வியாழன், 22 மே, 2014

நோட்டா -2014

நோட்டா சொல்வது என்ன?
கேட்கச் சற்று அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனாலும் இது நேரடியாக உணர்ந்த உண்மை. அப்போது 49 ஓ, நோட்டா என்கிற நவீன தேர்தல் மறுப்பு வடிவங்களெல்லாம் வரவில்லை. இப்போது முன் னேற்றம். நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் தமிழகத் தில் மட்டும் 5.5 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித் திருக்கிறார்கள். அதாவது 1.4%. புதுவையில் 3%. அகில இந்திய அளவில்1.1% - சுமார் 59 லட்சம் பேர்.
இது தவிர, வாக்களிக்காமலே இருந்துவிட்டவர்கள் சில கோடிப் பேர். இந்த விதமான புறக்கணிப்பு மனோபாவம் ஏன் வளர்ந்துவருகிறது என்று எந்த அரசியல் கட்சியாவது சுயபரிசீலனை செய்திருக்கிறதா?
இப்படி இருந்தாலும், எதை அளவுகோலாக வைத்துக் கொண்டு தங்களுக்கான பிரதிநிதிகளை வாக்காளப் பெருமக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு தொண்டுநிறுவனம் கொடுத்திருக்கிற கணக்கு வியக்கவைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி-க்களில் மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, அ.தி.மு.க. என்று பல கட்சிகளும் இதில் அடக்கம். மொத்த எம்.பி-க்களில் 442 பேர் கோடீஸ்வரர்கள் (அவர்கள் காட்டியுள்ள குறைந்தபட்ச சொத்துக் கணக்குப்படி)

**********************************************************

நேர்மையாளர்களுக்குத் தண்டனை
சின்ன ஃப்ளாஷ்பேக் பார்க்கலாமா? நேர்மையான, எளிமையான, ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை கொண்ட, சொத்து சேர்க்காத அரசியல்வாதியான காமராஜர் 1967-ல் விருதுநகரில் மாணவர் தலைவரான சீனிவாசனைவிட 1,285 வாக்குகள் குறைவாகப் பெற்றுத் தோல்வியடைந்தபோது சொன்னார்: ‘‘மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்.’’
எளிமைக்குப் பெயர்போன இன்னொரு தலைவரான கக்கன் 1967 தேர்தலில் மேலூரில் ஓ.பி. ராமனிடம் தோற்றுப்போனார். பிறகு, 1971-ல் பெரும்புதூரில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது அங்கும் தோற்கடிக்கப்பட்டார்.
கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி 1977-ல் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி யடைந்தார். சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயரெடுத்த இரா. செழியன் 1984-ல் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை வைஜயந்தி மாலாவிடம் தோற்றுப்போனார்.
தற்போது வாழும் அரசியல்வாதிகளில் நேர்மைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு தனது போராட்டங்களுக்காகப் பல முறை சிறை சென்றவர்; ஆற்று மணலை எடுப் பதை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தியிருப்பவர். அவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிட்டபோது அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை.
தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு அணை, ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் என்று பலவற்றுக்காகவும் போராடிய வைகோ இலங்கைப் பிரச்சினைக்காக 19 மாதங்கள் பொடா சிறையில் இருந்தவர். இருந்தபோதும் 2004-ல் காங்கிரஸ் வேட்பாளரான மாணிக் தாகூரிடம் தோற்ற வைகோ, நடந்துமுடிந்த தேர்தலில் அதே விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றிருக்கிறார்.
அணுசக்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டி ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுப. உதயகுமாருக்குக் கிடைத்த வாக்குகள் 15,314 மட்டுமே.
************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக