வெள்ளி, 28 நவம்பர், 2014
எங்கெல்ஸ்
நவீன கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கிய எங்கெல்ஸ் பிறந்தநாள் இன்று (நவம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
பிரஷ்யாவில் (தற்போது ஜெர்மனி) பிறந்தவர். அப்பாவின் விருப்பப்படி, வணிகத்தில் ஈடுபட்டார். நீச்சல், கத்திச் சண்டை, குதிரை சவாரி, வேட்டை யிலும் சிறந்து விளங்கினார்.
மொழிகளைக் கற்பதில் அபாரத் திறன் பெற்றிருந் தார். ‘எனக்கு 24 மொழிகள் தெரியும்’ என்று தன் சகோதரி யிடம் பெருமையடித்துக் கொள்வார். சிறுவனாக இருந்தபோதே மதங்கள், முதலாளித்துவம் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். தடைசெய்யப்பட்ட புத்தகங்களை தேடித் தேடிப் படித்து, புரட்சிகரக் கொள்கைகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார்.
மான்செஸ்டரில் உள்ள அப்பாவின் நூற்பு ஆலையில் வேலை செய்தபோது முதலாளித்துவத்தின் வரையற்ற அடக்குமுறையை நேரில் கண்டார்.
சிறிது காலம் ராணுவத்தில் இருந்தார். 1842-ல் ராணுவ வேலையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், மோசஸ் ஹெஸ் என்பவரை சந்தித்தார். அவர்தான் இவரை கம்யூனிச ஆதரவாளராக மாற்றியவர். ஜெர்மன்-பிரெஞ்ச் இயர் புக் இதழுக்காக விஞ்ஞான சோஷலிசத்தின் கோட்பாடுகள் குறித்து 2 கட்டுரைகளை 1844-ல் எழுதினார். அதை பாரீஸில் இருந்த கார்ல் மார்க்ஸ் எடிட் செய்தார். பிறகு கார்ல் மார்க்ஸுடன் நட்பு உருவானது.
எங்கெல்ஸ் மிகப் பெரிய அறிஞர், தத்துவ ஞானி. கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தவர். ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து வந்த இவர், பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்ட கார்ல் மார்க்ஸுக்கு உதவுவதற்காக மீண்டும் தந்தையின் நூற்பு ஆலையில் சேர்ந்தார். வியாபாரத்தைப் பெருக்கினார்.
அங்கிருந்தபடியே கார்ல் மார்க்ஸ் பெயரில் நியூயார்க் டிரிப்யூன் இதழில் எழுதி வந்தார். பிறகு குடும்ப நூற் பாலையில் தனக்கான பங்கை விற்றார். அதில் கணிசமான பணம் கிடைக்கவே, கார்ல் மார்க்ஸுடன் அதிக நேரம் செல விட்டார். மார்க்ஸின் வீட்டுக்கு அருகிலேயே தங்கினார்.
மார்க்ஸுடன் அவ்வப்போது உரையாடி பல புதிய கருத்துகளையும் அவருக்கு வழங்கினார்.
‘மதவாதம் மக்களின் வாழ்வை குலைக்கிறது. அது முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினருக்கு சாதகமானது. முதலாளித்துவம் தொழிலாளிகளுக்கு வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி அவர்களை பீதியில் வைத்திருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் பொருளாதார நலனையே சுற்றி வருகின்றன’ என்பது அவரது கருத்து.
கார்ல் மார்க்ஸுடன் இணைந்து பொது உடைமை அறிக்கையை தயாரித்தார். மார்க்ஸ் இறப்புக்குப் பிறகு ‘மூலதனம்’ (Das Capital) நூலை தொகுத்தார். நவீன கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக எங்கெல்ஸ் கருதப்படுகிறார்.
மார்க்ஸ் மற்றும் மார்க்ஸிய சித்தாந்தத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக செயல்பட்டார். மார்க்ஸின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த பிரெட்ரிக் எங்கெல்ஸ் 75-வது வயதில் காலமானார்.
Smoking is bad ...recent law 2014
புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான இந்தியாவின் போர் சற்று சூடுபிடித்திருக்கிறது. சிகரெட் டப்பாக்களின் மேற்பரப்பில் 85% அளவில் புகைக்கு எதிரான எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்று சமீபத்தில் இடப்பட்ட உத்தரவு நமக்கு நினைவிருக்கலாம். அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடைகளில் சிகரெட்டுகளை உதிரியாக விற்காமல், முழு டப்பாவாக மட்டுமே விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.
அத்துடன், புகையிலைப் பொருட்கள் வாங்குகிறவர்களின் குறைந்தபட்ச வயதை 18-லிருந்து 25-ஆக அதிகரிப்பதுகுறித்தும் அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டம்-2003-ன்படி பொதுஇடங்களில் புகைபிடிப்பவர்களுக்கு அதிக அளவு அபராதம் விதிப்பதும் இக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று.
இந்தப் பரிந்துரைகள் அமைச்சரவையின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்ததும் இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட உள்ளன. கடைகளில் சிகரெட் வாங்குபவர்களில் 75% உதிரி சிகரெட்டுகளாக வாங்குபவர்கள்தான். 10 சிகரெட்டுகள் இருக்கும் ஒரு பாக்கெட்டை ரூ. 100-க்கும் அதிகமான விலை கொடுத்து வாங்க அவர்கள் தயங்குவது நிச்சயம். இந்தப் பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால் சிகரெட் விற்பனையில் 10 முதல் 20 சதவீதம் வரை சரிவு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். முக்கியமாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிகரெட் வாங்குவதை இதனால் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
வரி வருமானத்தில் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடியை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுத்தந்தாலும், சுகாதாரப் பிரச்சினைகள் மூலம் ஏற்படும் இழப்புக்கு முன்னால் இந்த வருமானம் ஒரு பொருட்டே அல்ல. புகைபிடிப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால், இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். 2020-ம் ஆண்டு வாக்கில், ஆண்டுக்கு 15 லட்சம் பேர் புகைப்பழக்கத்தின் பாதிப்புகளால் உயிரிழக்கலாம் என்று சர்வதேசப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் என்ற அமைப்பு கணித்திருக்கிறது. மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளால், ஆண்டுக்கு 25 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதை ஒப்பிட்டு சிகரெட் புகைப்பதால் பாதிப்பு குறைவு என்று கருதிவிட முடியாது.
விஷம் விஷம்தான்! அதில் நல்ல விஷம் என்றோ கெட்ட விஷம் என்றோ வகைபிரிக்க முடியாது. தவிர, புகைப்பழக்கம் என்பது புகைபிடிப்பவரை மட்டுமல்லாது, அருகில் இருப்போரையும் கொல்லக்கூடியது. எனவே, புகைக்கு எதிரான போரை நடத்துவதற்கு வெறும் சட்டங்களும் உத்தரவுகளும் மட்டும் போதாது, உறுதியான நடவடிக்கைகளும் தேவை. பொதுஇடங்களில் புகைபிடிக்கத் தடை இருந்தும் அதை யாரும் பொருட்படுத்தாததுபோன்ற நிலைமை தற்போதைய சட்டங்களுக்கும் உத்தரவுகளுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.
2014-15-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சிகரெட்டுக்கான கலால் வரிவிதிப்பை 11 சதவீதத்திலிருந்து 72 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இந்தியாவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அதை அருண் ஜேட்லி குறிப்பிட்டார். புகைபிடிப்பவர்கள், இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டனையாகப் பார்க்காமல் எச்சரிக்கையாகக் கருதினாலே புகைக்கு எதிரான யுத்தத்தில் பாதி வெற்றி கிடைத்துவிடும்.
வியாழன், 27 நவம்பர், 2014
Gas subsidiary Vs Bank Account
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத் தில் இதுகுறித்து கூறும்போது, “சமையல் எரிவாயுவுக்கான மானிய தொகையை பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத் துவதன் மூலம் கள்ள சந்தையில் மானிய சிலிண்டர்கள் விற்பது தடுக் கப்படும். இந்த நேரடி மானிய திட்டம் முதல்கட்டமாக நாட்டின் 11 மாநிலங்களிலுள்ள 54 மாவட் டங்களில் இம்மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் இது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் முழு மானிய தொகையான ரூ.863 கொடுத்து முதலில் காஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு சிலிண்டருக்கான மானியத் தொகையான ரூ.461-ஐ நுகர்வோரின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இல்லாதவர்கள் வரும் ஜூன் மாதத்துக்குள் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ஜூலை மாதத்திலிருந்து மானிய விலையில் காஸ் சிலிண்டர் கிடைக்காது” என்றார்.
திட்டம் சாத்தியமா?
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 68 சதவீதம் என்றும், கிராமப்புறங் களில் 54 சதவீதம் என்றும் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் ரிசர்வ் வங்கியின் 2013-ம் ஆண்டு அறிக்கையில் கிராமப்புற பகுதிகளில் உள்ள 75 சதவீத விவசாய குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அனைவருக்கும் நேரடியாக காஸ் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தி யம்தானா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன், “காஸுக்கான நேரடி மானியம் பெறும் மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கிகளில்தான் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.
ஆனால் 6 லட்சம் கிராமங்கள் உள்ள நமது நாட்டில் 30 ஆயிரம் பொதுத்துறை வங்கிக் கிளைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வங்கிக் கணக்கு மூலம் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் மக்களுக்கு பயன்தருமா என்பது கேள்விக்குறியே” என்றார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் உ. வாசுகிக் கூறும்போது, “நேரடி மானிய திட்டம் பல சிக்கல்களை ஏற்படுத்தும். காஸுக்கான நேரடி மானிய திட்டம் தொடங்கப்பட்டால், வருங்காலத்தில் ரேஷன் பொருட் களுக்கான மானிய தொகையும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் நிலை ஏற்படும். இது பெண்களையும், குழந்தைகளையும் தான் பெரிதும் பாதிக்கும்” என்றார்.
வில்லிவாக்கத்தை சேர்ந்த நுகர்வோர் சரஸ்வதி கூறுகையில், “பல குடும்பங்களில் காஸ் இணைப்பும், வங்கிக் கணக்கும் கணவரின் பெயரில்தான் உள்ளன.
இந்நிலையில் குடிகார கணவன் உள்ள குடும்பங்களில் அரசு வழங்கும் மானியம் மதுபான கடைக்கு போகவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஏழைக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிக்கக் கூடும்” என்றார்.
Gas Subsidery
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத் தில் இதுகுறித்து கூறும்போது, “சமையல் எரிவாயுவுக்கான மானிய தொகையை பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத் துவதன் மூலம் கள்ள சந்தையில் மானிய சிலிண்டர்கள் விற்பது தடுக் கப்படும். இந்த நேரடி மானிய திட்டம் முதல்கட்டமாக நாட்டின் 11 மாநிலங்களிலுள்ள 54 மாவட் டங்களில் இம்மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் இது நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வரும் ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் முழு மானிய தொகையான ரூ.863 கொடுத்து முதலில் காஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு சிலிண்டருக்கான மானியத் தொகையான ரூ.461-ஐ நுகர்வோரின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இல்லாதவர்கள் வரும் ஜூன் மாதத்துக்குள் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ஜூலை மாதத்திலிருந்து மானிய விலையில் காஸ் சிலிண்டர் கிடைக்காது” என்றார்.
திட்டம் சாத்தியமா?
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 68 சதவீதம் என்றும், கிராமப்புறங் களில் 54 சதவீதம் என்றும் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் ரிசர்வ் வங்கியின் 2013-ம் ஆண்டு அறிக்கையில் கிராமப்புற பகுதிகளில் உள்ள 75 சதவீத விவசாய குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அனைவருக்கும் நேரடியாக காஸ் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தி யம்தானா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன், “காஸுக்கான நேரடி மானியம் பெறும் மக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கை பொதுத்துறை வங்கிகளில்தான் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.
ஆனால் 6 லட்சம் கிராமங்கள் உள்ள நமது நாட்டில் 30 ஆயிரம் பொதுத்துறை வங்கிக் கிளைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வங்கிக் கணக்கு மூலம் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் மக்களுக்கு பயன்தருமா என்பது கேள்விக்குறியே” என்றார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் உ. வாசுகிக் கூறும்போது, “நேரடி மானிய திட்டம் பல சிக்கல்களை ஏற்படுத்தும். காஸுக்கான நேரடி மானிய திட்டம் தொடங்கப்பட்டால், வருங்காலத்தில் ரேஷன் பொருட் களுக்கான மானிய தொகையும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் நிலை ஏற்படும். இது பெண்களையும், குழந்தைகளையும் தான் பெரிதும் பாதிக்கும்” என்றார்.
வில்லிவாக்கத்தை சேர்ந்த நுகர்வோர் சரஸ்வதி கூறுகையில், “பல குடும்பங்களில் காஸ் இணைப்பும், வங்கிக் கணக்கும் கணவரின் பெயரில்தான் உள்ளன.
இந்நிலையில் குடிகார கணவன் உள்ள குடும்பங்களில் அரசு வழங்கும் மானியம் மதுபான கடைக்கு போகவே அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஏழைக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிக்கக் கூடும்” என்றார்.
புதன், 26 நவம்பர், 2014
வி.பி. சிங்
வி.பி. சிங் நினைவு நாள்: 27.11.2008
விஷ்வநாத் பிரதாப் சிங். இன்றைக்குப் பலருக்கும் ஞாபக அடுக்குகளில் சிக்கி மறைந்தேவிட்ட தேசிய முன்னணியின் பிதாமகன். தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடி.
ராஜவம்சம்
உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் 1931 ஜூன் 25-ல் பிறந்தார் வி.பி.சிங். மாண்டா என்ற பிரதேசத்தை ஆண்ட தையா ராஜவம்சத்தைச் சேர்ந்தவர். அலகாபாத் மற்றும் புணே பல்கலைக் கழகங்களில் இயற்பியல் பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்தில் மாணவர் தலைவராகவும் இருந்திருக்கிறார். அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது ஆரம்பகாலக் கனவு. 1941-ல், மாண்டாவின் ராஜா பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜா பகதூர் என்றாலும், ஏழை களின் பகதூர் ஆகவே நடந்துகொண்டார். வினோபாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். அதற்காகத் தன் நிலங்களைத் தானமாகத் தந்தவர்.
இன்னொரு வரலாறு
மதச்சார்பின்மையின் பெயரால், பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸுடன் கை கோத்து கூட்டணி ஆட்சி நடத்திய ஞாபகம் நம் எல்லோருக்கும் இருக்கும். வி.பி. சிங் ஆட்சி இதற்கு நேர் எதிர். ஒருபக்கம் பாஜக, இன்னொருபக்கம் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சி நடத்தினார் சிங். கூட்டணி தர்மத்துக்குப் புது இலக்கணம் வகுத்தவர் சிங். தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெல்லாத சூழலிலும், திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளித்து, மாறனை அமைச்சர் ஆக்கியவர். வெற்றி, தோல்விக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய அரசில் எல்லாக் கூட்டாளிகளும் இடம்பெற வேண்டும் என்று நினைத்தவர். கருணாநிதிக்கும் சிங்குக்கும் கடைசி வரை நல்லுறவு இருந்தது.
யாருக்கும் அஞ்சாதவர்
1984-ல் இந்திரா படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வென்று ராஜீவ் பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் அஜிதாப் பச்சன் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கப் பிரிவின் கீழ் சோதனை நடத்த உத்தரவிட்டார். ராஜீவின் நெருங்கிய நண்பரான அமிதாப், இதுபற்றி அவரிடம் புகார் தெரிவித்ததால், நிதியமைச்சர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. எனினும், நேர்மையாளர் என்று புகழ்பெற்ற வி.பி. சிங்கை அமைச்சரவையிலிருந்து முழுவதுமாக நீக்கிவைக்க ராஜீவால் முடியவில்லை. 1987-ல் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் சிங்.
போஃபர்ஸ் ஊழலும் பிரதமர் பதவியும்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஸ்வீடனின் போஃபர்ஸ் மற்றும் பிரான்ஸின் சோஃப்மா பீரங்கிகளை வாங்க முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்திராவின் மறைவுக்குப் பின்னர் பிரதமரான ராஜீவ், போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க முடிவுசெய்தார். ஆனால், பீரங்கி பேரத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி மூலம் தெரியவந்தது. வெறும் சலசலப்போடு ஓய்ந்த இந்தப் பிரச்சினையை 1988-ல் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் கையில் எடுத்தபோது நாடே அதிர்ந்தது. என். ராம், சித்ரா சுப்ரமண்யம் இருவரும் மேற்கொண்ட புலனாய்வு இதழியல் ராஜீவ் ஆட்சியை ஆடவைத்தது. நேர்மையாளரான சிங், இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சரவையிலிருந்தும், பின்னர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஜனமோர்ச்சா கட்சியை ஆரம்பித்த சிங், ராஜீவுக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களையும் பிற கட்சிகளையும் திரட்டி, தேசிய முன்னணியைத் தொடங்கினார். இக்கூட்டணி, தேர்தலில் அதிக இடங்களைப் பெறவே சிங் பிரதமர் ஆனார்.
மண்டல் கமிஷனும் ரத யாத்திரையும்
ஒருபுறம் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், மறுபுறம் தன்னுடைய இந்துத்துவச் செயல்திட்டங்கள் மூலம் நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தது பாஜக. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, சிங் இடஒதுக்கீட்டை அமலாக்கியபோது, பாஜக நெருக்கடியை மேலும் அதிகரித்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அத்வானி கைதுசெய்யப்பட்டதும் இடஒதுக்கீடு விவகாரம் ஒன்றுசேர, சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டது பாஜக. ஓராண்டு பிரதமர் காலத்தை நிறைவுசெய்வதற்கு 16 நாட்கள் முன்னதாக சிங் பிரதமர் பதவியை இழந்தார்.
புற்றுநோயுடன் போர்
1996-ல் தேவகௌடா, பின்னர் குஜ்ரால் பிரதமர் பதவியில் அமர முக்கியப் பங்காற்றினார் சிங். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ல் ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். நடிகர் ராஜ் பப்பரைக் கட்சியின் தலைவராக நியமித்தார். 2006-ல் உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி பகுதியில் விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வசமான விவாகரத்தில், இடதுசாரித் தலைவர்களுடன் இணைந்து போராடிக் கைதானார். தொடர்ந்து பல்வேறு கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்றார். எனினும், புற்றுநோயுடன் சிறுநீரகக் கோளாறும் சேர்ந்துகொள்ள, 2008 நவம்பர் 27 அன்று காலமானார்.
தூரிகைக் கலைஞர்
போராட்ட குணம் கொண்ட வி.பி. சிங் சிறந்த ஓவியரும்கூட. தீவிர அரசியல் வாழ்க்கைக்கு இடையிலும், தூரிகையின் துணையுடன் அழகியலைத் தக்கவைத்துக்கொண்டவர். “காட்சிப் படிமத்தில் எனக்கு அபாரக் காதல் இருந்தது. எனது இளமைக்காலத்திலேயே கண்களால் அல்ல, இதயத்தால் பார்க்க வேண்டும் என்று உணர்ந்துகொண்டேன். ஏனெனில், உணர்வுதான் வாழ்க்கை” என்று சொன்ன சிங், “எனது ஓவியங்கள் என் உள்ளொளியின் பிரதிபலிப்புகள்” என்றும் சொன்னார்.
மறக்க முடியாத உரை
நல்ல பேச்சாளரும் கவிஞரும் நாடாளுமன்றவாதியுமான சிங், பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ்பெற்றது. ‘பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என்று அன்றைய தினம் அவர் ஆற்றிய உரை, இந்திய ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளுக்கு விழுமியங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் சொன்னது
Good Websites for Kids
http://interactivesites.weebly.com/alphabetical-order.html
https://www.brainpop.com/educators/community/bp-topic/
http://interactivesites.weebly.com/science.html
http://www.sciencemag.org/
http://www.ebizmba.com/articles/science-websites
http://www.ebizmba.com/articles/kids-websites
http://www.ebizmba.com/articles/reference-websites
https://archive.org/
http://www.ehow.com/ehow-tech/
https://www.brainpop.com/educators/community/bp-topic/
http://interactivesites.weebly.com/science.html
http://www.sciencemag.org/
http://www.ebizmba.com/articles/science-websites
http://www.ebizmba.com/articles/kids-websites
http://www.ebizmba.com/articles/reference-websites
https://archive.org/
http://www.ehow.com/ehow-tech/
ஆண்ட்ரூ கார்னகி
அமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவராகப் போற்றப்படும் தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னகி பிறந்தநாள் இன்று (நவம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பிறகு, தந்தி கொண்டு செல்லும் பணியாளரானார். சிறிது காலத்தில் தந்தி ஆபரேட்டராக உயர்ந்தார்.
பென்சில்வேனியாவில் ரயில் நிலையப் பணியில் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார். 3 ஆண்டுகளில் ரயில் நிலையக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
ரயில்வேயில் வேலை பார்க்கும்போதே முதலீடுகள் செய்தார். எண்ணெய் தொழிலில் நிறைய வருமானம் கிடைப்பதை அறிந்தார். 30-வது வயதில் ரயில்வே வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார்.
அடுத்த 10 ஆண்டுகள் முழு மூச்சாக எஃகுத் தொழிலில் ஈடுபட்டார். கார்னகி ஸ்டீல் கம்பெனி அமெரிக்காவின் எஃகு உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கியது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளை நிறுவினார். எஃகு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், வழிமுறைகளைப் பயன்படுத்தினார்.
கச்சாப் பொருட்கள், கப்பல்கள், பொருட்களைக் கொண்டுசெல்வதற்கான ரயில் பாதை, எரிபொருளுக்கான நிலக்கரி சுரங்கங்கள் என தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டார்.
எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். இதனால் தொழில் துறையில் ஆதிக்க சக்தியாகவும் அபரிமிதமாக சொத்துகளுக்கு அதிபதியாகவும் திகழ்ந்தார். இவரது நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் அமெரிக்காவின் பொருளாதாரமும் உயர்ந்தது. அமெரிக்காவை வடிவமைத் தவர்களில் ஒருவர் என்ற புகழ் மகுடத்தையும் சூடினார்.
தன் வாழ்வின் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஒரு அதிரடி முடிவை 65 வயதில் எடுத்தார். நிதித் துறை ஜாம்பவானும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டீல் கார்ப்பரேஷனின் அதிபருமான ஜே.பி.மார்கனிடம் தனது அனைத்து தொழில் நிறுவனங்களையும் விற்றார். அதில் 480 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
நியூயார்க் பொது நூலகத்துக்கு 5 மில்லியன் டாலர் வழங்கினார். இவரது ஆதரவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கினார்.
மாத்யூ அர்னால்ட், மார்க் ட்வைன், வில்லியம் கிளாட்ஸ்டோன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். நிறைய புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பணக்காரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, தங்கள் செல்வத்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்1900-ல் இவர் எழுதிய புத்தகம் ‘தி காஸ்பல் ஆஃப் வெல்த்’ என்ற பெயரில் வெளிவந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி உலகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த இவர் 83 வயதில் காலமானார்.
வர்கீஸ் குரியன்
இந்திய வெண்மைப் புரட்சி நாயகர் என போற்றப்படும் வர்கீஸ் குரியன் பிறந்தநாள் இன்று (நவம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
கேரளத்தில் பிறந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றார். டென்னிஸ், பேட்மின்டன், பாக்ஸிங், கிரிக்கெட்டில் திறமைசாலி.
தாய் வற்புறுத்தியதால் ராணுவ ஆசையைக் கைவிட்டு, டாடா இரும்பு எஃகு நிறுவனத்தில் (டிஸ்கோ) சேர்ந்தார். டாடா குழும இயக்குநரான தனது மாமா ஜான் மத்தாய் சிபாரிசு செய்தது தெரியவந்ததும் வேலையை ராஜினாமா செய்தார்.
பிரிட்டிஷ் அரசின் உதவித் தொகையுடன், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பால் பண்ணை பொறியியல் பட்டமும், உலோகவியல், அணுசக்தி இயற்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
ஸ்காலர்ஷிப் நிபந்தனைப்படி, குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ள அரசு பால் பண்ணையில் வேலை பார்த்தார். அங்கு தண்டச் சம்பளம் வாங்குவது பிடிக்காததால், தொடர்ந்து அரசை நச்சரித்து வேலையில் இருந்து விலகினார்.
அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் திரிபுவன்தாஸ் தலைமையில் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்தது. அவரது அழைப்பை ஏற்று, அந்த பால் பண்ணையை நவீனமயமாக்கம் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
கூட்டுறவு பால் உற்பத்தி தொழிற்கூடத்தை முழுமையாக மேம்படுத்தினார். ஏழை விவசாயிகளை முன்னேற்ற அவருக்குள் ஊற்றெடுத்த ஆர்வம் நிரந்தரமாக அவர்களுடன் இணைத்துவிட்டது. ஆனந்த் நகரம் இவரது கர்மபூமியானது.
கைரா மாவட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கம் படிப்படியாக வளர்ந்து நாடு முழுவதும் வியாபித்து வெண்மைப் புரட்சியை மலர வைத்தது. ‘அமுல்’ (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) பால் பண்ணை, உலகப்புகழ் பெற்றது. பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி கேட்டதற்கு இணங்க, அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாக வெற்றிபெற வைத்தார்.
‘லட்சக்கணக்கான ஏழை மக்களின் ஆரோக்கியம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களை இந்த சமுதாயத்தின் ஆக்கத்திறன் படைத்த அங்கத்தினர்களாக மாற்றத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வர்கீஸ் குரியன்’ என்று ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.
24 மாநிலங்களில் 200 பால் பண்ணைத் தொழிற்கூடங்கள், 12 ஆயிரம் கிராமக் கூட்டுறவு சங்கங்கள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தினமும் 2 லட்சம் கோடி லிட்டர்பால் சேகரிப்பு என கிளை விரித்துள்ள அமுலின் கடந்த ஆண்டு வருவாய் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல்.
எண்ணற்ற தடைகளைத் தகர்த்து பால் உற்பத்தியில் உலகின் முதன்மையான தேசமாக பாரதத்தை உயர்த்திய வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் 90-வது வயதில் 2012-ல் காலமானார்.
செவ்வாய், 25 நவம்பர், 2014
அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள்: 1949 நவம்பர் 26
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6635751.ece
அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள்: 1949 நவம்பர் 26
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துபூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று தலைசிறந்த இடதுசாரிச் சிந்தனையாளர் எம்.என். ராய் முதன்முதலாக 1934-ல் குரல் கொடுத்தார். அவருடைய யோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1935-ல் அதையே தீர்மானமாக நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த யோசனையை ஏற்றது. கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு தலைமையிலான தேசிய நிர்வாகக் கவுன்சில் இதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கின.
நிர்ணய சபை
அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல்சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தச் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததாலும், சில சமஸ்தானங்கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாலும் இந்தியப் பகுதிக்கான அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது. இவற்றுள் 207 உறுப்பினர்கள் பல்வேறு மாகாண சட்டசபைகளிலிருந்து பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுதேச சமஸ்தானங்கள் 93 பிரதிநிதிகளை அனுப்பின. 4 பிரதான மாகாணங்களிலிருந்து 4 பேர் சேர்க்கப்பட்டனர்.
13.2.1946-ல் இந்த சபைக்கான நோக்கங்களைத் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.1.1947-ல் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. 14.8.1947-ல் இந்த சபை கூடி, சட்டத்தை வகுக்கும் பணியைத் தொடங்கியது. 29.8.1947-ல் அரசியல் சட்டத்தை வகுக்கும் குழு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு முதலில் சச்சிதானந்த சின்ஹா தலைவரானார். பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையேற்றார். ஹரேந்திர குமார் முகர்ஜி என்ற வங்காள கிறிஸ்தவர் துணைத் தலைவரானார்.
இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.
தலைவர் அம்பேத்கர்
மாநிலங்களின் சட்டங்களுக்கான குழு, மத்திய அரசின் அதிகாரங் களையும் கடமைகளையும் வகுக்கும் குழு, மத்திய அரசின் அரசியல் சட்டங்களைத் தெரிவு செய்யும் குழு ஆகியவற்றுக்கு ஜவாஹர் லால் நேருவே தலைவராக இருந்தார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மை யினர், பழங்குடிகள் உரிமை, விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குத் தலைவர், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல். ஒட்டுமொத்தமான அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
இந்த அரசியல்சட்ட நிர்ணய சபை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்களுக்குப் பணி செய்தது. 11 தொடர்களாகக் கூட்டங்கள் நடந்தன. மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்களுக்கும் செலவிடப்பட்டது. மொத்தம் 7,635 திருத்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 2,473 விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடை முறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சட்டங்களின் சில அம்சங்களும் தேவைக்கேற்பச் சேர்க்கப்பட்டன.
சமத்துவ, மதச்சார்பற்ற…
இந்திய அரசியல் சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்ட வணைகள் இடம்பெற்றன. இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் இயற்றப்பட்டிருக்கிறது.
“இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப் பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம். 1976-ல் இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தின் முகப்பு வாசகத்தில் ‘சோஷலிச, மதச்சார்பற்ற’ என்ற 2 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. 26.11.1949-ல் அரசியல் சட்டம் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. சபையின் 284 உறுப்பினர்கள் 24.1.1950-ல் அதில் கையெழுத்திட்டார்கள்.
26.1.1950-ல் புதிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தேசிய சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிந்து, அதுவே நாடாளுமன்றமாக மாறியது. 1952-ல் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றம் உருவானது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம், நம்முடைய அரசியல் சட்டம்தான். மகத்தான மானுட ஆவணம் என்று அழைக்கப்படும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்ட’த்தின் உருவாக்கத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் போராட்டங்கள், தவிப்புகள், மகத்தான தலைவர்களின் கனவுகள், தியாகங்கள் எல்லாமே இருக்கின்றன. நள்ளிரவில் சுதந்திர நடையை ஆரம்பித்த நம் தேசத்துக்கு, வெளிச்சத்தைத் தந்தது நமது அரசியலமைப்புச் சட்டமே. அது ஏற்கப்பட்ட இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.

ஒட்டுமொத்த இந்தியாவா, இந்தி இந்தியாவா?
இந்தி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி எழுப்பிய குரல் மிகவும் முக்கியமானது: “ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் படிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் ஆங்கிலத்தை வெறுத்தோம்; இந்தியைப் படித்துத்தான் தீர வேண்டுமென்றால், படிக்கும் வயதைக் கடந்துவிட்ட என்னால் படிக்க முடியாது. நீங்கள் எனக்குத் தரும் நெருக்கடியாலும் படிக்க முடியாது. வலுவான மத்திய அரசு வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த மத்திய அரசு மக்களை அடிமைப்படுத்தி தேசிய மொழியைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தும் என்றும் அஞ்சுகிறோம். ஏற்கெனவே, தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஐக்கிய மாகாண நண்பர்கள் வலியுறுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் உதவாது. ஒட்டுமொத்த இந்தியா வேண்டுமா, இந்தி இந்தியா வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.”
பக்கம்பக்கமாய்…
இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபைக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள் 11 பெரிய தொகுப்புகளாக அச்சிடப்பட்டுள்ளன. இவற்றில் சில 1,000 பக்கங்களுக்கும் மேல் கொண்டவை.
தனி சோபை
காந்தி குல்லாய்களும் நேரு பாணி சட்டைகளும் நிறைந்த அவையில் 9 பெண்கள் இடம்பெற்றிருந்தது அவைக்குத் தனி சோபையைத் தந்தது என்று ஒரு தேசிய நாளிதழ் வர்ணித்திருந்தது. காலம்காலமாகப் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்திருந்த இந்திய சமூகத்தில் இது பெரும் புரட்சி!
காந்தியும் அம்பேத்கரும்

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கருடன் குழு உறுப்பினர்கள்.
மிகக் குறுகிய காலமே சட்ட அமைச்ச ராகப் பணியாற்றினாலும், சுதந்திர இந்தியாவின் சட்டப் பாதைக்கு மகத்தான வழிகாட்டியவர் அம்பேத்கர். சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் பார்வைக்குப் போனபோது அதில் அம்பேத்கர் பெயர் இல்லை. அப்போது “சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத் திருக்கிறது. காங்கிரஸுக்கு அல்ல” என்றார் காந்தி. சட்ட அமைச்சராக அம்பேத்கர் பெயர் இடம்பெற்றது.

இங்கிலீஷ் பேண்டு
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விமர்சகர்களும் உண்டு. கிராமம், நகரம் இரண்டில் இந்தியா எதை அடிப்படையாகக்கொள்வது என்ற கேள்வி அப்போது எழுந்தது. கிராமமா, நகரமா என்பதைவிட, தனிநபரை அடிப்படையாக வைத்தே சட்டங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட பிறகு, காந்தியத் தன்மையே இதில் இல்லையே என்று மகாவீர் தியாகி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். “என்னைப் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வீணை அல்லது சிதாரின் ஒலியைத்தான் எதிர்பார்த்தோம், முடிவில் இங்கிலீஷ் பேண்டு அல்லவா ஒலிக்கிறது?” என்று அங்கலாய்த்தார் கே. ஹனுமந்தையா.
படங்கள்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்.
America President Visit to India on Jan26
உலக வல்லரசு நாடுகளில் தலையாயது மட்டுமல்ல; நெடிய ஜனநாயகப் பாரம்பரியம் உள்ள நாடும் அமெரிக்காதான். பல்வேறு மொழி பேசும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் குடியேறி, புதிய நாட்டை உண்டாக்கி, அதன் மீது அளப்பரிய பற்றுவைத்து உருவாக்கிய உலக சமுதாயக் கலவைதான் அமெரிக்கா. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும் சர்வதேச உறவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது அமெரிக்கா. அணி சாரா இயக்கத்தின் முன்னோடி நாடாக இந்தியா இருந்தாலும், அன்றைய சோவியத் தலைவர்களையும் அதன் பிறகு ரஷ்ய நாட்டின் தலைவர்களையும் அமெரிக்கா தவிர்த்த பிற நாட்டுத் தலைவர்களையும் மட்டுமே நம் நாட்டு தேசிய தினங்களுக்கு முக்கிய விருந்தினர்களாக அழைத்திருக்கிறோம். பனிப்போர் காலகட்டத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா பக்கம் நாம் சாய்ந்து, இப்போது அதன் நெருக்கமான கூட்டாளிகளில் ஒருவராகிவிட்டோம்.
வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் ஈடுபட்ட முஜாஹிதீன்களையும் பிறகு தலிபான்களையும் அமெரிக்காதான் ஆதரித்தது. கார்கில் போரின்போதுகூட இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க அமெரிக்கா முன்வரவில்லை. இப்போது சக்கரம் சுற்றி எதிர்த் திசைக்கு வந்துவிட்டது.
இந்தியாவில் பிறந்த 30 லட்சம் பேர் இப்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்திய மாணவர்கள் ஆயிரக் கணக்கில் அங்கு படிக்கின்றனர். கடந்த 23 ஆண்டுகளில் அமெரிக்காவுடனான வர்த்தக உறவு 1,000% அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் ராணுவத் தேவையில் 50%-க்கு மேல் அமெரிக்காவிடமிருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மூலம்தான் பூர்த்திசெய்யப்படுகிறது. இவ்வளவு நெருக்கமான இரண்டு நாடுகள் வெளியுறவுத் துறையைப் பொறுத்தவரை குழப்பமான ஒரு உறவைக் கொண்டிருப்பது நல்லதல்ல. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் மேலும் நெருக்கமான இரு நாடுகள் இடையேயான உறவு ராணுவப் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்றவற்றிலும் பிணைப்பை உண்டாக்கியது. ஆனாலும், இதுவரை அமெரிக்க அதிபர் ஒருவரை நம்முடைய குடியரசு விழாவுக்கு அழைத்ததே இல்லை என்பது வியப்பைத் தருகிறது. இப்போது இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒபாமா சம்மதம் தெரிவித்திருப்பது நன்னம்பிக்கை அடிப்படையிலானது மட்டுமல்ல, புவியரசியல் சூழலில் சாமர்த்தியமானதும்கூட.
குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, மோடிக்கு ‘விசா’ தர மாட்டோம் என்று அறிவித்தது அமெரிக்கா. அந்த நாட்டுக்குச் சமீபத்தில் சென்ற மோடி, அமெரிக்கர்கள் இந்திய விமான நிலையங்களுக்கு வந்து அங்கேயே ‘விசா’ பெற்றுக்கொள்ளலாம் என்று தாராளமாக அனுமதித்திருப்பது புத்திசாலித்தனமான காய்நகர்த்தல். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் நெருக்கமாக்கும். ராஜதந்திரப் பேரங்களில், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒருசேர நெருக்கடி கொடுக்க இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கும். சர்வதேசக் களத்தை நோக்கிய மோடியின் பயணத்தில் அவருடைய அந்தஸ்தை மேலும் பல படி முன்னேற்றும்!
திங்கள், 24 நவம்பர், 2014
ஞாயிறு, 23 நவம்பர், 2014
விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன் - Global Warming
பூமி வெப்பமடைகிறது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன் பிறந்தநாள் இன்று (நவம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
மதுரையில் பிறந்தவர். அப்பா விற்பனையாளர் என்பதால் ஊர் ஊராகச் சென்றது குடும்பம். பெங்களூருவுக்குச் சென்று பள்ளியில் சேர்ந்தபோது, ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்படுவது அவருக்குப் புரியவில்லை. தானாகவே படித்து அறிந்துகொள்ளத் தொடங்கினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு, இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலைப் படிப்பு முடித்தார். 1970-ல் முனைவர் பட்ட ஆய்வுக்காக நியூயார்க் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். வெள்ளி, செவ்வாய் கிரகங்களின் சூழலில் பசுமை இல்ல (க்ரீன் ஹவுஸ்) விளைவு பற்றி ஆய்வு மேற்கொண்டார். பூமி வெப்பமடைகிறது. அதன் விளைவுகளை 2000-ம் ஆண்டுமுதல் உணரலாம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அவரது இந்த கட்டுரை நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் வந்தபோது, ‘நான்சென்ஸ்’ என்றனர் ஹார்வர்டு பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள்.
குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோ ஃப்ளூரோ கார்பன்களால்தான் பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமாதல் ஏற்படுகின்றன. திறன் குறைந்த அடுப்புகளில் உண்டாகும் கரிப்புகையால் ‘பழுப்பு மேகம்’ உருவாகிறது என்று கண்டுபிடித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சூரிய சக்தியைப் பயன்படுத்த வேண்டும். எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தினால் கச்சா எண்ணெய் இறக்குமதியே வேண்டாம் என்பது இவரது கருத்து.
இமாலயப் பனிப்பாறைகள் உருகி ஓட பழுப்பு மேகம் முக்கிய காரணம். சூரிய அடுப்பு, பயோகேஸ் உற்பத்தியால் இதைக் குறைக்க முடியும் என்கிறார்.
இதற்கான உற்பத்தித் திட்டத்தை அமல்படுத்த நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு ‘சூர்யா திட்டம்’ என்று பெயரிட்டுள்ளார்.
முதல்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் கைரத்பூர் கிராமத்தில் 300 ஏழைக் குடும்பங்களுக்கு சூரிய சக்தி சமையல் அடுப்பு, விளக்கு வழங்கும் திட்டத்தை 2009-ல் தொடங்கினார்.
ஏராளமான பரிசுகள், பட்டங்கள், விருதுகளை வென்றுள்ளார். போப் ஆண்டவரின் அறிவியல் கழக உறுப்பினராக 2004-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக வளிமண்டல அறிவியல் மைய இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார். மதிப்பு, அந்தஸ்து உயர்ந்தாலும் எளிமை விரும்பி. நடந்துசென்று, பேருந்தில் பயணித்துதான் அலுவலகம் செல்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நடைமுறையில் சாத்தியமான வழிமுறைகளை செயல்படுத்தி வரும் வீரபத்ரன் ராமநாதன், ‘ஃபாரின் பாலிசி’ என்ற அமெரிக்க முன்னணி இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த100 சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
Partiality in Indian Education System
கல்வியில் பாகுபாடு ஒழிந்தாலொழிய இந்தியாவில் வளர்ச்சி சாத்தியம் இல்லை.
“இந்தியாவின் கல்வி அமைப்பு கூர்ந்த பிரமிடுபோல் அதீத ஏற்றத்தாழ்வுகள் கொண்டது. இது கொடிய அநீதி மட்டுமல்ல; வேகமாக வளரும் பொருளாதாரத்தின் அடித்தளத்தைக் கட்டுவதற்கு முற்றிலும் பொருத்தமற்றதும் திறனற்றதுமாகும்” என்பார் அமர்த்திய சென்.
அமெரிக்க அரசியல் அறிவியலாளர் மைரான் வெய்னரின் 'இந்தியாவில் அரசும் குழந்தையும்' (1991) என்ற புத்தகத்தில் அவர் சொல்கிறார், “இந்தியாவின் ஆளும் வர்க்கமும், அரசியல்-அதிகார அமைப்பினரும் கடைப்பிடிக்கும் கொள்கை, ‘எங்கள் வர்க்க குழந்தைகள் வேறு, அடித்தட்டுக் குழந்தைகள் வேறு. இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதும், ஒரே மாதிரியான கல்வி அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதும் இயலாத விஷயம்' என்பதுதான்.” பாகுபடுத்தும் இவர்களின் கண்ணோட்டமும், வர்க்க-சாதிய அகம்பாவமும்தான் இந்தியக் கல்வியின் தாழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் சொல்கிறார். இந்தப் புத்தகம் வெளிவந்தது 1991-ல். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கூற்றை அமர்த்திய சென் சொன்னது 2013-ல். இடைப்பட்ட 22 ஆண்டுகளில் இந்தியக் கல்வியின் வணிகமயமும் தனியார்மயமும், அதன் விளைவான பாகுபடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குத் தீவிரமடைந்திருக்கின்றன.
சமத்துவமாவது மண்ணாவது?
கல்வியாளர் ஜே.பி. நாயக் சொல்கிறார், “கல்வி முக்கோணத்தின் மூன்று பக்கங்கள்: அனைவரும் கல்வி பெறுதல், அதன் தரம், சமத்துவம். இதன் ஒரு பக்கம் சரிந்தாலும், முக்கோணமே உடைந்துவிடும்.” இந்தியாவில் கல்வியில் சமத்துவம் என்பது காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது. ஆகவேதான், தாழ்வுற்ற கல்வியும், அதன் காரணமாக தாழ்வுற்ற தேசமும்.
‘சமத்துவமாவது, மண்ணாவது? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? கற்காலத்து, காலாவதியான கதைகளெல்லாம் பேசாதீர்கள். அதெல்லாம் செத்தொழிந்துவிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் ஒழிந்துவிட்டது. பெர்லின் சுவரின் இடிபாடுகளுடன் புதைக்கப்பட்டுவிட்டது' என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். உண்மை என்னவென்றால், பெர்லின் சுவருக்கு மேற்கிலும் கிழக்கிலும் அனைத்து வளர்ந்த நாடுகளிலும், முன்னணியில் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளிலும் கல்வியில் சமத்துவம் என்பது ஏகோபித்த ஏற்புகொண்ட, ஆதாரமான வளர்ச்சிக் கொள்கை. இந்த நாடுகளில் அனைத்து வர்க்கக் குழந்தைகளும் முழுவதும் அரசு நிதியில் நடக்கும் அருகமைப் பொதுப்பள்ளிகளில்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள்.
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பள்ளி!
வகுப்பறைதான் சமத்துவம் உருவாக்கும், பிரிவுகள் உடைக்கும்; ஆகவே, அறிவைப் பெருக்கும் இடமும், ஆற்றல் வளரும் இடமும் அதுவே. நம் நாட்டில் அந்தப் பேச்சுக்கே இன்று இடமில்லை. நமது சாதிய ஏணியில் எத்தனை படிகள் இருக்கின்றனவோ, அத்தனையும் கல்வி ஏணியிலும் இருக்கின்றன. ஒவ்வொரு சிறு வர்க்கப் பிரிவுக்கும் ஒரு வகைப் பள்ளி. இத்தகைய கல்விக் கொள்கையின் மூலம் ஒரு வலிமை வாய்ந்த சமுதாயக் கட்டமைத்தல் நடந்துகொண்டிருக்கிறது. ஒளிரும் இந்தியா, வாடும் இந்தியா என்ற இரு வேறு இந்தியாக்கள் உருவாவதிலும், அதனை வலிமைப்படுத்தி, நிலைக்க வைப்பதிலும் கல்வி அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பல நாடுகளில் பள்ளிக் கல்வியின் தரத்தை ஒப்பிடும் பி.ஐ.எஸ்.ஏ. என்ற உலகளாவிய கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட 74 நாடுகளில் இந்தியாவின் இடம் 73. இந்தத் தரவரிசையில் உயர்ந்து நிற்கும் அனைத்து நாடுகளும் பேதங்களற்ற, இலவசப் பொதுப் பள்ளிகள் வழியாக மட்டுமே கல்வி அளிக்கும் நாடுகள். இந்த நாடுகள் சோஷலிஸ நாடுகள் அல்ல; முதலாளித்துவ நாடுகள்தான். சமத்துவத்தில் நம்பிக்கையற்ற முதலாளித்துவ நாடுகள் ஏன் அனைத்துக் குழந்தைகளும் சமமான, இலவசக் கல்வி பெறும் அமைப்பை பல காலமாக ஏற்றிருக்கின்றன? காரணம், ஒரு நாட்டின் மனித வளம் முழுவதும் ஆற்றல் பெற்ற சக்தியாக எழ வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளும் சமதரக் கல்வி பெற வேண்டும். இந்த நாடுகளின் வளர்ச்சிக்கான அடித்தளமே இத்தகைய கல்வி அமைப்புதான்.
இந்தப் பாதையிலிருந்து இந்தியா விலகுவதன் நாசகர விளைவுகள், மனித வள வளர்ச்சியில் 174 நாடுகளில் இந்தியா 136-வது இடம்; சமூக முன்னேற்றத்தில் 132 நாடுகளில் 102-வது இடம்; உழைக்கும் மக்களில் நவீனத் திறன் கொண்டோர் இந்தியாவில் 6.7%, சீனாவில் 50%, ஐரோப்பிய யூனியனில் 75%.
எங்கெங்கு காணினும் பாகுபாடு
இந்தியக் கல்வியின் ஏற்றத்தாழ்வுகளும் பாகுபடுத்தலும் ஆயிரம் வழிகளில் இயங்குகின்றன. கல்வியின் ஒவ்வொரு நூலிழையிலும் பாகுபாடு பின்னப்பட்டிருக்கிறது. கொடிய அநீதியான சாதிய அமைப்பை தார்மிக அமைப்பு என்று ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடியவர்களல்லவா நாம்!
இன்று புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கட்டத்தில், வெட்கக்கேடான வர்க்கக் கல்வியே, வர்த்தகக் கல்வியே நமதாகிவிட்டது. இன்றைய ஆளும் சித்தாந்தமான சமூக டார்வினிஸம், போட்டிப் பாதை ஒன்றே வளர்ச்சிப் பாதை என்று பறைசாற்றுகிறது. வல்லவர்கள் மட்டும் வாழ வழிவகுக்கும் பாதை இது. வசதி படைத்த பெற்றோர்களின் அதீத ஆசைகளுக்காக, அதிகார வேட்கைக்காக நடக்கும் இந்த இதயமற்ற போட்டியில் குழந்தைகள் பகடைக்காய்களாக மாறுகிறார்கள். கருணையற்ற வணிக உலகத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இதைத்தான் அமர்த்திய சென், “முதல் இடத்தைப் பிடிக்கும் இளைஞர்களை உருவாக்கும் தேசிய வெறி” என்று குறிப்பிடுகிறார்.
இந்தப் போட்டி உலகில் பாடத்திட்டம் நாளும் அதிகரிக்கிறது; பள்ளிப் பைகளின் கனம் ஏறுகிறது, முதுகுகள் வளைகின்றன, வீட்டுப்பாடம் கொல்கிறது, வாழ்வே மனஅழுத்தம் நிறைந்ததாகிறது. பள்ளி நேரத்துக்குள் இந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுத்தருவது இயலாததால், தனிப்பயிற்சி அத்தியாவசியமாகி, பள்ளியின் நீட்சியாகவே மாறிவிடுகிறது. குழந்தைகள் பள்ளியிலிருந்து தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு ஓடுகிறார்கள். மாலை நேரமும், அதிகாலை நேரமும் சேர்ந்து, வகுப்புப் பாடங்களைப் படிப்பதிலேயே கழிகிறது. ‘அப்படித்தான் நீ முதல் ராங்க் வாங்க முடியும்; வெல்ல முடியும்; மற்றவர்களைத் தோற்கடிக்க முடியும். மற்றவர்களைத் தோற்கடிப்பது. அதுதான் வாழ்வின் குறிக்கோள்.'
வடிகட்டுவதற்கான உத்திகள்
இந்தப் பிரமிடின் உச்சியில், வசதி படைத்தோர் (அதாவது, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்போர்) இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச்செல்லும் திறமை பெறுகிறார்கள். மத்தியதர, மேல்தட்டுப் பெற்றோர் தங்கள் குழந்தைகள் உலகை வெல்ல வேண்டுமென்ற வெறியுடன் அவர்களை வளர்க்கிறார்கள். இவர்களுக்கு வானமே எல்லை என்று சொல்லப்படுகிறது. சிறு வயதிலிருந்தே திட்டமிட்டு ‘புரோகிராம்’ செய்யப்பட்டு, ஆற்றல் பெருக்கப்பட்டு உலக அளவில் இவர்களின் பிரவேசம் நடந்துவருகிறது. ‘ஒளிமிகு இந்தியாவின்' பதாகையை ஏந்தி, உலகை வெல்ல வளையவரும் வாலிபர் குழாம் இது. இந்தியாவை வல்லரசாக ஆக்கத் துடிப்போரின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள். இவர்களின் ஆளுமைக்கும் ஆதிக்கத்துக்குமான ஓர் உலகம் எப்பாடு பட்டேனும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். கண்டவரும் நுழைந்துவிடாதபடி அந்த ஏகபோக உலகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக, குண்டு துளைக்காத கவசங்களும், தாண்ட முடியாத மதிற்சுவர்களும் கட்டமைக்கப்பட வேண்டும். கல்வி அமைப்பின் ஒவ்வொரு படியும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு எட்டிவிடாத உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். கல்வி மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டுமென்பதிலிருந்து, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகள் வரை சாமானியரின் குழந்தைகள் வென்றுவிடாத வகையில், முதல் சுற்றிலேயே அவர்கள் தோற்று, வெளியேறிவிடும் வகையில் சாதுரியமாக அமைக்கப்படுகின்றன. அப்படித்தான் ‘மெரிட்’ என்பது உறுதிப்படுத்தப்படும் என்பது கேள்விக்கப்பாற்பட்ட வேதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ‘மெரிட்’ என்பதன் இலக்கணத்தையும், அதன் வடிகட்டு விதிகளையும் உருவாக்குபவர்கள் அவர்களேதான்.
‘டென்னிஸ் தெ மெனஸ்’ என்ற புகழ் பெற்ற கார்ட்டூன் சிறுவன், விளையாட்டு ஒன்றைத் தன் தோழன் ஜோயிக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுச் சொல்கிறான், “விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ வென்றுவிடலாம், ஜோயி!” இன்றைய இந்தியக் கல்விக் கொள்கை, அமைப்பு, விதிகள், அனைத்தையும் உருவாக்கி இயக்கிவருவது இந்த நாட்டின் மத்தியதர வர்க்கமும், அதற்கும் மேம்பட்ட வசதி படைத்தோரும்தான். இந்த வர்க்கங்களின் நலனுக்காக, அவற்றின் ஆதிக்கத்தைத் தொடர்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் அவையெல்லாம்.
இந்தக் கல்விச் சிறை தகர்க்கப்பட்டாலன்றி, இந்தியாவுக்கு வளர்ச்சி இல்லை; ஜனநாயகம் இல்லை; மக்களுக்கு வாழ்வும், விடுதலையும் இல்லை.
- வே. வசந்தி தேவி,
கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,
தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
Tamil root language for Telugu,Malayalam and Kanada
மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கு இருந்த உறவு அரசியல் காரணங்களால் நலிவடைந்தது.
திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ், இந்திய விடுதலைக்கு முன்புகூட தன் சக மொழிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி, மொழி மீதான அரசியல்வாதிகளின் நிதானமற்ற ஆவேசம் இரண்டும் ஒரு குடும்ப மொழிகளுக்குள்ளே மாறுபாட்டை உருவாக்கிவிட்டன.
கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவில் சில அரசியல் காரணங்களால் இடைவெளி வந்துவிட்டது. என்றாலும், விதிவிலக்காகப் பண்பாட்டு ஆய்வாளர் சிலர் இனத்துக்கும் மொழிக்குமான பழைய உறவைச் சரியாகவே பதிவுசெய்துள்ளார்கள்.
ஷெட்டரின் ஆராய்ச்சி
சங்க இலக்கியங்களின் கன்னட மொழி பேசிய பகுதியின் வரலாற்றை நேர்மையாக ஆராய்ந்தவர் ஷெட்டர். இவரது முக்கியமான நூல், ‘ரிஃப்லெக்ஷன் ஆன் தி எர்லி டிரவிடியன் ரிலேஷன்’ (Reflection on the Early Dravidian Relation). ஷெட்டர் மானுடவியல், தொல்லியல் வரலாற்றுப் பேராசிரியர். கர்நாடகப் பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராக இருந்தவர்.
தென்னிந்திய வரலாறு சங்க காலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று ஷெட்டர் பலமுறை வற்புறுத்தியிருக்கிறார். கன்னடமும் தமிழும் ஒரே வேரில் முளைத்தவை என்ற கருத்தை தன் நூல் வழி வெளிப்படுத்திய ஷெட்டர், கன்னட கவிராஜ மார்க்கத்துக்கு முன்னோடி தொல்காப்பியர் என்கிறார்.
கவிராஜரும் தொல்காப்பியரும்
கவிராஜ மார்க்கம் என்பதைத் தமிழில் ‘கவிஞர்களின் ராஜபாதை’ எனக் கூறலாம். இது தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்; கவிதை, உரைநடை பற்றியும் கன்னடம் பேசிய மக்களின் நிலம், பண்பாடு பற்றியும் பேசுகிறது. இந்நூலின் ஆசிரியர் ஸ்ரீ விஜயன். இவர் அமோகவர்ஷ நிருதுபங்கன் என்ற அரசனின் (கி.பி.814-878) காலத்தவர். இந்நூல் கி.பி. 850-ல் இயற்றப்பட்டது.
தண்டி முதலானோரின் வடமொழி இலக்கண நூற்களின் பாதிப்பால் கவிராஜ மார்க்கத்தை அதன் ஆசிரியர் எழுதினார்; என்றாலும் கன்னட இலக்கணத்தை வடிவமைக்க திராவிட வேரை நம்பினார். ஒரு விதத்தில் தொல்காப்பியரும் இத்தகையவரே. இருவரும் சமஸ்கிருத, பிராகிரத மரபை அறிந்தவர்கள். பெண்களை வர்ணிப்பதில்கூட இவர்கள் திராவிட வேர்களைத் தேடியவர்கள். தொல்காப்பியத்தையும் கவிராஜ மார்க்கத்தையும் ஒப்பிடும் சூழ்நிலையில் ஷெட்டர் தமிழ் மொழியின் தொன்மை பற்றிய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். சங்கப் பாடல்களும் தொல்காப்பியமும் சேர்ந்து ஏறத்தாழ 4,000 பாடல்கள் வருகின்றன. இவை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த அளவுக்குச் செறிவான பழமையான பதிவு உலகில் வேறு மொழிகளுக்கு இல்லை என்கிறார்.
திராவிட வேரைத் தேடலாம்
பொதுவாக, தென்னிந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகளையும், பண்பாட்டுத் தன்மைகளையும் ஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் இவற்றில் திராவிட வேர்களைத் தேடவில்லை. இவற்றின் மூலம் சமஸ்கிருதம் என்றனர். தொல்காப்பியம், கவிராஜ மார்க்கம் இரண்டையும் ஆராய்ந்தவர்கள் இவற்றில் வடஇந்தியச் செல்வாக்கையே தேடினர். இவர்கள் மட்டுமல்ல பழைய உரையாசிரியர்களும் பிற்காலத் தென்னிந்திய மொழியியல் பண்பாட்டு ஆய்வாளர்களும் சமஸ்கிருத வேர்களை மட்டுமே தேடினார்கள். ஒரு வகையில் இது எல்லாமே சமஸ்கிருதமயமாக்கலின் ஆரம்பம். இவர்களைப் பின்பற்றியே மு. ராகவையங்கார் போன்ற தமிழறிஞர்கள் சிலரும் நகர்ந்தனர். ஷெட்டர் இதிலிருந்து வேறுபடுகிறார்.
தொல்காப்பியத்திலும் கவிராஜ மார்க்கத்திலும் கூறப்படும் பண்பாடு பண்டைத் தமிழ்ப் பண்பாடுதான். இவற்றின் மூலத்தை திராவிட வேர்களில் தேடலாம். அரசியல் சார்பில்லாத திராவிடப் பண்பாடு ஒன்று உண்டு. அதைத் தென்னிந்திய மொழிகளின் வழி தேடிக் கண்டுபிடித்தால் ஒரு பொதுமைப் பண்பு கிடைக்கும் என்கிறார் ஷெட்டர்.
தமிழிலிருந்து மலையாளம்
தமிழ் மொழியிலிருந்துதான் மலையாள மொழி உருவானது என்ற கருத்தை கால்டுவெல், குண்டர்ட் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் வெளியிட்டபோது கேரளத்து அறிஞர்கள் அதை ஒத்துக்கொண்டனர். பேராசிரியர் இளங்குளம் குஞ்சம்பிள்ளை என்ற மலையாள மொழி ஆய்வாளர் இந்தக் கருத்தை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். சங்க காலத்திலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுவரை கேரளத்தின் செய்யுள் மொழியும், பேச்சுவழக்கு மொழியும் தமிழாகத்தான் இருந்தது என்கிறார் இளங்குளம். கேரளத்தின் நவீனப்படைப்பாளிகளும் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, சங்கப் பாடல்கள் சில ஆகியவற்றைத் தங்கள் மண்ணின் கவிதைகளாகவே உரிமை கொண்டாடுகிறார்கள். வையாபுரிப்பிள்ளையின் கருத்துப்படி தொல்காப்பியம்கூட தென் கேரளத்தைச் சார்ந்தது. குலசேகர ஆழ்வார் கேரள அரசர்; சேரமான் பெருமாள் நாயனார்; புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் வேணாட்டிகள் என கேரளப் படைப்பாளிகளின் நீண்ட பட்டியலே உள்ளது. அதோடு தீயாட்டுப் பாட்டுகள், சர்வப்பாட்டுகள், கிருஷிப்பாட்டுகள், வள்ளப் பாட்டுகள், சாற்றுப் பாட்டுகள் முதலிய நாட்டார் பாடல்களும் தமிழ் செல்வாக்குடையவை.
கி.பி. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ராமசரித காப்பியம்’, கி.பி.15-ம் நூற்றாண்டில் எழுந்த ‘கிருஷ்ணகாதை’, ‘பாரதமாலை’ போன்ற காவியங்களும் தமிழ் மரபுக்கே முதலிடம் கொடுப்பவை. இந்தக் காவிய கர்த்தாக்கள் தங்கள் பாடல்களைத் தமிழ்க்கவி என்று கூறிக்கொள்ளுவதில் தயக்கம் காட்டவில்லை. ஒரு சான்று:
ஆதி தேவனில் அமிழ்ந்த மனக் காம்புடைய சீராமன்
அன்பினோடே இயம்பின தமிழ்க் கவி வெல்வோர்
போதில் மாதின் இடமாவருடல் வீழ்வதினு பின்
போகி போக சயனன் சரணதார் அயர்வாரே
கி.பி. 9-ம் நூற்றாண்டில் கேரள இலக்கிய மரபில் சமஸ்
கிருதக் கலப்பு வேகமாகப் பாய்ந்ததால் மணிப்பிரவாளத்தில் வைசிக தந்திரம், உண்ணிநீலி சந்தேசம், உண்ணிச்சிரி தேவி சரிதம், அனந்தபுர வர்ணனம் போன்ற இலக்கியங்கள் தோன்றின.
லீலாதிலகம்
மணிப்பிரவாள இலக்கியம் பரவலான பிறகு கி.பி. 14-ம் நூற்றாண்டில் மலையாள இலக்கண நூலான லீலாதிலகம் தோன்றியது. லீலாதிலக ஆசிரியர் தமிழ் அறிந்தவர். தொல்காப்பியம், நன்னூல் போன்ற பல இலக்கண நூற்களைக் கற்றவர். இவர் தொல்காப்பியரை மேற்கோள் காட்டுகிறார். தமிழ் இலக்கணங்கள் கூறும் புணர்ச்சி விதிகளை எடுத்துக்கொண்டவர். வீரசோழியத்தை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சேந்தன் திவாகரத்தை நாட்டுமொழி நிகண்டு என்கிறார். யாப்பருங்கலத்திலிருந்தும் ஒரு எடுத்துக்காட்டு தருகிறார்.
கேரள பாணினீயம்
மலையாள இலக்கண நூல் லீலாதிலகத்தைப் போன்ற இன்னொரு நூல் கேரள பாணினீயம். இதன் ஆசிரியர் ஏ.ஆர். ராஜராஜவர்மா (1863 – 1918) கேரள பாணினீயம் 1895-ல் வந்தது. 7 பகுதிகள் 194 நூற்பாக்கள் என அமைந்தது. இந்நூலை பேராசிரியர் இளையபெருமாள் தமிழில் பெயர்த்திருக்கிறார். தமிழகத்தில் நன்னூல்போல் மலையாள மாணவர்களின் இலக்கணப் பாடத்திட்டத்தில் இருப்பது இந்த நூல். இந்த நூலுக்கு விரிவான முகவுரையையும் உரையையும் நூலாசிரியரே எழுதியிருக்கிறார்.
ராஜராஜ வர்மா கேரள பாணினீய முகவுரையில் தமிழிலிருந்துதான் மலையாளம் உருவானது என்பதைக் காரண-காரியங்களுடன் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் குறிப்பிடும் பண்டை தமிழ்நாட்டுப் பகுப்பையும் அவர் ஒத்துக்கொள்ளுகிறார். சேரநாட்டில் அடங்கிய தமிழ்ப் பகுதிகளில் தமிழ் வட்டார மொழியாக இருந்தது. ஆனால், இது மதுரைத் தமிழிலிருந்து வேறுபட்டது என்கிறார். வர்மா தன் நூலில் நன்னூலிலிருந்து இருபது இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். கபிலர், கம்பர், குலசேகர ஆழ்வார் ஆகியோரின் பாடல்களையும் எடுத்தாளுகிறார். நம்பூதிரிகள் கேரளத்தில் நிலையாகத் தங்க ஆரம்பித்த காலகட்டத்தில் (கி.பி. 600 – 774) கேரளத் தமிழில் வடமொழிக் கலப்பு அதிகரித்தது என்ற லீலாதிலக நூல் கருத்தை இவரும் ஒத்துக்கொள்ளுகிறார்.
“கொடுந்தமிழ் மொழி திராவிடமாகிய இமயமலையிலிருந்து சமஸ்கிருத யமுனையில் கலந்து மலையாளமாயிற்று” என்கிறார் ராஜராஜ வர்மா.
மலையாளம் பிரிந்ததற்குக் காரணம் தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததற்கு பண்பாடு, இலக்கணம், நம்பூதிரிகளின் செயல்பாடு ஆகியவற்றை ராஜராஜ வர்மா காரணங்களாக்குகிறார். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட காலத்தில் மலையாள இலக்கியவாதிகள் பழந்தமிழ்ச் சொற்களைத் தங்கள் படைப்பில் எழுதுவதில் தயக்கம் காட்டினார்கள். இந்தத் தயக்கம் கூட்டு வெறுப்பாக வளர்ந்தது. இத்தகைய படைப்பாளிகளில் பெரும்பாலானோர் நம்பூதிரிகள். இதே சமயத்தில் திராவிட வேரிலிருந்து வந்த வினையெச்ச, பெயரெச்ச வாய்ப்பாடுகளை எடுத்துக்கொண்டார்கள்.
பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் கேரளம் தமிழகத்திலிருந்து அரசியல்ரீதியாகப் பிரிந்தது. இந்த மாநில இயற்கையமைப்பும் ஒரு காரணம். தமிழ் மண்ணின் தாயாதிகள் என்னும் பண்டைய எண்ணம் மெல்ல மறைந்தது. தமிழர்களுடனான உறவும் குறைந்தது. பக்தர்களும் வியாபாரிகளும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்வது என்ற சூழ்நிலை உருவானது.
கேரளத்தின் மருமக்கள்வழி தமிழர்களுடனான உறவைத் துண்டித்தது சமூகக் காரணங்களில் முக்கியமானது என்கிறார் ராஜராஜவர்மா. தமிழிலிருந்து மலையாளம் பிரிந்து செல்வதற்கு சில இலக்கண விதிமுறைகளும் காரணம் என்கிறார் வர்மா. இந்த இலக்கண விதிகள் பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் உருவானவை.
மலையாளத்தில் தமிழ் மூலம்
கேரளத்துக்கும் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவில் விரிசல் வந்துவிட்டது. நதிநீர் காரணமாக எழுந்த இந்த விரிசலை ஊடகங்கள் ஊதிப் பெருக்கிவிட்டன. தமிழ், கன்னடம், கேரளம் மூன்றின் பழம் பண்பாட்டு உறவு, மொழி உறவு, அரசியல் உறவு எல்லாம் ஆராய்ச்சியாளர் மத்தியில் பேசப்படுவன ஆகிவிட்டன.
சிலப்பதிகாரக் கண்ணகி வழிபாடு இன்று கேரளத்திலும் ஈழத்திலும் மட்டுமே உள்ளது. சிலப்பதிகாரத்தின் பல்வேறு கதை வடிவங்கள் கேரளத்தில் வாய்மொழியாகவும் கதைப்பாடல் வடிவிலும் உள்ளன என்பது இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.
கேரளத் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் கம்பனின் பாடல்கள் 2300 பாடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி வட மலபாரில் நிகழ்கின்றது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்ட ஓணவிழா இன்று கேரளத்தின் மாநில விழா. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் வேலன் வெறியாடல் கேரளத்தில் தெய்யனாட்டமாக ஆடப்படுகிறது. இன்றும் அங்கு வேலன் மதிக்கப்படுகிறார். எட்டுத்தொகைப் பாடல்கள் கூறும் வேலன் இவரே.
இந்த வேர்கள் எல்லாம் எங்கே தொலைந்தன? மறக்கக் காரணம் யார் அல்லது எது?
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டுக்குச் சுமையா
இந்தியா தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார். “பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அது நாட்டுக்குப் பெருத்த சுமை. ஏழை மக்களின் பணத்தைக் கொட்டி அழலாமா?” என்று உபதேசித்தார். மார்க்ரெட் தாட்சரைப் போல “வியாபாரம் செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல” என்று அவரும் சொன்னார். இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டதாக ஊடகங்கள் முரசறைந்தன. அப்போது, பாஜக அதை எதிர்த்தது. தொழிலாளர்களும் இடதுசாரிகளும் அது தவறென்று வீதிக்கு வந்து போராடினார்கள். தொழிலாளர்கள் தேசத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் வேலைப் பாதுகாப்புக்காகப் போராடுவதாய்க் குற்றம் சுமத்தினார்கள்.
முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பின்னர், லாபத்தில் இயங்கினாலும் முக்கியத்துவம் அல்லாத தொழில் நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொன்னார்கள். அது சரிதான் என்று ஒரு ஒப்புதலை உருவாக்கினார்கள். ‘நஷ்டத்தில் இயங்குகிற தொழில்களைத் தனியார் நடத்தினால் மட்டும் எப்படி லாபம் வரும்?’ என்ற கேள்விக்கு “உயர் தொழில்நுட்பத்தோடு அந்த நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு இயங்கும்” என்று அவர்களே தட்டிக்கொடுத்துக்கொண்டார்கள். அப்படிச் சொல்லித்தான் சென்னை கிண்டியில் இருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் விற்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் பிரம் மாண்டமான குடியிருப்புக் கட்டிடங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. ஒருவேளை, தொழிற்சாலைகளை ரியல் எஸ்டேட்டாக மாற்றும் உயர்ந்த தொழில் நுட்பம்பற்றித்தான் பேசினார்களோ என்னவோ?
விற்றாலும் வாங்கினாலும்
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். ஆட்சியாளர்கள் போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கினாலும், ஹெலிகாப்டர் வாங்கினாலும் பல நூறு கோடிகள் அரசுக்கு நஷ்டம். அலைக்கற்றையை விற்றாலும், நிலக்கரிப் படுகையை விற்றாலும் பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டம். இதில் முறைகேடு ஏதும் இல்லை, சந்தையின் விதி என்று அவர்கள் சான்றிதழ் கொடுத்தார்கள்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் “மக்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு பொதுத் துறைகள் பலப்படுத்தப்படும்” என்று சொன்னது. தற்போது அருண் ஜேட்லி, நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறார். அதற்கு முன்னர், பொருளாதார விவகாரங்
களுக்கான அமைச்சர்கள் குழு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம், இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ‘நஷ்டத்தில் இயங்குவது’, ‘விற்கப்படுகிறது’ என்ற இரண்டையும் லாவகமாக இணைத்து, ‘நஷ்டத்தில் இயங்குவது விற்கப்படுகிறது’என்ற பொதுப்புத்தியை அவர்கள் கட்டமைத்துவிட்டார்கள். இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் தவிர, இதர நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன. இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றனவா?
பொன்முட்டையிடும் வாத்தை…
நிறுவனங்களின் 2013-14 ஆண்டறிக்கைகளின் பட்டியலில் மூன்று பெரிய தனியார் நிறுவனங் களின் ஒட்டுமொத்த லாப வீதம் அவற்றின் வருவாயில் 5.21% மட்டுமே. இது பொதுத் துறையில் 5.12%. இதில் பெரிய வேறுபாடு எதுவுமில்லை. அரசுக்குச் செலுத்திய தொகையை ஒப்பிட்டால், ரூ. 10.82 லட்சம் கோடி வருவாய் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களும் அரசு கஜானாவுக்கு ரூ. 68,474 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஆனால், 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருவாயுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் மூன்றும் சேர்ந்து ரூ.1,38,299 கோடியை அரசு கஜனாவுக்கு வழங்கியுள்ளன. இதே நிலைதான் கடந்த பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. பொன்முட்டை இடும் வாத்தாய், அமுதசுரபியாய், வற்றாத நீரூற்றாய், பொய்க்காத பெருமழையாய் விளங்கும் இந்த நிறுவனங்களைத்தான் தனியாருக்கு பாஜக அரசாங்கம் விற்கப்போகிறது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பிலாய் ஆலை மட்டும் 10 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைந் திருக்கிறது. அதன் குடியிருப்புகள் 9,013 ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இதில் பணிபுரிகிறார்கள்.
1956-ல் அரசு, காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தது வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே. கடந்த 5 ஆண்டுத் திட்டத்துக்கு இந்திய ஆயுள் காப் பீட்டுக் கழகம் அரசுக்கு ரூ. 7.25 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்த 5 ஆண்டுத் திட்டக் காலத்தில் இதுவரையிலும் அரசுக்கு ரூ. 4.5 லட்சம் கோடி கொடுத்திருக்கிறது. இந்தக் காப்பீட்டுத் துறையில் தனியாரும் அந்நிய மூலதனமும் அனுமதிக்கப்பட்டி ருக்கிறது. அதை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
இழப்பு யாருக்கு?
அவர்கள் முதலில் நஷ்டத்தில் இயங்குவதை விற்கப்போவதாகச் சொன்னார்கள். பிறகு, முக்கியமற்ற துறைகளை விற்கப்போவதாகச் சொன்னார்கள். இப்போது லாபத்தில் இயங்கும் முக்கியமான துறைகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ஏலமிட்டது காங்கிரஸ். இப்போது ஏலமிட்டுக்கொண் டிருப்பது பாஜக. இரண்டு பேர் காலத்திலும் விற்கப்பட்ட 2-ஜியையும், நிலக்கரிப் படுகையையும் நீதிமன்றம் தலையிட்டு, ஒட்டுமொத்தமாக ரத்து செய்யும் அளவுக்கு மிகவும் நேர்மையாக இவர்கள் நடந்துகொண்டார்கள். அவையெல்லாம் பொதுப்புத்தியில் நியாயம் என்று கட்டமைக்கப்பட்டே எதிர்ப்பின்றி விற்கப்பட்டன.
மேலே சொன்ன பொதுத் துறைகளிலிருந்து அரசு கஜானாவுக்குச் சென்ற வரிகளும் லாபப் பங்குகளும் இந்திய மக்களுக்குச் சாலைகளாகவும் கல்வியாகவும் மருத்துவ வசதிகளாகவும், பொது விநியோகத் துறை மானியமாகவும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் அரசாங் கத்துக்குக் கொடுத்த தொகை மட்டும் 1 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய். இவை நிறுத்தப்பட்டால், மக்கள் நலத்திட்டங்களும் மானியங்களும் வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படும் என்பது உறுதி.
- க. கனகராஜ்,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ (எம்)
- தொடர்புக்கு: kanagarah@tncpim.org
காடுகளை அழித்து வாழ்க்கையா?
நமக்கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம்
உலகம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த உலகத்திலேயே மிகப் பெரிய 3 சக்திகள் - சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதி. இந்த மூன்றுமே ஒரே சமயத்தில் வேகவேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. உலகமயம் காரணமாகச் சந்தையானது முன்னெப்போதையும்விட, எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது. இதனால், நம்முடைய தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், சந்தைகள் ஆகிய மூன்று தரப்புமே தங்களைப் பாதுகாக்கும் சுவர்கள் ஏதுமின்றி, ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
மைக்ரோ சிப்புகளின் வேகமும் ஆற்றலும் 2 ஆண்டுகளுக்கொரு முறை இரட்டிப்பாகிறது என்பதே மூரின் அடிப்படை விதி. இதனால் மென்பொருள், கணினி, ரோபோ ஆகியவற்றின் ஆற்றலும் கூடிக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே, மனிதர்களால் செய்யப்பட்டுவந்த பல வேலைகளை, நுட்பமான கணினிகளே செய்துவிடுகின்றன. பழைய வேலைகளைச் செய்வதுடன் புதிதாகவும் பல வேலைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த வேலைகளைச் செய்ய தொழில்நுட்பத்திறன் அதிகம் தேவைப்படுகிறது.
நம்முடைய காற்றுவெளியில் கரிப்புகை அதிகரித்து, சுற்றுச்சூழலின் தரத்தைக் குறைக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் காடுகள் அழிக்கப்படுகின்றன. நமக் கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியும் - நிலம், நீர், காற்றில் சேரும் கழிவுகளால் வேகமாகச் சீர்குலைந்துவருகிறது.
3 பருவ மாறுதல்கள்
சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் இப்போது டிஜிட்டல், சூழலியல், புவிசார் பொருளியல் என 3 விதப் பருவ மாறுதல்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவேதான் பெரிய நாடுகள் நெருக்குதலுக்கு உள்ளாகின்றன, வலுவற்ற நாடுகள் கண்டனங்களுக்கு ஆட்படுகின்றன. இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு என்று ஏதும் இல்லையே என்று அமெரிக்கர்கள் மனம் பதைக்கிறார்கள். அவர்களுடைய ஆதங்கம் நியாயமானது. ஆனால், இந்தத் தீர்வானது சாமானிய நடவடிக்கைகளால் ஏற்பட்டுவிடாது. நீண்ட காலம் பிடிக்கும். ஒருவர் மட்டுமல்ல, பலரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டிய தீர்வு இது. மீட்சி பெறக்கூடிய அடித்தளக் கட்டமைப்பு, கட்டுப்படியாகும் விலையில் சுகாதார நலன், புதிய வேலைகளுக்கு ஏற்ற படிப்பு - பயிற்சி, திறமைசாலிகளை ஈர்க்கக்கூடிய குடியேற்றக் கொள்கை, தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும்படியான நல்ல சுற்றுச்சூழல், கையை மீறாத கடன் சுமை, நல்ல நிர்வாக அமைப்பு ஆகியவை இருந்தால்தான் இந்த வேகத்தை அடைய முடியும்.
பிரேசிலின் கதை
பிரேசில் நாட்டின் இயற்கைச் சூழலுக்கு நிகழ்ந்த சேதத்தைப் பற்றிப் பார்க்கலாமா? ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அக்டோபர் 24-ம் தேதி சாவ்பாவ்லோ நகரிலிருந்து இந்தச் செய்தி நறுக்கை வெளியிட்டது: ‘தென்னமெரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய நகரமும் மிகவும் செல்வந்த நகரமுமான சாவ் பாவ்லோவில் நவம்பர் மாத நடுப் பகுதிக்குள் நல்ல மழை பெய்யாவிட்டால், நகரில் கடும் தண்ணீர்ப் பற்றாக் குறை ஏற்பட்டுவிடும்’ என்பதே அது. பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான அதில் சுமார் 2 கோடி மக்கள் வசிக்கின்றனர். கடந்த 80 ஆண்டுகளில் இருந்திராத வகையில் தண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரி கடந்த ஆண்டு வற்றியது. அதற்குப் பிறகு மழையே இல்லை. இதுதான் முக்கியக் காரணம்.
என்ன, சாவ்பாவ்லோவில் தண்ணீர் இல்லையா? ஆம். பிரேசில் நாட்டின் மூத்த ஆலோசகரான ஜோஸ் மரியா கார்டசோ டா சில்வா இதை விளக்குகிறார்: “செரா டா கான்டரெய்ரா மழைப்பிடிப்புப் பகுதியில் இருந்த இயற்கையான பசுங்காடு அழிக்கப்பட்டுவிட்டது. அங்கு மரங்கள் செழித்து வளர்ந்த காலத்தில், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட 6 பெரிய ஏரிகளுக்கு நிறைய நீர் கிடைத்துவந்தது. சாவ்பாவ்லோ நகரின் தண்ணீர் தேவையில் 50%, கான்டரெய்ரா நீர்த் தேக்கம் மூலமே பூர்த்திசெய்யப்பட்டுவந்தது. அங்கிருந்த காட்டை வெட்டி மரங்களை நல்ல விலைக்கு விற்றார்கள். காட்டை அழித்த பகுதியில் விவசாய நிலங்களை ஏற்படுத்தினார்கள். எப்போதும் நீர் வளத்துடன் இருந்த இடங்கள் மண்ணைக் கொட்டி மேடாக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டன. ஓரளவு பசுமையுடன் இருந்த இடம் மேய்ச்சல் காடாக்கப்பட்டது. போதாததற்கு யூகலிப்டஸ் மரங்கள், வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் நடப்பட்டன. மழை குறைந்தது, காற்றில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறட்சி ஏற்பட்டது. மழை வந்தால் தண்ணீரை நிரப்பிக்கொள்ள ஏரிகளும், எடுத்துச் செல்ல ராட்சதக் குடிநீர்க் குழாய்களும் தவங்கிடக்கின்றன. மழைதான் வருவதே இல்லை” என்கிறார்.
காடும் இல்லை பசுமையும் இல்லை
இயற்கையான காடுகள் மழை மேகங்களை ஈர்த்துத் தண்ணீரை மழையாக உறிஞ்சி எடுக்கின்றன. அப்படி எடுக்கும் தண்ணீரை ஆறுகளாகவும் ஓடைகளாகவும் மண்ணில் பாய விடுகின்றன. காடுகள் தண்ணீரை மட்டும் பெறுவதில்லை, தண்ணீர் ஓடைகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றன. மண் அரிப்பு ஏற்படாமல் காக்கின்றன. தண்ணீரில் அசுத்தம், வண்டல் இல்லாமல் வடிகட்டிச் சுத்தமாகத் தருகின்றன. காட்டை அழித்ததால் மண் தளர்ந்து அரிப்பெடுக்க ஆரம்பித்தது. சிறு மழையில் அவை கரைந்து வெளியேறிவிட்டன. இப்போது காடும் இல்லை, பசுமையும் இல்லை. தண்ணீர் சேர்வதும் குறைந்ததுடன் தண்ணீரின் தரமும் சுவையும் வெகுவாகக் குறைந்துவிட்டன. அரசும் மக்களும் சேர்ந்து இயற்கையை அழித்ததால், மீட்சிபெற முடியாமல் இயற்கை வனம் வறண்ட கட்டாந் தரையாகிவிட்டது. கான்டரெய்ரா பகுதியில் முன்னர் பெய்த மழையில் வெறும் 12% மட்டுமே இப்போது பெய்கிறது.
பிரேசிலின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் தில்மா ரூசஃப்பின் பதவிக் காலத்தில்தான் இந்தக் காடு அழிப்பு தொடங்கி பூர்த்தியடைந்தது. ஆனால், இது தேர்தலில் பெரிய பிரச்சினையாகவே பேசப்படவில்லை. அன்டோனியோ நோப்ரே என்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி வருத்தத்துடன் இதுகுறித்துப் பேசுகிறார். “அமேசான் பகுதியில் காடுகளை அழித்த தாலும், சர்வதேச அளவில் புவிவெப்பம் உயர்வதாலும் மழைக்காடுகள் இருக்கும் பகுதியில்கூட மழைப் பொழிவு குறைந்துவிட்டது. அமேசான் பகுதியில் காற்றிலேயே சாரல் போல மழைத்துளிகள் அடர்த்தியாக விரவிக்கிடக்கும். அதை நாங்கள் ‘பறக்கும் ஆறு’என்றே அழைப்போம். அந்த ஆறு இப்போது இல்லை. எனவேதான், இந்த வறண்ட வானிலை” என்கிறார் அன்டோனியோ நோப்ரே.
மழை பெய்யும் வரை காத்திரு
ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் நிபுணர் பால் கில்டிங், பிரேசிலிலிருந்து மின்னஞ்சலில் இப்படித் தெரிவிக்கிறார்: “பிரேசில் அரசின் மெத்தனத்தைப் பார்க்கும்போது, உலகையே பாதிக்கும் புவிவெப்ப உயர்வுகுறித்து எந்த நாடுமே உளப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை - இனி வாழவே முடியாது என்ற நிலை வரும் வரை - என்றே தோன்றுகிறது. 2 கோடி மக்கள் வாழும் ஒரு நகரின் குடிநீர்ப் பற்றாக்குறை இந்த அளவுக்கு முற்றும்வரை, அந்த அரசு வேறு ஏதோ செயல்களில் கவனம் செலுத்திவந்திருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க என்ன நடவடிக்கை என்று கேட்டால், மழை பெய்யும் என்று காத்திருக்கிறோம் என்ற பதில் வருகிறது. ஏன் இந்தப் போக்கு? காட்டை அழிக்கவிட்டதால்தான் இந்த நிலைமை என்று ஒப்புக் கொண்டால், அதன் விளைவு அரசியல்ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்; மேற்கொண்டு காடுகளை அழிக்கக் கூடாது என்ற கோரிக்கை மக்களிடமிருந்து பலமாக எழக்கூடும். பருவநிலை மாறுதல்களை எதிர்
கொள்ள நாட்டைத் தயார்படுத்தும் பொறுப்பும் அடுத்து வந்து சேரலாம். இவற்றையெல்லாம் தவிர்ப்பதற் குத்தான் ஆட்சியாளர்கள் இயற்கையை அழிப்பதைச் சுட்டிக்காட்டினாலும், காதில் ஏதும் விழாததுபோல பாவனை செய்கிறார்கள்” என்கிறார்.
சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதியெல் லாம் இப்படி வேகமாக மாறிக்கொண்டே இருந்தால், வாய்ப்புகளும் நெருக்குதல்களும் அதிகமாகிக் கொண்டே வரும். இதற்கேற்ப, பாதிப்புகளை எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறோம்? எப்படி சாதகமாக்கிக் கொள்ளப்போகிறோம்? அவற்றுக்குத் தகுந்தவாறு எப்படி நம்மை மாற்றிக்கொள்ளப்போகிறோம்?
- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)