மோடி உரையாற்றும் போது, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஸீ ஜின்பிங், பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா ஆகியோர் இருந்தனர்.
“உலகப் பொருளாதாரம் தற்போது வலுவாக இல்லை. வளர்ந்த பொருளாதாரமான ஐரோப்பாவே நெருக்கடியில் உள்ளது, நிதிச்சந்தைகள் நிலையின்மையில் தத்தளிக்கின்றன” என்றார் மோடி.
உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகளில் மட்டும் 44% மக்கள் வசிக்கின்றனர். உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் பிரிக்ஸ் பங்களிப்பு மட்டும் 40% ஆகும். உலக வர்த்தகத்தில் 18% பங்களிப்பு செய்து வருகிறோம் என்று கூறிய மோடி, “பிரிக்ஸ் நாடுகளிடையே வேளாண்மை, உற்பத்தி, தொழில்நுட்பம், சேவை, மனித வளங்கள் என்ற அளவில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எனவே நம்மிடையே பொருளாதார கூட்டுறவு என்பதே செலுத்தும் சக்தியாக உள்ளது.
நாம் நமது திறன் வளர்ச்சியை இன்னமும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
புதிய வளர்ச்சி வங்கி இந்த 5 நாடுகளிடையே எல்லை தாண்டிய கூட்டுறவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறிய மோடி, “உறுப்பு நாடுகள் செய்யப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளிலிருந்து பயனடையும் என்றே கருதுகிறேன். பெரிய திட்டங்களுக்கான பிரிக்ஸ் முயற்சி ஒரு வரவேற்கத்தக்க முதல் படி” என்றார் பிரதமர் மோடி.
“உலகப் பொருளாதாரம் தற்போது வலுவாக இல்லை. வளர்ந்த பொருளாதாரமான ஐரோப்பாவே நெருக்கடியில் உள்ளது, நிதிச்சந்தைகள் நிலையின்மையில் தத்தளிக்கின்றன” என்றார் மோடி.
உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகளில் மட்டும் 44% மக்கள் வசிக்கின்றனர். உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் பிரிக்ஸ் பங்களிப்பு மட்டும் 40% ஆகும். உலக வர்த்தகத்தில் 18% பங்களிப்பு செய்து வருகிறோம் என்று கூறிய மோடி, “பிரிக்ஸ் நாடுகளிடையே வேளாண்மை, உற்பத்தி, தொழில்நுட்பம், சேவை, மனித வளங்கள் என்ற அளவில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எனவே நம்மிடையே பொருளாதார கூட்டுறவு என்பதே செலுத்தும் சக்தியாக உள்ளது.
நாம் நமது திறன் வளர்ச்சியை இன்னமும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
புதிய வளர்ச்சி வங்கி இந்த 5 நாடுகளிடையே எல்லை தாண்டிய கூட்டுறவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறிய மோடி, “உறுப்பு நாடுகள் செய்யப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளிலிருந்து பயனடையும் என்றே கருதுகிறேன். பெரிய திட்டங்களுக்கான பிரிக்ஸ் முயற்சி ஒரு வரவேற்கத்தக்க முதல் படி” என்றார் பிரதமர் மோடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக