From Hindu
மாறுதல் வேண்டும் என்பதை பொதுவாக எல்லாரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மாற்றத்தை நிகழ்த்தும் முழு மனமும், துணிவும், திறனும் தான் எங்குமே பற்றாக்குறை. மாற்றத்தை மறுக்கும் மனோபாவத்திலிருந்து மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது இந்தப் புத்தகம்.
மாறுதல் வேண்டும் என்பதை பொதுவாக எல்லாரும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மாற்றத்தை நிகழ்த்தும் முழு மனமும், துணிவும், திறனும் தான் எங்குமே பற்றாக்குறை. மாற்றத்தை மறுக்கும் மனோபாவத்திலிருந்து மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது இந்தப் புத்தகம்.
சின்ன சைஸில் 94 பக்கங்கள் தான். இரண்டு எலி, இரண்டு மினி சைஸ் மனிதர்கள், இவர்கள் தேடும் பாலாடைக் கட்டி. இவ்வளவுதான் கதைக்களம். பாலாடைக் கட்டி தீருவதை கவனிக்காதபோது திடீரென்று தீர்ந்ததாக ஸ்தம்பித்து நிற்பதும் பின்னர் மன மாற்றத்திற்குப் பிறகு புது பாலாடைக் கட்டியை எதிர் நோக்குவதுமாய் செல்லும் சின்ன கதை. மனிதர்களைவிட எலிகள் விரைவில் மாற்றத்தை புரிந்து கொள்கின்றன. தான் கற்ற விஷயத்தை சுவரில் எழுதி வைக்கின்றன. அதை நாம் படித்து,” அட, ஆமாம்..!” என்று ஆச்சரியப்படுகிறோம்.
***********
சாரம்சமாக எலிகள் நமக்குச் சொல்பவை இவைகளைத் தாம்:
மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கும். என்னென்ன மாறுதல்கள் வரும் என கண்காணித்துக் கொண்டே இருங்கள். மாற்றத்தை காலதாமதமின்றி ஏற்றுக் கொள்வதுதான் சிறந்த வழி. மாற்றத்தை ரசியுங்கள். இந்த மாற்றமும் மாறும். மீண்டும் மீண்டும் மாறத் தயாராகுங்கள். மாற்றத்தை ரசித்தவாறு வாழுங்கள் என்றென்றும்!
பாலாடை என்பது குறியீடு. நம் வாழ்க்கையில் நாம் துரத்தும் வெற்றியும் சந்தோஷமும்தான் பாலாடைக் கட்டிகள். எதை சந்தோஷம் என்றும் வெற்றி என்றும் நினைத்து செய்து கொண்டிருக்கிறோமோ அவை மாறிக்கொண்டே வருகின்றன. திடீர் மாற்றம் வாழ்க்கையை நிலை குலைய வைக்கிறது. எது நமக்கு நடக்காது என்று நினைக்கிறோமோ அது நமக்கு நடக்கும்போது மனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
மறுப்பும், கோபமும், செயலற்று கிடப்பதும் நம் தடுப்பு நடவடிக்கைகளாய் கொள்கிறோம். அவை எந்தவிதத்திலும் பலன் அளிக்காது என்று காலம் புரிய வைக்கிறது. இந்த பரிவர்த்தனை தத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போது, இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனதுக்கு வருகிறது.
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை வணிகர்களுக்கு நிரம்ப தேவைப்படும். தேர்தல் முடிவு, சட்ட சீர்திருத்தம், போட்டியாளர் தந்திரம், சந்தை மாற்றம், இயற்கை கொந்தளிப்பு, முக்கிய பணியாளர் விலகல்.. என எந்த ஒரு சிறு மாறுதலும் கூட உங்கள் வியாபாரத்தை புரட்டிப் போடலாம். அடுத்த மாறுதலை எதிர் நோக்கி தேடி அணைத்து ஏற்றுக்கொள்ளுதல் காலத்தின் கட்டாயம்.
ஒவ்வொரு வியாபாரமும் ஒரு இக்கட்டில் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. அதனால்தான் ஒவ்வொரு பெரும் சந்தை தேக்கத்தின் போதும் பல புதிய தொழில்கள் பிறக்கின்றன.
உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்க்கையில் கடந்த 10 ஆண்டுகளில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன? அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்கலாம் என்று யோசியுங்கள். இதை யோசிக்க இப்புத்தகம் உதவும்.
“எங்கே வாழ்க்கை தொடங்கும்?
- அது எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை ; இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறி விடும்;
பயணம் முடிந்துவிடும்.
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்!”
அன்று இயல்பாக சொன்ன இந்த கண்ணதாசன் பாடலின் சாரத்தை இன்று வியாபார புதினமாகப் படிப்பதும் காலத்தின் மாற்றத்தில்தானோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக