புதன், 29 அக்டோபர், 2014

Asian Infrastructure Investment Bank (AIIB)

A little more than a year after it was broached, a new multilateral bank in Asia — the Asian Infrastructure Investment Bank (AIIB) — was born last week in Beijing, signalling in the process the failure of hectic lobbying by the United States against the move. The bank has 21 signatory- countries, with India being the only major backer apart from China; the rest are the smaller economies of Asia. The event was not without its share of drama as Australia, Indonesia and South Korea pulled out apparently under pressure from the U.S. Yet, it may not have been easy for them, as statements from some of their diplomats show. The three countries, which have extensive trade dealings with China, seem to be still torn between safeguarding their relations with the Asian giant and not displeasing the U.S. It should surprise no one if they decide to take the plunge after watching from the sidelines how the bank develops. The AIIB, along with the other new China-based institution, the BRICS Bank, represents the first major challenge to the U.S.-led global economic order and the 70-year uncontested reign of the Bretton Woods twins. In a way, the IMF and the World Bank have only themselves to blame if they find their dominance under threat, because the seeds of the new bank sprouted from either their inability or unwillingness, or both, to meet the growing funding needs of Asia.
As per the Asian Development Bank’s (ADB) assessment, Asia needs on an average $800 billion of investment in infrastructure annually between now and 2020. Against this, the ADB, dominated by Japan which is also a founding member, lends no more than $10 billion a year for infrastructure. With the American-dominated World Bank and the Europe-led IMF also remaining hamstrung, the need for a multilateral body to finance the growth region of the world was real. The ADB has been cautious in its comments, and understandably so; it can do with support for infrastructure lending, yet needs to safeguard its turf. India, with its participation, has lent heft to the AIIB, which would otherwise have been seen as a Chinese bank backed by membership from lightweight countries of the region. India, which will be the second largest shareholder in the bank, should work with China to ensure that best practices are followed in projects for procurement and materials and in terms of labour and environmental standards. While there is without doubt a geo-political angle to the founding of the bank — which is natural, given that the economic balance of power is shifting to Asia — care should be taken to ensure that it does not become the driving factor in the bank’s functioning. The bank should do what it has been founded for — fund Asia’s infrastructure.

Pannattu niruvanamum - En nattu makkalum


Pathivugal - About the Way of Earnings from bottom line


Greenhouse gas (GHG) emissions

The bold proposals that form the European Union’s (EU) new climate deal set the tone for the best bargain for a global agreement in Paris next year. The decision to cut greenhouse gas (GHG) emissions by 40 per cent by 2030 is ambitious in comparison with the 8 per cent reductions on a 1990 baseline under the Kyoto Protocol. The EU was the lone participant from among the industrialised nations. Last week’s move follows through on the offer made at the 2013 Warsaw United Nations Conference on Climate Change where countries agreed to make voluntary GHG emissions curbs in a post-Kyoto scenario. The mainstay of the overall EU strategy would be the much-touted emissions trading system (ETS). It currently covers over 11,000 power and industrial plants and airlines and about 45 per cent of the total GHG emissions within the bloc. Sectors within the ETS would contribute 43 per cent reductions and those outside 30 per cent by 2030. Other decisions include non-binding commitments to raise the share of renewable sources to 27 per cent in the total energy consumption and an equal proportion to the deployment of energy efficient technologies. The EU deal is subject to similar commitments that may be made by other countries at the Paris summit next year.
With some national capitals from Poland to Portugal pleading special circumstances and others pushing to expand caps into new sectors, the deal was significant for the distance covered than what remains to be done. The European Trade Union Confederation, which represents about 60 million workers, has criticised the targets as too low, that potentially could take away a million jobs created in a low-carbon economy. At the same time, with an eye on the 2015 climate summit, the Prince of Wales’s Corporate Leaders Group backed by over 50 companies representing 4.5 million employees worldwide have advocated a robust EU climate and energy policy. This is a sign of convergence of interest between industry and employee bodies that would be crucial to clinch a global pact in Paris. The record of the Kyoto Protocol shows that countries with a pre-existing high technology base did not achieve the highest emissions reductions, perhaps in view of their lock-in effects. It was the transitional economies of the states of the former Soviet Union that registered impressive reductions. Here may be a lesson for emerging economies such as India to make strategic decisions with an eye on opportunities for the future. The failure of the Copenhagen 2009 summit would undoubtedly temper expectations among EU leaders about a global deal. But Washington has travelled some distance since then and climate sceptics are on the back foot these days. There is thus real potential for progress. 

Brazil’s President Dilma Rousseff

In more ways than one, the re-election of Brazil’s President Dilma Rousseff for a second consecutive term in Sunday’s dramatic run-off represents a replay of the political script in Latin America. The narrative is one where the region’s heads of state usually hold office for successive spells, at times even beyond the stipulated two terms, by means of tinkering with the Constitution. Yet that does not tell the full story of an electorate that is easily forgiving of their leaders. For the repeated massive electoral mandates equally confirm popular faith in the stewardship of the region’s leftist parties, despite the economic challenges facing these countries. The term anti-incumbency seems almost alien to the Latin American lexicon. The verdict received by Ms. Rousseff for another four years would appear above all to be a measure of the popularity of the social protection programmes of the centre-left Workers’ party during its 12-year rule. Such a reading is borne out by the response from Brazil’s vocal and impatient middle classes, who rallied behind the two opposition candidates right through the poll campaign.
During the first-round poll on October 6, it was the popular environmentalist Marina Silva who consistently defied predictions of a surge in support for the incumbent. It was her eventual elimination that pitch-forked Aécio Neves of the centrist Brazilian Social Democracy party — never in the reckoning until then — into the race. Similarly in the run-off, Mr. Neves came within three percentage points of the winning margin. Evidently, the ripples that Ms. Rousseff’s party felt in the run-up to the polls over corruption scandals in the big state oil refineries did little to dent the party’s pro-poor image. Nor was the state of the economy in recession enough to sway voters away. Brazil, as with other countries of the region, may have nearly reached the end of the commodities boom of recent years. The President has, in her second term, some deft balancing to do to retain the support of her political constituency, while formulating policies to ensure macro-economic stability. A new beginning could well be in the offing. During the campaign and after her victory, Ms. Rousseff has acknowledged egregious wrongdoing in the state-owned Petrobras, where she had for a time served as a director. Greater transparency could further enhance Brazil’s growing global economic and political clout. Latin American leaders have emerged as robust champions of democracy with a strong egalitarian thrust. They could do more to safeguard these values. The best of intentions may not justify the erosion of basic institutions. 

http://alexmenon.blogspot.in/


நீர் மேலாண்மை

எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது, ஏனெனில் அவர்கள் வியாபாரிகள். அவர்கள், மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும், மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும், அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள். அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும், ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது 'சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய், கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி' அதனால் இந்தப் பதிவின் எள்ளல் ,துள்ளல், நகை, நட்டு, துப்பல், தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும் .
முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது ? ஒரு விஷயத்தை பொத்தாம்பொதுவாகப் புரிந்து கொள்கிறோமா , அல்லது ஆழமாய் ,அகலமாய் , புத்தகங்கள் , இணையம் வாயிலாக வாசித்தறிகிறோமா? நம்மின் அறிவுக் குறைபாடுதானே நம் சார்ந்த சமூகத்துக்கும் , அந்த சமூகம் பெற்றேடுத்திருக்கும் கலைத் தெய்வங்களுக்கும் இருக்கும்.. அப்படியிருக்க சினிமாக்காரனைச் சாடுவதென்ன முறை ? இப்படி சமூக விஷயங்களைப் பற்றி மேம்போக்கான ஆர்வமும் மேலோட்டமான புரிதலும் கொண்டதனால்தானடா ஒரு நாள் முதல்வர்களால் உங்கள் தமிழகத்தைத் திருத்த முடிகிறது. திருத்தி உங்கள் சில்லறைக் காசுகளைத் திருடி அவர்கள் கல்லா கட்ட முடிகிறது .
ஒரே ஒரு ஹீரோ, அப்படி இல்லன்னா நாலு கோவக்கார இளைஞர்களால யாரையாவது உள்துறை மந்திரி அல்லது முதல் மந்திரியைக் கடத்தி அவர்களின் அறிவுக் கண்களை நாலு வசனத்தில் திறக்க முடிகிறது!
மொத்தத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கான காரணம் நீங்கள் அல்ல ,அதற்கான தீர்வும் உங்களிடம் இல்லை என்ற உங்கள் மொண்ணைப் புரிதலால் தானடா வீராணம் குழாய்க்குள்ளே உக்கார்ந்தா உங்க வீட்டுக் கிணத்துலயும் , வயக்காட்டுலயும் தண்ணி வந்திரும்னு நம்புறீங்க.. கை தட்டித் தட்டிக் காசுக்கு வசனம் பேசுற எல்லாத்தையும் தலைவனா , வாழ்க்கைய உய்விக்க வந்த பெருமானா நினைச்சு , இவரு அரசியலுக்கு வந்தா நல்லாருக்குமா , அவரு வந்தா நம்மளக் காப்பாத்திருவாரான்னு கண்ல ஏக்கத்தோட திரியறீங்க!
சமூகப் பொறுப்பும் நிஜ அக்கறையும், மாற்று அரசியல் பற்றிய அறிவும் , சமூக மாற்றம் கொணர வேண்டும் என்ற துடிப்பும் உள்ளவர்கள் சினிமாத்துறையிலிருந்தும் , மற்ற எந்தத் துறையிலிருந்தும் வரலாம், வரவேண்டும் . ஆனால் முதல் படம் நடித்த உடனே முதல்வர் நாற்காலியில் குத்த வைக்க வேண்டும் என்று விரும்பும் விடலைத்தனங்கள் அல்ல.
சரி முக்கியப் பிரச்சினைக்கு வருவோம் : தமிழகம் தண்ணீரின்றித் தவிக்கிறது , தமிழக விவசாயி தண்ணீர் இல்லாமல் , விளைநிலங்களை விற்றுக் கட்டிடக் கூலியாய் பெருநகரங்களின் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி அழுந்துகின்றான் . யார் காரணம்? கார்ப்பரேட்களா , கொக்காகோலாவா ,பெப்சியா ? அல்லது எல்லையே இல்லாமல் , குடிக்க , கட்ட , விவசாயம் செய்ய ,தண்ணீர் என்னும் வளத்தை சூறையாடிக்கொண்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளா . நம் நதி ,நீர்நிலைகளை மாசுபடுத்த , ஏரிகளைத் தூரத்து பிளாட் போட, 1000 அடி ரெண்டாயிரம் அடி என ஆழ்துளைக் கிணறுகள் இட கிஞ்சித்தும் யோசிக்காமல் செயலில் இறங்கும் மொண்ணைப்புத்திப் பொதுசனமாகிய நாம் காரணமா அல்லது குளிர்பானக் கம்பெனிகளா?
நீரை உறிஞ்ச நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , ஏதோ ஒரு "தன்னாலப் பொங்குற தன்னூத்து" எல்லார் வீட்டுக்கடியிலயும் , வயக்காட்டுக்கடியிலயும் ஓடுதுன்னு புத்திகெட்டு நம்பறதால தானடா ! ஓடி ஓடி உறிஞ்சத் தெரிந்த நாம, மீண்டும் பூமியில் நீர் நிரப்ப என்ன கிழித்தோம் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் , அரைவேக்காட்டு சினிமா வசனங்களுக்கு கைதட்டிப் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து விட்டு , 'டாஸ்மாக்'களில் உங்கள் மூளையையும் , மூலதனங்களையும் அடகுவைத்துக் குடித்துவிட்டு, தமிழன் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் தலைவன் ஒருவன் பிறப்பான் என்று தெருவோரச் சாக்கடைகளில் விழுந்து கிடக்கவோ , இல்லை நடக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கின்லே தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு , பீட்சா சாப்டுட்டு, டிவி பாத்துட்டே வோட்டு கூடப் போடாம குடிப்பணியாற்றிட்டு , உலகத்தையே நொட்டை சொல்லிட்டே காலத்தை கடத்தவோ உன்னால் மட்டும்தான் தமிழா முடியும் .
சரி விஷயத்துக்கு வருவோம்! தமிழகத்தின் நீர்த்தேவைகள் எங்கு, எப்படிப் பூர்த்தியாகிறது ?மழை எது? நதி எது? குளம் எது?அணை எது? கால்வாய் எது? கண்மாய் எது? ஊருணி எது? தண்ணீர் பற்றிய தமிழனின் அறிவு என்ன?
தமிழ்நாட்டில் 3 வேறுபட்ட காலங்களில் மழை பொழிகிறது . தென்மேற்குப் பருவமழையின் போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை ) ஒரு சிறிய மழையும் ,வட கிழக்குப் பருவமழையின் போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அதிகபட்ச மழையையும் ,(ஜனவரி முதல் மே வரை) வறண்ட பருவத்தில் ஒரு சிறிய மழையும் தமிழகத்துக்குக் கிட்டுகிறது .சாதாரண சூழ்நிலைகளில் 945 mm (37.2 in) மழை நமக்குக் கிடைக்கிறது .
தமிழகம் பொதுவில் ஒரு வறண்ட பிரதேசமாக இருந்தாலும், சிலபல வற்றாத ஜீவநதிகளையும் (பாலாறு, செய்யாறு, பொன்னியாறு ,காவேரி, மெய்யாறு, பவானி , அமராவதி, வைகை, சிற்றாறு, தாமிரபரணி) பல பருவகால நதிகளையும்(வெள்ளாறு, நொய்யல், சுருளி ,குண்டாறு இன்னபிற) கொண்டுள்ளது .
முன்னொரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் , ஊருணிகள் அமைக்கப்பட்டன , வணிகர்கள் , அரசர்கள் எல்லாரும் திருப்பணிக்காக ஊருணிகளும் , அவற்றில் தண்ணீர் வந்து சேர கண்மாய்களும் அமைத்தனர் , இவை அல்லாமல் இவற்றைப் பராமரிக்க , "குடிமரம்மத்து" என்றொரு அருமையான பழக்கமும் இருந்தது . ஆறு குளம் கண்மாய்களைத் தூர்வாற , மக்கள் காசுகேட்காமல் (free labour )வேலை செய்தனர் , இன்று தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றொரு அருமையான திட்டம் இருந்தும் , நீர்நிலைகள் நீர்வரத்துகள் அனைத்தையும் கூலி வாங்கிக்கொண்டு பராமரிக்கும் வாய்ப்புக் கிடைத்தபின்பும் , நிழலில் நின்றுகொண்டு , வேலையே செய்யாமல் சிலநூறு 'ஓவா'க்களை வாங்கி டாஸ்மாக்கில் அதையும் கரைத்துக் குடிப்பவன் தானே நீ, தமிழா!
ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது . ஒரு ராசாவுக்கு ஒருநாள் தன்னோட அரண்மனைக் குளத்துல , பால் நிரப்பிக் குளிக்கணும்னு ஆசை வந்திச்சாம், குளத்துத் தண்ணிய எல்லாம் வெளியேத்திட்டு , எல்லா குடிமக்களையும் கூப்பிட்டு , இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து குளத்துல ஊத்தணும்னு உத்தரவு போட்டானாம் , குடிமக்களும் , உத்தரவு ராசாவேன்னுட்டு வீட்டுக்குப் போனாங்களாம் . நாள் விடிஞ்சது , ராசா கண்ணுமுழிச்சுப் பாத்தாராம் , குளத்துல ஒருபொட்டுப் பாலில்ல , வெறும் தண்ணிதான் . எல்லாப் பயலும் , இருட்டுல தான் மட்டும் ஒரு சொம்புத் தண்ணி ஊத்துனாத் தெரியவா போகுதுன்னு , தண்ணி மட்டுந்தான் ஊத்தியிருக்கானுங்க , ஒரு பயலும் பால் ஊத்தல . இப்படித்தான தமிழா உன் கடமைய மறந்துட்டு , நமக்குப் பதிலா வேற எவனாவது வந்து நம்ம பிரச்சினைகளுக்கு தீர்வு குடுப்பான்னு எந்நேரமும் வெளியிலேயே பராக்குப் பார்த்துட்டு இருக்கற ! மழைநீர் சேமின்னு முக்குக்கு முக்கு அரசாங்கம் முழங்குனாலும், நீ இன்னும் போர்வெல் ஆழத்தைக் கூட்டறதுலையே குறியாருக்குற தமிழா!
வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில், நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது , அதனால் தான் , அணைக்கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி, கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து , கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன் , இன்று இந்த நீர்நிலைகளை மாசுபடுத்தவும் , பிளாட் போடவும் , ஆக்கிரமிப்புச் செய்வதும் யார் தமிழா? கொக்ககோலாவா? இல்லை சக தமிழனா ? மிகக் குறைந்த நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நீர் மேலாண்மையைச் சரிவரச் செய்து, விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிறதே? எப்படி , விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிப்பதாலும் , விவசாயத்துக்கு உகந்த நுட்பங்களைக் கடைபிடிப்பதாலும் தானே!
அட இஸ்ரேலை விடு தமிழா! இங்கே பக்கத்திலிருக்கிற மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிர்வே பஜாரின் கதை அறிந்திருக்கிறாயா? 1989இல் குடிகாரக் கிராமமாக , வறட்சி தலை கால் உடம்பு விரித்து ஆடிய பிரதேசமாக இருந்த அந்த சின்னக் கிராமம் இன்று நீர் மேலாண்மை மற்றும் சரியான விவசாய உத்திகளைப் பயன்படுத்தி லட்சாதிபதிகளின் கிராமமாக மாறிய கதை தெரியுமா ?பொபட்ராவ் பவார் என்றொரு பஞ்சாயத்துத் தலைவனின் தலைமையில் , மொத்தக் கிராமமும் அங்கிருந்த 22 மதுக்கடைகளையும் இழுத்து மூடிவிட்டு, நீர்மேலாண்மைக்காக , 52 நீர்ச்சேமிப்புக் குளங்கள் , 2 பொசிவுக் குளங்கள் (percolation tanks ) , 32 கல் வரப்புகள் (stone bunds ), 9 தடுப்பணைகள் எனக் கட்டி எழுப்பியது, கோடிகள் தேவைப்படவில்லை தமிழா ,வெறும் தன்னார்வத் தொண்டும், சில அரசுத் திட்டங்களின் பணமுமே போதுமானதாக இருந்தது . யாரும் கத்திக் கத்தி வசனம் பேசவுமில்லை, எதிரியை வெளியில் தேடவுமில்லை. பிரச்சினைக்கான காரணம், மோசமான நீர் மேலாண்மையே என்பதை உணர்ந்து செயலில் இறங்கினார்கள், சாதித்தும் காட்டினார்கள் .
அங்கு 1995 ல் வருடாந்திர மழை சுமார் 15 அங்குலம் மட்டுமே (தமிழகம் சாதாரணமாகப் பெறுவது 37 அங்குலம் என்பதை கவனத்தில் இருத்து தமிழா!) முதல் பருவமழைக்குப் பின், நீர்ச் சேமிப்பால் , பாசன பகுதி அதிகரித்தது. 2010 ல், கிராமத்தில் மழை 190 மிமீ மட்டுமே கிடைத்தது, ஆனால் நீர் மேலாண்மை நன்கு நிர்வகிக்கப்பட்டதால் , கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் வரவே இல்லை.
நீர் மேலாண்மை அவர்களைப் பல பயிர்கள் அறுவடை செய்ய உதவியது. 1995 க்கு முன், 90 திறந்தவெளிக் கிணறுகள் 80-125 அடியில் தண்ணீர் கொடுத்தன. இன்று, 15-40 அடியில் தண்ணீர் தரும் 294 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளன. பக்கத்து அகமத் நகர் மாவட்டத்தில் மற்ற கிராமங்கள் தண்ணீர் அடைய கிட்டத்தட்ட 200 அடி தோண்ட வேண்டி இருக்கிறது .
1995 ஆம் ஆண்டில், பத்தில் ஒரு பாகம் நிலம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தது, இன்று மொத்த நிலமும் பயிர் செய்யவோ , தீவனப் பயிர் வளர்க்கவோ பயன்படுகிறது . இன்றும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பஞ்சாயத்துத் தலைவர்களும் , உறுப்பினர்களும் , இன்ன பிறரும் ஹிவரே பஜாருக்கு புனிதப் பயணம் போன வண்ணம் இருக்கிறார்கள் . (புள்ளிவிவரங்களுக்கு நன்றி : தெஹெல்கா http://www.tehelka.com/one-village-60-millionaires-the-miracle-of-hiware-bazar/?singlepage=1 )
மொத்த இந்தியாவில் ஒரு ஹிவரே பஜார் மட்டும் தானே , அதனால் தான் நம் அட்டைக்கத்தி கலைஞர்கள் கவனத்துக்கு விஷயங்கள் வராமல் வீராணம் குழாய்க்குள்ள போய் உக்கார வேண்டியதாப் போச்சு என இணையப் போராளிகள் கிசுகிசுப்பது கேட்கிறது , அடப் பதர்களா , கண் திறந்து பாருங்கள் , இணையமெங்கும் இதே போல் வெற்றிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன , பாலைவன ராஜஸ்தானில் , தண்ணீர் மனிதன் என அறியப்பட்ட , மெகசேசே விருது வாங்கிய ராஜேந்திர சிங் என்னும் போராளி, மறைந்த ஆர்வாரி நதியை உயிர்ப்பித்துக் காட்டியது நம் அட்டக்கத்திக் கலைஞர்களின் கவனத்தைக் கவரவில்லை, ஏன்னா அங்க கத்திக் கத்திக் வசனம் பேசி , கொக்கோ கோலா கம்பெனி ரவுடிகளை அடித்துத் துவைத்து, தமிழனுக்கு, அரிப்புக்கு சுகமா சபட் லோஷன் தடவிக் காசக் கறக்க முடியாது பாருங்க. (http://sociovigil.in/rajendra-singh-waterman-of-rajasthan/ )
அது எதுக்குப்பா தமிழா, அடுத்த காந்தி இவருதான்னு நீங்க எல்லாம் டீக்கடைல உக்கார்ந்து பேப்பரும் கையுமா விவாதிச்ச அன்னா ஹசாரேவோட ராலேகான் சித்தி , பாபா ஆம்டேவோட சோம்நாத் மற்றும் ஆனந்த்வன் அப்டின்னு நீ பாக்காத நிஜத் தலைவன்கள், நீர்மேலாண்மை பற்றிப் பக்கம் பக்கமா ,புத்தகம் புத்தகமா பேசியிருக்காங்க . இதெல்லாம் நம்ம பேய்த் தூக்கத்தக் கலைக்கல , ஒரு சினிமா வசனம்தான் நமக்கெல்லாம் மின்னதிர்ச்சி கொடுத்து நம்ம ஞானக் கண்ணத் திறந்து வைக்குது .
Balisana, Bhaonta, Kolyala, Darewadi, Devgaon,Gandhigram,Guriaya, Jhabua, Mahudi,Mandalikpur, Mangarol, Melaghar, Moti morasal,Onikeri, Pallithode, Raj Samadhyala, Ranapur, Rozam, Sayagata , Saurashtra, Sukhomajri இப்படி இன்னும் எடுத்துக்காட்டுகள் இணையம், பத்திரிக்கைகள் பூரா கொட்டிக் கிடக்கு தமிழா, (http://www.rainwaterharvesting.org)
ஆனா பாவம் நம்ம அட்டக்கத்திக் கலைஞர்களுக்குத் தான் காசு மட்டுமே தெரியிற ஒரு 'செலக்டிவ் கம்னாட்டீஷியா' இருக்கு , உன்னிலிருந்து பிறந்த கலைக்கடவுள்கள் உன்ன மாதிரித் தான இருப்பாங்க தமிழா , அதுக்கெதுக்கு ரத்தக் கொதிப்பும் பக்கவாதமும் ஒருசேர வந்த மாதிரிக் கோழை வழியக் , கொக்ககோலா விளம்பரத்துக்கு வந்த தம்பி இப்போ அதே கம்பெனிய எதுத்துப் பேசலாமான்னு , கேணத்தனமா ஒரு கேள்வியக் கேக்குற ? கேட்டு உனக்குப் புத்தி சுவாதீனமில்லன்னு நீயே வெளிக்காட்டிக்கிற!
சரி தமிழா, தூற்றுனவரைக்கும் எனக்கு போரடிச்சிரிச்சு! போற போக்குல கொஞ்சம் கலைச் சொற்கள இங்க தூவிட்டு, நான் கிளம்பறேன்..
1. Rooftop rainwater harvesting
(ஒரு ஆண்டில் ஒரு 100 sq.mts வீட்டில் இருந்து 66,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் . இந்த ரீசார்ஜ்டு நிலத்தடி நீர் , ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சாதாரண குடும்பத்தின் , நான்கு மாத காலத்தியத் தேவைகளுக்குப் போதுமானது )
2. Storm water run-offs management using swales.
3. Creating More Permeable surfaces .
4. Ridge To Valley Approach .
5.Farm ponds
அப்புறம் தமிழா, இன்னும் கொஞ்சம் நிஜ ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன், நமக்குத் தேவை வசனமா, விவேகமான்னு இவங்களப் பாத்து கொஞ்சம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போடுவாங்களே, அந்த சூடப் போட்டுக்க தமிழா ..
http://www.rainwaterharvesting.org/People/Ruraljy.htm
இதெல்லாம் போக , எந்தப் பயிர், எந்த வகை , குறைவாகத் தண்ணீர் கேட்கும் எனப் புரிந்து பயிரிடுவதும் , ஸ்ரீ முறை (SRI -System Of Rice Intensification ,(இப்போது இம்முறை ஏனைய பயிர்களிலும் பயனில் இருக்கிறது ) DSR (Direct Seeding of Rice ) முறை , Micro Irrigation , Crop rotation , Crop Diversification , Organic Farming , Integrated farming இவை பற்றியெல்லாம் நம் விவசாயிகளுக்கு , கழுத்து நரம்பு புடைக்காம , பெப்சிகாரன குறை சொல்லாம பாடம் எடுத்து கொஞ்சம் புரிய வை தமிழா !
முடிவாய் ஒன்றே ஒன்று தமிழா : நம் பிரச்சினைகளுக்குக் காரணங்களும் , காரணிகளும் நமக்கு வெளியில் இல்லை , நமக்குள்ளேயே தான் இருக்கின்றன என்பதை உணர் ! நம் தவறுகள் என்னென்ன , நம் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றம் கொணர்ந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஆய்ந்தறி ! வெறுமே வீர வசனங்களும் , பஞ்ச(!) டயலாக்குகளும் நம் வாழ்வைத் திருத்தி அமைக்கப் போவதில்லை , திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆய்ந்து , தீர்வுகள் அறிந்து , அதைச் செயல்படுத்தி , நமக்கு நாமே உதவினால் ஒழிய , நமக்கு உய்வில்லை என்பதை உணர் !
அட்டைக்கத்திகளை நம்பி நேரம் , பணம் விரயமிடாமல் , உன் மொண்ணைக் கத்தி மூளையைக் கொஞ்சம் கூர்தீட்டு தமிழா ! தமிழகமெங்கும் ஹிவ்ரே பஜார்களை உருவாக்கு , மக்கள் தலைவர்கள் ,ஒவ்வொரு பஞ்சாயத்திலும் , மக்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறார்கள் . அவற்றை பொம்மலாட்டத் திரையில் தேடாதே தமிழா !
பின்குறிப்பு: உள்நாட்டு , பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எவ்விதத்திலும் ஆதரிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல , அவர்களைவிட பெரிய குற்றவாளி , அடிப்படைப் புரிதலற்ற , அறியாமையிலிருக்கும் நாமே என்பதை வலியுறுத்தவே இந்த ஆதங்கப் பதிவு .
தமிழகத்தின் தண்ணீர் தேவையைத் தீர்க்க, விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேகரிக்க வேண்டியதும் , தண்ணீரைச் சரியாய்ப் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளுமே ஒரே உறுதியான வழி .
'தன்னூத்து'கள் தானே பொங்கி நிரம்புவதில்லை , நீயும் நானும் சேர்ந்து நிரப்பினால் தான் அது காலாகாலத்துக்கும் நிறைந்து நம் தேவை தீர்க்கும். கொக்ககோலாவும் பெப்சியும் சிறு எதிரிகள், நீர் மேலாண்மை பற்றிய உன் அடிப்படை அறிவின்மையே பெரும் எதிரி!
அலெக்ஸ் பால் மேனன் தனது வலைப்பதிவு பக்கத்தில் 'கத்தி' படத்தையொட்டிய அனுபவத்தை முன்வைத்து எழுதிய பதிவு இது. | முழுமையான பதிவுக்குhttp://alexmenon.blogspot.in/2014/10/blog-post.html

உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்:

விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்கு வர உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமா வதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.
இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத் தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம் இந்த விமானத் தில் பயணம் செய்யும் பயணிகள், இன்டர்நெட்டில் உலவிக் கொண்டே வான்வெளி யில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும் போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல் பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன்கள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்ப டுத்தப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஜன்னல் இல்லாத ஸ்மார்ட்ஸ்கிரீனை சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள்.
சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை ‘வெளிப் புறத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய ஜன்னல்கள் இல்லாத கேபின்’ என கூறுகிறார்கள். ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்

Math Facts - who wins in maths

https://www.easycalculation.com/math-facts/

Evariste galois
Evariste Galois was a French Mathematician born in Bourg-la-Reine. Though he is a back performing students in school, early at the age of 17, he found solution for the fundamental discoveries in the theory of polynomial.
He was the founder of the Galois theory and Group theory, two major branches of abstract algebra and the sub field of Galois Connections. He was the first mathematician to use the term 'group' in mathematics, to represent a group of permutations and now its called as Galois group.
Galois theory states that the polynomial equation could be solved in radicals , if we find the series of sub groups each one normal in its successor with abelian quotient (abelian is the operation that combines two elements), or its Galois group is solvable.
Galois died of tuberculosis at the early age of 26. Before two days of his death, he seriously spent the whole night outlining his mathematical ideas in a detailed letter to his friend, Auguste Chevalier. Though he died, his legacy lived on the term abelianwhich become a common place for discussing the concepts like abelian group, abelian category and abelian variety in the later days.

தில்மா ரூசெஃப் - Brazil President

நாட்டின் அதிபராக தில்மா ரூசெஃப், தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள், பல பிரச்சினைகளுக்கு இடையிலும் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தத் தலைவர்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகமாகிவருவது இதன் மூலம் தெரிகிறது. இதற்கான காரணம் மிகவும் எளிமையானது. நாட்டின் முன்னேற்றத்துக்காக, நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அந்தத் தலைவர்கள் செயல்படுகிறார்கள். அதேபோல், மீண்டும் அதிபர் பதவிக்கு வருவதற்கு ஏற்ப, இந்தத் தலைவர்கள் அரசியல் சட்டத்தைத் திருத்தினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பிரேசிலில் அதிபர் பதவிக்கான பூர்வாங்கச் சுற்றில் சுற்றுச்சூழல் ஆர்வலரான மரீனா சில்வாவும் களத்தில் இருந்தார். எனவே, தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று ஊகிப்பது கடினம் என்றுகூடப் பேசப்பட்டது. ஆனால், அவர் களத்தை விட்டு நீங்கிய பிறகு, பிரேசிலின் சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஆசியோ நெவிஸுக்கும், ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக மீண்டும் களமிறங்கிய தில்மா ரூசெஃப்புக்கும்தான் போட்டி என்ற நிலை உருவானது.
51% வாக்குகளைப் பெற்று தில்மா வெற்றி பெற்றிருக்கிறார். ஆசியோ நெவிஸ் 48% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். எனவே, போட்டி கடுமையாகத்தான் இருந்திருக்கிறது என்பது புரிகிறது. பிரேசிலின் வட பகுதி மக்களின் ஆதரவு தில்மாவுக்கும், தென் பகுதி மக்களின் ஆதரவு ஆசியோவுக்கும் கிடைத்திருப்பதைக் கொண்டு, நாடு கிட்டத்தட்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதை நாம் உணர முடியும். “நாட்டை ஒற்றுமையாக வழிநடத்துவேன். இதுவரை இருந்ததைவிட இன்னும் நல்ல அதிபராக இருக்க விரும்புகிறேன்” என்று தில்மா உறுதியளித்திருக்கிறார்.
பிரேசில் நாட்டின் அரசுடைமை எண்ணெய் நிறுவனங்களில் நடந்த ஊழல்கள் தொடர்பாக தில்மா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தும், தில்மாவின் கட்சிக்குச் செல்வாக்கு குறையவில்லை. தில்மா அதிபராக இருந்த காலத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் அரசுக்கு ஆதரவாக 63% பேரும், தனிப்பட்ட முறையில் அவருக்கு ஆதரவாக 79% பேரும் கருத்து தெரிவித்திருந்தனர். பிரேசில் பொருளாதாரம் இன்னும் முழு அளவில் மீட்சி அடையவில்லை. நிர்வாகத்தில் மேலும் வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதை தில்மா இப்போது உணர்ந்திருப்பார்.
லத்தீன் அமெரிக்க நாடுகள் அப்படியொன்றும் செல்வந்த நாடுகள் அல்ல. ஆனாலும், மக்களிடையே அமைதியும் திருப்தியும் ஏற்படும் வகையில் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு நிறையச் செலவிடுகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நடுவிலும் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதற்குக் காரணம் அதுவே.
எனினும், தேர்தல் வெற்றி ஒன்றே தலைவர்களின் செயல்பாட்டுத் திறனை முழுமையாகப் பிரதிபலிக்காது. வறுமை ஒழிப்பும், எல்லோ ருக்குமான வளர்ச்சியும்தான் ஆட்சியாளர்களின் முக்கியப் பணிகளாக இருக்க முடியும்.
வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கும் தலைவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். மக்களை விட்டு விலகாதவரை எந்தத் தலைவரையும் தோல்வி நெருங்கவே நெருங்காது.

Hats off to கியூப அரசு - எபோலா என்ற வைரஸ் காய்ச்சல்


எபோலா என்ற வைரஸ் காய்ச்சல் பரவிவரும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து 4,500 மைல்கள் தொலைவு தள்ளியிருக்கிறது கியூபா. அமெரிக்காவைப் போலவும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவும் வளமான நாடு இல்லையென்றாலும், எபோலாவால் பீடிக்கப்பட்ட நாடுகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் வழிகாட்டுவதிலும் உலகுக்கே முன்னுதாரணமாக நூற்றுக் கணக்கான மருத்துவர்களையும், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களையும் களத்தில் இறக்கி அரிய சேவையாற்றிக்கொண்டிருக்கிறது.
எபோலாவைப் பற்றி அறிந்து உலகமே அரற்றினாலும் அந்நோய் பரவிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவிகள் போதுமான அளவு இதுவரை கிட்டவில்லை. அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் ஒப்புக்கு ஒரு தொகையை அளித்திருந்தாலும் கியூபாவும் சில தன்னார்வத் தொண்டுநிறுவனங்களும் எது முக்கியமோ அதை வழங்கிவருகின்றன. காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் கூடிய மருத்துவர்கள் கியூபா வால்தான் அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்னுமா அமெரிக்கா?
காய்ச்சல் வந்தவர்களைத் தனிமைப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் மேற்கு ஆப்பிரிக்க நாடு களின் மருத்துவர்களுக்குத் தொழில்ரீதியாக ஆலோசனை கூறக்கூடிய, வழிகாட்டக்கூடிய, உடனிருந்து பணியாற்றக்கூடிய நிபுணர்கள் தேவை. எபோலாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்களில் 400-க்கும் மேற்பட்ட வர்கள் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்,
4,500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அமெரிக் காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எபோலா தலைகாட்டிவிட்டது. இது உலகம் முழுக்கப் பரவிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அதிக நிதியுதவி தரும் நாடும், அதிக மருத்து வர்களைக் களத்துக்கு அனுப்பியிருக்கும் நாடும் நேருக்கு நேர் பேசும் நிலையில் இல்லை என்பது வெட்ககரமானது, வருத்தத்துக்குரியது. எபோலாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்காக வாவது தூதரக உறவை உடனடியாக ஏற்படுத்து வது நல்லது என்பதை ஒபாமா நிர்வாகம் உணர வேண்டும்.
கியூபா நாட்டு மருத்துவர்கள், செவிலியர்களில் பலருக்கு எபோலா தொற்ற வாய்ப்பு அதிகம். அப்படி அவர்களுக்கு நோய் தொற்றினால் எப்படி அவர்கள் கியூபா கொண்டுசெல்லப்படுவார்கள், சிகிச்சை பெறுவார்கள் என்பது தெரியவில்லை. உலக சுகாதார ஸ்தாபன மேற்பார்வையில் கியூப மருத்துவக் குழு செயல்படுகிறது. அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், தனி வார்டில் சேர்க்கப்பட வேண்டும், மேல் சிகிச்சைக்
காக கியூபாவுக்குத் தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். இந்த வசதிகள் அமெரிக்காவிடம்தான் இருக்கிறது. நோயாளிகளை, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லும் சேவையை அளிக்கும் காப்பீட்டு நிறுவனங்கள், எபோலா நோயாளிகளை விமானத்தில் கொண்டு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டன.
எபோலாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய தீரத்தை மெச்சுவதாகக் கூறிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, கியூபாவைச் சுருக்கமாகப் பாராட்டியிருக்கிறார். மேற்கு
ஆப்பிரிக்காவில் இப்போது முகாமிட்டுள்ள 550 அமெரிக்கத் துருப்புகள், மன்ரோவியாவில் பென்டகன் கட்டியிருக்கும் நவீன சிகிச்சை மையத் துக்கு கியூப மருத்துவர்களையும் மருத்துவக் குழுவினரையும் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்.
முன்னோடி சேவையாளர்கள்
கியூப மருத்துவர்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் இப்போது அளிக்கும் சேவை உலக அளவில் இந் நோய் பரவாமல் தடுக்கவும் நோயால் பாதிக் கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் உதவுவதை அங்கீகரிக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அதி காரிகளோ அலட்சியம் காட்டுகிறார்கள்.
2010-ல் ஹைதி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, காலராவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் கியூப மருத்துவர்கள்தான் முன்னிலை வகித்தனர். அவர்களில் சிலருக்குக் காலரா தொற்றியது. இந்த நூற்றாண்டில் முதல் முறையாக கியூபாவில் அப்போதுதான் காலரா பரவியது. அதே போல எபோலாவும் கியூபாவில் ஏற்பட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு அது பரவும் வாய்ப்பு அதிகம்.
2005-ல் கத்ரினா புயல் தாக்கியபோது, நியூஆர்லியான்ஸுக்குச் சென்று உதவ கியூப மருத்துவர்களும் செவிலியர்களும் தயாராக இருந்தார்கள். அமெரிக்காதான் அந்த உதவியை ஏற்க மறுத்தது. ஆனால், எபோலா பீடித்த சியரா லியோன், லைபீரியா, கினி ஆகிய நாடுகளுக்குக் கியூபா மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்பியிருக்கிறது என்பதைக் கேட்டதும் அமெரிக்க அதிகாரிகள் பரவசமடைந்தார்கள்.
பொருளாதாரத் தடை
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப உதவியோடு, கியூப அரசு 460 மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் எபோலா சிகிச்சையில் பயிற்சி அளித்தது. அவர்களில் 165 பேர் சியரா லியோன் போய் சேவையைத் தொடங்கிவிட்டனர். கியூப மருத்துவர்கள் துடிப்பானவர்கள், ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள், துணிச்சலும் அர்ப்பணிப்பு உணர் வும் மிக்கவர்கள் என்று ஹவானாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஜோஸ் லூயி டி ஃபேபியோ தெரிவிக்கிறார். கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக கியூபாவிடம் நவீன மருத்துவக் கருவிகள் இல்லை. அவர்களுடைய மருந்தகங் களில் பல மருந்துகளும் இல்லை என்று டி ஃபேபியோ வருத்தப்படுகிறார்.
“மக்களின் உயிரைக் குடிக்கும் இந்தக் கொடூரமான நோயை எதிர்த்துப் போரிடுவதற் காகவாவது அமெரிக்கா, கியூபாவுடன் தற்காலிக மாக நெருங்கி ஒத்துழைக்க வேண்டும்” என்று மூத்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவே வலியுறுத்தி யிருக்கிறார். அது நியாயமானதும்கூட.
தி நியூயார்க் டைம்ஸ்,
தமிழில்: சாரி

Know about Pepsi

1886 இல் அறிமுகமான கோகோகோலாவின் வெற்றி, அதேபோல் கஷாயங்கள் தயாரிக்கும் ஆசையைப் பலர் மனங்களில் தூண்டிவிட்டது. அமெரிக்காவின் வடக்குக் கரோலினா பகுதியில் காலெப் பிராட்ஹாம் என்னும் மருத்துவர் இருந்தார். பல சோதனைகள் செய்து, 1893 இல், பிராட்ஸ் டிரிங்க் (Brad’s Drink) என்று தன் பெயர் கொண்ட பானத்தை அறிமுகம் செய்தார்.
வயிற்று வலி மருந்து
ஜான் பெம்பர்ட்டன், கோகோ கோலாவை, தலைவலிகள், நரம்பு வலி, நரம்புத் தளர்ச்சி, மனச் சோர்வு ஆகியவற்றுக்கு மருந்தாக விற்பனை செய்தார். கோகோ கோலாவிடமிருந்து வித்தியாசம் காட்டவேண்டுமே? பிராட்ஹாம் வயிற்று வலி மருந்தாக விற்பனை செய்தார். ஐந்து வருடக் கடும் முயற்சி. பானம் மக்களிடம் எடுபடவில்லை. கோகோ கோலா பாணியில், 1898 இல் தன் பானத்தின் பெயரைப் பெப்ஸி கோலா என்று மாற்றினார்.
பெப்ஸின் (Pepsin) என்பது, நம் உடலின் இரைப்பை நீரில் உள்ள ஒரு Enzyme. நம் ஜீரண சக்திக்கு பெப்ஸின் தேவை. பிராட்ஹாமின் பானத்தில், பெப்ஸின் கிடையாது, பானத்துக்கும் பெப்ஸினுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆனால், தன் கண்டுபிடிப்பை வயிற்று வலி மருந்தாக விற்க முடிவு செய்ததால், ஜீரணத் தொடர்பான பெப்ஸினைப் பெயரில் சேர்த்தார்.
அடுத்த முப்பது வருடங்கள் பெப்ஸி கோலாவுக்குச் சோதனை நாட்கள். 1923, 1931, 1933 ஆகிய மூன்று வருடங்களும், கம்பெனி திவாலாகியது. புதிய முதலாளிகளின் கையில் புனர்ஜென்மம் எடுத்தது. 1939 இல் ஒரு திருப்புமுனை வந்தது.
புதிய உத்தி
1929 முதல் 1942 வரை, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இருண்ட காலம். மாபெரும் பொருளாதார வீழ்ச்சி (Great Depression) என வரலாறு வர்ணிக்கும் காலகட்டம். ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
லட்சக்கணக்கானோர் வேலை இழந்தார்கள். பணக்கார அமெரிக்காவில், பஞ்சம், பசி, பட்டினி. ஆச்சரியமாக, நாடே திண்டாடும்போது. பெப்ஸி வளர்ந்தது. இதற்குக் காரணம், அவர்கள் வகுத்த மார்க்கெட்டிங் யுக்தி. ஆறரை அவுன்ஸ் கொண்ட பாட்டில்களில் கோகோ கோலா விற்பனையாகிக்கொண்டிருந்தது. ஒரு பாட்டில் விலை ஒரு நிக்கல் (ஒரு டாலருக்கு 20 நிக்கல்கள்). அதே ஒரு நிக்கலுக்கு, 12 அவுன்ஸ் பாட்டிலைப் பெப்ஸி அறிமுகம் செய்தது.
அமெரிக்க மக்கள் பொரு ளாதார வீழ்ச்சியிலிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தார்கள். ஒவ் வொரு செலவையும் கண்களில் எண்ணெய் ஊற்றிக் கவனித்தார் கள். கோகோ கோலாவின் பாதி விலையில் பெப்ஸி கிடைத்ததால், ஏராளமானவர்கள் கோகோ கோலா விலிருந்து பெப்ஸிக்கு மாறி னார்கள்.
முதல் வெற்றி
விலை குறைக்கவேண்டிய அவசியம் கோகோ கோலாவுக்குத் தெரிந்தது. ஆனால், எதுவும் செய்யமுடியாத நிலை. அப்போது கோகோ கோலா கண்ணாடி பாட்டில்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கம்பெனியின் முக்கிய முதலீடு பாட்டில்கள்தாம். ஆறரை அவுன்ஸ் பாட்டில்களை மாற்றி, 12 அவுன்ஸ் பாட்டில்கள் அறிமுகம் செய்ய, கோடிக் கணக்கான டாலர்கள் தேவை. அது அவர்களால் இயலவில்லை. இது பெப்ஸிக்குத் தெரியும். அதனால்தான், விலை என்னும் மார்க்கெட்டிங் ஆயுதத்தைக் கோகோ கோலா மீது வீசினார்கள். பதிலடி கொடுக்கமுடியாத கோகோ கோலாவின் விற்பனை சரியத் தொடங்கியது. கோலா யுத்தத்தில், பெப்ஸிக்கு முதல் வெற்றி.
இந்த யுத்தத்தில், எதிர்பாராத இடத்திலிருந்து கோகோ கோலாவுக்கு உதவி கிடைத்தது. அந்த உதவியைத் தந்தது, இரண்டாம் உலக மகா யுத்தம். போரினால், மூலப்பொருட்களின் விலைகள் உயர்ந்தன. பெப்ஸி விலையை அதிகமாக்கவேண்டிய கட்டாயம். கோகோ கோலா இழந்த மார்க்கெட்டைத் திரும்பப் பிடித்தது.
1930 களில், பொருளாதார வீழ்ச்சியால், குடும்பங்களைப் பெரிதாக்க அமெரிக்கர்கள் பயந் தார்கள். இந்தக் காலகட்டத்தில் 24 லட்சம் குழந்தைகளேபிறந்தன. முந்தைய வருடங்களைவிட இது மிகக் குறைவான எண்ணிக்கை.
1946. உலகப் போர் முடிந்தது. மக்கள் தொகை பெருகத் தொடங்கியது. 1940 இல் 32 லட்சம் பிறப்புகள்: 1954 முதல் 1965 வரை ஒவ்வொரு வருடமும், 40 லட்சம் குழந்தைகள். இதனால், 1946 1964 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு, குழந்தைகள் பெருகிய காலத்தவர்கள் (Baby Boomers) என்று பெயர் வைத்தார்கள்.
வியூகம்
அமெரிக்கப் பொருளாதாரம் மறுபடியும் வளர்ச்சிப் பாதையில். புதுப் புதுப் பொருட்கள் சந்தைக்கு வந்தன. பேபி பூமர்கள் வளரத் தொடங்கினார்கள். விரை வில், இவர்கள் அமெரிக்க மக்கள் தொகையின் பெரும்பாலானோ ராக இருப்பார்கள் என்று புள்ளி விவரங்கள் கணித்தன. இவர் களைக் குறிவைத்து, பெப்ஸி, தன் மார்க்கெட்டிங் வியூகங்களை வகுக்கத் தொடங்கியது.
1961. வந்தது பெப்ஸி விளம் பர முழக்கம். மனதால் நீங்கள் இளைஞரா, பெப்ஸி உங்களுக் காக (Now it’s Pepsi for those who think young). தொடர்ந்தது அடுத்த அஸ்திரம், துடிப்போடு வாருங்கள், உங்கள் தலைமுறை பெப்ஸி தலைமுறை (Come alive you’re the Pepsi generation).
இளைய தலைமுறையினர் குடிக்கவேண்டிய ஒரே பானம் பெப்ஸிதான் என்னும் பொசிஷனிங்கைப் பேபி பூமர்கள் மனதில் உருவாக்கி, அவர்களைக் கோகோ கோலாவிடமிருந்து விலக்கி, தனக்கு மட்டுமே பெப்ஸி சொந்தமாக்கிக்கொண்டது.
டாப்பு, டூப்பு…
கோகோ கோலா தன் விளம் பரங்களை மாற்றிப் பார்த்தது. பலனில்லை. நாங்கள்தாம் உண்மையான கோலா (Coke the real thing) என்னும் விளம்பரம் தொடங்கினார்கள். நாங்கதான் டாப்பு, மீதி எல்லாம் (குறிப்பாக, பெப்ஸி) டூப்பு என்னும் இந்தப் பாணி விளம்பரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்தக் கருத்தை மக்களிடையே பரவவிட்டால் ஆபத்து, இதை விளம்பரத்தால் அல்ல, அறிவியல் சோதனைகளால் எதிர்கொண்டு, பெப்ஸியும் கோகோ கோலாவுக்கு நிகரான தரமும், சுவையும் நிறைந்த பானம் என்று நிரூபிக்கப் பெப்ஸி முடிவெடுத்தது.
1975. பெப்ஸி கையில் எடுத்த ஆயுதம் பெப்ஸி சவால் (Pepsi Challenge). மார்க்கெட்டிங்கில் அடிக்கடி பயன்படுத்தப்படும், அறிவியலும், மனோதத்துவமும் சேர்ந்த சோதனை முறை. நாம், பெரும்பாலான பொருட்களை, அறிவு பூர்வமாகச் சிந்தித்து வாங்குவதில்லை, உணர்ச்சி பூர்வமாக வாங்குகிறோம். பெப்ஸி சவால், இந்த அடிப்படையில் அமைந்தது.
பெப்ஸி கம்பெனி, ஆயிரக் கணக்கான பொதுமக்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்களுள், பெப்ஸி ரசிகர்கள், கோகோ கோலா விரும்பிகள், இரண்டுமே பிடிக்காதவர்கள் எனப் பலதரப் பட்டோர் அடக்கம். இவர்கள் முன் னால், இரு பானங்களும் கோப் பைகளில் ஊற்றி வைக்கப்பட்டன. எது பெப்ஸி, எது கோகோ கோலா என்று அவர்களிடம் சொல்ல வில்லை. எந்தச் சுவை அவர் களுக்குப் பிடித்தது என்று தெரிவிக்கச் சொன்னார்கள்.
பெப்சி சுவை
பெரும்பாலான மக்கள், அதிலும் குறிப்பாக, இளைஞர், இளைஞிகள், கோகோ கோலா சுவையைவிடப் பெப்ஸி சுவையை அதிகமாக விரும்பினார்கள். பெப்ஸிக்கு இது மாபெரும் வெற்றி. இந்த முடிவுகளைப் பெருமளவில் விளம்பரப்படுத்தியது.
இன்று, நீ பெரியவனா, நான் பெரியவனா என்று கோகோ கோலாவுக்கும், பெப்ஸிக்கும் உலகம் முழுக்கப் போட்டி தொடர்கிறது. 1863 முதல் 1960 வரை தொடர் தோல்விகள் கண்ட பெப்ஸி, கோகோ கோலாவுக்கு சமமாக வளர்ந்ததற்குக் காரணம், இளைய தலைமுறையின் தரமான, சுவையான குளிர்பானம் என்று 1961- இல் அவர்கள் உருவாக்கிய பொசிஷனிங்!
slvmoorthy@gmail.com

https://www.easycalculation.com/

கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.
வடிவக் கணக்குகள்
பரப்பளவு எனும் தலைப்பில் சொடுக்கினால் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், நாற்கரம் எனப் பல வடிவங்களுக்கான எளிமையான கணக்கீட்டு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்வு செய்தால் அந்த வடிவத்திற்கான சில கணக்கீட்டு முறைகள் அதற்கான வழிமுறைகள் (Formula) உடன் கிடைக்கிறது.
புள்ளியியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் புள்ளியியல் தொடர்பான பல்வேறு கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் நமக்குத் தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து சொடுக்கினால் கிடைக்கும் கணக்கீட்டுக் கருவியின் கீழுள்ள காலிப்பெட்டியில் நம்மிடமுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையை உடனடியாகப் பெற முடியும்.
எண் கணிதம்
எண்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால் எண்கள் தொடர்பான கணக்குகளுக்கான பல கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. வர்க்கமூலம் (Square Root), சதவிகிதம் (Percentage), தசமப் பின்னம் (Decimal Fraction), மறுநிகழ்வுப் பின்னம் (Recurring Fraction), மடக்கைக் கணக்கீட்டு கருவி (Logarithmic Calculator), கூட்டு வட்டி (Compound Interest), ரோமானிய எண்கள் (Roman Numbers), தங்க விகிதக் கணக்கீட்டு கருவி (Golden Ratio Calculator) என்பது போன்று பல தலைப்புகளில் கணக்கீட்டு கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கீட்டு கருவிகளில் தேவையானதைத் தேர்வு செய்து அதற்குள் இருக்கும் காலிப்பெட்டிகளில் நம்மிடமுள்ள அளவுகளை உள்ளீடு செய்து அதற்கான விடையைப் பெறலாம்.
வேடிக்கைக் கணக்குகள்
நிற மாற்றிகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் வேடிக்கைக் கணக்குகள் எனும் தலைப்பில் விலங்குகளின் வேகம் (Animal Speed), பீர் இழப்பு (Beer Loss) எனும் இரு கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. இதில் விலங்குகளின் வேகம் எனும் கணக்கீட்டு கருவியில் சொடுக்கினால் தூரம் எனும் தலைப்பில் ஒரு காலிப்பெட்டி கிடைக்கிறது. இதனருகில் மைல், கிலோமீட்டர், மீட்டர் எனும் அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.
காலிப்பெட்டியில் தூரத்தினை உள்ளீடு செய்து அதற்குரிய அளவையும் தேர்வு செய்து கீழுள்ள முடிவு எனும் பொத்தானை அழுத்தினால் சிங்கம், சிறுத்தைப் புலி, டயனோசர், யானை, வரிக்குதிரை, முயல், கங்காரு, பூனை, நரி, அணில், பன்றி, ஆமை, நத்தை, எறும்பு ஆகியவைகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதன் வலப்புறம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலங்குகள் உள்ளீடு செய்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் மணி: நிமிடம்: வினாடி: மி.வினாடி எனும் அளவுகளில் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து ஒவ்வொரு விலங்கும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் கடக்க எடுத்துக் கொண்ட தொலைவும், அதற்கடுத்து விலங்குகள் ஓட்டத்தில் பெற்ற இடத்தின் மதிப்பும் தரப்பட்டுள்ளன. பீர் இழப்பு எனும் தலைப்பில் சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து முடிவுக்கான பொத்தானை அழுத்தினால் விலை வடிவிலான இழப்புகள், வாரம், மாதம் கால அளவுகளிலான இழப்புகள் மற்றும் மொத்த இழப்புகள் போன்றவை கிடைக்கின்றன.
இதுபோல முக்கோணவியல், பகுப்பாய்வு வடிவியல், அணிகள், இயற்கணிதம், மாற்றிகள் எனும் தலைப்புகளிலும் கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து அங்குள்ள காலிப்பெட்டிகளில் நம்மிடம் உள்ள அளவுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையைப் பெற முடியும்.
மொத்தத்தில் இந்த இணைய தளம் பல்வேறு கணக்கீட்டுக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் பயன் தருவதாக உள்ளது. இந்த இணையதளத்திற்குச் செல்லhttp://easycalculation.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.

திங்கள், 27 அக்டோபர், 2014

கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் சுந்தர் பிச்சைக்கு


கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் சுந்தர் பிச்சைக்கு அதிகபொறுப்புகள் வழங்கப்பட் டிருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு சுந்தர் பிச்சையை உயர்த்தி இருக்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ். சுந்தர் பிச்சை சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கூகுள் பிளஸ், மேப்ஸ், காமர்ஸ், விளம்பரம் மற்றும் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர், சர்ச், சோஷல் மீடியா மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளின் தலைவர்கள் இனி சுந்தர் பிச்சையின் கீழ் வருவார்கள். இதற்கு முன்பு இவர்கள் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
அதேசமயம் கூகுள் நிறு வனத்தின் இன்னொரு பிரிவான ’யூ டியூப்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ் கட்டுப்பாட்டிலே இருக்கும்.
மேலும் சுந்தர் பிச்சையின் கீழ் செயல்பட்டுவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, குரோம் மற்றும் ஆப்ஸ் ஆகியவை சுந்தர் பிச்சை தலைமையிலே செயல்படும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிர்வாக மாற்றம் கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1972-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. ஐஐடி கரக்பூர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்(எம்.எஸ்) மற்றும் வார்டன் கல்லூரியில் (எம்பிஏ) படித்தவர். 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இவர் இணைந்தார்.
இந்த நிர்வாக மாற்றம் மூலம் கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்கு சுந்தர் பிச்சை உயர்த்தப்பட்டிருக்கிறார். மேலும் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ- வாய்ப்பு இவருக்கு அதிகமாக இருப்பதாக இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலக மொழி

சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குக் காலி பெருங்காய டப்பா என்ற பெயரே இருக்கும்.
‘தமிழ் கூறு நல்லுலகு’ என்னும் தொடர் தமிழ் உலகத்தைக் குறிக்கிறது. தமிழ் உலகம் என்பது பூமியில் தமிழ் வழங்கும் பகுதி. இந்தப் பகுதி உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்னும் பொருளில் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் தொடர் வழங்குகிறது.
இதிலிருந்து பிறந்ததுதான் உலகத் தமிழ் என்று புதிதாக வழக்குக்கு வந்துள்ள தொகைச்சொல். தமிழ் உலகத்தை உலகத் தமிழ் என்று மாற்றிப் போட்ட சொல்.
தமிழர்கள் பிழைப்பைத் தேடி உலகம் முழுவதும் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்னும் நிதர்சனத்தைப் பிரகடனப்படுத்தும் சொல். தமிழர் வரலாற்றில் புலப் பெயர்வு புதிது அல்ல. ஆனால், பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய பிறகே, உலகத் தமிழ் என்ற சொல் வழக்கில் பெருகிவருகிறது. இந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் பொருளாதார வகையில் அந்த நாடுகளில் மத்தியதர வர்க்கத்தினர்.
தாய்நாட்டில் வாழ்ந்த முறையாலும், கல்வியால் தமிழ் இலக்கியக் கலாச்சாரத்தோடு பெற்ற பிணைப்பாலும் இவர்களுக்குத் தமிழோடு உள்ள உறவு உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல, அறிவு பூர்வமானதும் கூட. தமிழ் இலக்கியம் இவர்கள் வசிக்கும் நாட்டின் மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்து தனித்து அடையாளம் காட்டும் குறியீடும் ஆகும். இவற்றால், உலகத் தமிழ் என்னும் சொல்லுக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் என்னும் பொருளுக்கு மேலாக, உலகத் தகுதிபெற்ற மொழி என்னும் பொருளையும் இவர்கள் தருகிறார்கள். இந்தப் பொருள் நிலைபெற உலகின் பல பகுதிகளையும் இணைக்கும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பம் துணைசெய்கிறது.
உலக மொழி
உலக மொழி என்றால் உலகளாவிய ஆட்சிமை உடைய மொழி என்று பொருள். உலக ஆட்சிமை என்பது நாடு கடந்து அறிவு, அறிவியல், தொழில்நுட்பம், பெருவணிகம் ஆகிய துறைகளில் ஒருவர் பங்குபெறத் தேவை என்று கருதப்படும் தகுதி. நாடுகளுக்கிடையே அரசியல் உறவுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் பயன்படும் தகுதி உடைய மொழி என்று பொருள். இந்தத் தகுதி இன்று ஆங்கிலத்துக்கு இருக்கிறது. இந்தப் பொருளில் தமிழை உலக மொழி என்று சொல்ல முடியாது. உலக ஆங்கிலம் என்பதில் உள்ள பொருள் உலகத் தமிழ் என்பதில் இல்லை.
கவன ஈர்ப்பு
பிற நாட்டு மொழி பேசுபவர்கள் ஒரு மொழியை நாடி வரும்போது அந்த மொழியின்மீது உலகம் கவனம் செலுத்துகிறது எனலாம். ஒரு மொழி உலகக் கவனம் பெறுவதற்கு, பிற மொழி பேசுபவர்களுக்கு அந்த மொழியின்மீது நாட்டம் ஏற்படுவது முதல் படி. அரசியல், பொருளாதார பலம் இல்லாத ஒரு மொழி, உலக அளவில் நாட்டம் பெற அதனிடம் என்ன இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒரு மொழியின் முற்காலத்தில் இலக்கியம், தத்துவம், அறிவியல் முதலான துறை சார்ந்த சிறந்த எழுத்துகள் இருப்பது அந்த மொழிக்கு இருக்கும் ஈர்ப்புச் சக்திகளில் ஒன்று. இவை கிரேக்கம், லத்தீன், அரேபியம், சமஸ்கிருதம் முதலிய செம்மொழிகளில் உண்டு. பழந் தமிழுக்கும் இந்த ஈர்ப்புச் சக்தி உண்டு. ஆனால், இத்தகைய மொழிகளில் ஏற்படும் நாட்டம் கல்வித் துறையில் உள்ளவர்களிடமே முடங்கிவிடுகிறது; பொதுமக்களைப் பற்றுவதில்லை. மேலும், சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குப் பெருங்காயம் இருந்த டப்பா என்ற பெயரே இருக்கும்.
மொழியில் உள்ள எழுத்துகள்
எனவே, இன்றைய தமிழில் உலகைக் கவர என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அறிவியலில் ஒற்றை மொழி ஆதிக்கம் உள்ள இன்றைய சூழ் நிலையில், தமிழில் வெளிவரும் அறிவியல் எழுத்து களுக்கு உலகக் கவர்ச்சி இருக்காது; இருக்க முடியாது. ஆனால், பிற அறிவுத் துறைகளில் அது இருக்கலாம். இவற்றில் சுயமான சிந்தனைகளுக்கு - தமிழ் அனுபவத்தில் பிறக்கும் சிந்தனைகளுக்கு - உலகை ஈர்க்கும் வாய்ப்பு உண்டு. பிரான்ஸைச் சேர்ந்த சார்த்தருடையதுபோல் புதிய தத்துவச் சிந்னைகள் தமிழில் தோன்றினால், தெரிதாவைப் போல் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் விளங்கிக் கொள்ளத் தமிழில் புதிய வழிமுறை ஏற்பட்டால், இத்தாலியைச் சேர்ந்த கிராம்சியின் பார்வையைப் போல் புது நோக்குள்ள அரசியல் தத்துவம் தமிழில் எழுந்தால், பிரேசிலைச் சேர்ந்த பாலோ ஃபிரைரே சிந்தித்ததைப் போல் கீழிருந்து பார்க்கும் கல்விச் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால், உலகம் தமிழின் பக்கம் திரும்பிப் பார்க்கும். இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
நம் நாட்டிலேயே காந்தியின் அரசியல் போராட்டச் சிந்தனைகள் போன்றவை சுயமாகத் தமிழில் தோன்றுவது சில உதாரணங்கள். இத்தகைய கவன ஈர்ப்பு பிற மொழி பேசும் அறிவுஜீவிகளிடமே முதலில் தோன்றலாம்; ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமே அவர்கள் அதைப் பெறலாம்.
உலகத் தகுதி பெறும் மொழி
தமிழ்ச் சமூகம் இப்படிப்பட்ட சிந்தனையாளர்களை ஏன் படைக்க முடியவில்லை? மேலே சொன்னது போன்ற அறிவுத் துறைகளில் தமிழ் பேசும் புலமை யாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலத்தின்வழி கல்வி கற்றிருந்தாலும், முற்றும் கற்ற தங்கள் துறைசார்ந்த அறிவிலிருந்து புதிய சிந்தனைகளைத் தமிழில் தர அறிவுத்தடை இருக்க முடியாது; சுய சிந்தனைகளுக்குக் கலைச்சொல் தடையும் இருக்க முடியாது; மனத்தடையே இருக்க முடியும். நம்முடைய கல்வி அமைப்பு, ஆங்கிலத்தில் எழுதினாலே பதவி முன்னேற்றம், உலக அரங்குகளில் பங்கேற்பு என்று செயல்படுகிறது. தமிழில் புதிய சிந்தனைகளைத் தர இந்த நிலை மாற வேண்டும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. தருவதற்குச் சிலரே போதும். மேலே சொன்ன எடுத்துக்காட்டுகளில் சிந்தனையாளர்கள் அவரவர் மொழிகளில் சிலரே. எத்தனையோ கோடித் தமிழரில் திருவள்ளுவர் ஒருவரே. தமிழ்ச் சமூகத்திலிருந்து ஆழச் சிந்திப்போர் சிலர் உருவானால், அவர்கள் தங்கள் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால், இது முடியும். தமிழ் உலகத் தகுதி பெற்ற மொழியாக முன்னேறும்.
பல துறைகளிலிருந்தும் வரும் புதிய அறிவுச் சிந்தனையால் மட்டுமல்ல, சிறந்த இலக்கியப் படைப்பும் தமிழ் உலகக் கவனம் பெற உதவும். கொலம்பியாவின் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் இலக்கிய எழுத்துகள் ஸ்பானிய மொழிப் படைப்பை உலகம் தேடச் செய்கின்றன. இதைப் போன்றே துருக்கியைச் சேர்ந்த ஒரான் பாமுக் முதலானோரின் எழுத்துகள் அவர்களுடைய மொழிகளை, மொழிப் பன்மை குறைந்துவரும் நிலையிலும், உலக அளவில் இடம்பெறச் செய்கின்றன. இதைச் செய்யத் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு நல்ல ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டும்; அதன் வழியே அவை மற்ற மொழிகளுக்குப் போய்ச்சேரும். உலகளாவிய ஆங்கில ஆதிக்கத்தின் ஒரு நன்மை இது.
இந்த வழிகளில் இன்றைய தமிழ், உலகக் கவனம் பெற்று உலகத் தகுதி பெறும்போதே தமிழை உலக மொழி என்று சொல்வதில் நியாயம் இருக்கும். இந்த நிலை வருவதற்கு அரசின் ஆதரவு அவசியம் இல்லை. இது தமிழர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய ஒன்று; செய்ய முடிகிற ஒன்று. இதைச் செய்ய முயலாமல், தங்கள் குறையை மற்றவர்மேல் - வேறு மொழி மேலோ, வேறு சமூகத்தின் மேலோ - சுமத்துவதைச் சொந்தக் குறையை மறைக்கும் செயலாகவே கொள்ள வேண்டும்.

- இ. அண்ணாமலை, 

அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ - வ. ராமசாமி ஐயங்கார் என்கிற வ.ரா.

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க எத்தனை பேரால் முடிந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அறிஞர் அண்ணாவிடமிருந்து ‘அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ என்ற பட்டத்தை வாங்கியவர் வ. ராமசாமி ஐயங்கார் என்கிற வ.ரா.
விடுதலைப் போராட்ட வீரர், அலிப்பூர் சிறையில் துன்பத்தை அனுபவித்தவர், பெண் விடுதலை, விதவை மறுமணம், தாழ்த்தப்பட்டவர் நலனுக்காக ஓயாது எழுதியும் போராடியும் வந்தவர். மணிக்கொடியின் ஆசிரியர் என்ற முறையில், நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி என எல்லாத் துறைகளிலும் தடம் பதித்த வ.ரா-வுக்கு அவருடைய சமகாலத்தவர்கள் எழுதிய கடிதங்கள் தற்போது தொகுக் கப்பட்டு நூலாக வரவிருக்கின்றன. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் வீ. அரசு இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார்.
“நூற்றோடு நூற்றி ஒன்றாவது நூலாக நான் இதை வெளியிட விரும்பவில்லை. வடிவமைப்பில் பெரிய புத்தக மாக, எல்லாக் கடிதங்களுக்கும் தனியாக ஒரு விளக்கம் எழுதி, வ.ரா. என்ற ஆளுமையை வெளிப்படுத்துவதே என்னுடைய நோக்கம்” என்கிறார் அரசு.
குப்பையில் கிடந்த வரலாறு
இக்கடிதங்களை அவர் கண்டெடுத்த கதையைக் கேட்கும்போது மனம் வேதனையடைகிறது. “வ.ரா-வின் மனைவி இறந்ததை அறிந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு மூலையில் குப்பையாகக் குவிக்கப்பட்டு, சில காகிதங்கள் கிடந்தன. அவற்றைக் கூர்ந்து நோக்கியதில், முதலில் தென்பட்டது, பாரதிதாசன் வ.ரா-வுக்கு எழுதிய கடிதம்” என்று விளக்கினார் அரசு.
வைணவ ஆசாரியரும் சீர்திருத்தவாதியுமான இராமானுஜர் குறித்து வ.ரா. திரைப்படம் இயக்கினார். அந்தப் படத்துக்குப் பாடல் எழுதுவதற்கு பாரதிதாசனை ஏற் பாடு செய்திருந்தார். செய்யப்பட்ட ஏற்பாடுகள் சரியில்லை என்று கடுமையாகத் திட்டி எழுதியிருந்தார் அக்கடிதத்தில்.
“இருப்பினும் நீ என் நண்பன் என்பதால், எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறேன்” என்று பாரதிதாசன் கடிதத்தை முடித்திருந்தாராம்.
வ.ரா. மணிக்கொடியின் ஆசிரியராக இருந்த கால கட்டத்தில், அதில் அதிகக் கவிதைகளை எழுதியவர் புதுக் கவிதை மரபுக்கு வழிகாட்டிய ந.பிச்சமூர்த்தி. அவருக்கு, அடுத்தபடியாக அதிகக் கவிதைகளை பாரதிதாசன்தான் மணிக்கொடியில் எழுதியிருக்கிறார். அத்துடன் புதுமைப் பித்தனின் பெரும்பாலான கதைகள் வ.ரா. காலத்தில்தான் மணிக்கொடியில் வெளியாகியிருக்கின்றன.
வ.ரா. என்ற முன்னோடி
‘பாரதியார் மகாகவியா?’ என்றும் ‘அவருடைய கவிதைகள் மகா கவிதைகளா?’ என்றும் கல்கி கிருஷ்ண மூர்த்தி போன்றோர் கேள்வி எழுப்பியபோது, மணிக் கொடியில் தொடர்ந்து எழுதி, பாரதி மகா கவிதான் என்று நிலைநிறுத்தியவர் வ.ரா.
“நவீன தமிழ் இலக்கியத்துக்குப் பங்களித்தவர்கள் எல்லோருமே வ.ரா-வின் எழுத்தின் தாக்கத்துக்கு உள்ளான வர்களே. அந்த அளவுக்கு அவருக்கு ஒரு சிறந்த எழுத்து நடை இருந்தது” என்கிறார் அரசு.
அவர் எழுதிய கோதைத்தீவு நாவல், பெண்களால் மட்டுமே ஆளப்படும் கற்பனை உலகம். வ.ரா. வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு கருத்தை எண்ணிப் பார்த்திருக்க முடியுமா என்பது ஐயமே.
இருப்பினும் ஒரு கட்டத்தில் அவர், தன்னுடைய சொந்த ஊரான திருப்பழனத்துக்குச் சென்று தங்கிவிட்டார். திருவையாருக்கு அருகில் உள்ள இந்த ஊர் தேவாரத்தால் பாடப்பட்ட ஊர். ‘அன்னம் வைகும் வயல் பழனத்தனை’ என்கிறார் நாவுக்கரசர். அவர் சென்னையை விட்டுச் சென்றுவிட்டதைக் கேள்விப்பட்ட வ.உ.சி. தூத்துக்குடி யிலிருந்து மிகுந்த கோபத்துடன் ஒரு கடிதம் எழுதினார்:
“தாங்கள் தேசத்துக்குச் சேவை செய்து முடிந்துவிட்ட தென்று கருதித் திருப்பழனத்தில் போய்த் தூங்கத் தொடங்கிவிட்டீர்களா? அல்லது தாங்கள் பெரும் பொருள் மீதப்படுத்திவிட்டமையால் இன்பம் துய்க்கத் தொடங்கிவிட்டீர்களா? இரண்டில் எது நினைத்தாலும் தவறு. தேசம் அடிமைப்பட்டேயிருக்கிறது. என் போன்ற உண்மை தேசாபிமானிகள் பலர் வறுமையில் ஆழ்ந்திருக்கிறோம்” என்று தன்னுடைய கடிதத்தில் வ.உ.சி. தெரிவிக்கிறார்.
“தேசத்துக்குச் சேவை செய்ய வெளிக் கிளம்புக” என்று கூறும் வ.உ.சி., இலங்கையிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்குமாறு வ.ரா-வைக் கேட்டுக்கொள்கிறார். அதை ஏற்றுக் கொண்டுதான் வ.ரா-வும் இலங்கை சென்றார்.

குப்பையிலிருந்து தப்பிப் பிழைத்த கடிதங்கள் வரலாற் றின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. இந்த அதிர்ஷ்டம் வாய்க்கப் பெறாத எழுத்தாளர்கள் தமிழில் ஏராளம் என்பது தான் நமது அவலம். 

அதிக மாற்றத்தை யார் தருவார் பிரதமரா, முதல்வரா?

நடந்து முடிந்த தேர்தலுக்கு மூன்றாண்டுகள் முன்னரே ஆச்சரியமான அந்த விஷயம் நடந்தது. அதாவது, இந்தியர்கள் அடுத்த பிரதமர் யார் என்று பேச ஆரம்பித்திருந்தார்கள். மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி என்று நானும் ஏராளமான விவாதங்களுக்காகப் பறந்துகொண்டிருந்தேன். எல்லா விவாதங்களுமே மோடி அல்லது ராகுல் என்ற வகையிலேயே இருந்தன. பிரதமர் பதவியிலிருந்து மன்மோகன் எப்போது போவார் என்று மத்தியதர வர்க்கம் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது. அவரைவிட வயதில் இளைய, செயல்துடிப்புமிக்க ஒருவர் பிரதமராக வர வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும், ஊழலை ஒழிக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் அந்த வேகத்தையாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்திலே இருந்தது.
அதிக மாற்றத்தை யார் தருவார் பிரதமரா, முதல்வரா?
இந்த விவாதங்களில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், எல்லாமே தேசியப் பிரச்சினைகள் குறித்தே இருந்தன. கொச்சியிலிருந்தபோது கேரளத்தைப் பற்றியோ, மும்பையிலிருந்தபோது மகாராஷ்டிரத்தைப் பற்றியோ யாரும் என்னிடம் எதையும் கேட்கவில்லை. இந்தியா என்பது 29 மாநிலங்களைக் கொண்டது, மாநிலங்களில் சில பரப்பளவிலோ, மக்கள் தொகையிலோ சில முக்கியமான ஐரோப்பிய நாடு களைவிடப் பெரியது. இருப்பினும் 2012, 2013 ஆகிய இரு ஆண்டுகளிலும் விவாதங்கள் அனைத்தும் டெல்லி அரசியலையே மையமாகக் கொண்டிருந்தன.
யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள் மோடியையா, ராகுலையா என்று என்னிடம் கேட்டபோது அவ்வாறு தேர்வுசெய்வதற்கு மறுத்துவிட்டேன். ராகுல்காந்தி சோம்பல் மிகுந்தவராகவும் பொறுப்புகளை ஏற்கத் தயங்குபவராகவும் தெரிந்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் கலாச்சாரம் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்திவந்தது. இந்தியாவுக்கென்று மக்களைக் கவரக்கூடிய, சரிவிலிருந்து மீட்கக்கூடிய ஒரு பிரதமரைத் தேர்வுசெய்வதைவிட நேர்மையுள்ள, நிர்வாகத் திறமைமிக்க, மக்கள் மீது கரிசனம் உள்ள சில முதலமைச்சர்கள் தேவை என்றே நினைப்பதால் பிரதமர் பதவிக்கு ஒருவரைத் தேர்வுசெய்வதில் நாட்டமில்லை என்று என்னுடைய நிலையை விளக்கினேன். கல்வி, சட்டம் - ஒழுங்கு, சுகாதாரம் போன்றவை மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருப்பவை. பொருளாதார தாராளமயம் காரணமாக தொழில் முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் பொறுப்புகள் மாநில அரசுகளுக்கு அதிகரித்துவிட்டன. எனவே டெல்லியைவிட மாநிலத் தலைநகரங்களில்தான் நல்ல தலைமை ஏற்படுவது அவசியம் என்பதே என்னுடைய இந்த எண்ணத்துக்குக் காரணம்.
கூட்டாட்சித் தத்துவத்தின் இந்த மையக் கருவை என்னுடைய அரசியல் அணுகுமுறையாகக் கொண்டு, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந் நாட்டை ஆண்ட மிகச் சிறந்த முதல்வர்கள் சிலரைப் பட்டியலிடலாம் என்று கருதுகிறேன். இது அறிவியல்பூர்வமான ஆய்வு களின் அடிப்படையிலான தேர்வு அல்ல, கடந்த 40 ஆண்டுகளாக இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்ல நேர்ந்தபோது அங்குள்ளவர்கள் வாயிலாகக் கேட்ட தகவல்களிலிருந்து பெறப்பட்ட முடிவு. சமூகக் காரணிகளையும் உள்ளடக்கிய விரிவான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டால் இந்தியா விலேயே மிகவும் முன்னேற்றமடைந்த மாநிலங்கள் கேரளம், தமிழ்நாடு, இமாசலப் பிரதேசம் ஆகியவை. இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு முதல்வர்களை எந்த அளவுக்குப் பொறுப்பாக்க முடியும்?
கேரளம்
இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளம் என்பது பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பின்தங்கியிருந்தது. நில உடைமை வெகு சிலரின் கைகளில் குவிந்திருந்தது. சாதியப் பாகுபாடு உச்சத்தில் இருந்தது. தொடுவது மட்டும் அல்ல; பார்வையில் படுவதுகூட தீட்டு என்ற நினைப்பு அங்கே இருந்தது. சீர்திருத்தவாதி நாராயண குருவின் சமூக இயக்கமும் இடதுசாரிகளின் அமைப்புரீதியான அரசியல் இயக்கங்களும் கேரளத்தில் நியாயமான சமூக மாற்றங்கள் ஏற்படப் பெரிதும் உதவின. விழிப் புணர்வை ஏற்படுத்திய இந்த இயக்கங்கள் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சும் செயல்பாடும் படித்தவர்களாலும் விழிப்புணர்வு மிக்க மக்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
கேரளத்தை ஆண்ட முதல்வர்களில் மிகச் சிறந்தவர்கள் யார்? இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, சி. அச்சுத மேனன். இ.எம்.எஸ். தன்னுடைய பூர்விக சொத்துகள் அனைத்தையும் பொது நன்மைக்காக விட்டுக்கொடுத்துவிட்டு கொள்கை வழிப்பட்ட துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார் - அந்தத் தியாகமும் எளிமையும் காந்திக்கு மிகவும் உவப்பானவை. ஆட்சியதிகாரங்களை ஜனநாயக முறையில் மையத்தில் குவிப்பதே லெனினியக் கோட்பாடாக இருந்தாலும், முதல்வராக இருந்தபோது அதிகாரங்களைப் பரவலாக்கு வதற்கே நம்பூதிரிபாடு முக்கியத்துவம் தந்தார்.
அச்சுத மேனனும் கம்யூனிஸ்ட்தான். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் அவர். இ.எம்.எஸ்ஸைப் போலவே இவரும் அப்பழுக்கற்ற நேர்மையான அரசியல்வாதி. அதே சமயம், அவரைவிடச் சிறப்பாக செயல்படும் வாய்ப்பைப் பெற்றவர். இவருடைய பதவிக்காலத்தில்தான் கேரளத்தில் நிலச்சீர்திருத்தங்கள் தீவிரமாக அமல்படுத்தப்
பட்டன. அச்சுத மேனன்தான் தரமான சமூக அறிவியல் ஆய்வையும் மாநில நிர்வாகத்தையும் முதல்முறையாக ஒருங்கிணைத்த முதல்வராகத் திகழ்கிறார். மிகச் சிறந்த பொருளாதார அறிஞரான கே.என். ராஜ் தலைமையில் வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் என்ற சமூக அறிவியல் மையத்தை உருவாக்கி அதன் ஆய்வுகள், பரிந்துரைகள்பேரில் நிர்வாக நடவடிக்கைகளை எடுத்தார்.
தமிழகம்
சமூக முன்னேற்றம், பொருளாதார இயக்கவியல் இரண்டையும் வெற்றிகரமாகக் கலந்து முன்னுக்கு வந்த மாநிலம் தமிழகம். இங்கே நீண்ட காலத்துக்கு அரசியலும் ஆட்சி நிர்வாகமும் பிராமணர்களின் ஆதிக் கத்தில் இருந்தது. பிராமணர்களின் ஆதிக்கநிலை பெரியாராலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருமான காமராஜராலும் தகர்ந்தது. தமிழ்நாட்டின் முதல்வராக 1954 முதல் 1963 வரை காமராஜர் ஆட்சி செய்தபோது மிகத் திறமையாகவும் நேர்மையாகவும் நிர்வாகம் நடைபெற்றது. அவருடைய ஆட்சியின் பல சாதனைகளில் ஒன்றுதான் மதிய உணவு திட்டம்.
1967-ல் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அந்தக் கட்சியின் முதல் இரண்டு முதல்வர்களான சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகிய இருவரும் சமூக நலத் திட்டங்களையும் மகளிருக்கான சிறப்புச் சட்டங்களையும் இயற்றி மாநிலத்தை நிர்வகித்தனர். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த மாநில அரசுகள் ஊழலில் ஊறித் திளைத்தாலும் (கருணாநிதி தலைமையில் அடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் உட்பட) பொது நிர்வாகம் திறமையாகவே இருக்கிறது. அரசுப் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மாநிலப் போக்குவரத்துக் கழகங்கள், மின் வாரியம் ஆகியவை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப் பாகச் செயல்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் காமராஜரும் அண்ணாவும் இட்ட அடித்தளங்கள்தான்.
இமாசலப் பிரதேசம்
தமிழகம், கேரளம் இரண்டுமே கடலோர மாநிலங்கள். இரண்டுமே தீவிரமான சமூக, அரசியல் இயக்கங்களை எதிர்கொண்டவை. எனவே அவற்றின் சிறந்த நிர்வாகம் என்பது எதிர்பாராத ஒன்றல்ல. ஆனால் இமாசலப் பிரதேசத்தின் மிகச் சிறப்பான வளர்ச்சியோ ஆழ்ந்து உற்றுநோக்கப்பட வேண்டியது. அந்த மாநிலம் முழுக்க மலைப்பாங்கானது, சுற்றிலும் பிற மாநிலங்களால் சூழப்பட்டது, கடற்கரை கிடையாது. ராஜபுத்திரர்கள்தான் அங்கு ஆதிக்க சக்திகள். அவர்கள் பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள், புதிய சிந்தனைகளையும் லேசில் வரவேற்றுவிடமாட்டார்கள். நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் இமாசலம் தீவிரப் பங்கு எடுத்துக்கொண்டதில்லை.
ஆனாலும், இந்த மாநிலம் கல்வி - குறிப்பாக பெண் கல்வி - சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஆகிய வற்றில் சமீபத்திய ஆண்டுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அந்த மாநிலத்துக்கென்று தனியான வரலாறு ஏதும் எழுதப்படாவிட்டாலும் அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த டாக்டர் ஒய். எஸ். பார்மர் என்று அழைக்கப்பட்ட யஷ்வந்த் சிங் பார்மரின் இருபதாண்டு கால சிறப்பான ஆட்சிதான் இவற்றுக்கெல்லாம் காரணம். அந்த மாநிலம் மத்திய ஆட்சிக்குள்பட்ட யூனியன் பிரதேசமாக இருந்தபோதும் பிறகு 1971-ல் தனி மாநிலமானபோதும் அவர்தான் முதலமைச்சராகப் பதவி வகித்தார். கல்விக்கும், சாலைகள் அமைப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தார். சாலைகள் அமைக்கப்பட்டதால் மாநிலத்தின் தோட்டத் தொழில்துறைக்கு உத்வேகம் கிடைத்தது. சந்தையை எளிதில் அடைய முடிந்தது. சிறிய அளவு நிலம் வைத் திருந்தவர்களும் பணம் சம்பாதிக்க முடிந்தது.
மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து நிர்வாகத்தில் அவர் ஆர்வம் செலுத்தினார். அவர்களும் அவருடைய ஆர்வத்தால் உந்தப்பட்டு நன்கு செயல்பட்டனர். பிற மாநிலங்களைவிட இமாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுடைய மாநிலத்தின் நிர்வாகத்தில் தாங்களாகவே அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செயல்படுவதை பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.
மகாராஷ்டிரம், கர்நாடகம்
நேர்மையற்ற, ஊழலில் திளைக்கும் தங்கள் மாநில நிர்வாகத்தைப் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் மகாராஷ்டிரர்கள் ஒய்.பி. சவாண், வசந்தராவ் நாயக் ஆகியோரின் காலத்தைப் பெருமையோடும் மகிழ்ச்சி யோடும் நினைவுகூர்கிறார்கள். வசந்தராவ் நாயக்கின் பதவிக்காலத்தில்தான் நாட்டிலேயே முதல்முறையாக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டது.
கர்நாடகத்தில் உள்ளவர்கள் தேவராஜ அரசு, ராமகிருஷ்ண ஹெக்டேபோல இப்போதுள்ள முதல்வர் இருக்கக்கூடாதா என்றே ஏக்கத்துடன் பேசியிருக்கிறார்கள். தேவராஜ அரசு காலத்தில்தான் நிலச்சீர்திருத்த சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. ராமகிருஷ்ண ஹெக்டே காலத்தில்தான் பஞ்சாயத்து ராஜ் முக்கியத்துவம் பெற்று நிர்வாகம் பரவலாக்கப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறந்த முதலமைச்சர் யார்? தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி குறித்து நிறையவே கேள்விப்பட்டோம். ஆனால், அவருடைய சம காலத்தவர்களிலும் சிலர் நன்றாகவே ஆட்சி செய்துள்ளனர். பிஹார் மாநிலம் என்றாலே குற்றச் செயல்களுக்கும் பின்தங்கிய நிலை மைக்கும் உதாரணமாகத் திகழ்ந்தது. நிதிஷ் குமார் முதல்வராக வந்து கல்வி, சட்டம் - ஒழுங்கு, சாலைகள், பாலங்களுக்கு முக்கியத்துவம் தந்து மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்சென்றார். மத்தியப் பிரதேசமும் பிற மாநிலங்களால் சூழப்பட்ட பகுதி. குஜராத், தமிழ்நாட்டுக்கு உள்ள அனுகூலங்கள் மத்தியப் பிரதேசத்துக்குக் கிடையாது. இருந்தும் சிவராஜ் சிங் சௌகானின் நிர்வாகத்தில் வேளாண்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. பொது விநியோகமும் திறமை யாகச் செயல்படுகிறது. திரிபுரா மாநிலத்தின் நில அமைப்போ மிகவும் சிக்கலானது. அப்படியிருந்தும் மாணிக் சர்க்கார் அங்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்திருக்கிறார்.
மீட்பர் டெல்லியில் இல்லை
டெல்லியிலிருந்துதான் நமக்கு மீட்பர் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் மாநிலத்திலிருந்தே நல்ல நிர்வாகி வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மக்களும் செய்தி ஊடகங்களும் தங்களுடைய மாநில முதல்வரின் செயல்பாடு எப்படி என்று துல்லியமாக எடைபோட வேண்டும். மிகப் பெரிய ஆளுமையுள்ள ஒரு பிரதமரைவிட சிறந்த நிர்வாகியாகத் திகழும் 10 அல்லது 12 முதலமைச்சர்கள் இந்த நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுவிட முடியும்.
- ராமச்சந்திர குஹா, ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு...’ உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: சாரி 

வியாழன், 23 அக்டோபர், 2014

http://www.letters.org/

என்னதான் ஆங்கிலம் படித்திருந்தாலும் தாய்மொழியில் கடிதம் எழுதுவதைப் போல் ஆங்கிலத்தில் சரியான கடிதத்தை எழுத முடியவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருக் கின்றனர்.
தாங்கள் எழுதும் ஆங்கிலக் கடிதங்களில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை என்று ஏதாவது தவறு வந்து விடுமோ? இதன் மூலம் நம்முடைய கருத்தில் பெரும் தவறு நேர்ந்துவிடுமோ? என்னும் அச்சம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த அச்சத்தைப் போக்கிட, ஆங்கிலத்தில் பல்வேறு வகையான கடிதங்களைக் கொண்டு ஒரு இணையதளம் செயல்பட்டுவருகிறது.
கடித தளம்
இந்த இணையதளத்தில் ஒப்புதல் (Acceptance), ஒப்புகை (Acknowledgement), உடன்படிக்கை (Agreement), அறிவிப்பு (Announcement), மன்னிப்பு (Apology), மேல் முறையீடு (Appeal), விண்ணப்பம் (Application), நியமனம் (Appointment), மதிப்புயர்வு (Appreciation), அதிகாரமளிப்பு (Authorization), பிறந்தநாள் (Birthday), வணிகம் (Business), நீக்கம் (Cancellation), சான்றளித்தல் (Certification), முறையீடு (Complaint), இரங்கல் (Condolence), உறுதி செய்தல் (Confirmation), வாழ்த்துகள் Congratulations), திறனாய்வு (Criticism), பணி நீக்கம் (Dismissal), நன்கொடை (Donation), ஏற்பிசைவு (Endorsement), வழியனுப்புரை (Farewell), பின் தொடர் (Follow Up), முறைப்படியான (Formal), நட்பு (Friendship), நிதி திரட்டுதல் (Fundraising), பிரியாவிடை (Goodbye), புகார் (Grievance), விசாரணை (Inquiry), நேர்காணல் (Interview), அறிமுகம் (Introduction), அழைப்பிதழ் (Invitation), விடுப்பு (Leave), காதல் (Love), சந்தைப்படுத்தல் (Marketing), ஒழுங்கு (Order), அனுமதி (Permission), வசமாக்குதல் (Persuasive), பணி உயர்வு (Promotion), பரிந்துரை (Recommendation), மேற்கோள் (Reference), வேண்டுகோள் (Request), பணித் துறப்பு (Resignation), பணி ஓய்வு (Retirement), காதல் நயம் (Romantic), நன்றி (Thank You), இடமாற்றம் (Transfer), எச்சரிக்கை (Warning), வரவேற்பு (Welcome) என்பன உள்ளிட்ட 69 வகையான கடிதங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மாற்றி யோசி!
ஒவ்வொரு தலைப்பையும் சொடுக்கினால், அத்தலைப்புடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட கடித மாதிரிகள் தரப்பட்டிருக் கின்றன. இத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் 1350க்கும் அதிகமான மாதிரிக் கடிதங்களிலிருந்து நமக்குத் தேவையான மாதிரிக் கடிதத்தை எடுத்து, நமக்கேற்றவாறு சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து புதிய கடிதங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
அப்புறமென்ன, ஆங்கிலக் கடிதம் எழுத இனிச் சிறிதும் அச்சப்பட வேண்டாம். http://www.letters.org/ எனும் இணைய முகவரிக்குச் சென்று நாமும் ஆங்கிலக் கடிதங்களை எழுதி அசத்தலாம்.

Know about Hair

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது.
முடியின் வளர்ச்சி
முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை.
முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.
ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.
இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.
தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.
என்ன காரணம்?
வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்,,,, இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான்.
வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை மாற்ற முடியாது.
கடைசிக் காரணம் இது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.
சரி, ஆண்களுக்கு மட்டுமே வழுக்கை விழுகிறது. பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை? இந்தச் சந்தேகம் அதிகம் பேருக்கு இருக்கிறது. டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பெண்களிடம் அளவாகவே சுரக்கிறது; அதீதமாகச் சுரக்க வழியில்லை. இதனால் பெண்களுக்கு வழுக்கை விழுவது மிக அரிதாக இருக்கிறது.
வழுக்கையைத் தடுக்க முடியுமா?
நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது. எனவே, இதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்.
தலைமுடிகளின் வேர்க் கால் எப்படி இருக்கிறது? அதற்கு உயிர் இருக்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா என்று முடியை ஸ்கேன் செய்து பார்த்து, உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கையைத் தடுக்கலாம்.
வழுக்கை விழத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் மேன்மேலும் முடி கொட்டாது. ஆனால், மாத்திரை போடுவதை நிறுத்தியதும் முடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவினால், ஓரளவு முடி வளரும். வழுக்கை விழுவதும் தள்ளிப்போகும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவிவர வேண்டும்.
ஊட்டச்சத்து முக்கியம்!
சிறு வயதிலிருந்தே தலைமுடியைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முக்கியம். சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க, எண்ணெய் நிச்சயம் உதவும். ஷாம்பு போட்டுக் குளிக்கக் கூடாது. பதிலாக, சீயக்காய் குளியல் நல்லது. வெயிலில் அதிகமாக அலையக் கூடாது. கடினமான சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. தலைக்குக் குளித்ததும், முடியை உலர்த்த ‘டிரையரை’ப் பயன்படுத்தக் கூடாது. பேன், பொடுகு, பூஞ்சை போன்றவை தொற்றாமல் தலையைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருட்கள், முழு தானியங்கள், வாழைப்பழம், மீன் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டால் முடி வளர்வதற்கான எல்லாச் சத்துகளும் கிடைக்கும்.
என்ன சிகிச்சை?
பெரும்பாலும் பின்னந்தலையில் வழுக்கை விழாது. முன் நெற்றியின் பக்கவாட்டில் தொடங்கி, உச்சித் தலை வரைக்கும் வழுக்கை விழும். ஆகவே, பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுவதற்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) என்று பெயர்.
இதெல்லாம் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ‘விக்’! 

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர். 
தொடர்புக்கு: gganesan95@gmail.com

Importance of Lanuguage - Tamil

ஒரு மொழி வளருகிறது என்றால் அது புழக்க மொழியாக இருக்க வேண்டும். அரசியல், கலை இலக்கியம், பொருளியியல், சூழியல், சட்டம், அறிவியல் என்று அனைத்தையும் சேர்த்துதான் ஒரு மொழி வளரமுடியும். அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், புழக்கத்தில் இல்லாவிட்டாலும் ஒரு மொழி அழிந்துவிடும். இதற்கு உதாரணமாக பாலி மொழி, கொங்கணி, துளு என்று பல்வேறு மொழிகளை குறிப்பிடலாம். தமிழ்மொழி எந்த திசைநோக்கி செல்கிறது என்றால் அதில் அறிவார்ந்த செயல்பாடுகள் இல்லை. ஆனாலும் இந்த மொழி வாழ்கிறது என்றால் தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதுதான். ஆனால் இப்போது அங்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க தொடங்கியிருப்பதால் நிலைமை மாறியிருக்கிறது. இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளும் இப்படித்தான் இருக்கின்றன. மலையாளமும் அவ்வாறே உள்ளது.
தமிழகத்தில் தமிழ் உணர்வுக்கு ஈடு இணையில்லை. அதே நேரத்தில் தமிழை அன்னையாக்கிவிட்டபோதே வீடுகளில் அம்மாக்களுக்கு அளிக்கும் மரியாதைதான் தமிழுக்கு அளிக்கப்படுகிறது. எளிமையாக சொல்லுங்கள், சுருக்கமாக சொல்லுங்கள், பொதுமொழியில் சொல்லுங்கள், தகவலை மட்டும் சொல்லுங்கள் என்ற 4 விஷயங்கள்தான் ஒரு மொழியை அழிக்கவல்லவை. நதிப்படுகைகளில் நாகரிகம் தோன்றியது குறித்த வரலாற்றை 400 வார்த்தைகளுக்குள் சொல்ல முடியாது. அவ்வாறு 400 வார்த்தைகளுக்குள் சொன்னால் சிந்திக்க முடியாத மொழியாக தமிழை மாற்றுவதாகவே அர்த்தம்.
சொல்வதை பொதுமொழியில் சொல்லுங்கள் என்கிறார்கள். சூழியல் என்ற தமிழ் கலைச்சொல்லை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அழகியல் என்பது ஓவியம், இசை, இலக்கியம், சிற்பம், நடனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இதுபோன்ற தமிழ் கலைச் சொற்கள் தேவையில்லை என்று சொல்லக்கூடாது. கருத்துகளை தெரிந்து கொள்வதற்கும், தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. கேள்விகள், சிந்தனைகள் வரவேண்டும். தகவல்களுக்கு மரியாதை இனி கிடையாது. சிந்திக்க வேண்டியவற்றை சொல்ல வேண்டும். அந்த வகையில் “தி இந்து” நாளிதழில் கட்டுரைகள் வெளியாகின்றன. 6 மாதங்களுக்கு ஒருமுறை பழைய தகவல்களை திருப்பி திருப்பி சொல்லும் பத்திரிகைகள் அதிகமிருக்கின்றன. இந்த தரைதட்டிய சூழ்நிலையில், சவாலான காலத்தில் வாராது வந்த மாமணிபோல் “தி இந்து” தமிழ் வந்தது.
கருத்துகளை புரிந்து கொள்வதற்கான பயிற்சியை கல்வி நிலையங்கள் அளிக்கவில்லை. தகவல்களை மனப்பாடம் செய்யவே கற்றுத்தருகிறார்கள். இச்சூழ்நிலையில்தான் “தி இந்து” விரிவான அறிவார்ந்த கட்டுரைகளை வெளியிட்டது. இந்த நியூஸ் பேப்பரில் நியூஸை காணவில்லை என்று முதலில் கூறியவர்கள் பின்னர் அதில் வெளியாகும் கட்டுரைகள் குறித்து பேசுகிறார்கள். இது எனக்கு இன்ப அதிர்ச்சியையே அளிக்கிறது. தரமான விஷயத்தை சொன்னால் அதை ஏற்க மக்கள் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. மிகப்பெரும் இலக்கிய பாரம்பரியமிக்க நெல்லையில் இத் திருவிழா நடத்துவது மிகவும் சிறப்பானது என்றார் ஜெயமோகன்.