11 மாநிலங்களில் பருத்தி கொள்முதல்
பருத்தி விலை குறைந்ததால் 11 மாநிலங்களில் மத்திய அரசு நிறுவனமான பருத்தி கார்ப்பரேஷன் (சிசிஐ) மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன்பாய் குந்தாரியா தெரி வித்தார்.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலையில் (எம்எஸ்பி) பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார். இப்பகுதியில் குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் குறைவான விலையில் விற்னையாகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க குறைந்தபட்ச ஆதார விலையில் அதாவது ஒரு குவிண்டால் ரூ. 4,050-க்கு வாங்கப்படுவதாக அவர் கூறினார். பருத்தி விளையும் 11 மாநிலங்களில் மொத்தம் 92 மாவட்டங்களில் 341 மையங்கள் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
கையிருப்பு, தேவை, உற்பத்தி இவற்றின் அடிப்படையில் பருத்தி விலை நிர்ணயிக்கப்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். ஏற்றுமதி சரிவு, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு காரணமாக குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் பருத்தி விலை சரிந்ததாக அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக