மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவு உறுதிச் சட்டம், கல்விபெறும் உரிமைச் சட்டம், வன நிலங்களில் வனவாசிகள் பயன்பெறுவதை உறுதிசெய்யும் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தொழில் வளர்ச்சிக்காக நிலங்களைக் கையகப் படுத்தும்போது விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்கான சட்டம், ஊனமுற்றவர்களுடைய நல்வாழ்வுக்கான சட்டம் என்று சமூகநலத் திட்டங்களில் அவருடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன.
முதல் ஐந்தாண்டில் பொருளாதாரம் சராசரியாக 8.42% என்ற அளவில் வளர்ந்தது. 2006-07-ல் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 9.57% என்று சாதனை படைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.70% ஆகக் குறைந்தது. கடைசி இரு ஆண்டுகளில் 5%-க்கும் கீழே போய்விட்டது.
********************************
காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்காக மன்மோகன் சிங் பாராட்டப்பட்டாலும் காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், நிலக்கரி வயல் குத்தகை ஊழல், முக்கியப் பிரமுகர்களுக்காக வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழல் என்று அடுத்தடுத்து ஊழல்களாக வெளிப்பட்டதால், மன்மோகனின் மீதிருந்த மரியாதை குறைந்து வெறுப்பே மிஞ்சியது.
முதல் ஐந்தாண்டில் பொருளாதாரம் சராசரியாக 8.42% என்ற அளவில் வளர்ந்தது. 2006-07-ல் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 9.57% என்று சாதனை படைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.70% ஆகக் குறைந்தது. கடைசி இரு ஆண்டுகளில் 5%-க்கும் கீழே போய்விட்டது.
********************************
காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்காக மன்மோகன் சிங் பாராட்டப்பட்டாலும் காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், நிலக்கரி வயல் குத்தகை ஊழல், முக்கியப் பிரமுகர்களுக்காக வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழல் என்று அடுத்தடுத்து ஊழல்களாக வெளிப்பட்டதால், மன்மோகனின் மீதிருந்த மரியாதை குறைந்து வெறுப்பே மிஞ்சியது.
குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், தங்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று அவர் இயற்றிய அவசரச் சட்டம் (பின்பு ராகுல் தலையீட்டால் திரும்பப் பெறப்பட்டாலும்) அவர் மீதான மிச்ச சொச்ச நம்பிக்கையையும் துடைத்தெறிந்தது.
தன்னை விமர்சித்தோர், கண்டித்தோர், எதிர்த்தோர் என்று பலர் எரிச்சலூட்டிக்கொண்டிருந்தாலும் தனிப்பட்ட முறையில் பொறுமையையும் கண்ணியத்தையும் இழக்காத கனவானாகவே அவர் நினைவுகூரப் படுவார். பல சந்தர்ப்பங்களில் ‘பேசாமல் பேசியது' அவருடைய ‘மௌனம்'தான் என்றால் மிகையாகாது.
*******************************
இந்தியா போன்ற 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், அரசியல் அனுபவமே இல்லாமல், மக்களால் நாடாளுமன்றத்துக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், நேரு குடும்பத்தில் பிறக்காமல், ஒருவரால் பிரதமர் பதவியில் அமர்ந்து 10 ஆண்டுகளை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்திருப்பது சாதாரண விஷயமல்ல.
பொருளாதாரப் பேராசிரியர், ரிசர்வ் வங்கி கவர்னர், பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் அமைச்சரவையில் நிதியமைச்சர், பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சூத்திரதாரி என்று பல அவதாரங்களை எடுத்த மன்மோகன் சிங்கை பிரதமராக சோனியா காந்தி தேர்வுசெய்தது மிகப் பெரிய ஆச்சரியம். நேர்மையாளர், சுயநலம் இல்லாதவர், கர்வப்படாதவர், தன்னைப் பிரதமர் பதவியில் அமர்த்திய சோனியாவின் கண்ணசைவுக்கு ஏற்பச் செயல்பட்டவர் என்பதிலெல்லாம் சந்தேகமே இல்லை.
அவருடைய 10 ஆண்டு பதவிக் காலம் வலுவான பொருளாதார நிர்வாகம், சமூக ஒற்றுமை, வறுமை ஒழிப்பில் நடவடிக்கைகள், சமூகநலத் துறையில் சிறப்பான செயல்பாடு என்ற வெற்றிகளையும் கொள்கை வகுப்பதில் தீர்மானமாகச் செயல்பட முடியாத தேக்கநிலை, வரலாறு காணாத ஊழல்கள், அரசில் இடம்பெற்றுள்ள மற்றவர்களை அடக்கியாள முடியாத வலுவற்ற நிலை என்ற தோல்விகளையும் கொண்ட கலவை.
1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் என்பது தான் அவர் பிரதமர் பதவியில் அமர்வதற்கான தகுதியாக இருந்தது. அவரைப் பிரதமராகக் கொண்டுவந்ததன் நோக்கம் ஓரளவுக்குத்தான் நிறைவேறியது. பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்த மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவிக்காலத்தின் பிற்பகுதியில், அதே பொருளாதார நிலை தேக்கமடைந்தது, பணவீக்க விகிதம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது, தொழில் துறையில் உற்பத்தி குறைந்து வீழ்ச்சியாக மாறிவிட்டது, நிறுவனங்களின் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யவே சாதாரண முதலீட்டாளர்கள் தயங்கும் காலமாகிவிட்டது
***********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக