இந்தியாவில் இந்தி நீங்கலாக ஒரே மொழி பேசும் மக்கள் வாழும் நிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவது இதுவே முதல்முறை. இனம், மொழி அடையாளங்களைத் தாண்டி பாகுபாடு, முன்னேற்றமின்மை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடக்கும் பிரிவினையும் இதுதான். அன்றைக்கு ஆந்திரம்-தெலங்கானா இணைப்பைப் பற்றி, “தம்பதியர் பரஸ்பர ஒத்துழைப்புடன் நடந்துகொண்டால் நல்லது; மாறாக வேறுபட்ட மனநிலையுடன் நடந்துகொண்டால் ஆபத்தாக முடியும்” என்று தெரிவித்தார் நேரு. 57 ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
தெலங்கானா பிரிவினை வரைபடத்துக்குள் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையான பாகப் பிரிவினை இனிதான் நடக்க வேண்டும். தெலங்கானா எதிர்கொள்ளும் பெரிய சவால் இது. நில அமைப்பில், 45% வனப்பகுதிகள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் கிடைக்கும் பகுதிகள் தெலங்கானா பகுதிக்குள் வருகின்றன என்றால், ஆந்திரத்துக்கு 970 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 17,500 கிலோ மீட்டர் வனப் பகுதிகள் கைவசம் உள்ளன. இந்தப் பங்கீட்டின்போது சமம் என்கிற அளவுகோல் உண்மையில் சமமான பங்கீட்டைத் தராது என்பதை மத்திய அரசும், சீமாந்திர அரசும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சியின் நிழல் படாத பகுதி என வர்ணிக்கப்படும் தெலங்கானா, இன்றைய சீமாந்திரத்தின் வளர்ச்சியை அடையவே இன்னும் சில தசாப்தங்கள் ஆகும் என்பதே கள யதார்த்தம். அந்தப் பள்ளம் நிரப்பப்பட வேண்டும் என்றால், ஏற்கெனவே உள்ள மேட்டைவிடவும் நான்கு சட்டி மணல் கூடுதலாக அதற்கு ஒதுக்கப்படுவதே நியாயமாக இருக்கும்
தெலங்கானா பிரிவினை வரைபடத்துக்குள் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையான பாகப் பிரிவினை இனிதான் நடக்க வேண்டும். தெலங்கானா எதிர்கொள்ளும் பெரிய சவால் இது. நில அமைப்பில், 45% வனப்பகுதிகள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் கிடைக்கும் பகுதிகள் தெலங்கானா பகுதிக்குள் வருகின்றன என்றால், ஆந்திரத்துக்கு 970 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 17,500 கிலோ மீட்டர் வனப் பகுதிகள் கைவசம் உள்ளன. இந்தப் பங்கீட்டின்போது சமம் என்கிற அளவுகோல் உண்மையில் சமமான பங்கீட்டைத் தராது என்பதை மத்திய அரசும், சீமாந்திர அரசும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சியின் நிழல் படாத பகுதி என வர்ணிக்கப்படும் தெலங்கானா, இன்றைய சீமாந்திரத்தின் வளர்ச்சியை அடையவே இன்னும் சில தசாப்தங்கள் ஆகும் என்பதே கள யதார்த்தம். அந்தப் பள்ளம் நிரப்பப்பட வேண்டும் என்றால், ஏற்கெனவே உள்ள மேட்டைவிடவும் நான்கு சட்டி மணல் கூடுதலாக அதற்கு ஒதுக்கப்படுவதே நியாயமாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக