நன்றி ஹிந்து நாளிதழ் : (08-ஜன-2014):
க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்
நினைவில் நின்ற வாசகங்கள் :
பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று செய்த முழக்கம், வரலாற்றில் அழியா இடம்பெற்றுவிட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக அன்றைய பாட்டிஸ்டா சர்வாதிகார அரசு தன்னைத் தண்டித்தாலும் அதற்கெதிரான தனது போராட்டத்தை எதிர்காலத் தலைமுறையினர் புரிந்துகொள்கிறபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தான் விடுவிக்கப்படுவேன் என்ற காஸ்ட்ரோ வின் நம்பிக்கையை வெளிப்படுத்திய வாசகம் அது.
க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்
நினைவில் நின்ற வாசகங்கள் :
பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று செய்த முழக்கம், வரலாற்றில் அழியா இடம்பெற்றுவிட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக அன்றைய பாட்டிஸ்டா சர்வாதிகார அரசு தன்னைத் தண்டித்தாலும் அதற்கெதிரான தனது போராட்டத்தை எதிர்காலத் தலைமுறையினர் புரிந்துகொள்கிறபோது, தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தான் விடுவிக்கப்படுவேன் என்ற காஸ்ட்ரோ வின் நம்பிக்கையை வெளிப்படுத்திய வாசகம் அது.
சிங் ஆட்சி: ஒரு மதிப்பீடு
சிங்கின் ஆட்சியை இரண்டு தளங்களில் ஒருவர் மதிப்பீடு செய்யலாம்: ஒன்று, அவர் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகள். இரண்டு, அவரது ஆட்சி நிர்வாகம். இன்று ஊடகங்களால் அவர் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் அனைத்தும் அவரது நிர்வாகத்தின் நேர்மையின்மைகுறித்ததே தவிர, அவரது பொருளாதாரக் கொள்கைகள் குறித்ததல்ல. தனியார்மயமாக்கல் மற்றும் தாரளமயமாக்கல் ஆகிய அவரது பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்கும் இருக்கும் நேரடி உறவைப் பற்றி ஊடகங்கள் ஒருபோதும் விவாதித்ததேயில்லை.
சிங்-மோடி: என்ன வேறுபாடு?
அலைக்கற்றை ஊழலாக இருந்தாலும் சரி, நிலக்கரிச் சுரங்க ஊழலாக இருந்தாலும் சரி, ஊடகங்களின் கவனம் குவிக்கப்பட்டது அவற்றில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது மட்டுமே. அவற்றினால் பெரும் லாபம் ஈட்டிய முதலாளிகள் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் ஊடகங்களினால் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை. ஊடகங்களுக்கும் சரி; எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கும் சரி... சிங்கின் பொருளாதாரக் கொள்கைகளுடன் எந்த முரண்பாடும் இல்லை. ஆட்சியைப் பயன்படுத்தித் தானோ தனது உடனடிக் குடும்பத்தினரோ சொத்து ஏதும் சேர்க்கவில்லை என்ற நேர்மைக்கான ஆகக் குறுகிய வரையறையில் மட்டுமே சிங்கும் நரேந்திர மோடியும் நேர்மையானவர்கள்.
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது, சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரான குறுங்குழுவாத முதலாளித்துவத்தை (குரோனி கேப்பிடலிஸம்) வளர்ப்பது, சாதாரண மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்து விட்டு, பெருநிறுவனங்களின் நலன் களுக்காகத் திட்டங்கள் தீட்டுவது ஆகியவை நேர்மையின்மையாகப் பார்க்கப்படுவதேயில்லை.
நேர்மையான ஆட்சிக்கான இலக்கணங்களில் முதன்மையானவை எவையோ அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை என்பதுதான் சோகம். இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் சிங் மட்டுமல்ல, மோடியும் நேர்மையின்மைக்கான உதாரண புருஷர்கள் என்பது புரியும். கிருஷ்ணா கோதாவரி படுகையில் எரிவாயு எடுக்கும் விஷயத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சிங் அரசாங்கம் அளித்த, நாட்டுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய அளவற்ற சலுகைகளை மோடியோ அல்லது ஊடகங்களோ ஒருபோதும் கேள்விக்குட்படுத்தியதில்லை.
முகவர், பிறகு பிரதமர்
நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சரானபோது, உலக வங்கி மற்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கொள்கைகளையும் ஆலோசனைகளையும் செயல்படுத்தும் ‘முகவர்’ஆக சிங் இருந்தார். பின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பிரதமரானபோதும் அதே கொள்கைகளைப் பின்தொடர்ந்தார். தனியார்மயமாக்கலின் பெயராலும் தாரளமயமாக்கலின் பெயராலும் குறுங்குழுவாத முதலாளித்துவம் ஊக்குவிக்கப்படுகிறபோது, ஊழல் பெருக்கெடுப்பது தவிர்க்க முடியாதது. அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த ஊழல்களால் பலன்பெறுவது பெருமளவு தடுக்கப்பட்டு, எல்லா லாபங்களும் பெருநிறுவனங்களுக்கே சென்றிருக்கும் பட்சத்தில் சிங் நேர்மையின் திருவுருவ மாக ஊடகங்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டிருப்பார்.
இரண்டு நல்ல விஷயங்கள்
சிங்கின் ஆட்சியில் நடந்த இரண்டு நல்ல விஷயங்கள் என்றால், அவை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமும் தகவலறியும் உரிமைச் சட்டமும்தான். இவை இரண்டையுமே சிங் மனமுவந்து நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை. முதலாவது, இடதுசாரிக் கட்சிகளும் சிந்தனையாளர்களும் தந்த அழுத்தத்தால் உருவானது. பின்னது, அருணா ராய், நிகில் டே, கேஜ்ரிவால் போன்றவர்கள் தந்த அழுத்தத்தால் உருவானது. இவை இரண்டையும் சோனியா காந்தி வலுவாக ஆதரித்ததால் அவற்றை சிங் அரசு அமல்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக