அரசியல் வரலாற்றில் இன்னொரு மகத்தான நாள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க மக்களின் தீர்ப்பு வெளியாகும் நாள்.35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்...543 மக்களவை தொகுதிகள்... 9 கட்ட ஓட்டுப்பதிவுகள்... 81 கோடியே 45 லட்சம் வாக்காளர்கள்...9 லட்சத்து 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள்...என பிரமாண்டங்களின் பிரமாண்டமாய் முடிந்தது 72 நாள் பரபரப்பு.மார்ச் 5ம் தேதி தேர்தல் அறிவித்ததில் இருந்து இன்றுவரை ஒப்பிட முடியாத அளவுக்கு பெரும் தேர்தல் திருவிழா முடிவுக்கு வருகிறது. முதன்முதலில் 1952ல் மக்களவை தேர்தல் நடந்தபோது ஒரு வாக்காளருக்கு 60 காசு என்ற அளவில் மொத்தம் தேர்தல் செலவு 10 கோடியே 45 லட்சம் ரூபாய். இப்போது எவ்வளவு தெரியுமா? ஒரு வாக்காளருக்கு 12 ரூபாய் வீதத்தில் மொத்த செலவு 3426 கோடி ரூபாய்.
மொத்தத்தில் வியப்பின் உச்சிக்கே போக வைக்கும் தேர்தல் நம்முடையது என்றால் மிகையல்ல. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட நம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்றால் உலக ‘பெரியண்ணனே’ வியக்கத்தானே செய்வார்.தேர்தலில் யார் வரப்போகின்றனர்? யார் பிரதமர் என்றெல்லாம் வாக்காளராக மக்களும், கட்சிகளும் கணக்கு போட்டாலும், உலக நாடுகள் நம்மை பார்க்கும் பார்வையே வேறு.உலகமகா ஜனநாயக நாடு என்று மார்தட்டிக்கொண்டாலும், நாம் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் விகிதத்தில் ஐந்து சதவீதத்தை கூட தாண்டவில்லை. சீனாவை ஒரு நாள் இந்தியா பின்னுக்கு தள்ளும் என்று சொன்னாலும், அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு விகிதம் 8 சதவீதம் என்றால் நமக்கே பொறாமையாகத்தான் உள்ளது.
ஏழ்மையை ஒழிப்போம்...வல்லரசாவோம் என்று என்னதான் முழங்கினாலும் உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியர் என்பது வேதனையான ஒன்றே. மற்ற நாடுகளில் பணக்காரர்களாக உயர்வோர் அதிகம். இந்தியாவில் பணக்காரர்களை விட, ஏழைகள் அதிகம்.உலகில் தேர்தல் செலவு அதிகமாக செய்வதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 2012ல் ரூ.42000 கோடி செலவழிக்கப்பட்டது. இந்திய மக்களவை தேர்தலில் மொத்த அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரசாரத்துக்கு செலவு செய்ததை கணக்கிட்டால் 30 ஆயிரம் கோடியை தாண்டுமாம்.இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இது தேர்தலிலும் எதிரொலிக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 80 கோடி பேர் அதாவது, 65 சதவீதம் பேர் இளைய வயதினர். அதுபோல, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையும் 48.5 சதவீதமாக அதிகரித்துள்ளது மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.
இந்தியாவில் பொருளாதார தாராளமய கொள்கை முதன்முதலில் 1991ல் பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோதுதான் அமலாக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த, இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்தான் முழு அளவில் தாராளமய கொள்கையை புகுத்தினார்.அதன் விளைவுதான், அந்நிய முதலீடு, ஒத்துழைப்பு என்று பலவும் இந்தியாவில் பரவி நிற்பதும், அந்நிய செலாவணி அதிகரித்திருப்பதும், மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதும், வேலைக்கு போவதும் அதிகரித்துள்ளது.சாதாரண காய்கறி முதல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரை அன்றாடம் அனுபவிக்கும் மாத சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பு அதிகம். என்னதான் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வேலை கிடைக்கிறது; பத்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றெல்லாம் பரபரப்பாக பேசினாலும், வேலையில்லா திண்டாட்டம் குறைவதாக சொன்னாலும், படித்தவர்கள் மத்தியில் குறையவில்லை என்பதும் மூடி மறைக்க முடியாத உண்மை. அதனால் இளைஞர்கள், படித்த, உழைக்கும் வர்க்கத்தின் எதிர்பார்ப்பு அதிகம்.
மொத்தத்தில் வியப்பின் உச்சிக்கே போக வைக்கும் தேர்தல் நம்முடையது என்றால் மிகையல்ல. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட நம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்றால் உலக ‘பெரியண்ணனே’ வியக்கத்தானே செய்வார்.தேர்தலில் யார் வரப்போகின்றனர்? யார் பிரதமர் என்றெல்லாம் வாக்காளராக மக்களும், கட்சிகளும் கணக்கு போட்டாலும், உலக நாடுகள் நம்மை பார்க்கும் பார்வையே வேறு.உலகமகா ஜனநாயக நாடு என்று மார்தட்டிக்கொண்டாலும், நாம் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் விகிதத்தில் ஐந்து சதவீதத்தை கூட தாண்டவில்லை. சீனாவை ஒரு நாள் இந்தியா பின்னுக்கு தள்ளும் என்று சொன்னாலும், அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு விகிதம் 8 சதவீதம் என்றால் நமக்கே பொறாமையாகத்தான் உள்ளது.
ஏழ்மையை ஒழிப்போம்...வல்லரசாவோம் என்று என்னதான் முழங்கினாலும் உலக ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியர் என்பது வேதனையான ஒன்றே. மற்ற நாடுகளில் பணக்காரர்களாக உயர்வோர் அதிகம். இந்தியாவில் பணக்காரர்களை விட, ஏழைகள் அதிகம்.உலகில் தேர்தல் செலவு அதிகமாக செய்வதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 2012ல் ரூ.42000 கோடி செலவழிக்கப்பட்டது. இந்திய மக்களவை தேர்தலில் மொத்த அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரசாரத்துக்கு செலவு செய்ததை கணக்கிட்டால் 30 ஆயிரம் கோடியை தாண்டுமாம்.இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இது தேர்தலிலும் எதிரொலிக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 80 கோடி பேர் அதாவது, 65 சதவீதம் பேர் இளைய வயதினர். அதுபோல, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையும் 48.5 சதவீதமாக அதிகரித்துள்ளது மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.
இந்தியாவில் பொருளாதார தாராளமய கொள்கை முதன்முதலில் 1991ல் பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோதுதான் அமலாக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த, இப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்தான் முழு அளவில் தாராளமய கொள்கையை புகுத்தினார்.அதன் விளைவுதான், அந்நிய முதலீடு, ஒத்துழைப்பு என்று பலவும் இந்தியாவில் பரவி நிற்பதும், அந்நிய செலாவணி அதிகரித்திருப்பதும், மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதும், வேலைக்கு போவதும் அதிகரித்துள்ளது.சாதாரண காய்கறி முதல் காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரை அன்றாடம் அனுபவிக்கும் மாத சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பு அதிகம். என்னதான் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வேலை கிடைக்கிறது; பத்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றெல்லாம் பரபரப்பாக பேசினாலும், வேலையில்லா திண்டாட்டம் குறைவதாக சொன்னாலும், படித்தவர்கள் மத்தியில் குறையவில்லை என்பதும் மூடி மறைக்க முடியாத உண்மை. அதனால் இளைஞர்கள், படித்த, உழைக்கும் வர்க்கத்தின் எதிர்பார்ப்பு அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக