வியாழன், 12 ஜூன், 2014

கோச்சடையான் காலம் கடந்தும் பேச்சுடையான்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோர்ப்பேன்

அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்

மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தாள்
தாய் மடியாவேன்

சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்

****************************
காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில்
பார்த்திட செய்வேன்

மழை நாளில் உன் மார்பில்
கம்பிளி ஆவேன்
மாலை காற்றை தலை கோதி
நித்திரை தருவேன்

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே 

உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்

கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்

அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன் உன்
ஆண்மை நிறையும் போது உந்தன்
தாய் போல் இருப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்
*******************************************
உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு

ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்

காடு தடுத்தால்
காற்றாய்ப் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்

குழு : வீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும்

இலட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா
வாளில் கூர்மை
வாழ்வில் நேர்மை
இரண்டும் என்றுமே வெல்லும்

எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
***************************
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
கொன்றை சூடும் கோச்சடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
கோள்கள் கடந்தும் வீச்சுடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
காற்றைக் கடந்தும் மூச்சுடையான்
கோச்சடையான் – எங்கள் கோச்சடையான்
காலம் கடந்தும் பேச்சுடையான் 


மாசில் வீணையே
மாலை மதியமே
வீசு தென்றலே
வீங்கிள வேனிலே
மூசு வண்டறை
பொய்கைப் பூவே

ஈசா உந்தன்
இணையடி சரணம்
நின்னடி சேர்ந்தால்
நேராது மரணம்.

**********************
எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

குழு:
உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ
உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

மாறு – மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமை கொள்
தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது

சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா? உயிரா? பெயரா?
மூன்றும் இல்லை – செயல்

உடலா உயிரா பெயரா நீ ?
மூன்றும் இல்லை செயலே நீ
விதியை அமைப்பது இறைவன் கையில்
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்

உன் வில்லோடு வில்லோடு
வீரம் கொடு
உன் சொல்லோடு சொல்லோடு
மாற்றம் கொடு
மாற்றம் ஒன்று தான் மாறாதது


நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி;
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா.. எல்லாம் கொஞ்ச காலம்

உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்
தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்…!

மாற்றம் ஒன்றுதான் மாறாதது..

********************************
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது
தோல்விகளாலே துவண்டுவிடாதே வெற்றிகளாலே வெறிகொள்ளாதே
கல்லடி படும் என்பதாலே மரம் காய்க்காமல் போவதில்லை
மாலைகளை கண்டு மயங்காதே
மலைகளை கண்டு கலங்காதே
சொல்லடி படும் என்பதாலே வெற்றி காணாமல் போவதில்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா நீ ஓடிக்கொண்டே நில்
நிம்மதி வாழ்வு வேண்டுமா நீ பாடிக்கொண்டே இரு
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

கோழைகள் மண்ணில் காண் அது பெரிதல்ல பேறல்ல
வீரர்கள் மண்ணில் காண் அது வரலாறு வரலாறு ஆ…
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே
அந்த பொன்னை ஒருநாள் மண்ணாய் பார்ப்பவன் கர்ம வீரனே கர்ம வீரனே
ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக