
புதுச்சேரியில் அரசியல் கட்சி ஒன்றின் வன்முறையினால் உடைந்து போன தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்து. | கோப்புப் படம்: டி.சிங்காரவேலு.
இந்தியாவுக்கு 2014-ம் ஆண்டில் பல்வேறு வன்முறை சம்பவங்கலால் 342 பில்லியன் டாலர்கள் (34.2 ஆயிரம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.7 சதவீதம் என்கிறது பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்.
இந்தியாவை நசுக்கும் வன்முறைகள், 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியப் பொருளாதாரத்தில் 34.2 ஆயிரம் கோடி ரூபாய்களை விழுங்கி இருக்கின்றன என்கிறது பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்.
இந்தியாவின் வன்முறையின் தாக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் தேசியப் பொருளாதாரத்தில் 2014-ம் ஆண்டில் 34.2 ஆயிரம் கோடிகளை விழுங்கியுள்ளது என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீதம் மற்றும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தோராயமாக 17 ஆயிரத்து 515 ரூபாய்கள் என்கிறது ஓர் ஆய்வு.
உலக அமைதிக் குறியீட்டுப் பட்டியலில் தெற்காசியாவின் 7 நாடுகளில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது இந்தியா.
கடந்த 8 வருடங்களாக, உலக அமைதிக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியா வெளி மோதல்கள், அரசியல் பயங்கரவாதம் மற்றும் குற்றவியல் தொடர்பான விவகாரங்களினாலேயே அதிகம் சீர்கேடு அடைந்தது.
முதல் உலக அமைதிக் குறியீட்டெண்ணைப் பெற்றிருப்பது ஐஸ்லாந்து. தொடர்ந்து டென்மார்க்கும் ஆஸ்திரியாவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மற்றும் செக் குடியரசு நாடுகள் முதல் பத்து இடங்களில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
சர்வதேச அளவில், வன்முறையின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தை 14.3 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பீட்டுக்கு உட்படுத்தி இருக்கிறது. இது மொத்த உலக உற்பத்தியில் 13.4 சதவீதம்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அமைதிக் குறியீட்டுப் பட்டியலின் மத்திய இடங்களில் இருக்கின்றன.
அதே நேரத்தில் ஈராக், சிரியா, நைஜீரியா, தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகள், பட்டியலின் கடைசியில் குறைவான அமைதியோடு இருக்கின்றன.
"2014-ம் வருட ஆய்வு இரண்டு முரண்பாடான போக்குகளைக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் நிறைய நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டுவிட்ட நிலையில், சண்டைகளையே பிரதானமாகக் கொண்ட, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகள் அதிகம் வன்முறை மிகுந்தவையாக மாறி இருக்கின்றன" என்கிறார் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக தலைவருமான ஸ்டீவ் கில்லேலியா.
இந்தியாவை நசுக்கும் வன்முறைகள், 2014-ம் ஆண்டில் மட்டும் இந்தியப் பொருளாதாரத்தில் 34.2 ஆயிரம் கோடி ரூபாய்களை விழுங்கி இருக்கின்றன என்கிறது பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்.
இந்தியாவின் வன்முறையின் தாக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் தேசியப் பொருளாதாரத்தில் 2014-ம் ஆண்டில் 34.2 ஆயிரம் கோடிகளை விழுங்கியுள்ளது என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீதம் மற்றும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தோராயமாக 17 ஆயிரத்து 515 ரூபாய்கள் என்கிறது ஓர் ஆய்வு.
உலக அமைதிக் குறியீட்டுப் பட்டியலில் தெற்காசியாவின் 7 நாடுகளில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது இந்தியா.
கடந்த 8 வருடங்களாக, உலக அமைதிக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியா வெளி மோதல்கள், அரசியல் பயங்கரவாதம் மற்றும் குற்றவியல் தொடர்பான விவகாரங்களினாலேயே அதிகம் சீர்கேடு அடைந்தது.
முதல் உலக அமைதிக் குறியீட்டெண்ணைப் பெற்றிருப்பது ஐஸ்லாந்து. தொடர்ந்து டென்மார்க்கும் ஆஸ்திரியாவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மற்றும் செக் குடியரசு நாடுகள் முதல் பத்து இடங்களில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
சர்வதேச அளவில், வன்முறையின் தாக்கம் உலகப் பொருளாதாரத்தை 14.3 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பீட்டுக்கு உட்படுத்தி இருக்கிறது. இது மொத்த உலக உற்பத்தியில் 13.4 சதவீதம்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் அமைதிக் குறியீட்டுப் பட்டியலின் மத்திய இடங்களில் இருக்கின்றன.
அதே நேரத்தில் ஈராக், சிரியா, நைஜீரியா, தெற்கு சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகள், பட்டியலின் கடைசியில் குறைவான அமைதியோடு இருக்கின்றன.
"2014-ம் வருட ஆய்வு இரண்டு முரண்பாடான போக்குகளைக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் நிறைய நாடுகள் அமைதிக்கான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றியும் கண்டுவிட்ட நிலையில், சண்டைகளையே பிரதானமாகக் கொண்ட, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகள் அதிகம் வன்முறை மிகுந்தவையாக மாறி இருக்கின்றன" என்கிறார் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக தலைவருமான ஸ்டீவ் கில்லேலியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக