நாட்களிலேயே உணர்வால் ஒன்றுபட்டார்கள் மக்கள். பிரச்சாரம் எழுச்சியுற்றது. முதலில் உள்ளூர் வாசிகள் அங்கே அசுத்தம் செய்வதைத் தவிர்த்தனர். பணிகள் தொடங்கின. ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண் கள், பெண்கள் என மக்கள் 500 பேர் வரை கூடினார்கள். சில்லறை காசுகள் தொடங்கி ரொக்கம் வரை கையில் இருந்த காசை போட்டார்கள். தினக் கூலிக்கு செல்பவர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு வந்து கரைகளை சீரமைத் தார்கள். ஏரியில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நூற்றுக்கணக் கான லாரிகளில் அப்புறத்தப்படுத்தப் பட்டன. கருவேல முட்செடிகள் வேராடு பிடுங்கப்பட்டன. தூர்ந்திருந்தப் பகுதிகள் எல்லாம் தூர் வாரப்பட்டன.
தூர் வாரியதில் மலை போல குவிந்தது வண்டல் மண். அதனை வீணாக்காமல் ஏரியின் நடுவே கொட்டி சிறு தீவு அமைத்தார்கள். 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன. இந்தத் தீவு சூழலியல்ரீதியாக தண்ணீரை சேமிக்கும் தன்மைக் கொண்டதாக அமைந்தது. 30 வாரங்களில் இந்தப் பணிகள் நடந்து முடிந்தன. ரூ.53 லட்சம் செலவானது. தொடர்ந்து 2010-ம் ஆண்டிலேயே ஏரி முழுமையாக நிரம்பியது. நடுவே இருந்த தீவில் மரங்கள் அடர்ந்து பறவைகள் சரணாலயமாக மாறியது. மக்கள் செல்லவே அஞ்சிய அந்தப் பகுதிக்கு இன்று குடும்பத்துடன் சென்று ரசிக்கிறார்கள்.
இதைவிட மோசமாக கிடந்தது அம்மாப்பேட்டை - குமரகிரி ஏரி. 29 ஏக்கர் பரப்பளவு கொண்டது அது. அம்மாப் பேட்டையின் சாக்கடை அனைத்தும் ஏரிக்குள் விடப்பட்டிருந்தன. சேலம் மாநகராட்சியே ஏரிக்குள் குப்பைகளைக் கொட்டியது. 2013-ம் ஆண்டு இதனை கையில் எடுத்தது சேலம் மக்கள் குழு. மூக்கனேரியில் செய்ததுபோலவே வேலை செய்தார்கள். 40 வார விடுமுறை நாட்களில் பணிகள் நடந்தன. இன்று அந்த ஏரியும் நடுவில் பசுமைத் தீவுகளுடன் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
சேலம் நகரில் அரிசிப்பாளையத்தில் முக்கால் ஏக்கர் பரப்பளவில் தெப்பக் குளம் ஒன்று இருக்கிறது. 1640-களில் ராபர்ட் நோப்ளி என்பவரால் கட்டப்பட்ட இது, 1860-களில் சேலம் ஆட்சியராக இருந்த லாங்லி என்பவரால் புனர மைக்கப்பட்டது. மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட இந்தக் குளம், 1980-களின் தொடக்கத்தில் அழியத் தொடங்கியது. குளம் குப்பைகளால் மேடிட்டு அந்தப் பகுதி எங்கும் சுகாதார சீர்கேட்டை பரப்பியது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் அந்தக் குளத்தைக் கையிலெடுத்தது சேலம் மக்கள் குழு. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நீர் நிரம்பியிருக்கிறது தெப்பக்குளம். அடுத்ததாக கடும் சீரழிவில் இருக்கும் பள்ளப்பட்டி ஏரியைத் தத்தெடுக்க இருக்கிறது சேலம் மக்கள் குழு.
அரசை மட்டுமே நம்பியிருக்காமல் மக்கள் மனது வைத்தால் நமது நீர் நிலைகளை மீட்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது சேலம்.
(நீர் அடிக்கும்)
ஒரு நதியின் படுகொலை!
Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கான்கிரீட் கலவை பூசப்பட்ட திருமணிமுத்தாறு. | படம் : எஸ்.குருபிரசாத்.
Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கான்கிரீட் கலவை பூசப்பட்ட திருமணிமுத்தாறு. | படம் : எஸ்.குருபிரசாத்.
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் கோயில். நினைவுகள் பின்னோக்கிச் சுழல்கின்றன.
புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு... சேலம் மாவட்டம். இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேலத்தின் வரலாற்றுப் பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்தப் பகுதி என்று அர்த்தம். வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலைப் பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சி அழைக்கிறது கொல்லி மலை. இவை எல்லாம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள். சேலத்தின் நீராதாரம் இந்த மலைகள்தான். ஒருகாலத்தில் இந்த மலைகளில் ஆயிரக்கணக்கான அரு விகள் இருந்தன.
சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி சேலம் மாவட்டத்தில் இருந்த தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி, காவிரியுடன் கலந்தது. தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலத்தின் தண்ணீருக்கும் இருக்கிறது. மொரப்பூரில் ஓடும் பொன்னையாறும் ஓமலூர் அருகே ஓடும் சர்பந்தா நதியும் சேர்வராயன் மலை கொடுத்த கொடைகள்தான். இவை தவிர, கல்வராயன் மலையில் இருந்து வசிஷ்ட நதியும் கொல்லி மலையில் இருந்து சுவேதா நதியும் உற்பத்தியாகின. ஒருகாலத்தில் சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகளுடனும் நடுவே ஐந்து ஆறுகளுடன் கூடிய பசுமைப் பள்ளத்தாக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள்!
திருமணிமுத்தாறு தொன்மையான நதி. மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அது அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று,
‘சேலம் மணிமுத்தா நதியின்
ஒரு திவலை நீர் உண்டால்
உடல் பாதகங்கள் அகலும்
பரம ஞானம் உண்டாகும்’
என்கிறது.
சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு அருகே பிறக்கிறது திருமணி முத்தாறு. அது சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. அன்றைய திருமணிமுத்தாற்றில் குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க் கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என எட்டு வாய்க்கால்கள் இருந்தன. நகரமலை ஆறு, போதமலை ஆறு, அறுநூத்துமலை ஆறு, ஜருகுமலை ஆறு, கஞ்சமலை ஆறு, கொள்ளை ஆறு என ஆறு துணை ஆறுகள் இருந்தன. திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் 25 அணைகள் கட்டப்பட்டன. 290 சங்கிலித் தொடர் ஏரிகளை திருமணிமுத்தாறு நிரப்பியது. 1889-ம் ஆண்டில் இந்த நீர் நிலைகளை மேம்படுத்த ரூ. 1,07,568 ஒதுக்கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றன. வாழ்வாங்கு வாழ்ந்தது திரு மணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம்.
மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த அந்த ஆறு இன்று இல்லை. நிகழ் காலத்தில் கண்முன்னே துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டது அது. இதுவரை வெளியே சொல்லப்படாத சோகக் கதை அது. ஆரம்பத்தில் நதியில் சாக்கடையைக் கலந்தார்கள். வழியின்றி ஏற்றுக்கொண்டது நதி. ஆனால், அதன் பின்பு 2000-களின் தொடக்கத்தில் தீட்டப்பட்டது ஒரு படு கொலைத் திட்டம். அந்தப் படு கொலைக்கு ‘திருமணிமுத்தாறு அபிவி ருத்தித் திட்டம்’ என்று பெயர் வைத்தார்கள்.
கொலையைத் தொடங்கும் முன்பாக ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி பூமி பூஜை செய்தார்கள். எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். முதலில் நதிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடங்கியது கொலை. முதலில் கரைகள் எங்கும் சிமெண்ட் கலவையைப் பூசினார்கள். பின்பு அணைமேடு தொடங்கி கொண் டலாம்பட்டி வரை நதியின் படுகை யெங்கும் கான்கிரீட் கலவையை அடைத்தார்கள்.
மண்ணுக்கும் நதிக்கும் இருந்த நரம்பு வெட்டி எறியப்பட்டது. மூச்சுவிட வழியில்லாமல் முனகித் துடித்தது நதி. வாயிருந்தால் கதறியிருக்கும் அது. உலகில் எங்கேனும் இதுபோல கொடுமை நடந்தது உண்டா? இது நடந்தபோது மக்கள் மகிழ்ச்சிப் பொங்க கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. சூழலியாளர்கள்கூட குரல் கொடுக்கவில்லை. அரசியல்வாதி கள் ஊர்தோறும் இந்தப் படுகொலை யைப் பற்றிப் பெருமையாக பறைச்சாற் றினார்கள். தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளே தனக்கு உயிரோடு சமாதி கட்டியது கண்டு வேதனை தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்தது நதி. முன்பு சாக்கடை ஓடினாலும் மழைக் காலத்தில் ஆற்றில் பெருகிய நீரால் சேலத்தின் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருந்தது. நதியைப் புதைத்தப் பின்பு சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். இப்போது பார்க்க சகிக்கவில்லை அந்த பெரிய சாக்கடையை.
மரணித்தது நதி மட்டும்தானா? அது உருவாக்கிய ஏரிகளும்தான்!
(நீர் அடிக்கும்)
தொடர்புடையவை
*
சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் கோயில். நினைவுகள் பின்னோக்கிச் சுழல்கின்றன.
புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு... சேலம் மாவட்டம். இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேலத்தின் வரலாற்றுப் பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்தப் பகுதி என்று அர்த்தம். வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலைப் பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சி அழைக்கிறது கொல்லி மலை. இவை எல்லாம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள். சேலத்தின் நீராதாரம் இந்த மலைகள்தான். ஒருகாலத்தில் இந்த மலைகளில் ஆயிரக்கணக்கான அரு விகள் இருந்தன.
சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி சேலம் மாவட்டத்தில் இருந்த தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி, காவிரியுடன் கலந்தது. தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலத்தின் தண்ணீருக்கும் இருக்கிறது. மொரப்பூரில் ஓடும் பொன்னையாறும் ஓமலூர் அருகே ஓடும் சர்பந்தா நதியும் சேர்வராயன் மலை கொடுத்த கொடைகள்தான். இவை தவிர, கல்வராயன் மலையில் இருந்து வசிஷ்ட நதியும் கொல்லி மலையில் இருந்து சுவேதா நதியும் உற்பத்தியாகின. ஒருகாலத்தில் சுற்றிலும் பச்சைப் பசேல் மலைகளுடனும் நடுவே ஐந்து ஆறுகளுடன் கூடிய பசுமைப் பள்ளத்தாக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள்!
திருமணிமுத்தாறு தொன்மையான நதி. மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அது அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று,
‘சேலம் மணிமுத்தா நதியின்
ஒரு திவலை நீர் உண்டால்
உடல் பாதகங்கள் அகலும்
பரம ஞானம் உண்டாகும்’
என்கிறது.
சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு அருகே பிறக்கிறது திருமணி முத்தாறு. அது சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. அன்றைய திருமணிமுத்தாற்றில் குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால், தாதுபாய்க்குட்டை வாய்க் கால், நோட்டக்காரன் வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால், சீலாவரி வாய்க்கால் என எட்டு வாய்க்கால்கள் இருந்தன. நகரமலை ஆறு, போதமலை ஆறு, அறுநூத்துமலை ஆறு, ஜருகுமலை ஆறு, கஞ்சமலை ஆறு, கொள்ளை ஆறு என ஆறு துணை ஆறுகள் இருந்தன. திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் 25 அணைகள் கட்டப்பட்டன. 290 சங்கிலித் தொடர் ஏரிகளை திருமணிமுத்தாறு நிரப்பியது. 1889-ம் ஆண்டில் இந்த நீர் நிலைகளை மேம்படுத்த ரூ. 1,07,568 ஒதுக்கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றன. வாழ்வாங்கு வாழ்ந்தது திரு மணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம்.
மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த அந்த ஆறு இன்று இல்லை. நிகழ் காலத்தில் கண்முன்னே துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டது அது. இதுவரை வெளியே சொல்லப்படாத சோகக் கதை அது. ஆரம்பத்தில் நதியில் சாக்கடையைக் கலந்தார்கள். வழியின்றி ஏற்றுக்கொண்டது நதி. ஆனால், அதன் பின்பு 2000-களின் தொடக்கத்தில் தீட்டப்பட்டது ஒரு படு கொலைத் திட்டம். அந்தப் படு கொலைக்கு ‘திருமணிமுத்தாறு அபிவி ருத்தித் திட்டம்’ என்று பெயர் வைத்தார்கள்.
கொலையைத் தொடங்கும் முன்பாக ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி பூமி பூஜை செய்தார்கள். எல்லோரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். முதலில் நதிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடங்கியது கொலை. முதலில் கரைகள் எங்கும் சிமெண்ட் கலவையைப் பூசினார்கள். பின்பு அணைமேடு தொடங்கி கொண் டலாம்பட்டி வரை நதியின் படுகை யெங்கும் கான்கிரீட் கலவையை அடைத்தார்கள்.
மண்ணுக்கும் நதிக்கும் இருந்த நரம்பு வெட்டி எறியப்பட்டது. மூச்சுவிட வழியில்லாமல் முனகித் துடித்தது நதி. வாயிருந்தால் கதறியிருக்கும் அது. உலகில் எங்கேனும் இதுபோல கொடுமை நடந்தது உண்டா? இது நடந்தபோது மக்கள் மகிழ்ச்சிப் பொங்க கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. சூழலியாளர்கள்கூட குரல் கொடுக்கவில்லை. அரசியல்வாதி கள் ஊர்தோறும் இந்தப் படுகொலை யைப் பற்றிப் பெருமையாக பறைச்சாற் றினார்கள். தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளே தனக்கு உயிரோடு சமாதி கட்டியது கண்டு வேதனை தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்தது நதி. முன்பு சாக்கடை ஓடினாலும் மழைக் காலத்தில் ஆற்றில் பெருகிய நீரால் சேலத்தின் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருந்தது. நதியைப் புதைத்தப் பின்பு சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். இப்போது பார்க்க சகிக்கவில்லை அந்த பெரிய சாக்கடையை.
மரணித்தது நதி மட்டும்தானா? அது உருவாக்கிய ஏரிகளும்தான்!
(நீர் அடிக்கும்)
தொடர்புடையவை
அன்றைய தஞ்சையும் இன்றைய சென்னையும்!
படகு சவாரி முன்னே... பாசனம் பின்னே!
மடையர்களை போற்றுவோம்!
கடலூர் அழிவுக்கு காரணம் யார்?
சமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்?
நன்றியை மறந்த நவீன சமூகம்!
அன்றைய தஞ்சையும் இன்றைய சென்னையும்!
Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
இன்று தண்ணீர் பங்கீட்டுக்காக அண்டை மாநிலங்களிடம் பிரச்சி னைகளை தீர்த்துக்கொள்ளும் வழி தெரியாமல் தவிக்கிறோம். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்க வில்லை. காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தீராத நிலையிலும் கர்நாடகம், மேகதாட்டுவில் அணையைக் கட்டத் துடிக்கிறது. காவிரி ஆற்றின் நீரியியல் ஓட்டம் முக்கியத் துவம் வாய்ந்த மேகாதாட்டுவில் மட்டும் அணை கட்டப்பட்டுவிட்டால், காவிரியை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
ஆனால், நமது முன்னோர்கள் துளி பாரபட்சம்கூட இல்லாமல் நீரைப் பங்கீடு செய்தார்கள்.
இன்றைக்கு காவிரி ஆற்றில் தமிழகத் துக்கு மேல் பகுதியில் அணையைக் கட்ட முயற்சிக்கிறது கர்நாடகம். ஆனால், அன்றைக்கு ‘ஆற்றில் இருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் இன்னொரு வாய்க்கால் வெட்டக்கூடாது; ஒரு ஏரிக்கு நீர் வரத்து கிடைக்கும் மேற்பகுதியில் இன்னொரு ஏரி வெட்டக்கூடாது’ என்பது பழந்தமிழர் வகுத்த கடுமையான சட்டம். இதனை ‘காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று கி.மு. 1117- ஆண்டு ஸ்ரீவல்லப பாண்டியனின் குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தற்போது மதுரையின் சோழவந்தான் கிராமத்தின் அன்றைய பெயர் சதுர்வேதி மங்கலம். அந்தக் கிராமத்தின் ஊர் சபைக் கூட்டத்தில் இந்த விதி இயற்றப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆற்றின் மேல் பகுதியில் புதியதாக ஒரு கால்வாய் வெட்டினால் கீழ் பகுதியில் இருக்கும் பாசனதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள் அவர்கள். இந்த விதிகளை மீறி தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்தில் மாங்காடு நாட்டைச் சேர்ந்த சோழ முத்தரையன் என்கிற அரசு அதிகாரி, பராக்கிரம பாண்டியன் கால்வாய்க்கு மேலாக ஒரு கால்வாயை வெட்டினான். அப்போது மக்களே ஒன்றுசேர்ந்து அரசனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அந்தக் கால்வாயை மூடினார்கள் என்கிறது கல்வெட்டு குறிப்பு.
அதேபோல ஏரிகளில் தண்ணீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட மடை, மதகு, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் நீர்ப் பங்கீட்டு அளவுக்கு கருவிகளாகவும் அமைந்தன. ஒவ்வொரு ஏரியிலும் ஆயக்கட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும்போது நான்கு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, ஆறு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, 12 நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று என தனித் தனி மதகுகள் அமைக்கப்பட்டன. மூன்று மதகுகளையும் ஒருசேர திறந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஆயக்கட்டுப் பகுதிக்கு இரண்டு நாழிகைகளில் முழுமையாக தண்ணீர் பாய்ந்துவிடும் என்பது அவர்கள் கண்டுபிடித்த கணக்கு. இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் மதுராந்தகம் ஏரி, தூசு மாமண்டூர் ஏரிகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டன.
இதுதவிர ‘முறைப்பானை’என்கிற முறையும் இருந்தது. அதாவது, 10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிடப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு துளை, ஐந்து ஏக்கருக்கு ஒரு துளை, 10 ஏக்கருக்கு ஒரு துளை என இந்தத் துளைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. மதகைத் திறக்கும் அதே நொடியில் நீர் நிரப்பிய பானையின் துளையை திறந்துவிடுவார்கள். பானையின் நீர் முழுவதும் காலியானால் குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்ததாக கணக்கிட்டனர். இது சுழற்சி முறை பாசனம் என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும்போது நாழிகை யைக் கணக்கிட ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதில் தவறு செய்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இதனைப் பின்பற்றிதான் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘வாரபந்தி’ என்கிற சுழற்சி பாசனமும், 18-ம் நூற்றாண்டில் பாலாற்று ஏரிகளில் ‘மாமூல் நாமா’ என்கிற சுழற்சி முறை பாசனமும் உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி எல்லாம் தனது ஆய்வுகளின் மூலம் விரிவாக எழுதியிருக்கிறார் பொதுப்பணித்துறையின் வடிவமைப்புப் பிரிவு தலைமை பொறியாளரும் நீர் பாசன ஆய்வாளருமான முனைவர் பழ.கோமதிநாயகம்.
ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு அடிப்படை மழை நீர். அதனை ஏரிகள், குளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி யும் சேகரித்தனர் பழந்தமிழர். ‘மழை நீர் சேகரிப்பு’ என்கிற விஷயம் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பொதுவெளியில் வெகுவாக அறியப்படுகிறது. அதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இருந்த தில்லை. அதிகபட்சம் கூரையில் ஒழுகும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்தோம். ஆனால், கி.பி. 10- நூற்றாண்டிலேயே பழந்தமிழர் மழை நீரை சேகரிக்கும் தொழில்நுட்பங்களில் தேறியிருந்தனர். அவர்கள் ஏரிகள், குளங்கள் தவிர கோட்டைகள், மாளிகைகள், கோயில்கள் ஆகியவற்றையும் மழை நீரை சேகரிக்கும் வகையில் கட்டினார்கள். கோட்டைகளின் அடிப் பகுதிகளில் சுடுமண் குழாய்கள் பதிக்கப்பட்டு கோட்டை வளாகத்தில் சேகரமாகும் மொத்தத் தண்ணீரும் அகழிகளில் விடப் பட்டன. அகழிகளில் இருந்து அருகில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் சென்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், தஞ்சை பெரிய கோயில்.
இந்தக் கோயில் வளாகத்தில் சேகர மாகும் மழை நீர் மற்றும் தஞ்சை நகரத்தில் சேகரமாகும் மழை நீர் இரண்டும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் செவ்வப்பன் ஏரிக்கு (சேப்பன வாரி) சென்றது. சேறு கலந்த அந்தத் தண்ணீர் அந்த ஏரியில் தெளிந்த பின்பு மீண்டும் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத் துக்குச் சென்றது. இதனை குடிநீராகப் பயன்படுத்தினர் மக்கள். இதை வடிவமைத்தது தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கன். இதன் மூலம் மழைக் காலங்களில் தஞ்சை நகர வீதிகளில் தண்ணீர் ஒரு துளி தேங்கி நிற்கவில்லை என்று குறிப்பிடு கிறது ராஜராஜன் கல்வெட்டு. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோயில் சுற்றுவட்டாரங் களில் பெரியளவில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. காரணம் அன்றைக்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகர வடிவ மைப்பு.
ஆனால், சிறு மழைக்கே பொதுவாகத் தாங்குவதில்லை சென்னை. இப்போது பெய்யும் பெருமழை நகரத்தை நரகமாக்கிவிட்டது நமக்கான கடும் எச்சரிக்கை. முதல் இரண்டு நாட்கள் மழையை ரசித்தவர்கள் எல்லாம் இப்போது மிரண்டுத் தவிக்கிறார்கள். ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வாழ்வியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நகரில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட தொலை நோக்கு காலம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நகரம் பன்மடங்கு வளர்ந்த பின்னும் அதற்கான திட்ட மிடல் இல்லாமல் போய்விட்டது. இப்போது உள்ள வடிகால்கள் நீரியல் ஓட்டத்துக்கு (Flow by gravity) மாறான மட்ட அளவுகள் கொண்டவை. தவிர, பெரும்பாலான மழை நீர் வாய்க் கால்கள் அடையாறு, கூவம், ஓட்டேரி நல்லா ஆகிய சிற்றாறுகளுடன் இணைக் கப்படவில்லை. மழை நீர் வடிகால் களில் இருந்து தண்ணீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் தேங்குவதற்கு இதுவும் முக்கிய காரணம். கடந்த 15 ஆண்டுக ளில் சென்னையின் மழை நீர் வாய்க்கால்களில் நடந்திருக்கும் பரா மரிப்பு பணிகள் எந்த அளவுக்கு முழுமை யானவை என்று ஆராய வேண்டிய நேரம் இது.
கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் போதிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் இன்றி, திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், கல்லூரிகளும் அரசுக் கட்டிடங்களும் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி னால், கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலமே தெரியும் - ராணுவம் வந்து மீட்கும் அளவுக்கு ஏன் இப்படி சென்னை மிதக்கிறது என்று!.
( நீர் அடிக்கும்)
*
இன்று தண்ணீர் பங்கீட்டுக்காக அண்டை மாநிலங்களிடம் பிரச்சி னைகளை தீர்த்துக்கொள்ளும் வழி தெரியாமல் தவிக்கிறோம். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்க வில்லை. காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தீராத நிலையிலும் கர்நாடகம், மேகதாட்டுவில் அணையைக் கட்டத் துடிக்கிறது. காவிரி ஆற்றின் நீரியியல் ஓட்டம் முக்கியத் துவம் வாய்ந்த மேகாதாட்டுவில் மட்டும் அணை கட்டப்பட்டுவிட்டால், காவிரியை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
ஆனால், நமது முன்னோர்கள் துளி பாரபட்சம்கூட இல்லாமல் நீரைப் பங்கீடு செய்தார்கள்.
இன்றைக்கு காவிரி ஆற்றில் தமிழகத் துக்கு மேல் பகுதியில் அணையைக் கட்ட முயற்சிக்கிறது கர்நாடகம். ஆனால், அன்றைக்கு ‘ஆற்றில் இருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் இன்னொரு வாய்க்கால் வெட்டக்கூடாது; ஒரு ஏரிக்கு நீர் வரத்து கிடைக்கும் மேற்பகுதியில் இன்னொரு ஏரி வெட்டக்கூடாது’ என்பது பழந்தமிழர் வகுத்த கடுமையான சட்டம். இதனை ‘காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று கி.மு. 1117- ஆண்டு ஸ்ரீவல்லப பாண்டியனின் குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தற்போது மதுரையின் சோழவந்தான் கிராமத்தின் அன்றைய பெயர் சதுர்வேதி மங்கலம். அந்தக் கிராமத்தின் ஊர் சபைக் கூட்டத்தில் இந்த விதி இயற்றப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆற்றின் மேல் பகுதியில் புதியதாக ஒரு கால்வாய் வெட்டினால் கீழ் பகுதியில் இருக்கும் பாசனதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள் அவர்கள். இந்த விதிகளை மீறி தொண்டை மண்டலத்தில் புலியூர்க்கோட்டத்தில் மாங்காடு நாட்டைச் சேர்ந்த சோழ முத்தரையன் என்கிற அரசு அதிகாரி, பராக்கிரம பாண்டியன் கால்வாய்க்கு மேலாக ஒரு கால்வாயை வெட்டினான். அப்போது மக்களே ஒன்றுசேர்ந்து அரசனுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அந்தக் கால்வாயை மூடினார்கள் என்கிறது கல்வெட்டு குறிப்பு.
அதேபோல ஏரிகளில் தண்ணீர் வெளியேறுவதற்கு அமைக்கப்பட்ட மடை, மதகு, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் நீர்ப் பங்கீட்டு அளவுக்கு கருவிகளாகவும் அமைந்தன. ஒவ்வொரு ஏரியிலும் ஆயக்கட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடும்போது நான்கு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, ஆறு நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று, 12 நாழிகைகளுக்கு நீர் பாயும் மதகு ஒன்று என தனித் தனி மதகுகள் அமைக்கப்பட்டன. மூன்று மதகுகளையும் ஒருசேர திறந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஆயக்கட்டுப் பகுதிக்கு இரண்டு நாழிகைகளில் முழுமையாக தண்ணீர் பாய்ந்துவிடும் என்பது அவர்கள் கண்டுபிடித்த கணக்கு. இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் மதுராந்தகம் ஏரி, தூசு மாமண்டூர் ஏரிகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டன.
இதுதவிர ‘முறைப்பானை’என்கிற முறையும் இருந்தது. அதாவது, 10 முதல் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிடப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு துளை, ஐந்து ஏக்கருக்கு ஒரு துளை, 10 ஏக்கருக்கு ஒரு துளை என இந்தத் துளைகள் பல்வேறு அளவுகளில் இருந்தன. மதகைத் திறக்கும் அதே நொடியில் நீர் நிரப்பிய பானையின் துளையை திறந்துவிடுவார்கள். பானையின் நீர் முழுவதும் காலியானால் குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ந்ததாக கணக்கிட்டனர். இது சுழற்சி முறை பாசனம் என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடும்போது நாழிகை யைக் கணக்கிட ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இதில் தவறு செய்தால் தண்டனையும் வழங்கப்பட்டது. இதனைப் பின்பற்றிதான் மொகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘வாரபந்தி’ என்கிற சுழற்சி பாசனமும், 18-ம் நூற்றாண்டில் பாலாற்று ஏரிகளில் ‘மாமூல் நாமா’ என்கிற சுழற்சி முறை பாசனமும் உருவாக்கப்பட்டது. இதைப் பற்றி எல்லாம் தனது ஆய்வுகளின் மூலம் விரிவாக எழுதியிருக்கிறார் பொதுப்பணித்துறையின் வடிவமைப்புப் பிரிவு தலைமை பொறியாளரும் நீர் பாசன ஆய்வாளருமான முனைவர் பழ.கோமதிநாயகம்.
ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு அடிப்படை மழை நீர். அதனை ஏரிகள், குளங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி யும் சேகரித்தனர் பழந்தமிழர். ‘மழை நீர் சேகரிப்பு’ என்கிற விஷயம் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பொதுவெளியில் வெகுவாக அறியப்படுகிறது. அதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நம்மிடையே இருந்த தில்லை. அதிகபட்சம் கூரையில் ஒழுகும் தண்ணீரை பாத்திரத்தில் பிடித்தோம். ஆனால், கி.பி. 10- நூற்றாண்டிலேயே பழந்தமிழர் மழை நீரை சேகரிக்கும் தொழில்நுட்பங்களில் தேறியிருந்தனர். அவர்கள் ஏரிகள், குளங்கள் தவிர கோட்டைகள், மாளிகைகள், கோயில்கள் ஆகியவற்றையும் மழை நீரை சேகரிக்கும் வகையில் கட்டினார்கள். கோட்டைகளின் அடிப் பகுதிகளில் சுடுமண் குழாய்கள் பதிக்கப்பட்டு கோட்டை வளாகத்தில் சேகரமாகும் மொத்தத் தண்ணீரும் அகழிகளில் விடப் பட்டன. அகழிகளில் இருந்து அருகில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் சென்றது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், தஞ்சை பெரிய கோயில்.
இந்தக் கோயில் வளாகத்தில் சேகர மாகும் மழை நீர் மற்றும் தஞ்சை நகரத்தில் சேகரமாகும் மழை நீர் இரண்டும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் செவ்வப்பன் ஏரிக்கு (சேப்பன வாரி) சென்றது. சேறு கலந்த அந்தத் தண்ணீர் அந்த ஏரியில் தெளிந்த பின்பு மீண்டும் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத் துக்குச் சென்றது. இதனை குடிநீராகப் பயன்படுத்தினர் மக்கள். இதை வடிவமைத்தது தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கன். இதன் மூலம் மழைக் காலங்களில் தஞ்சை நகர வீதிகளில் தண்ணீர் ஒரு துளி தேங்கி நிற்கவில்லை என்று குறிப்பிடு கிறது ராஜராஜன் கல்வெட்டு. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோயில் சுற்றுவட்டாரங் களில் பெரியளவில் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. காரணம் அன்றைக்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகர வடிவ மைப்பு.
ஆனால், சிறு மழைக்கே பொதுவாகத் தாங்குவதில்லை சென்னை. இப்போது பெய்யும் பெருமழை நகரத்தை நரகமாக்கிவிட்டது நமக்கான கடும் எச்சரிக்கை. முதல் இரண்டு நாட்கள் மழையை ரசித்தவர்கள் எல்லாம் இப்போது மிரண்டுத் தவிக்கிறார்கள். ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வாழ்வியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நகரில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்ட தொலை நோக்கு காலம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நகரம் பன்மடங்கு வளர்ந்த பின்னும் அதற்கான திட்ட மிடல் இல்லாமல் போய்விட்டது. இப்போது உள்ள வடிகால்கள் நீரியல் ஓட்டத்துக்கு (Flow by gravity) மாறான மட்ட அளவுகள் கொண்டவை. தவிர, பெரும்பாலான மழை நீர் வாய்க் கால்கள் அடையாறு, கூவம், ஓட்டேரி நல்லா ஆகிய சிற்றாறுகளுடன் இணைக் கப்படவில்லை. மழை நீர் வடிகால் களில் இருந்து தண்ணீர் வெளியேறி தாழ்வான பகுதிகளில் தேங்குவதற்கு இதுவும் முக்கிய காரணம். கடந்த 15 ஆண்டுக ளில் சென்னையின் மழை நீர் வாய்க்கால்களில் நடந்திருக்கும் பரா மரிப்பு பணிகள் எந்த அளவுக்கு முழுமை யானவை என்று ஆராய வேண்டிய நேரம் இது.
கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் போதிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் இன்றி, திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், கல்லூரிகளும் அரசுக் கட்டிடங்களும் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி னால், கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மூலமே தெரியும் - ராணுவம் வந்து மீட்கும் அளவுக்கு ஏன் இப்படி சென்னை மிதக்கிறது என்று!.
( நீர் அடிக்கும்)
படகு சவாரி முன்னே... பாசனம் பின்னே!
Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

Amrita Business School - MBA with excellent placement Coimbatore & Bangalore campus!amritacir.in/mba_2016

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதை அகநானூறு (252),
‘துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்
தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே’
என்கிறது. அதாவது, ‘அடர்ந்த பனியிலும் அடைமழையிலும் நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல ஓர் அன்னை தன் தூக்கத்தை மறந்தாள்’ என்கிறது பாடல். ஏரியின் காவலனைத் தாயுடன் ஒப்பிட்டுப் பெருமை சேர்க்கும் வரிகள் இவை. அப்படியெனில் ஏரிக் காவலர்கள் எவ்வளவு விழிப்போடு இருந்திருப்பார்கள்!
நிகழ்காலத்துக்கு வருவோம். பாலுட்டி வளர்த்த அன்னையைக் கைவிட்டதுபோல ஏரிகளைக் கைவிட்டு விட்டோம். ஊருக்கெல்லாம் சோறிட்ட ஏரிகள் அநாதைகளாகப் பரிதவிக் கின்றன. தாய் மடி எங்கும் கருவேல முட்செடிகளின் வேர்கள் ஊடுருவி ரத்தம் உறிஞ்சுகின்றன. ஏரிக்கு காவல் யாருமில்லை. ஏரிகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொதுப் பணித் துறையிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியைப் பராமரிக்க என்று தனியாக ஒரு பணியாளர்கூட கிடையாது. கூடுதல் பொறுப்பாகதான் ஏரிகளை உதவிப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?
ஏனோ தெரியவில்லை, ஏரிகள் விஷயத்தில் அரசுக்கு ஏக குழப்பம். ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றுமில்லை. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா? ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கலுங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால், ஏரிக்கு ஒரு பிரச் சினை என்றால் மட்டும் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை. ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் பலவும் ஏரிகளை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றன தெரியுமா?
கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணை யத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.
மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’, ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’, உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’, ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன. அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம், ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்ஷன் சமிதி’, இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment), ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
தமிழகத்துக்கு வருவோம். மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன. தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது. எந்தெந்த ஏரிகள் தெரியுமா? ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள். விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா!
(நீர் அடிக்கும்)
தொடர்புடையவை
*
பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதை அகநானூறு (252),
‘துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்
தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே’
என்கிறது. அதாவது, ‘அடர்ந்த பனியிலும் அடைமழையிலும் நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல ஓர் அன்னை தன் தூக்கத்தை மறந்தாள்’ என்கிறது பாடல். ஏரியின் காவலனைத் தாயுடன் ஒப்பிட்டுப் பெருமை சேர்க்கும் வரிகள் இவை. அப்படியெனில் ஏரிக் காவலர்கள் எவ்வளவு விழிப்போடு இருந்திருப்பார்கள்!
நிகழ்காலத்துக்கு வருவோம். பாலுட்டி வளர்த்த அன்னையைக் கைவிட்டதுபோல ஏரிகளைக் கைவிட்டு விட்டோம். ஊருக்கெல்லாம் சோறிட்ட ஏரிகள் அநாதைகளாகப் பரிதவிக் கின்றன. தாய் மடி எங்கும் கருவேல முட்செடிகளின் வேர்கள் ஊடுருவி ரத்தம் உறிஞ்சுகின்றன. ஏரிக்கு காவல் யாருமில்லை. ஏரிகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொதுப் பணித் துறையிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியைப் பராமரிக்க என்று தனியாக ஒரு பணியாளர்கூட கிடையாது. கூடுதல் பொறுப்பாகதான் ஏரிகளை உதவிப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?
ஏனோ தெரியவில்லை, ஏரிகள் விஷயத்தில் அரசுக்கு ஏக குழப்பம். ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றுமில்லை. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா? ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கலுங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால், ஏரிக்கு ஒரு பிரச் சினை என்றால் மட்டும் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை. ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் பலவும் ஏரிகளை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றன தெரியுமா?
கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணை யத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.
மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’, ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’, உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’, ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன. அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம், ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்ஷன் சமிதி’, இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment), ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.
தமிழகத்துக்கு வருவோம். மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன. தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது. எந்தெந்த ஏரிகள் தெரியுமா? ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள். விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா!
(நீர் அடிக்கும்)
தொடர்புடையவை
மடையர்களை போற்றுவோம்!
Casa Grande Masseys - 2 & 3 BHK Apartments in Royapuram. Picturesque sea view. From 98.5L.casagrandemasseys.com/Royapuram
Casa Grande Masseys - 2 & 3 BHK Apartments in Royapuram. Picturesque sea view. From 98.5L.casagrandemasseys.com/Royapuram
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
நம் முன்னோர்களின் ஏரி தொழில்நுட்பங்களை அறிந்துக்கொள்வதற்கு முன்பாக ஏரிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வோம். மனிதன் வெட்டியது அல்லாமல் இயற்கையாகவே உருவாகும் ஏரிகளும் உண்டு. அவை 6 வகைப்படுகின்றன. பூமித் தட்டுகளின் அசைவால் உருவாவது டெக்டோனிக் (Tectonic) ஏரி (உ.ம்: டிசோ மொரீரி ஏரி-லடாக்). எரிமலை வெடிப்புகளால் உருவாவது வேல்கனிக் (Volcanic) ஏரி (உ.ம்: டவோடா ஏரி-ஜப்பான்). தொடர் காற்று வீச்சால் உருவாவது எயோலியன் (Aeolian) ஏரி (உ.ம்: சாம்பார் ஏரி-ஜெய்ப்பூர்). தொடர் நீர் பாய்தலால் உருவாவது புளுவியல்(Fluvial) ஏரி (உ.ம்: கபர்டால் ஏரி-பிஹார்). பனிப் பாறைகளின் சரிவுகளால் உருவாவது கிளாசியல் (Glacial) ஏரி (உ.ம்: சந்திராடால் ஏரி-இமாச்சலம்). கடலோர இயக்கங்களால் உருவாவது கோஸ்டல் (Coastal) ஏரி (உ.ம்: பழவேற்காடு ஏரி-சென்னை).
ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளே அதிகம். இந்தியாவில் 2,52,848 ஏரிகள், குளங்கள் உள்ளன. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 1,66,283 ஏரிகள் உள்ளன. சரி, மனிதன் ஏரிகளை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதன் முதலில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்தான். மழை இல்லாதபோது மழை நீரை சேமிக்க ஆறுகளின் அருகே சிறு நீர் நிலைகளை ஏற்படுத்தினான். இதுவே ஏரியின் தொடக்கக் காலம். அடுத்ததாக ஆற்றில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டுவர ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக சவுக்கு, மூங்கில் கம்புகளை அடித்தார்கள். அவற்றின் இடையே கோரை மற்றும் நாணல் புற்களைக் கொண்டு அடைத்து, களிமண் பூசி சுவர்போல தடுப்பு ஏற்படுத்தினார்கள். இதன் பெயர் கொரம்பு. கொரம்பில் நீர் நிரம்பியபோது கால்வாய்கள் அமைத்து உயரமான இடங்களில் இருந்த குளங்களுக்கு நீரைப் பாய்ச்சினார்கள். இதுவே பிற்காலத்தில் அணைகள் அமைய அடிப்படையாக அமைந்தது.
பழந்தமிழர் நீர் நிலைகளை இலஞ்சி, வாவி, நளினி, கயம், கண்மாய், ஏரி, கோட்டகம், கேணி, குளம், மலங்கன், கிடங்கு, குட்டம், வட்டம், தடாகம், மடு, ஓடை, பொய்கை, சலந்தரம் என்று அழைத்தனர். அப்போது நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இதைத்தான் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார்,
‘நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண்தள்ளா தோரே’
(புறநானூறு 18) என்று பாடினார். அதாவது, ‘எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கரை அமைத்து நீர் நிலைகள் உருவாக்கிய மன்னர்களே இந்த உலகில் தங்களது பெயரை நிலை நிறுத்திக்கொள்வார்கள்’ என்கிறார் குடபுலவியனார். அதேபோல 10 வயது முதல் 80 வயது வரை குடிமராமத்துப் பணி செய்வது கடமையாக கருதப்பட்டது. இப்படியாக நீர் நிலைகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் பழந்தமிழர் வாழ்வோடு ஒன்றியதாக இருந்தது.
நம் முன்னோர் ஏனோதானோவென்று ஏரிகளை வெட்டிவிடவில்லை. இன்றைய பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் சவால் விடுபவை அவை. பாண்டியன் மூன்றாம் ராஜசிம்மன் கட்டிய ராஜசிம்ம மங்கலம் ஏரி உட்பட, தமிழகத்தின் பாரம்பரிய ஏரிகளைக் கழுகுக் கண் கொண்டு பார்த்தால் அவை பிறை நிலவின் வடிவில் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, பழந்தமிழர் ஏரிகளை 8-ம் நாள் பிறை வடிவில் அமைத்தார்கள். ஏரிகள் இந்த வடிவத்தில் அமைவதால் கரையின் நீளம் குறைவாகவும், அதேசமயம் அதிக நீர்க் கொள்ளளவு கொண்டதாகவும் இருந்தன. இது சிக்கனமான வடிவமைப்பு முறை. இதைத்தான் சங்கப் புலவர் கபிலர்,
‘அறையும் பொறையும் மணந்த தனைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரிதன் பறம்பு நாடே’
என்று பாடினார்.
ஏரியை வடிவமைத்தப் பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் ‘மடை’. அந்த மடைகளை அமைக்க முதலில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதிர்ந்த பனை மரத்தை ‘வாய்ச்சு’ என்கிற கருவியால் வெட்டுவார்கள். மரம் வெட்டுப்படாமல் நெருப்புத் தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. அப்படியான மரங்களைத் தேர்வு செய்து, அதன் உள்தண்டை நீக்கிவிடுவார்கள். உறுதியான நீண்ட குழாய் தயார். இதனை ஏரிக் கரையின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பின்பு பாறை மற்றும் மரச் சட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.
வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருந்தார்கள். மடைகளைத் திறப்பது சாதாரண விஷயமல்ல; உயிரைப் பணயம் வைக்கும் சாகசப் பணி இது. வெள்ளக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும். கரை வெடிக்கக் காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊரே அழிந்துவிடும். வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கிவிடுவார்கள். அப்போது ஒரே ஒருவர் மட்டும் ஏரிக் கரைக்குச் செல்வார். கடல்போல கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். நீரில் மூழ்கி, மூச்சடக்கி, கரையின் அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம். அதேவேகத்தில் வெள்ளம் அதை திறப்பவரையும் இழுத்துச் செல்ல முற்படும். அதன் வேகத்தில் இருந்து தப்புவது மிகவும் சிரமம்.
மடையைத் திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக்கொண்டுதான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர். மாண்டுபோனவர் பலர். தியாகிகளான இவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளோ, கல்வெட்டுகளோ வரலாற்றில் எதுவுமில்லாமல் போனதுதான் சோகம். இவர்கள் ‘மடையர்கள்’என்று அழைக்கப்பட்டார்கள்.
மனதை தொட்டுச் சொல்லுங்கள், இனியும் யாரையாவது ‘மடையா’ என்று திட்டுவீர்கள் நீங்கள்?
(நீர் அடிக்கும்)
நம் முன்னோர்களின் ஏரி தொழில்நுட்பங்களை அறிந்துக்கொள்வதற்கு முன்பாக ஏரிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வோம். மனிதன் வெட்டியது அல்லாமல் இயற்கையாகவே உருவாகும் ஏரிகளும் உண்டு. அவை 6 வகைப்படுகின்றன. பூமித் தட்டுகளின் அசைவால் உருவாவது டெக்டோனிக் (Tectonic) ஏரி (உ.ம்: டிசோ மொரீரி ஏரி-லடாக்). எரிமலை வெடிப்புகளால் உருவாவது வேல்கனிக் (Volcanic) ஏரி (உ.ம்: டவோடா ஏரி-ஜப்பான்). தொடர் காற்று வீச்சால் உருவாவது எயோலியன் (Aeolian) ஏரி (உ.ம்: சாம்பார் ஏரி-ஜெய்ப்பூர்). தொடர் நீர் பாய்தலால் உருவாவது புளுவியல்(Fluvial) ஏரி (உ.ம்: கபர்டால் ஏரி-பிஹார்). பனிப் பாறைகளின் சரிவுகளால் உருவாவது கிளாசியல் (Glacial) ஏரி (உ.ம்: சந்திராடால் ஏரி-இமாச்சலம்). கடலோர இயக்கங்களால் உருவாவது கோஸ்டல் (Coastal) ஏரி (உ.ம்: பழவேற்காடு ஏரி-சென்னை).
ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளே அதிகம். இந்தியாவில் 2,52,848 ஏரிகள், குளங்கள் உள்ளன. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 1,66,283 ஏரிகள் உள்ளன. சரி, மனிதன் ஏரிகளை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதன் முதலில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்தான். மழை இல்லாதபோது மழை நீரை சேமிக்க ஆறுகளின் அருகே சிறு நீர் நிலைகளை ஏற்படுத்தினான். இதுவே ஏரியின் தொடக்கக் காலம். அடுத்ததாக ஆற்றில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டுவர ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக சவுக்கு, மூங்கில் கம்புகளை அடித்தார்கள். அவற்றின் இடையே கோரை மற்றும் நாணல் புற்களைக் கொண்டு அடைத்து, களிமண் பூசி சுவர்போல தடுப்பு ஏற்படுத்தினார்கள். இதன் பெயர் கொரம்பு. கொரம்பில் நீர் நிரம்பியபோது கால்வாய்கள் அமைத்து உயரமான இடங்களில் இருந்த குளங்களுக்கு நீரைப் பாய்ச்சினார்கள். இதுவே பிற்காலத்தில் அணைகள் அமைய அடிப்படையாக அமைந்தது.
பழந்தமிழர் நீர் நிலைகளை இலஞ்சி, வாவி, நளினி, கயம், கண்மாய், ஏரி, கோட்டகம், கேணி, குளம், மலங்கன், கிடங்கு, குட்டம், வட்டம், தடாகம், மடு, ஓடை, பொய்கை, சலந்தரம் என்று அழைத்தனர். அப்போது நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இதைத்தான் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார்,
‘நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண்தள்ளா தோரே’
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண்தள்ளா தோரே’
(புறநானூறு 18) என்று பாடினார். அதாவது, ‘எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கரை அமைத்து நீர் நிலைகள் உருவாக்கிய மன்னர்களே இந்த உலகில் தங்களது பெயரை நிலை நிறுத்திக்கொள்வார்கள்’ என்கிறார் குடபுலவியனார். அதேபோல 10 வயது முதல் 80 வயது வரை குடிமராமத்துப் பணி செய்வது கடமையாக கருதப்பட்டது. இப்படியாக நீர் நிலைகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் பழந்தமிழர் வாழ்வோடு ஒன்றியதாக இருந்தது.
நம் முன்னோர் ஏனோதானோவென்று ஏரிகளை வெட்டிவிடவில்லை. இன்றைய பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் சவால் விடுபவை அவை. பாண்டியன் மூன்றாம் ராஜசிம்மன் கட்டிய ராஜசிம்ம மங்கலம் ஏரி உட்பட, தமிழகத்தின் பாரம்பரிய ஏரிகளைக் கழுகுக் கண் கொண்டு பார்த்தால் அவை பிறை நிலவின் வடிவில் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, பழந்தமிழர் ஏரிகளை 8-ம் நாள் பிறை வடிவில் அமைத்தார்கள். ஏரிகள் இந்த வடிவத்தில் அமைவதால் கரையின் நீளம் குறைவாகவும், அதேசமயம் அதிக நீர்க் கொள்ளளவு கொண்டதாகவும் இருந்தன. இது சிக்கனமான வடிவமைப்பு முறை. இதைத்தான் சங்கப் புலவர் கபிலர்,
‘அறையும் பொறையும் மணந்த தனைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரிதன் பறம்பு நாடே’
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரிதன் பறம்பு நாடே’
என்று பாடினார்.
ஏரியை வடிவமைத்தப் பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் ‘மடை’. அந்த மடைகளை அமைக்க முதலில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதிர்ந்த பனை மரத்தை ‘வாய்ச்சு’ என்கிற கருவியால் வெட்டுவார்கள். மரம் வெட்டுப்படாமல் நெருப்புத் தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. அப்படியான மரங்களைத் தேர்வு செய்து, அதன் உள்தண்டை நீக்கிவிடுவார்கள். உறுதியான நீண்ட குழாய் தயார். இதனை ஏரிக் கரையின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பின்பு பாறை மற்றும் மரச் சட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.
வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருந்தார்கள். மடைகளைத் திறப்பது சாதாரண விஷயமல்ல; உயிரைப் பணயம் வைக்கும் சாகசப் பணி இது. வெள்ளக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும். கரை வெடிக்கக் காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊரே அழிந்துவிடும். வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கிவிடுவார்கள். அப்போது ஒரே ஒருவர் மட்டும் ஏரிக் கரைக்குச் செல்வார். கடல்போல கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். நீரில் மூழ்கி, மூச்சடக்கி, கரையின் அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம். அதேவேகத்தில் வெள்ளம் அதை திறப்பவரையும் இழுத்துச் செல்ல முற்படும். அதன் வேகத்தில் இருந்து தப்புவது மிகவும் சிரமம்.
மடையைத் திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக்கொண்டுதான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர். மாண்டுபோனவர் பலர். தியாகிகளான இவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளோ, கல்வெட்டுகளோ வரலாற்றில் எதுவுமில்லாமல் போனதுதான் சோகம். இவர்கள் ‘மடையர்கள்’என்று அழைக்கப்பட்டார்கள்.
மனதை தொட்டுச் சொல்லுங்கள், இனியும் யாரையாவது ‘மடையா’ என்று திட்டுவீர்கள் நீங்கள்?
(நீர் அடிக்கும்)
கடலூர் அழிவுக்கு காரணம் யார்?
Casa Grande Masseys - 2 & 3 BHK Apartments in Royapuram. Picturesque sea view. From 98.5L.casagrandemasseys.com/Royapuram

குறிஞ்சிப்பாடிக்கு அடுத்துள்ள பூதம்பாடி கிராமத்தில் சூழ்ந்துள்ள வெள்ளம். | படங்கள்.என்.முருகவேல்
வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் முதன்முதலாக ஏரிகளின் மீது கையை வைத்தது அரசாங்கம்தான்.
குடிசை மாற்று வாரியத்துக்காக, பேருந்து நிலையத்துக்காக, அரசு அலுவலக கட்டிடங்களுக்காக... என ஏராளமான ஏரிகளை அழித்தது. அந்தக் காலகட்டத்தில் அதைத் தவறென்று சுட்டிக் காட்ட சுற்றுச்சூழல் குறித்த விழிப் புணர்வு யாருக்கும் இல்லை.
கடந்த 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ போர்கள், வன்முறைகள், கொடூரங்கள் நடந்திருக் கின்றன. வாதாபி எரிந்தது. மதுரை எரிந்தது. உறையூர் எரிந்தது. சமணர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் தேவாலயங்களை போர்ச்சுக்கீசியர் அழித்தனர். போர்ச்சுக்கீ சியர்களின் தேவாலயங்களை ஆங்கி லேயர்கள் அழித்தனர்.
ஆனால், பெரியளவில் யாரும் நீர் நிலைகளின் மீது கையை வைக்கவில்லை. ஆனால், வரலாற்றில் யாரும் செய்யாத பாவத்தை நாம் செய்துவிட்டோம். நீங்காத கறையை அள்ளி அப்பிக்கொண்டோம். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பார்கள். ‘விதை நெல்லை விற்றவனின் இரவு விடி யாது’ என்பார்கள். நாம் தாயை பழித்து விட்டோம். விதை நெல்லை அழித்து விட்டோம். நம் பாவத்தை கழுவ எத்தனை ஏரிகளின் தண்ணீரைக் கொட்டி னாலும் போதாது.
நாம் செய்த பாவத்துக்கு கடலூர் மக்கள் அனுபவிக்கிறார்கள். 2011-ம் ஆண்டு வெள்ளத்தில் 21 பேர் இறந்தார்கள். இப்போது 32 பேர் பலியாகிவிட்டார்கள். சொல்லப் போனால் படுகொலைகள்தான் அவை. கடந்த காலங்களில் கடலூரில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள், உயிர்ப் பலிகள் அத்தனைக்கும் காரணம், தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள்தான். புவியியல் அமைப்பின்படி கடலூர் ஒரு வடிநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரின் கணிசமான அளவு அந்த வடிநிலம் வழியாகதான் கடலை அடைகிறது.
மலைகளில் இருந்து கற்பனைக் கெட்டாத வேகத்தில் சமவெளியை நோக்கி வரும் காட்டாற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக நமது முன் னோர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் குற்றாலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் நூற்றுக்கணக்கான சங்கிலித் தொடர் குளங்களையும் ஏரிகளையும் அமைத் தார்கள்.
அவை காட்டாற்றின் சீற்றத்தை தணித்தன. முதல் வேகத்தடை இது. பின்பு தமிழகம் முழுவதும் இருந்த சங்கிலித் தொடர்கள் ஏரிகள், குளங்கள் எல்லாம் அடுத்தடுத்த வெள்ளத் தடுப்புச் சாதனங்களாக (Flood moderator) செயல் பட்டன. இப்படியாக மலையடிவாரம் தொடங்கி வடிநிலம் வரையில் ஏரிகள், குளங்களை நிரப்பிய தண்ணீர், கடலூரில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நல்லப் பிள்ளையாக கடலைச் சென்று அடைந்தது.
ஆனால், நாம் அடிவாரம் தொடங்கி வடிநிலப் பகுதி வரை ஏராளமான ஏரிகளை, குளங் களை அழித்துவிட்டோம். தனது இருப் பிடங்களை எல்லாம் இழந்த வெள்ளத் துக்கு வேறுவழியில்லை, அது வேக மாக கடலூரை நோக்கிச் சீறிப் பாய் கிறது. நொந்து சாகிறார்கள் அந்த மக்கள்.
கடலூரில் இறந்தவர்கள் அனைவரும் ஏழைகள், வீடற்றவர்கள், நிலையான வாழ்வாதாரம் இல்லாதவர்கள். குழந்தைகள்கூட வெள்ளத்துக்கு இரையாகி விட்டதுதான் கொடுமை. அசந்து உறங் கிக்கொண்டிருந்த அந்தக் பிஞ்சுகளை வெள்ளம் அடித்துச் சென்றபோது அவர்கள் எப்படி கதறியிருப்பார்கள். யார் மீது தவறு?
அந்தக் குழந்தைகளின் குடும்பம் வசித்த இடம் பெரியக்காட்டுப்பாளையம் நீர் வழி புறம்போக்கு. உளுந்தூர் பேட்டை, சேந்தநாடு, திருவெண்ணை நல்லூர், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை ஆகியப் பகுதிகளின் வனங் களில் பெய்யும் மொத்த மழை நீரூம் சில்லோடை உள்ளிட்ட காட்டு ஓடைகளாக அந்த நீர் வழி புறம்போக்கு வழியாகதான் பண்ருட்டியில் இருக்கும் கெடிலம் ஆற்றுக்கு செல்லும். ஆயிர மாயிரம் ஆண்டுகளாக தண்ணீர் பயணித்த மரபு வழித்தடம் அது. ஆனால், அந்த வழித்தடம் முழுக்க ஆக்கிர மிக்கப்பட்டிருந்தது. அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்தக் குடும்பத் துக்கு உரிய தங்குமிடம் கொடுத்திருக்க வேண்டும். நீர் வழி புறம்போக்கின் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க வேண்டும். எத்தனை முறைதான் இயற் கையிடம் பாடம் கற்பது?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெரியளவில் சாலை வசதிகள் இல்லை. அப்போது கடலூர் துறைமுகத்துக்கு சரக்குகள் அனைத்தும் நீர்வழிப் பாதைகளில் படகுகள் மூலமாகதான் எடுத்துச் செல்லப்பட்டன. சேலத்தில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத் தாது, படகுகள் மூலம் கடலூர் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது வரலாறு. அந்தப் பெரும் படகுகள் பயணம் செய்த நீர் வழிப் பாதைகள் எல்லாம் இப்போது அழிந்துவிட்டன.
கடலூர் துறைமுகம் முதுநகர் அருகே இரு முகத்துவாரங்கள் இருக் கின்றன. ஒன்று, உப்பனாற்று முகத்து வாரம். மற்றொன்று, கெடிலம் ஆற்று முகத்துவாரம். கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 108 கடலோர கிராமங்களுக்கும் இந்த இரு முகத்துவாரங்கள்தான் வெள்ளப் போக்கியாக விளங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறையாவது அவற்றை தூர் வார வேண்டும். ஆனால், இன்று அந்த முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன. மக்கள் கோரிக்கை வைத்து ஓய்ந்து விட்டார்கள்.
தூர் வாரப்படாத அந்த முகத்துவாரங்களில் தண்ணீர் கடலுக்குள் நுழைய வழியில்லாமல் சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி ஊருக்குள் புகுந்துவிட்டது. இவை எல்லாம்தான் கடலூர் அழிவுக்குக் காரணம்.
இன்று தூர் வார துப்பில்லாமல் அலட்சியமாக இருக்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் உயிரை தியாகம் செய்து ஏரிகளை பராமரித்தார்கள் தெரியுமா? தெரிந்தால், இனிமேல் யாரையும் ‘மடையர்கள்’என்று திட்ட மாட்டீர்கள்!
நெய்வேலி காமராஜர் நகர் சாலையில் ஆறுபோல் ஓடும் மழைநீர்.
(நீர் அடிக்கும்)
Casa Grande Masseys - 2 & 3 BHK Apartments in Royapuram. Picturesque sea view. From 98.5L.casagrandemasseys.com/Royapuram

குறிஞ்சிப்பாடிக்கு அடுத்துள்ள பூதம்பாடி கிராமத்தில் சூழ்ந்துள்ள வெள்ளம். | படங்கள்.என்.முருகவேல்
வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் முதன்முதலாக ஏரிகளின் மீது கையை வைத்தது அரசாங்கம்தான்.
குடிசை மாற்று வாரியத்துக்காக, பேருந்து நிலையத்துக்காக, அரசு அலுவலக கட்டிடங்களுக்காக... என ஏராளமான ஏரிகளை அழித்தது. அந்தக் காலகட்டத்தில் அதைத் தவறென்று சுட்டிக் காட்ட சுற்றுச்சூழல் குறித்த விழிப் புணர்வு யாருக்கும் இல்லை.
கடந்த 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ போர்கள், வன்முறைகள், கொடூரங்கள் நடந்திருக் கின்றன. வாதாபி எரிந்தது. மதுரை எரிந்தது. உறையூர் எரிந்தது. சமணர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் தேவாலயங்களை போர்ச்சுக்கீசியர் அழித்தனர். போர்ச்சுக்கீ சியர்களின் தேவாலயங்களை ஆங்கி லேயர்கள் அழித்தனர்.
ஆனால், பெரியளவில் யாரும் நீர் நிலைகளின் மீது கையை வைக்கவில்லை. ஆனால், வரலாற்றில் யாரும் செய்யாத பாவத்தை நாம் செய்துவிட்டோம். நீங்காத கறையை அள்ளி அப்பிக்கொண்டோம். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பார்கள். ‘விதை நெல்லை விற்றவனின் இரவு விடி யாது’ என்பார்கள். நாம் தாயை பழித்து விட்டோம். விதை நெல்லை அழித்து விட்டோம். நம் பாவத்தை கழுவ எத்தனை ஏரிகளின் தண்ணீரைக் கொட்டி னாலும் போதாது.
நாம் செய்த பாவத்துக்கு கடலூர் மக்கள் அனுபவிக்கிறார்கள். 2011-ம் ஆண்டு வெள்ளத்தில் 21 பேர் இறந்தார்கள். இப்போது 32 பேர் பலியாகிவிட்டார்கள். சொல்லப் போனால் படுகொலைகள்தான் அவை. கடந்த காலங்களில் கடலூரில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள், உயிர்ப் பலிகள் அத்தனைக்கும் காரணம், தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள்தான். புவியியல் அமைப்பின்படி கடலூர் ஒரு வடிநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரின் கணிசமான அளவு அந்த வடிநிலம் வழியாகதான் கடலை அடைகிறது.
மலைகளில் இருந்து கற்பனைக் கெட்டாத வேகத்தில் சமவெளியை நோக்கி வரும் காட்டாற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக நமது முன் னோர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் குற்றாலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் நூற்றுக்கணக்கான சங்கிலித் தொடர் குளங்களையும் ஏரிகளையும் அமைத் தார்கள்.
அவை காட்டாற்றின் சீற்றத்தை தணித்தன. முதல் வேகத்தடை இது. பின்பு தமிழகம் முழுவதும் இருந்த சங்கிலித் தொடர்கள் ஏரிகள், குளங்கள் எல்லாம் அடுத்தடுத்த வெள்ளத் தடுப்புச் சாதனங்களாக (Flood moderator) செயல் பட்டன. இப்படியாக மலையடிவாரம் தொடங்கி வடிநிலம் வரையில் ஏரிகள், குளங்களை நிரப்பிய தண்ணீர், கடலூரில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நல்லப் பிள்ளையாக கடலைச் சென்று அடைந்தது.
ஆனால், நாம் அடிவாரம் தொடங்கி வடிநிலப் பகுதி வரை ஏராளமான ஏரிகளை, குளங் களை அழித்துவிட்டோம். தனது இருப் பிடங்களை எல்லாம் இழந்த வெள்ளத் துக்கு வேறுவழியில்லை, அது வேக மாக கடலூரை நோக்கிச் சீறிப் பாய் கிறது. நொந்து சாகிறார்கள் அந்த மக்கள்.
கடலூரில் இறந்தவர்கள் அனைவரும் ஏழைகள், வீடற்றவர்கள், நிலையான வாழ்வாதாரம் இல்லாதவர்கள். குழந்தைகள்கூட வெள்ளத்துக்கு இரையாகி விட்டதுதான் கொடுமை. அசந்து உறங் கிக்கொண்டிருந்த அந்தக் பிஞ்சுகளை வெள்ளம் அடித்துச் சென்றபோது அவர்கள் எப்படி கதறியிருப்பார்கள். யார் மீது தவறு?
அந்தக் குழந்தைகளின் குடும்பம் வசித்த இடம் பெரியக்காட்டுப்பாளையம் நீர் வழி புறம்போக்கு. உளுந்தூர் பேட்டை, சேந்தநாடு, திருவெண்ணை நல்லூர், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை ஆகியப் பகுதிகளின் வனங் களில் பெய்யும் மொத்த மழை நீரூம் சில்லோடை உள்ளிட்ட காட்டு ஓடைகளாக அந்த நீர் வழி புறம்போக்கு வழியாகதான் பண்ருட்டியில் இருக்கும் கெடிலம் ஆற்றுக்கு செல்லும். ஆயிர மாயிரம் ஆண்டுகளாக தண்ணீர் பயணித்த மரபு வழித்தடம் அது. ஆனால், அந்த வழித்தடம் முழுக்க ஆக்கிர மிக்கப்பட்டிருந்தது. அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்தக் குடும்பத் துக்கு உரிய தங்குமிடம் கொடுத்திருக்க வேண்டும். நீர் வழி புறம்போக்கின் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க வேண்டும். எத்தனை முறைதான் இயற் கையிடம் பாடம் கற்பது?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெரியளவில் சாலை வசதிகள் இல்லை. அப்போது கடலூர் துறைமுகத்துக்கு சரக்குகள் அனைத்தும் நீர்வழிப் பாதைகளில் படகுகள் மூலமாகதான் எடுத்துச் செல்லப்பட்டன. சேலத்தில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத் தாது, படகுகள் மூலம் கடலூர் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது வரலாறு. அந்தப் பெரும் படகுகள் பயணம் செய்த நீர் வழிப் பாதைகள் எல்லாம் இப்போது அழிந்துவிட்டன.
கடலூர் துறைமுகம் முதுநகர் அருகே இரு முகத்துவாரங்கள் இருக் கின்றன. ஒன்று, உப்பனாற்று முகத்து வாரம். மற்றொன்று, கெடிலம் ஆற்று முகத்துவாரம். கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 108 கடலோர கிராமங்களுக்கும் இந்த இரு முகத்துவாரங்கள்தான் வெள்ளப் போக்கியாக விளங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறையாவது அவற்றை தூர் வார வேண்டும். ஆனால், இன்று அந்த முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன. மக்கள் கோரிக்கை வைத்து ஓய்ந்து விட்டார்கள்.
தூர் வாரப்படாத அந்த முகத்துவாரங்களில் தண்ணீர் கடலுக்குள் நுழைய வழியில்லாமல் சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி ஊருக்குள் புகுந்துவிட்டது. இவை எல்லாம்தான் கடலூர் அழிவுக்குக் காரணம்.
இன்று தூர் வார துப்பில்லாமல் அலட்சியமாக இருக்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் உயிரை தியாகம் செய்து ஏரிகளை பராமரித்தார்கள் தெரியுமா? தெரிந்தால், இனிமேல் யாரையும் ‘மடையர்கள்’என்று திட்ட மாட்டீர்கள்!

நெய்வேலி காமராஜர் நகர் சாலையில் ஆறுபோல் ஓடும் மழைநீர்.
(நீர் அடிக்கும்)
சமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்?
Casa Grande Masseys - 2 & 3 BHK Apartments in Royapuram. Picturesque sea view. From 98.5L.casagrandemasseys.com/Royapuram

பாலாற்றுப் படுகையில் மணல் அள்ளும் ராட்சத இயந்திரங்கள்.

பாலாற்றுப் படுகையில் மணல் அள்ளும் ராட்சத இயந்திரங்கள்.
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கிடைக்காவிட்டால் சென்னையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது. கர்நாடகாவின் காவிரி நீர் கிடைக்கவில்லை என்றால் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். பெரியாறு, பவானி, சிறுவாணி இந்த ஆறுகளின் குரல்வளை எல்லாம் கேரளாவின் கையில் இருக்கிறது. கேரளா அந்தக் குரல்வளையைக் கொஞ்சம் நசுக்கினால் போதும், நமது கொங்கு மண்டலமும் காலி; தென் மாவட்டங்களும் காலி. இப்படி ஒரு மாநிலத்தின் பெரும் பகுதியே தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை. குழாயடிச் சண்டைப் போடாத குறையாகத்தான் அங்கெல்லாம் தண்ணீரைப் பெற்று வருகிறோம். இதில் நமது கட்சித் தலைவர்கள் செய்யும் அரசியல் இருக்கிறதே... சினிமா நடிகர்களே தோற்றுவிடுவார்கள். சரி, இப்படி தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்கும் அண்டை மாநிலங்களின் மழை அளவைவிட நம் தமிழகத்தின் மழை அளவு அதிகம் என்கிற உண்மை தெரியுமா?
ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். உலக ஆண்டு சராசரி மழையளவு 840 மில்லி மீட்டர். இந்திய ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. கர்நாடகம் 732 மி.மீ. ஆந்திரம் 908 மி.மீ. இப்போது தமிழகத்தின் ஆண்டு சராசரியைப் பார்ப்போம். ஜனவரி முதல் மே மாதம் வரை பொழியும் உபரி மழை 179 மி.மீ. ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவ மழை 307 மி.மீ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழை 439 மி.மீ. ஆக மொத்தம் 925 மி.மீ. ஆந்திர மாநிலத்தைவிட தமிழகத்தில் 17 மி.மீ மழையளவு அதிகம். கர்நாடகத்தைவிட 193 மி.மீ அதிகம்.
அதேசமயம் கர்நாடகம் கடந்த 1991-ம் ஆண்டில் 11.20 லட்சம் ஏக்கராக இருந்த தனது விவசாய பாசனப் பரப்பை இன்று 21.71 லட்சம் ஏக்கராக வளர்த்தெடுத்துள்ளது. ஆனால், தமிழகமோ 1971-ம் ஆண்டில் 28 லட்சம் ஏக்கராக இருந்த தனது பாசனப் பரப்பை 2014-ல் 21 லட்சம் ஏக்கராக அழித்துக்கொண்டது. அதிகம் மழை பெறும் நமது மாநிலம் 7 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை இழந்துள்ளது. குறைந்த மழை பெறும் கர்நாடகம் 10.51 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தைப் போல 2 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய நீர் கட்டமைப்புகள் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், அவை எல்லாம் பிற்காலத்தில் விழித்துக்கொண்டன. சிறப்பாக நீர் மேலாண்மை செய்கின்றன. (ஆந்திராவும் கர்நாடகாவும் செய்துவரும் சிறப்பான நீர் மேலாண்மை மற்றும் பாசனத் திட்டங்கள் குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்)
இன்னொரு உதாரணம்: கோதாவரி, கிருஷ்ணா போன்ற மிகப் பெரிய நதிகள் கொண்ட ஆந்திராவில் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கிறார்கள். பெரியாறு உட்பட 44 ஆறுகள் கரை புரண்டோடும் கேரளாவிலும் அப்படியே. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கே ஓடும் பாலாறு, தென்பெண்ணை, வைகை இவை எல்லாம் வானம் பார்த்த சிறிய ஆறுகள்தான். ஆனால், இங்கெல்லாம் அரசாங்கமே ராட்சத இயந்திரங்களின் மூலம் மணல் அள்ளுவதை என்னவென்று சொல்ல? நம் தாய் வயிற்றைக் குத்திக் கிழித்து ரத்தம் குடிக்கிறோம் நாம். கர்நாடகாவும் ஆந்திரமும் முன்னோக்கிச் செல்கின்றன. நாம் மட்டும் அதள பாதாளத்துக்குச் செல்கிறோம். இந்தக் கொடுமையை எங்கேச் சொல்லி முட்டிக்கொள்வது?
பாலாற்றுப் படுகையில் மணல் அள்ளிச் செல்லும் லாரிகள்.
எல்லாவற்றுக்கும் காரணம், நாம் இயற்கையை மதிக்கவில்லை. நம்மைத் தவிர வேறு எதையுமே ஓர் உயிராக நாம் பாவிப்பதே இல்லை. மண்ணின் மீது பேராசை; வனத்தின் மீது பேராசை; வன உயிர்களின் மீது பேராசை; மலையின் மீது பேராசை; நீர் நிலைகளின் மீது பேராசை… எல்லாவற்றையும் அசுர வெறிக் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறோம். இது இயற்கையின் மீதான அழிவு மட்டுமல்ல; நம் தலையின் மீது நாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இதன் பெயர் சமூகத் தற்கொலை.
தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவைத் தவிர, 3,000 கோயில் குளங்கள், 5,000 ஊருணிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டம்! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம். ஏன், காவிரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் 249.60 டி.எம்.சியை விடவும் அதிகம். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின் அருமை!
ஏரிகளை மட்டுமே ஒழுங்காகப் பராமரித்திருந்தாலே நாம் விவசாயத்துக்காக ஆறுகளையும் அணைகளையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
சுழலியலாளர்கள் ஏரியைப் ‘பூமியின் கண்’ என்று குறிப்பிடுகிறார்கள். நாம் அந்தக் கண்ணில் கழிவுகளைக் கொட்டி குருடாக்கி வருகிறோம். மொத்தம் உள்ள 39,202 ஏரிகளில் இன்று சுமார் 5,000 முதல் 6,000 ஏரிகளை காணவில்லை. கோவையிலும் மதுரையிலும் கடல் போல் விரிந்த ஏரிகள் எல்லாம் சாக்கடையாகத் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக துர்நாற்றம் அடிக்கின்றன. மறைந்த கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதி, எஸ்.எஸ்.ஆர் நடித்த ‘ஏரிக்கரை மீது போறவளே பொன்மயிலே...’ பாடல் காட்சி சேலம் பனமரத்துப் பட்டி ஏரியில் படமாக்கப்பட்டபோது, அந்த ஏரி 2,700 ஏக்கர் பரப்பில் விரிந்து கடல்போலத் தண்ணீர் தளும்பியதாம். இப்போது ஒரு வாரமாக சேலத்தில் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், பனமரத்துப்பட்டி ஏரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை. ஏரி முழுவதும் கருவேல முட்செடிகள் நிறைந்து நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51- ‘ஏ’ ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாக 10 ஷரத்துக்களை வகுத்துள்ளது. அதில் 7-வது ஷரத்து என்ன சொல்கிறது தெரியுமா?
(நீர் அடிக்கும்)
*
ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கிடைக்காவிட்டால் சென்னையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது. கர்நாடகாவின் காவிரி நீர் கிடைக்கவில்லை என்றால் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். பெரியாறு, பவானி, சிறுவாணி இந்த ஆறுகளின் குரல்வளை எல்லாம் கேரளாவின் கையில் இருக்கிறது. கேரளா அந்தக் குரல்வளையைக் கொஞ்சம் நசுக்கினால் போதும், நமது கொங்கு மண்டலமும் காலி; தென் மாவட்டங்களும் காலி. இப்படி ஒரு மாநிலத்தின் பெரும் பகுதியே தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை. குழாயடிச் சண்டைப் போடாத குறையாகத்தான் அங்கெல்லாம் தண்ணீரைப் பெற்று வருகிறோம். இதில் நமது கட்சித் தலைவர்கள் செய்யும் அரசியல் இருக்கிறதே... சினிமா நடிகர்களே தோற்றுவிடுவார்கள். சரி, இப்படி தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்கும் அண்டை மாநிலங்களின் மழை அளவைவிட நம் தமிழகத்தின் மழை அளவு அதிகம் என்கிற உண்மை தெரியுமா?
ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். உலக ஆண்டு சராசரி மழையளவு 840 மில்லி மீட்டர். இந்திய ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. கர்நாடகம் 732 மி.மீ. ஆந்திரம் 908 மி.மீ. இப்போது தமிழகத்தின் ஆண்டு சராசரியைப் பார்ப்போம். ஜனவரி முதல் மே மாதம் வரை பொழியும் உபரி மழை 179 மி.மீ. ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவ மழை 307 மி.மீ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழை 439 மி.மீ. ஆக மொத்தம் 925 மி.மீ. ஆந்திர மாநிலத்தைவிட தமிழகத்தில் 17 மி.மீ மழையளவு அதிகம். கர்நாடகத்தைவிட 193 மி.மீ அதிகம்.
அதேசமயம் கர்நாடகம் கடந்த 1991-ம் ஆண்டில் 11.20 லட்சம் ஏக்கராக இருந்த தனது விவசாய பாசனப் பரப்பை இன்று 21.71 லட்சம் ஏக்கராக வளர்த்தெடுத்துள்ளது. ஆனால், தமிழகமோ 1971-ம் ஆண்டில் 28 லட்சம் ஏக்கராக இருந்த தனது பாசனப் பரப்பை 2014-ல் 21 லட்சம் ஏக்கராக அழித்துக்கொண்டது. அதிகம் மழை பெறும் நமது மாநிலம் 7 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை இழந்துள்ளது. குறைந்த மழை பெறும் கர்நாடகம் 10.51 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தைப் போல 2 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய நீர் கட்டமைப்புகள் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், அவை எல்லாம் பிற்காலத்தில் விழித்துக்கொண்டன. சிறப்பாக நீர் மேலாண்மை செய்கின்றன. (ஆந்திராவும் கர்நாடகாவும் செய்துவரும் சிறப்பான நீர் மேலாண்மை மற்றும் பாசனத் திட்டங்கள் குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்)
இன்னொரு உதாரணம்: கோதாவரி, கிருஷ்ணா போன்ற மிகப் பெரிய நதிகள் கொண்ட ஆந்திராவில் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கிறார்கள். பெரியாறு உட்பட 44 ஆறுகள் கரை புரண்டோடும் கேரளாவிலும் அப்படியே. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கே ஓடும் பாலாறு, தென்பெண்ணை, வைகை இவை எல்லாம் வானம் பார்த்த சிறிய ஆறுகள்தான். ஆனால், இங்கெல்லாம் அரசாங்கமே ராட்சத இயந்திரங்களின் மூலம் மணல் அள்ளுவதை என்னவென்று சொல்ல? நம் தாய் வயிற்றைக் குத்திக் கிழித்து ரத்தம் குடிக்கிறோம் நாம். கர்நாடகாவும் ஆந்திரமும் முன்னோக்கிச் செல்கின்றன. நாம் மட்டும் அதள பாதாளத்துக்குச் செல்கிறோம். இந்தக் கொடுமையை எங்கேச் சொல்லி முட்டிக்கொள்வது?

பாலாற்றுப் படுகையில் மணல் அள்ளிச் செல்லும் லாரிகள்.
எல்லாவற்றுக்கும் காரணம், நாம் இயற்கையை மதிக்கவில்லை. நம்மைத் தவிர வேறு எதையுமே ஓர் உயிராக நாம் பாவிப்பதே இல்லை. மண்ணின் மீது பேராசை; வனத்தின் மீது பேராசை; வன உயிர்களின் மீது பேராசை; மலையின் மீது பேராசை; நீர் நிலைகளின் மீது பேராசை… எல்லாவற்றையும் அசுர வெறிக் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறோம். இது இயற்கையின் மீதான அழிவு மட்டுமல்ல; நம் தலையின் மீது நாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இதன் பெயர் சமூகத் தற்கொலை.
தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவைத் தவிர, 3,000 கோயில் குளங்கள், 5,000 ஊருணிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டம்! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம். ஏன், காவிரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் 249.60 டி.எம்.சியை விடவும் அதிகம். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின் அருமை!
ஏரிகளை மட்டுமே ஒழுங்காகப் பராமரித்திருந்தாலே நாம் விவசாயத்துக்காக ஆறுகளையும் அணைகளையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
சுழலியலாளர்கள் ஏரியைப் ‘பூமியின் கண்’ என்று குறிப்பிடுகிறார்கள். நாம் அந்தக் கண்ணில் கழிவுகளைக் கொட்டி குருடாக்கி வருகிறோம். மொத்தம் உள்ள 39,202 ஏரிகளில் இன்று சுமார் 5,000 முதல் 6,000 ஏரிகளை காணவில்லை. கோவையிலும் மதுரையிலும் கடல் போல் விரிந்த ஏரிகள் எல்லாம் சாக்கடையாகத் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக துர்நாற்றம் அடிக்கின்றன. மறைந்த கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதி, எஸ்.எஸ்.ஆர் நடித்த ‘ஏரிக்கரை மீது போறவளே பொன்மயிலே...’ பாடல் காட்சி சேலம் பனமரத்துப் பட்டி ஏரியில் படமாக்கப்பட்டபோது, அந்த ஏரி 2,700 ஏக்கர் பரப்பில் விரிந்து கடல்போலத் தண்ணீர் தளும்பியதாம். இப்போது ஒரு வாரமாக சேலத்தில் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், பனமரத்துப்பட்டி ஏரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை. ஏரி முழுவதும் கருவேல முட்செடிகள் நிறைந்து நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51- ‘ஏ’ ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாக 10 ஷரத்துக்களை வகுத்துள்ளது. அதில் 7-வது ஷரத்து என்ன சொல்கிறது தெரியுமா?
(நீர் அடிக்கும்)
நன்றியை மறந்த நவீன சமூகம்!
Casa Grande Masseys - 2 & 3 BHK Apartments in Royapuram. Picturesque sea view. From 98.5L.casagrandemasseys.com/Royapuram

புல்வெட்டிக்குளம்
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு
*
ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு மனத்திரையில் தமிழகத்தின் வரைபடத்தை ஒரு பாயைப் போல விரித்துப் போடுங்கள். ஒருபக்கம் பச்சைப் பசேல் என மேற்குத் தொடர்ச்சி மலைகள். எதிர்ப்பக்கம் 1,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு மிக நீண்ட கடற்கரை. இடையே அகண்ட சமவெளி. சமவெளியில் இடையூறாக பெரிய மலைகள் எதுவுமில்லை. மேற்குப் பக்க மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர், சமவெளியில் தடையின்றி ஓடி கிழக்குப் பக்கம் இருக்கும் கடலில் சென்று கலக்கிறது. அருகில் உள்ள ஆந்திரா, கர்நாடகாவில் இப்படியான அகண்ட சமவெளி அமைப்பைப் பார்க்கவே முடியாது.
ஆனாலும், அறிவியல்பூர்வமாக தமிழகம் ஒரு வறட்சிப் பிரதேசம்! நமது புவியியல் அமைப்பு அப்படி. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, விந்திய மலைத் தொடர் இவற்றுக்கு நடுவே முக்கோண வடிவில் இருக்கும் பகுதி தக்காண பீடபூமி(Deccan plateau). இதன் தெற்கே இருக்கிறது தமிழகம். அதன்படி தமிழகம் ஒரு மழை மறைவுப் பிரதேசம். ஏன் என்று பார்ப்போம்.
ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நாடு முழுவதும் தென்மேற்குப் பருவ மழை சீராக பெய்கிறது. ஆனால், தமிழகம் மட்டும் விதிவிலக்கு. சொட்டு மழைப் பெய்யாது. வெக் கையில் வெந்து சுண்ணாம்பாகிப்போவோம். மேற்குத் தொடர்ச்சி மலை உயரமாக இருப்ப தால் அது தென்மேற்குப் பருவக் காற்று மூலம் தமிழகத்துக்கு வரும் ஈரப் பதத்தை தடுத்துவிடுகிறது. இதனால், தமிழகத்துக்கு தென் மேற்குப் பருவ மழை குறைவு (307 மி. மீட்டர்). நமக்குப் பிரதானமாக கிடைப்பது அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழைதான் (439 மி.மீட்டர்).
ஆனால், தென் மேற்குப் பருவ மழையைப் போன்ற இயல்பை கொண்டதல்ல வடகிழக்குப் பருவ மழை. முரட்டுப் பிள்ளை அது. அழிச் சாட்டியம் பிடிக்கும். நம்பவே முடியாது. பெய்தால் வானமே வெடித்ததுபோல கொட்டித் தீர்க்கும். பொய்த்தால் பூமியே வெடித்ததுபோல பாளம் பாளமாகப் பிளக்கும். நமது வரமும் அதுதான்; துயரமும் அதுதான்! ஆனால், அதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை. இந்த அறிவியல் உண்மையை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். இயற்கையின் இயல்புக்கு ஏற்ப நீர் மேலாண்மை செய்தால்தான் பிழைக்க முடியும் என்று அறிந்து வைத்திருந்தார்கள். எனவேதான், அவர்கள் அணைக்கட்டு காலத்துக்கும் முன்னதாகவே ஏரியின் தொழில்நுட்பத்தில் தேர்ந்திருந்தார்கள். ஏராளமான ஏரிகளையும் குளங்களையும் வெட்டி னார்கள். வரத்துக் கால்வாய், வடி கால்வாய், பாசன வாய்க்கால், கலுங்கு, மடை, மறுகால் ஓடை என விதவிதமான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தார்கள். வீட்டுக்கு ஒருவர் என வரிசை வைத்து அவற்றை தினசரி பராமரித்தார்கள். உண்மையில், தமிழகத்தின் பாரம்பரிய பாசனம் என்றால் அது ஏரிப் பாசனம்தான்.
பழம் பெருமை பேசவில்லை. ஆதாரங்களுடன் கூடிய உண்மை இவை. கடந்த காலங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் மதுரையில் மட்டும் 50 சங்க கால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றைக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் என்று மூன்றடுக்கு குளங்கள் இருக்கின்றன. உண்மையில் இது ஒரே கண்மாய்தான். நம் முன்னோர்கள் ஏரியின் குறுக்கே கரைகள் அமைத்து அதனை மூன்றாகப் பிரித்தார்கள். ஒவ்வொரு அடுக்கையும் மேலிருந்து கீழாக ஒன்றைவிட ஒன்று உயரம் குறைவாக அமைத் தார்கள். பாசனம் பெறும் நிலங்களின் மட்டங் களுக்கு ஏற்ப குளங்களின் உயரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் எல்லாம்கூட அதன் அருகில் நெருங்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் அருகில் ஒரு முதுமக்கள் தாழி கிடைத்தது. அதை வைத்து குளத்தை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணர்கள், இவை 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் பொக்லை னும் புல்டோசரும் கொண்டா இப்படியொரு நுட்பமான ஏரியை உருவாக்கினார்கள்? வெறும் கடப்பாரையையும் மண்வெட்டியையும் கொண்டு இவ்வளவு பெரிய ஏரியை உருவாக்க அவர்கள் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? வெட்டி முடிக்க எத்தனை காலம் ஆகியிருக்கும்? எத்தனை பேர் உழைத்திருப்பார்கள்? எத்தனை பேர் உயிரிழந் திருப்பார்கள்? எந்த அளவுக்கு தொலைநோக்குப் பார்வையும் தியாக உள்ளமும் இருந்தால் எதிர்கால தலைமுறையினருக்காக இப்படி ஓர் ஏரியை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள்?
ஆனால், நாம் என்ன செய்தோம்? முன் னோருக்கு நன்றி மறந்தவர்களானோம். வரும் தலைமுறையினருக்கு துரோகம் செய்தோம். முன்னோர்களின் உழைப்பை எல்லாம் உருத் தெரியாமல் அழித்துவிட்டோம். அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ந்த பொக்கிஷங்களை எல்லாம் பொக்லைன் கொண்டு இடித்துத் தள்ளி கான்கிரீட் கட்டிடங்களாக்கிவிட்டோம். உலக அதிச யங்களிலும் யுனெஸ்கோவின் புராதன சின்னங்க ளிலும் பதிக்க வேண்டிய வரலாற்று அதிசயங் களை எல்லாம் வெளியுலகுக்கே தெரியவிடாமல், ‘சென்னைக்கு மிக அருகில்’, ‘திருச்சிக்கு மிக அருகில்’, ‘மதுரைக்கு மிக அருகில்…’ என்று கூறு போட்டு விற்றுவிட்டோம். இப்போது வெள்ளத் திலும் வறட்சியிலும் தவித்து நிற்கிறோம். தவறு யார் மீது?
சென்னை - போரூர் ஏரியின் உண்மையான பரப்பளவு 800 ஏக்கர். 29 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஏரியின் பெரும் பகுதி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. ஏரியைத் தானம் செய்ய அரசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அதன் நீட்சியாக தொடர் ஆக்கிரமிப்பு களால் அந்த ஏரி, இன்று வெறும் 330 ஏக்கராக சுருங்கி நிற்கிறது.
சேலம் பேருந்து நிலையம், காந்தி விளையாட்டு மைதானம், விழுப்புரம் பேருந்து நிலையம், நீதிமன்றம், அரசு மருத்துவக் கல்லூரி, மதுரை உயர் நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர்... இவை எல்லாம் ஏரியை அழித்து எழுப்பட்டவைதானே. சென்னையில் 36 ஏரிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. சென்னைப் புறநகரில் தற்போது இருக்கும் 15 ஏரிகளின் மொத்தப் பரப்பளவான 2,416.51 ஹெக்டேரில் 589.2 ஹெக்டேர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 37 கண்மாய்களில் 30 கண்மாய்களின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. காலம் காலமாக ஏரிகளைப் பராமரிக்க நம் முன்னோர்கள் செய்து வந்த குடிமராமத்துப் பணியை இன்று அறிவார் யாருமில்லை.
மக்கள் பெருக்கத்தால் நகரமயமாக்கம் தவிர்க்க முடியாததுதான். ஆனால், அது திட்டமிடப் பட வேண்டியது; கட்டுப்படுத்தப்பட வேண்டியது. இரண்டையும் நாம் செய்யவில்லை. நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டு அண்டை மாநிலங்களிடம் சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சரி, அந்த அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு கிடைக்கும் மழை அளவு எவ்வளவு என்பது தெரியுமா?
(நீர் அடிக்கும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக