கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கு 1989ல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி வழங்கப்பட்டபோது, கடலோர கட்டுப்பாட்டு மண்டலம் (1991), பொதுமக்கள் குறைகேட்பு அறிவிக்கை (1994), சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு அறிக்கை போன்ற சட்டங்கள் அமலில் இல்லை. மேலும், 1989க்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் விதிமுறைகளில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.மேலும், இந்த அணு உலை தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே 1998ல் ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், ஏராளமான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. 1989ல் வழங்கப்பட்ட சுற்றுச்சுழல் அனுமதியில், குறிப்பிட்ட விதிமுறை, பரிந்துரைகள் எதையும் தெளிவாக குறிப்பிடாமல், ‘தேவையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்‘ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக