செவ்வாய், 9 செப்டம்பர், 2014

Water to Tamilnadu

ணம் என்றாலும், தண்ணீர் என்றாலும், வரும்போது சேமித்து வைத்தால்  பின்னால் தட்டுப்பாடு நிலவும்போது சமாளிக்க உதவும். இந்த வகையில்,  தமிழகத்தில் பெய்யும் மழையின் அளவு அதிகமாக இருந்தபோதிலும்,  அதை சேமித்து வைப்பதற்கு உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை  என்பதால் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது.  இதனால், மக்கள் படும்பாட்டைப் பார்த்தால் சொல்லி மாளாது. இதை  எப்படி சமாளிக்கலாம் என்று ஆட்சியாளர்கள் சிந்தித்து செயல்பட்டால்  பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம். தண்ணீரில் தன்னிறைவு  தமிழகத்தில் சாத்தியமே என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்பு  சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின்  நிபுணர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கருத்துக்களை  அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது காலத்தின் கட்டாயம் என்பது  புரிந்து கொள்ள முடிந்தது. தமிழகம், தண்ணீர் பற்றாக்குறை மாநிலம்  என்றும், அது கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலத்தை சார்ந்து  இருக்கிறது என்றும் பரவலாக கருத்து உள்ளது. இந்த சிந்தனை  தவறானது. காரணம், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டு சராசரி  மழையளவு 925 மி.மீ, ஆந்திராவில் 908 மி.மீ, கர்நாடகாவில் 732 மி.மீ  என்ற அளவில்தான் உள்ளது. அதிலும், சென்னையில்தான் அதிக  அளவில் மழை பெய்கிறது. மாநிலத்தில் பருவ காலத்தில் பெய்யும் மழை  நீரை சேமித்து வைத்து பயன்படுத்தினால் தமிழகத்தில் தண்ணீர்  பிரச்னையை எளிதில் சமாளிக்கலாம். ஏன் தட்டுப்பாடே இருக்காது என்ற  கருத்து முன்வைக்கப்பட்டது. 

ஆனால், மழை நீரை சேமித்து வைப்பதில் பல்வேறு பிரச்னைகள்  உள்ளன. அதாவது தமிழகத்தில் ஆண்டுக்கு அணைகள் மூலம் மொத்தம்  833 டிஎம்சியும் நிலத்தடி நீர் ஆதாரத்தால் 425 டிஎம்சியும், ஏரிகள்,  குளங்கள் மூலம் 390 டிஎம்சியும் தண்ணீர் சேமிக்க வசதி உள்ளது என்று  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மை நிலவரம் என்பது  வேறாக உள்ளது. அதாவது, இந்த அளவுக்கு தண்ணீர் சேமிக்கப்படுவது  இல்லை என்பதுதான் நிதர்சனம். இதற்கு என்ன காரணம் என்றால்,  அணைகள் கட்டப்பட்ட காலத்தில் இருந்து தூர் வாரப்படாமல் உள்ளன.  அணைகளில் வண்டல் மண் படிவால் 30 முதல் 40 சதவீதம் தண்ணீரை  சேமித்து வைக்க முடிவதில்லை. அதேபோல கண்மாய்கள், குளங்களை  தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. பல ஏரிகள், குளங்கள்  குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டது. இதனால், சுமார் 250 டிஎம்சி  அளவுக்கு தண்ணீர் வீணாகிறது. இந்த தண்ணீர் கடலில் கலந்து  வீணாகிறது. முன்பு எல்லாம் கோடைக் காலத்தில் ஏரி, கண்மாய்கள்  தூர்வாரப்படும். இதனால், விவசாயிகளுக்கும் விவசாய கூலித்  தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்போது,  நூறு நாள் வேலை திட்டத்தில் ஏதாவது ஒரு பணியைத்தான்  செய்கின்றனர். இதனால், விவசாயப் பணிக்கு போதிய பணியாளர்கள்  கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தங்களது விவசாயத்தையே  விட்டுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மானாவரி விவசாயப்  பகுதிகளில் விவசாயம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆந்திர மாநில பொதுப்பணித்துறை, மழையின் மூலம் கிடைக்கும் நீரை  சேமித்து வைக்கும் பொருட்டு, 2004 முதல் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி  செலவில் மத்திய அரசு நிதி மூலம், அணைகள் புனரமைப்பு, தடுப்பணை,  குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு விவசாய  பணிகளை செய்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் மத்திய அரசு  நிதியுதவி மூலம் பல்வேறு திட்டப் பணிகள் நீண்டகால திட்டத்தின்  அடிப்படையில் செயல்படுத்துவதன் மூலம் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர  தீர்வு காண முடியும் என்ற யோசனையை இந்த கருத்தரங்கில்  பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் வீரப்பன்  முன்வைத்தார். இந்த யோசனையை அரசு பரிசீலித்தால், தண்ணீரை  சேமிப்பதன் மூலம் தமிழகம் விவசாயத்தில் வளம் பெறுவதோடு,  கிராமங்களில் வேலைவாய்ப்பையும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக