அராபிய அறிஞரின் வியப்பு
எழுத்தாளரும் அறிவுஜீவியுமான யு.ஆர். அனந்தமூர்த்தி சொன்ன ஒரு தகவலில் இருக்கும் தர்க்கம் இதை மேலும் தெளிவுபடுத்தும். (அனந்தமூர்த்தி மீதும் கிரிராஜ் சிங்குக்கு வெறுப்புதான்!). அனந்தமூர்த்தியை ஒருமுறை சந்தித்த அராபிய அறிஞர் மிகுந்த வியப்போடு ஒரு விஷயத்தைச் சொன்னாராம். “எங்கள் சமூகத்தில் ஒரே ஒரு மொழிதான், ஒரேயொரு மதம்தான்; ஆனால் 22 நாடுகளாகப் பிரிந்து நிற்கிறோம். இந்தியாவிலோ டஜன் கணக்கில் மொழிகள்; எண்ணிலடங்கா மதங்கள். இன்னமும் ஒரே நாடாக, ஒற்றுமையாக இருக்கிறீர்கள், எப்படி?” என்று கேட்டாராம். நம்மிடையே உள்ள வேற்றுமைகள் அல்ல; நம்மிடையே இருக்கும் ஒற்றுமைகள்தான் இதற்குக் காரணம்.
தன்னம்பிக்கையுள்ள கலாச்சாரங்கள்
ஒரு முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த தலாய் லாமா பிறகு இப்படிக் கூறினாராம்: “அவர் எனக்குள்ளிருந்த முஸ்லிமை வெளிக்கொண்டு வந்தார். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவர் நடத்தும்விதம் உண்மைக்கு மாறாகவும் நியாயமற்றும் காட்டுமிராண்டித்தனமாகவும் இருந்தது” என்றாராம்.
கிரிராஜ் சிங் பேசுவதைக் கேட்டபோதும் எனக்குள்ளிருந்த கிறிஸ்தவர், முஸ்லிம், பவுத்தர் அனைவருமே, எனக்குள்ளிருந்த இந்துவைக் குறைக்காமல் வெளிப்பட்டனர். அதுதான் இந்தியாவின் சிறப்பு; எந்த இந்துத்துவப் பொறாமையும் இதை அழித்துவிட முடியாது.
********
இந்தியா என்பது ஒருசீர்மைக்குக் கட்டுப்படாத பலவற்றின் கூட்டுக்கலவை.
பகவத் கீதை தொடர்பான போட்டியொன்றில் மும்பையைச் சேர்ந்த மரியம் ஆசிஃப் சித்திகி என்ற 12 வயதுப் பெண் முதல் பரிசை வென்றிருக்கிறார் என்ற செய்தியைப் படித்தபோதே இதயம் பூரித்துப்போனது. பகவத் கீதையை அவர்கள் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள், அதில் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான போட்டி அது. அந்தப் பெண் முஸ்லிம் என்பதால் மட்டுமல்ல, எல்லா மதங்கள் மீதும் நம்பிக்கைகள் மீதும் அந்தப் பெண் நல்ல மதிப்பு வைத்திருக்கிறாள் என்பதை அறிந்தபோது நெஞ்சம் பெருமிதத்தால் விம்மித் தணிந்தது.
இந்தச் செய்தி, சமீபத்தில் கிரிராஜ் சிங் என்ற மத்திய அமைச்சர், சோனியா காந்தி தொடர்பாக சர்ச்சைக்கிடமாகவும் நிற அடிப்படையிலும் பேசிய அபத்தமான பேச்சுக்கு உற்ற மாற்றாகத் திகழ்கிறது. மரியம் சித்திகிக்கும் கிரிராஜுக்கும் இடையிலான வேறுபாடு ஆழமானது. ஒருவர், அந்த வேறுபாட்டைக் கண்ணியமாக ஆராதித்துக் கொண்டாடுகிறார், இன்னொருவர், அதையே கேவலமாகக் கருதி மட்டம் தட்டப் பார்க்கிறார். ஒருவருடைய பேச்சும் செயலும் புத்திசாதுரியத்தால் பொங்கி வழிகிறது. இன்னொருவருடையது மந்த புத்தியால் அழுது வடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக