திங்கள், 2 ஜூன், 2014

தி.மு.க.

சென்னையில் 1949 செப்டம்பர் 17-ம் தேதி அன்று தொடங்கப்பட்ட தி.மு.க. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதைத் தீர்மானிக்க 1951 நவம்பர் 17 அன்று கட்சியின் முதல் பொதுக்குழுவை மதுரையில் கூட்டியது. திராவிடர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காத இந்நாட்டின் தேர்தலைப் புறக்கணிப்பது என்றும் மாறாக, தி.மு.க- வின் கொள்கைகளோடு நெருக்கமானவர்களை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்தது. அப்போது தி.மு.க-விடம் ஆதரவு கோரும் வேட்பாளர்களிடம் அது கோரிய முக்கியமான உறுதிமொழிகளில் ஒன்று இது: “நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஊழலையும் சர்வாதிகாரத்தையும் வேரறுக்கப் பாடுபடுவேன்…”
இன்றைக்கு 16-வது பொதுத் தேர்தல் தோல்வியைப் பற்றிப் பேச தி.மு.க-வின் உயர்நிலைக்குழு கூடும் தருணத்தில், 63 ஆண்டுகளுக்கு முந்தைய அதன் முதல் பொதுக்குழுக் கூட்டத்தை நினைவுகூர்ந்து பாருங்கள்… வெற்றி – தோல்வி ஒருபுறம் கிடக்கட்டும்… கட்சி எங்கே வந்து சேர்ந்திருக்கிறது?
எங்கே ஜனநாயகம்?
தி.மு.க-வின் முகமே அண்ணாதான் என்று அறியப்பட்ட அதன் ஆரம்ப நாட்களிலேயே – 1955 ஏப்ரல் 4 பொதுக்குழுக் கூட்டத்திலேயே – ஜனநாயக விழுமியங்களுக்கு வழிகாட்டி, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி இரா.நெடுஞ்செழியன் அந்தப் பதவியில் அமர வழிவகுத்தார் அண்ணா. இன்றைக்குக் கட்சியின் நிலைமை என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக