வியாழன், 12 ஜூன், 2014

Na.MuthuKumar Lyrics

உன் பேரே தெரியாத.. உன்னை கூப்பிட முடியாத..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அந்த பேரை அறியாது.. அட யாரும் இங்கேது..
அதை ஒருமுறை சொன்னாலே.. தூக்கம் வாராது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..

சூடான பேரும் அதுதான்.. சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்..
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே..
ஜில்லென்ற பேரும் அதுதான்.. கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்..
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே..
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை,
மிளரவைக்கும் மிருகம்மில்லை..
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?

பெரிதான பேரும் அதுதான்.. சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே..
சிறிதான பேரும் அதுதான்..
சட்டென்று முடிந்ததே போகும், எப்படி சொல்வேன் நானும்,
மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும், அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பினால் வரும் பேர் நான் சொல்லவா..?

உன் பேரே தெரியாத.. உன்னை கூப்பிட முடியாத..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. உனக்கே தெரியாது..
அட தினம்தோறும் அதை சொல்லலி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..
*************************
காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரில் மீன்கள்
துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கனம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறு கனம் யேங்கிட வைத்தவன்

**********************
ஆ: நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி... ஈ...

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
(நீ என்பதே)

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஆ: இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்

பெ: ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்

ஆ: இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது

பெ: வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி... ஈ...

ஆ: ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் 
அசையாமல் நின்றிருந்தோம்

பெ: ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்

ஆ: இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே

பெ: இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஆ: ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

பெ: ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாத்திருந்தோம்
(நீ என்பதே)

*****************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக