செவ்வாய், 3 ஜூன், 2014

புகையிலை தரும் பாதிப்பு -16,800 கோடி

புகையிலை தரும் பாதிப்பு அதைப் பயன்படுத்துபவருக்குப் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பாதிப்புகளை உண்டாக்குவதுடன் முடிவடைவதில்லை. அந்த நோய்களுக்கான சிகிச்சை, மருத்துவ செலவுகள் என்று இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு மட்டும் ரூ.16,800 கோடி செலவிடப்படுகிறது என்ற தகவல் சுகாதாரத் துறையினர் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் அமைதியிழக்க வைத்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவுடன் இந்திய பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘புகையிலை தொடர்பான நோய்களால் இந்தியாவில் ஏற்படும் பொருளாதாரச் சுமை' என்ற அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் நோய்களுக்கு நேரடியாகச் செலவிடப்பட்ட மொத்தச் செலவு ரூ. 16,800 கோடி என்றும், மறைமுகமான செலவு ரூ.14,700 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தவிர, குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்துவிடுவதால் ஏற்பட்ட செலவு ரூ.73,000 கோடியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக