உலகளவி¢ல் இந்த நிறுவனம் 114 நாடுகளில் மேற்கொண்ட முதல் விரிவான ஆய்வில்தான், நோய் எதிர்ப்பு சக்தி என்கிற மருந்து இனி செயல்படாது. அதை விட கூடுதல் சக்தியுடன் நோய்களை பரப்பும் ‘சூப்பர் பக்’ என்கிற கிருமியின் செயலாற்றல் உள்ளது என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
‘சூப்பர் பக்’ என்கிற நோய் பரப்பும் கிருமி எப்படி சக்தி வாய்ந்ததாக வளர்ந்து மனித குலத்திற்கு எமனாக மாறியிருக்கிறது என்கிற தகவல்தான் அதிர்ச்சி அளிக்கிறது. மனித தவறுகள் குறிப்பாக சுகாதாரமின்மை மற்றும் வணிகநோக்கம் ஆகியவையே இதற்கு முக்கிய உள்காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், அந்த நோயை குணப்படுத்துமா என்பதை உறுதிப்படுத்தாமல், சில மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. தேவையில்லாத நிலையிலும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை நோயாளிகளுக்கு அளிப்பது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து தட்டுப்பாடு காரணமாக, இருப்பில் இருக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதும், ஓவர் டோஸ் மற்றும் குறைந்த டோஸ் மருந்து, மருந்துகளை உரிய காலத்திற்கு நோயாளிகள் எடுத்துகொள்ளாத நிலைகள்தான் ஆன்டிபயாடிக்ஸ் செயல் இழந்துபோன நிலைக்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் சிறு நோய்கள் மற்றும் தொற்று நோய் பாதிப்பு என்கிற சிறு விஷயங்களுக்கு கூட மனிதன் மரணம் அடைய வேண்டும்.
உலகளவில் மனிதனை மிரட்டும் இந்த பிரச்னை, இந்தியாவை பொறுத்தவரை வேறுமாதிரியாக இருக்கின்றன. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்கப்படுகின்றன. அதேபோல எட்டாம் வகுப்பு படித்தவர்கள் மருத்துவர்களாக நடமாடும் நிலை. தரமற்ற தயாரிப்பு மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை பயன்படுத்துவதில் கவனமின்மை ஆகிய காரணங்களும் உள்ளன. குறிப்பாக நோயாளிகளிடம் நோயின் தன்மை, மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் வேலை செய்யாத நிலையில், இறுதியாக நாம் அப்படியே சாக வேண்டுமா என்ன? தேவையில்லை அதற்கும் ஒரு வழியை சொல்லியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
குறிப்பாக, உரிய காலத்தில் தடுப்பு ஊசிகளை பயன்படுத்துவது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத சத்து மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது. நோயின் தன்மையை நுணுக்கமாக அறிந்து சிகிச்சை அளிப்பது என்று செயல்பட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி மனிதன் உடம்பில் அதிகமாக இருக்கும். அதைவிட செலவில்லாமல் ஒரு வழிமுறையை அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆம், கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள். அதுதான் எல்லா நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளி. எமனை கையில் வைத்து கொண்டு கை கழுவி அதை துரத்தாமல், ஆன்டிபயாடிக்ஸ் மருந்து எடுக்க முயற்சிக்கலாமா. மருந்துக்கு விடைகொடுப்போம். சுத்தத்தை வரவேற்போம்.
‘சூப்பர் பக்’ என்கிற நோய் பரப்பும் கிருமி எப்படி சக்தி வாய்ந்ததாக வளர்ந்து மனித குலத்திற்கு எமனாக மாறியிருக்கிறது என்கிற தகவல்தான் அதிர்ச்சி அளிக்கிறது. மனித தவறுகள் குறிப்பாக சுகாதாரமின்மை மற்றும் வணிகநோக்கம் ஆகியவையே இதற்கு முக்கிய உள்காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், அந்த நோயை குணப்படுத்துமா என்பதை உறுதிப்படுத்தாமல், சில மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. தேவையில்லாத நிலையிலும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை நோயாளிகளுக்கு அளிப்பது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து தட்டுப்பாடு காரணமாக, இருப்பில் இருக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதும், ஓவர் டோஸ் மற்றும் குறைந்த டோஸ் மருந்து, மருந்துகளை உரிய காலத்திற்கு நோயாளிகள் எடுத்துகொள்ளாத நிலைகள்தான் ஆன்டிபயாடிக்ஸ் செயல் இழந்துபோன நிலைக்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் சிறு நோய்கள் மற்றும் தொற்று நோய் பாதிப்பு என்கிற சிறு விஷயங்களுக்கு கூட மனிதன் மரணம் அடைய வேண்டும்.
உலகளவில் மனிதனை மிரட்டும் இந்த பிரச்னை, இந்தியாவை பொறுத்தவரை வேறுமாதிரியாக இருக்கின்றன. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்கப்படுகின்றன. அதேபோல எட்டாம் வகுப்பு படித்தவர்கள் மருத்துவர்களாக நடமாடும் நிலை. தரமற்ற தயாரிப்பு மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை பயன்படுத்துவதில் கவனமின்மை ஆகிய காரணங்களும் உள்ளன. குறிப்பாக நோயாளிகளிடம் நோயின் தன்மை, மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் வேலை செய்யாத நிலையில், இறுதியாக நாம் அப்படியே சாக வேண்டுமா என்ன? தேவையில்லை அதற்கும் ஒரு வழியை சொல்லியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
குறிப்பாக, உரிய காலத்தில் தடுப்பு ஊசிகளை பயன்படுத்துவது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத சத்து மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது. நோயின் தன்மையை நுணுக்கமாக அறிந்து சிகிச்சை அளிப்பது என்று செயல்பட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி மனிதன் உடம்பில் அதிகமாக இருக்கும். அதைவிட செலவில்லாமல் ஒரு வழிமுறையை அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆம், கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள். அதுதான் எல்லா நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளி. எமனை கையில் வைத்து கொண்டு கை கழுவி அதை துரத்தாமல், ஆன்டிபயாடிக்ஸ் மருந்து எடுக்க முயற்சிக்கலாமா. மருந்துக்கு விடைகொடுப்போம். சுத்தத்தை வரவேற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக