மக்களவைப் பொதுத் தேர்தலில் வாக்களிக்காத குடியரசுத் தலைவர்களின் பட்டியலில் பிரணாப் முகர்ஜியும் சேரவிருக்கிறார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம்: “குடியரசுத் தலைவர் கள் தங்களுடைய நடுநிலையைக் காப்பதற்காகத் தேர்தலில் வாக்களிப் பதில்லை.”
தெற்கு கொல்கத்தாவில் வாக்காளராகத் தன்னைப் பதிவுசெய்து கொண்டுள்ளார் முகர்ஜி. அவர் வாக்களிப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில்தான் “இதற்கு முன்னர் பதவிவகித்த குடியரசுத் தலைவர்களில் பெரும்பாலானவர்களின் அடியொற்றி, நடுநிலையைக் காக்க, வாக்களிப்பதில்லை என்ற முடிவை பிரணாப் முகர்ஜி எடுத்திருக்கிறார்’’ என்று அவருடைய பத்திரிகைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
காலாவதியான, அர்த்தமற்ற ஒரு மரபுக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக் கிறார் முகர்ஜி. 1998-ல் கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலை வராகப் பதவிவகித்தபோது, டெல்லியில் ஒரு வாக்குச்சாவடியில் இதர வாக்காளர்களுடன் அவரும் நின்று வாக்களித்து, ஒரு முன்னு தாரணத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பிறகு அப்துல் கலாமும், பிரதிபா பாட்டீலும்கூட வாக்களித்தனர். அவர்களையெல்லாம் நடுநிலை தவறியவர்கள் என்று யாரும் குற்றம்சாட்டவில்லை.
அரசு தெருவுக்குத் தெரு, “வாக்களிப்பது உங்கள் கடமை” என்று நாட்டு மக்களுக்குத் தேர்தல் ஆணையம் மூலம் அறிவுறுத்திக்கொண்டு அதற்காகக் கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு விளம்பரப் படுத்திக்கொண்டிருக்கும்போது, முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதல் குடிமகன் வாக்களிக்காததும் அதற்கு நடுநிலையைக் காரணம் கற்பிப்பதும் எந்த வித நியாயம்? மேலும், நாட்டை இந்தக் கட்சிதான் ஆள வேண்டும் அல்லது இவர்கள் ஆளக் கூடாது என்று வாக்களிப்பது எப்படி நடுநிலை தவறியதாகும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக