வியாழன், 22 மே, 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி - தமிழகத்தின் மின் ஆதாரங்களில் முக்கிய இடம்

தமிழகத்தின் மின் ஆதாரங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் முதன்மை மேலாளர் ஒருவர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 50 ஆண்டுகள் பழமையான முதலாவது மின் நிலையத்தின் கொதிகலன் குழாய் அதிக அழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. நெய்வேலியில் முதல்முதலாக பழுப்பு நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டு 57 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி விழா கொண்டாட இருந்த நாளில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.விபத்துக்கு காரணம், பராமரிப்பு பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமே என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி 1950களில் தோண்டி எடுக்கப்பட்டதும், அதை பயன்படுத்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டது. மொத்தம் 9 யூனிட்களை கொண்ட முதலாவது மின் நிலையம் 1962 முதல் 1970 வரை ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்டன. 

மொத்தம் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்த முதலாவது மின் நிலையத்தில் இருந்து தமிழகம், புதுவைக்கு மின்சாரம் சப்ளை ஆகிறது. இந்த மின் நிலைய யூனிட்களின் ஆயுட்காலம் எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால், ஆயுட்கால நீடிப்பு என்ற சீரமைப்பு பணிகளை கடந்த 1992ல் தொடங்கி 1999 வரை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்.எல்.சி) மேற்கொண்டது. இதன் மூலம் 2017 வரை முதலாவது மின் நிலையத்தின் ஆயுள் நீடிக்கப்பட்டதாக என்.எல்.சி கூறுகிறது. இப்படி ஆயுள் நீடிக்கப்பட்ட மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து என்.எல்.சி ஊழியர்களை மட்டுமல்லாது தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெரிய ஆலைகளில் எதிர்பாராமல் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாததுதான். 

ஆனால், முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்தால் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டிருக்காது என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இதுபோன்ற பழைய மின் நிலையங்களில் அதன் முழு உற்பத்தி திறன் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதே விபத்துக்கு காரணம் என்று தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள வாதத்தையும் ஒதுக்கிவிட முடியாது.  பழைய மின் நிலையத்தில் சற்று குறைவாக மின்சாரம் உற்பத்தி செய்தால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்த்துவிடலாம் என்று அவர்கள் யோசனை கூறியுள்ளனர். தமிழகம், புதுவையின் மின்சார தேவையை கருத்தில் கொண்டே இதுபோன்ற 50 ஆண்டு பழமையான மின்நிலையங்கள் இயக்கப்படுவதாக என்.எல்.சி தலைவர் சுரேந்தர் மோகன் தெரிவித்துள்ளார். 

இதற்கு மாற்றாக 2017க்குள் புதிய மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், முன்னதாக முதலாவது மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி அளவு 300 மெகாவாட்டாக குறைக்கப்பட உள்ளதாகவும் கூறியிருக்கிறார். மி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக