வியாழன், 31 ஜூலை, 2014

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் புதிய வடிவினைப் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் திட்டமாக இதுவரை நிறைவேற்றப்பட்டுவந்த இது, இனி மாநில அரசுகளின் பொறுப்பில் விடப்படுகிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன் 2014-15-ம் நிதியாண்டுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.33,364 கோடி செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, கிராமப்புற வளர்ச்சி ஆகிய மூன்று லட்சியங்களை நிறைவேற்றும் கருவியாக, காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டுவந்த இந்தத் திட்டம் தொடர்வதுடன் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த லட்சியத்திலிருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காகவே முன்பு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, ஆட்கள் செய்யக்கூடிய வேலைகளைக்கனரக இயந்திரங்கள் துணைகொண்டு செய்யக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை. அப்படியே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் மொத்த வேலையில் அதன் பங்களிப்பு 40%-க்கு மேல் இருக்கக் கூடாது என்பதே அரசின் நிலை. இதனாலேயே கடினமான சில வேலைகளைத் தொழிலாளர்கள் செய்ய முடியாதபோது திட்ட அமலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
மேலும், விவசாய வேலை மிகுந்த நாட்களில் அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்குப் பெரும் எண்ணிக்கையில் விவசாயத் தொழிலாளர்கள் சென்றதால், நில உடைமையாளர்களுக்கு அப்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன் ஊதியமும் அதிகம் கொடுக்க நேர்ந்தது. இடுபொருள் செலவு உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த விவசாயிகளுக்கு, ஆள் பற்றாக்குறையும் ஊதிய உயர்வும் பெருத்த பின்னடைவாகவே அமைந்தன.
ஆனால், தற்போதைய மாற்றத்தால் மாநில அரசுகள் அவரவர் மாநிலங்களில் விவசாய வேலை அதிகமுள்ள நாட்களில் இந்த திட்டத்தை அமல் செய்யாமல், வேலையில்லாப் பருவத்தில் திட்டமிட்டு மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திப் பாசன வாய்க்கால்களைத் தூர் வாருவது, புதிய கால்வாய்களை அமைப்பது, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைப் பராமரிப்பது, கசிவுநீர்க் குட்டைகளை ஏற்படுத்துவது போன்றவற்றை மழைக் காலத்துக்கு முன்னால் திட்டமிட்டு விரைந்து செய்துமுடித்தால், விவசாயத்துக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
தோட்டக்கலை வளர்ச்சிக்கு மகாராஷ்டிரம் இதுபோன்ற திட்டத்தைத்தான் 1990-களில் பயன்படுத்தியது. அதன் பலனாக கூடுதலாக 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பழமரச் சாகுபடியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதனால் 23 கோடி மனித வேலைநாட்கள் உருவானதுடன், பழச் சாகுபடியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது மகாராஷ்டிரம். இந்த விஷயத்தில் அன்றைய மகாராஷ்டிரத்தை முன்னுதாரணமாகக் கொள்வது அவசியம்.
ஏழைத் தொழிலாளர்களுக்குச் செலவுக்குப் பணம் கொடுக்கும் கருணைத் திட்டமாக இல்லாமல், பயனுள்ள, நிரந்தர விவசாயச் சொத்துகளை உருவாக்கும் திட்டமாக, முக்கியமாக, வறுமை ஒழிப்புக்கான திட்டமாக இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இனி மாநில அரசுகளின் பொறுப்பு.

புதன், 30 ஜூலை, 2014

தனியார் வசமான கல்வி - காட் ஒப்பந்தத்தின் விளைவு

காட் ஒப்பந்தத்தின் விளைவு
1991-ல் ‘காட்’ ஒப்பந்தத்தில் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் கையெழுத்திட்டார். அதை, அப்படியே ஏற்றுக்கொண்டார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அந்த ஒப்பந்தம் ‘அரசானது, கல்வி, மருத்துவம் போன்ற செலவுகளை ஏற்க வேண்டியதில்லை; செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்க வசதியாக இவற்றைத் தனியார் வசம் ஒப்படைத்துவிடலாம்' என்றும், ‘தரமான கல்வியும் மருத்துச் சேவையும் வேண்டும் என்று கோரும் மக்கள் அதற்கான செலவைச் செய்வதில் தவறில்லை' என்றும் சொல்கிறது.

இந்த காட் ஒப்பந்தத்தில் மத்திய, மாநில அரசுகள் தயக்கமின்றிக் கையெழுத்திட்டன. கல்வியைப் பொறுத்த வரை, இன்று வரை மத்திய, மாநில அரசுகள் எதுவும் எந்த விதப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இதில் எந்த அரசும் விதிவிலக்கல்ல. 

தனியார் வசமான கல்வி
அனைவருக்கும் கல்வி தருவது அரசின் கடமை அல்ல என்று மத்திய, மாநில அரசுகள் கருதத் தொடங்கியதும், இருந்த மிச்சசொச்சக் கட்டுப்பாடுகளும், நிதி உதவியும் கைவிடப்பட்டன. அதுதான் சந்தர்ப்பம் என்று கல்வி வியாபாரிகள் களத்தில் இறங்கினார்கள்.
இதன் விளைவுதான் தற்போது தமிழ்நாட் டில் இருக்கும் 62,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள். இவற்றில், 20% பள்ளிகள் அங்கீகார மற்றவை. 65% பள்ளிகள் ஒரு ஏக்கருக்கும் குறைவான இடவசதி கொண்டவை. 20% பள்ளிகள் வெறும் 10,000 சதுர அடி பரப்புக்கும் குறைவானவை. 10% பள்ளிகள் வெறும் 1,000 சதுர அடி பரப்புக்கும் குறைவானவை. 25% பள்ளிகள் குடிசைகளில் இயங்குகின்றன. 60% பள்ளிகளில் முறையான கல்வித் தகுதி, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை.
மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் 1990-ல் நியமிக்கப்பட்ட சிட்டிபாபு கமிஷன் 2003-ல் அரசுக்கு அளித்த அறிக்கையில் உள்ள தமிழ்நாட்டுப் பள்ளிகளின் நிலை.
இந்தப் பின்னணியில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியைப் பார்க்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளி 1950-ல் தொடங்கப்பட்டது. 1990-ல் நடுநிலைப் பள்ளியாகி, 2004-ல் உயர்நிலைப் பள்ளியானது. அங்கு மேலும் 3 பள்ளிகள் வேறு இயங்கி வந்தன. ஆக மொத்தம், 2 அரசு உதவி பெறும் பள்ளிகள். 2 அரசு அங்கீகாரமற்ற ஆங்கில வழி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகள். ஜூலை 16, 2004 வரை ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியாகத்தான் செயல்பட்டுவந்திருக்கிறது. பள்ளி நடத்துவதற்காக, அரசு நிதி உதவி விதிகள், அத்தியாயம் 8, விதி-52 வலியுறுத்தும் விதிமுறைகளில் ஒன்றைக் கூட ஸ்ரீகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி கடைப்பிடிக்கவில்லை. பள்ளிக்கூடம் விதிமுறைகளைக் கடைப்பிடித்திருந்தாலோ, அதிகாரிகளும் அரசும் முறையாகக் கண்காணித்திருந்தாலோ, பெற்றோர்கள் உரிய விழிப்புணர்வுடன் இருந்திருந்தாலோ இந்தக் கொலைத்தீ சம்பவம் நிகழ்ந்திருக்குமா?

தி இந்து' தமிழ் நாளிதழ் -044-42890002 தொடர்புக்கு

அன்புள்ள வாசகர்களே...
'தி இந்து' தமிழ் நாளிதழ் உங்களோடு இன்னும் நெருக்கமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இனி இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போகிறது. வழக்கமாக நீங்கள் எழுதும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தி இந்து' அலுவலகத்துடனான தொலைபேசி தொடர்புகள் இவற்றையும் தாண்டி, இந்தத் தொழில் நுட்பம் நமக்குள்ளே கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
'தி இந்து' செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம்.
உங்கள் குரல் பதிவைக் கேட்டுவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுப்பது எங்கள் குழுவினர் பரிசீலிப்பார்கள்.
அதேபோல், நீங்கள் எதிர்கொள்ளும் நேரடிப் பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், அவற்றையும் இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் எண்ணங்களையோ... அளிக்க நினைக்கும் புதிய தகவலையோ பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் பதிவில் உள்ள தகவல்கள் போதாதபட்சத்தில், நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.
நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.
தமிழால் இணைவோம்... தங்கு தடையின்றி இணைவோம்.
வாழ்த்துகளுடன்
- ஆசிரியர்

Child Abuse incidents in School

The state, and individual schools, are not doing enough to protect children from physical abuse. The recent gruesome incidents in which three students were brutally thrashed by the principal of a school in Kakinada in Andhra Pradesh, and equally despicable conduct by authorities elsewhere, are shocking reminders of this fact. We have to acknowledge this naked truth and also recognise that the onus of ensuring the safety and security of children on campuses is ultimately the responsibility of the teaching and non-teaching community. Else, we cannot confront the circumstances on the ground where violence committed by authorities against those under their care routinely goes unpunished. The Union Women and Child Development Ministry banned corporal punishment in 2010, following the tragic death of a ward who was subjected to humiliation by the principal of a reputed Kolkata boys’ school.
The many punitive measures listed in the guidelines are effective only on paper. Spanking, caning and such-like physical and verbal abuse injure and insult victims. Such acts largely go unnoticed and unchecked because the belief that these are effective means to discipline wards runs deep in the adult psyche. Incidents such as those in Kakinada, and in Kolkata — where a three-year-old boy was virtually tortured by his care-giver — are but extreme examples which expose susceptibility to brutal behaviour. Publicising the guidelines among teachers, parents and children may influence positive behaviour. Training programmes ought to equip teachers with humane, practical and effective skills to deal with children within and outside classrooms. There is an underlying assumption that children require minimal academic and allied inputs and that these may be provided by almost anybody. The fact is that these must be age-appropriate and inculcated by skilled teachers.

The cause for indiscipline could also be far-from-stimulating teaching methods and an unhealthy teacher-pupil ratio. Most schools have also dispensed with science laboratory activity to demonstrate practicals. The profession has long ceased to attract the best of talent owing to poor remuneration in many private schools and adverse conditions of service. Cumulatively, the atmosphere is one where the energies of students are not channelised into constructive and meaningful avenues. These systemic limitations are the result of the low priority accorded to basic education by successive governments in India. With universal free and compulsory education a legal right now, there is reason to hope for qualitative improvements in conditions in schools and in learning outcomes. 

Present Aviation Industry

The decision of the Union Civil Aviation Ministry to issue six no objection certificates to applicants both in the national and regional sectors raises a few questions. Air Asia has just taken to the skies in India. The Tata-Singapore Airlines joint venture airline should become operational by the year-end, and Air Pegasus is likely to get the nod soon. India already has eight airlines, providing a dense network of flights linking different parts of the country, though not with a uniform spread. While the public sector Air India gets weighed down with social commitments and the burden of government or political interference, the private airlines get to run on more commercial lines. However, except for Indigo, which turns in a profit most of the time, all the airlines are running up losses, looking to the government to provide some relief or concessions. The charge of the public sector airline is that the government and the authorities are more helpful to the private airlines. Air India has been bleeding consistently, and the government has been injecting funds in small doses to help it survive. It has not been able to acquire all the aircraft it wanted, or reduce the burden of over-staffing. Some of the private airlines are run more efficiently and have unveiled plans to expand operations significantly.
At this critical juncture, does the country need another six airlines? Can they all survive in a hyper-competitive environment? Are the Aviation Ministry, the Airports Authority of India, and the State governments ready to improve the infrastructure and facilities at some of the smaller airports? Since outgo on aviation turbine fuel and staff constitutes the largest share of the operational cost of any airline, how are the new entities planning to manage their finances? No doubt, job opportunities will open up for young men and women, including qualified commercial pilots who have been without work for some time now. From the point of view of passengers, more airlines and lower fares may once again make air travel cheaper and within the reach of the common person. The Aviation Ministry may say it just issued an NOC for applicants, and it is up to the promoter to work out the economics of the operations and ensure that the new airlines remain viable. The Centre has also to take a call on the norms for allowing private or domestic airlines to fly international routes, because other than the domestic trunk routes the airlines earn their revenue from flights overseas. It is also time for the aviation regulator to get prepared and equipped for the critical task of monitoring the skies and the operators, as well as their aircraft. 

ஆண்டிபயாடிக்

கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மருத்துவச் சாதனை என்று போற்றப்படுவது, நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் என்று அழைக்கப்படும் ‘ஆண்டிபயாடிக்’குகளைக் கண்டுபிடித்ததுதான்.
உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்தான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தியது. பென்சிலினைக் கண்டறிந்த அலெக்சாண்டர் ஃபிளமிங்குக்கு 1928-ல் நோபல் பரிசு கிடைத்தது.
உலக அளவில் 1930-க்கு முன்னால் சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூடப் பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் அசுர வேகத்தில் பரவி, பல்லாயிரம் மனித உயிர்களைப் பலி வாங்கிய வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆண்டிபயாடிக்கின் வரவு மனிதக் குலத்தை மிகப் பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியது.
எழுபது ஆண்டுகளுக்கு முன், எது மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டதோ, அதே ஆண்டிபயாடிக் இப்போது முனை மழுங்கிய வாளாக நோயால் வாடும் மருந்தாக தன் சக்தியை இழந்து கொண்டிருக்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டிபயாடிக் ஆய்வு முடிவின் அறிக்கை இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.
‘இப்போது நடைமுறையில் உள்ள பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் சவால் விடுகின்றன; நோய்களுக்கு எதிராக இந்த மருந்துகள் நடத்தும் தாக்குதலுக்கு அவை பெரும் தடையாக நிற்கின்றன; ஆண்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டு, பலத்த ஆதிக்கம் செலுத்துகின்றன.
இதனால் நிமோனியா, கொனோரியா, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்குக் கொடுக்கப்படுகிற ஆண்டிபயாட்டிக்குகள்கூட செயல்திறனை இழந்து நிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆண்டிபயாட்டிக்குகளையே அழிக்கும் அளவுக்கு ‘கிருமிகளின் எதிர்ப்பு சக்தி’ (Antibiotic Resistance) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது’ என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
காரணம் என்ன?
ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால் அல்லது விட்டுவிட்டுச் சாப்பிட்டால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லாக் கிருமிகளும் சாகாமல் போகலாம்.
அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, எஞ்சியுள்ள கிருமிகள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிவிடும். இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும். ஆனால், இவற்றின் பக்கவிளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும்.
மருந்துக்குக் கட்டுப்படாத காசநோய்
கடந்த ஒரு நூற்றாண்டாக மிரளவைத்துக் கொண்டிருக்கும் காசநோய், இதற்கு நல்ல உதாரணம். காசநோய் முற்றிலும் குணமடையக் குறைந்தது 6 மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும்.
ஆனால், மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நம்பி பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். இதனால் காசநோய்க் கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடும் திறனைப் பெற்றுவிடுகின்றன.
அதன் பிறகு ஏற்கெனவே கொடுத்துவந்த மருந்துகளால், இந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறிவிடுகிறது. இதற்கு வழக்கமான 6 மாத சிகிச்சை போதாது. 2 வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டும் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காச நோயாளிகள் இந்த நிலைமையில் உள்ளனர்.
இரட்டை முனைக் கத்தி!
ஆண்டிபயாடிக் என்பது இரட்டை முனைக் கத்தி போன்றது. இதன் அளவு குறைந்தாலும் ஆபத்து; கூடினாலும் ஆபத்து. இதில் இரண்டாவது கருத்துக்குச் சரியான உதாரணம் இது: நம் நாட்டில் சாதாரணச் சளிக்கு வழக்கமாகப் பயன்படுத்தக்கூடிய அமாக்ஸிசிலின் மருந்து அதீதமாக (Over dose) பயன்படுத்தப்பட்ட காரணத்தால், அது பலன் தரும் திறனை இழந்துவிட்டது.
அதற்குப் பதிலாக அதைவிட வீரியம் நிறைந்த ஆண்டிபயாடிக்குகளைத்தான் அலோபதி மருத்துவம் இப்போது பயன்படுத்துகிறது. இவற்றின் விலையோ அதிகம். பக்கவிளைவுகளும் கூடுதல்.
அலட்சியம் வேண்டாம்!
ஆண்டிபயாடிக் விஷயத்தில் நாம் மிகவும் அலட்சியமாகவே இருக்கிறோம் என்பதை இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆண்டிபயாடிக் சிகிச்சையை முறை தவறிப் பயன்படுத்தும்போது, எதிர்ப்பு சக்தி உடைய கிருமிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, ஆண்டிபயாடிக் மருந்துகளையே பயனற்றவையாக ஆக்கிவிடும் ஆபத்து ஏற்படுகிறது.
இந்தியாவில் இந்த நிலைமை மிகவும் மோசம். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றவற்றைக்கூடப் பல மருத்துவர்கள் வீரியம் மிகுந்த ஆண்டிபயாடிக் மாத்திரை, ஊசி மருந்து மூலம் குணப்படுத்த முற்படுகிறார்கள். உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற நோக்கத்தில் நோயாளிகளும் இதுபோன்ற ஆண்டிபயாடிக் சிகிச்சையை விரும்புகிறார்கள். மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது லாபத்துக்காகச் சாதாரண நோய்களுக்குக்கூட அதிக வீரியமுள்ள ஆண்டிபயாட்டிக்குளை வலிந்து பரிந்துரைக்கின்றன.
நகரங்களில் தனியார் மருத்துவ வசதிகள் பெருகியிருப்பதும், கிராமங்களில் போலி மருத்துவர்கள் ஆதிக்கம் செலுத்துவதும் இந்தியாவில் அதிகமான ஆண்டிபயாடிக் பயன்பாட்டுக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் 50 சதவீத ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்களும் நோயாளிகளும் அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தியப் பொதுச் சுகாதாரத் துறை.
இந்திய நிலைமை
இந்தியாவில்தான் காலரா, டைஃபாய்டு, காசநோய் போன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகம். எனவே, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் ஆண்டிபயாடிக்குகளின் பயன்பாடும் மிக அதிகம். இப்போதுள்ள நிலைமையில் வழக்கமான ஆண்டிபயாடிக்குகளுக்கு தடுப்பாற்றலைக் கிருமிகள் பெற்றுவிட்டால், அந்த ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாமல் போகும்போது என்ன செய்வது?
1987-க்குப் பிறகு நம் நாட்டில் புதிய ஆண்டிபயாட்டிக் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிய மருந்துகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேல்நாடுகளைத்தான் நாம் நம்பி இருக்க வேண்டும். இறக்குமதி ஆகும் மருந்துகளின் விலை மிக அதிகம். இந்த நிலைமை நீடித்தால், புதிய ஆண்டிபயாடிக்குகள் இல்லாத ஒரு யுகத்தை நம்மால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!
நம் கடமை என்ன?
பொதுச் சுகாதாரம் குறைவதுதான் நோய் தொற்றுவதற்கான முக்கியக் காரணம். எனவே, சுய சுத்தம் காப்பதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேணுவதும் நமது மிகப் பெரிய கடமைகள். சுத்தமான குடிநீருக்கும் சுகாதாரமான உணவுக்கும் உத்தரவாதம் வேண்டும். நோய் வந்துவிட்டால் சுயமருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெறுவதுதான் நல்லது. முதலில் குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அவர் பரிந்துரைத்தால், சிறப்பு நிபுணரிடம் மேல் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும்.
ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர் சொல்லும் கால அளவையும் மருந்தின் அளவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்டிபயாடிக் விஷயத்தில் மருத்துவர்களும் நோயாளிகளுக்குச் சரியான வழிகாட்டுதலைத் தர வேண்டும். மருந்துகளை எழுதிக் கொடுக்கும்போது, மருத்துவருக்குரிய கோட்பாட்டின்படி நடந்துகொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த மருத்துவம்!
எல்லா நோய்களுக்கும் அலோபதி சிகிச்சைதான் சிறந்தது என்பதில்லை. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளிலும் நோய் குணமாகும். வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். இதை மறந்தாலோ அல்லது மறுத்தாலோ சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியைவிட மோசமான நிலைக்கு மனித குலம் தள்ளப்படும். இது, மனித குலத்துக்கு நுண்ணுயிரிகள் விடுக்கும் எச்சரிக்கை.
இதிலிருந்து தப்பிப்போமா? இல்லை, தவறிப்போவோமா?
கட்டுரையாளர், பொது நல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com
சுயமருத்துவம் உயிரையும் பறிக்கலாம்!
மேல்நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் வீரியமுள்ள மருந்தையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடியும்.
மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்வதற்கு இது வழி அமைக்கிறது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனையைக் கூட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு ஆண்டிபயாடிக் மருந்துகளின் விற்பனையை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆண்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறது 2011-ல் வெளியாகியிருக்கும் உலகச் சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம்.
இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரண சளி, இருமல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது அந்த நிறுவனம்.

சோழ மன்னர்களுக்கு விழா

கடல் கடந்தும் படைசெலுத்தி சோழப் பேரரசை அகன்ற சாம்ராஜ்யமாக்கியவன் ராசேந்திர சோழன். அவன் அரியணை ஏற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவுக்கு வருவதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா எடுத்துள்ளனர் ஊர் மக்கள்.
இந்த விழாவை இந்திய அரசே எடுத்துச் செய்திருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், சோழ மன்னர்களுக்கு விழா எடுத்தால் அரியணையில் இருப்பவர்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையின் தாக்கமோ என்னவோ அரசுகள் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடி ஆவணப்படுத்த தவறிவிட்டன.
கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன், ஆறு மாதங்களாக இந்த விழாவை நடத்த சிரமப்பட்டிருக்கிறார். இந்த விழாவை அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஆம் என்றோ, முடியாது என்றோ தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
அதன் பிறகுதான் ஊர்மக்களே விழா எடுத்துள்ளனர். பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற பயமோ என்னவோ சோழ மண்டலத்து அமைச்சர்கள்கூட இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் விழாவை சிறப்பாகவே நடத்தி முடித்துள்ளனர் கங்கைகொண்ட சோழபுரத்து மக்கள்.
இந்த ஆண்டு முழுமைக்கும் திருவாரூர், உடையாளூர், ராசேந்திர சோழன் சமாதி அடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து ராசேந்திர சோழன் விழா கொண்டாடப்பட இருக்கிறது. ராசேந்திர சோழன் வரலாறு என்ற குறும்படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இனி, ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் ராசேந்திர சோழனுக்கு விழா எடுக்கப் போவதாகக் கூறும் கோமகன், ‘‘அலைகடல் நடுவே படைக் கலன் செலுத்தி போர் புரிந்து மற்ற நாடுகளையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்தவன் ராசேந்திர சோழன். அவன் காலத்தில் திறமையான கடற்படை இருந்துள்ளது. இதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்திய கடற்படையில் ஒரு போர்க் கப்பலுக்கு ‘ராஜேந்திரா’ என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், சிதிலமடைந்து புதுப்பிக்கப்பட்ட அந்தக் கப்பலுக்கு ‘சாணக்கியா’ என்று பெயரை மாற்றிவிட்டனர். தமிழனின் பெருமை மீண்டும் மறைக்கப்படுகிறது. அந்தக் கப்பலுக்கு மீண்டும் ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும். அதற்கான முயற்சியை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்” என்கிறார்.
தொல்லியல் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் பேசுகையில், ‘‘ராசேந்திரனுக்கு அரசு விழா எடுப்பது ஒரு அரசுக்கு இன்னொரு அரசு செய்யும் மரியாதை. எனவே, இந்த விழாவை மத்திய - மாநில அரசுகள் நடத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது வருத்தமளிக்கிறது. சோழனுக்கு விழா எடுத்தால் ஆள்பவர்களுக்கு சிக்கல் வரும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருந் தால் எதுவுமே செய்ய முடியாது. இன்னும் காலம் கடந்து விடவில்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் ராசேந்திர சோழனுக்கு அரசு விழா எடுக்க அவகாசம் இருக்கிறது’’ என்று கூறினார்.
இதனிடையே, சமூக சேவகரும் கல்வி நிறுவன தலைவருமான மணிரத்தினம் என்பவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராசேந்திரசோழனுக்கு தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப் போவதாக ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
‘மக்களுக்காக நான் செய்து கொடுத்திருக்கும் இந்தக் கொடைகளை எதிர்காலத்தில் யார் அழியா மல் போற்றிப் பாதுகாக்கிறார்களோ அவர்களின் திருப்பாதத்தை என் தலை மீது வைத்துப் போற்றுவேன்’ இப்படி கல்வெட்டில் செதுக்கி வைத்துவிட்டுப் போயிருக் கிறான் ராசேந்திர சோழன். அந்தப் பேரரசனுக்கு விழா எடுக்க நம்மவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
பிற்காலச் சோழர்கள் 476 ஆண்டுகள் சோழ மண்டலத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இதில் 273 ஆண்டுகள் சோழப் பேரரசின் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம்தான் இருந்திருக்கிறது. தனது புதல்வர் ராசேந்திர சோழனிடம் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த ஆண்டு 1012. ஆனால், அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் இருவரும் இணைந்தே ஆட்சி செய்துள்ளனர்.
முறைப்படி 1014-ல்தான் ராசேந்திர சோழன் அரியணை ஏற்றார். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு ராசேந்திர சோழன் அரியணை ஏற்று ஆயிரமாவது ஆண்டு தொடங்குகிறது. ராசேந்திர சோழன் ஆடி திருவாதிரையில் பிறந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனது பிறந்த நாளில் அவர் அரியணையை ஏற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு கருதுகோளாக கொண்டு ஆடி திருவாதிரை அன்று இந்த விழாவை நடத்தியுள்ளனர்.
கங்கைகொண்ட சோழபுரத் தில் 1982-ல் ராசேந்திரன் பெருவிழா நடத்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். விழா ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்திருந்த நிலையில் கடும் புயல் அடித்து அத்தனையையும் கலைத்துவிட்டது. இதனால் அந்த விழா நடக்காமலேயே போய்விட்டது. அரசுத் தரப்பில் விழா எடுக்கத் தயங்குவதற்கு இதுவும் ஒரு சென்டிமென்ட் காரணமாக சொல்லப்படுகிறது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்

உலகெங்கும் பெரும்பாலான அரசுகள் முதலாளிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்போது, தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருக்கிறது ஜெர்மனி. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், வரும் ஜனவரி 1 முதல் மணிக்கு 8.5 யூரோக்களாக (சுமார் ரூ.700) இருக்கும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை செய்தால் சுமார் ரூ.5,600. ஒரு மாத ஊதியம் சுமார் ரூ.1.5 லட்சம்.
ஜெர்மனி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு.
பிரிட்டனிலும் 1998 முதல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலும் சமூகநலத் திட்டங்களிலும் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியான பிரிட்டனும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறது. பிரான்ஸும் ஐரோப்பா முழுமைக்கும் பொதுவான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பதை இத்தாலி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அதிபர் ஒபாமா முயற்சி மேற்கொண்டார். ஆனால், நாடாளுமன்றம் அதைத் தடுத்துவிட்டது.
வளர்ந்த நாடுகளிலாவது தொழிற்சங்கங்கள் வலிமையுடன் உள்ளன. அந்த நாடுகளிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊதிய உயர்வின் அவசியத்தை உணர்ந்துள்ளன. வளரும் நாடுகளில் தொழிற்சங்கங்கள் வலிமையாக இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாமல், வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கின்றனர். சட்டங்கள் பல இருந்தும் அவற்றை முறையாக அமல்படுத்தி, தொழிலாளர் நலனைக் காப்பதில் வளரும் நாடுகளின் அரசுகள் முயற்சி எடுப்பதில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அரசுகளும், செல்வாக்குள்ள முதலாளிகளும் ஏற்றுக்கொள்வதேயில்லை. இதனால், உற்பத்திச் செலவு கூடும், லாபம் குறையும் என்றே வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல. தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டும் இல்லை, அவர்கள்தான் பிரதானமான நுகர்வோர்கள். தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் முழுக்க மீண்டும் செலவிடப்பட்டு, பொருளாதாரத்தை வளர்ச்சியடையவே செய் கிறது. அவர்கள் செய்யக்கூடிய முதலீடும் சமூகத்துக்கே பயன்படுகிறது.
அரசுப் பணிகள், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களைவிட அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண் ணிக்கை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட தொழிலாளர்களை வெகு காலமாகப் புறக்கணித்துக்கொண்டிருக்க முடியாது; சமூகத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் பிளவு மேலும் மோசமாகிவிடும். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுதான் வளர்ச்சியின் முதல் படியாக இருக்குமே தவிர, சந்தையையும் பொருளாதாரத்தையும் வரம்பில்லாமல் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதல்ல என்பதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்

டெல்லியில் இன்று நடைபெற்ற 86-ஆவது இந்திய வேளாண் துறை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
"விவசாயிகளின் உழைப்பை நாம் என்றும் போற்ற வேண்டும். ஆனால், விவசாயிகளின் ஊதியம் என்பது குறைவாகவே உள்ளது. விவசாயத்தில் இலக்குடன் செயல்பட்டால் பெரிய இலக்குகளை அடைய முடியும்.
இதற்காக இரண்டு விஷயங்களில் நாம் கவனம் கொள்ள வேண்டும். ஒன்று நமது விவசாயிகளால், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உலகிற்கும் உணவு உற்பத்தி செய்ய முடியும். மற்றொன்று, இதனால் விவசாயிகளின் வருவாய் உயரும். ஆனால், இதற்காக விவசாயிகள் தொழில்நுட்ப ரீதியில் உழைக்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேளாண் விஞ்ஞானிகள் முயற்சிக்க வேண்டும்.
விஞ்ஞானிகளின் ஆய்வு கூடங்களில், விளைநிலங்களில் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆராய்ச்சிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் மண் வளத்தை மேம்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு லாபம் அடைவதற்கு உதவ வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும். விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும்.
உணவு பொருட்களின் தேவையை மனதில் கொண்டு, தரத்தில் ஈடு செய்யாமல் உற்பத்தியை குறுகிய காலத்தில் பெருக்க, விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி போல நீலப் புரட்சியும் தற்போது அவசியமானது. சர்வதேச அளவில் மீன் வளத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது. நாட்டின் கடல் வளத்தை உயர்த்தவும் விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.
சீனாவில் மூலிகை மருந்துகளின் ஆராய்ச்சிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்திய விஞ்ஞானிகளும் நமது பாரம்பரிய மூலிகை மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளை விரிவுப்படுத்த வேண்டும்.
வானிலை சுழற்சியால் தண்ணீரை நாம் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த நாம் சிந்திக்க வேண்டும். இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், தனது 86-ஆவது ஆண்டில் தற்போது உள்ளது.
இன்னும் 14 ஆண்டுகளில் நுற்றாண்டு விழாவை காண உள்ளது. அதற்குள் இந்த இலக்குகள் அனைத்தையும் நிறைவேற்றி சிறப்பான நுற்றாண்டை, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் காண வேண்டும் என்பதே நமது குறிக்கோள்" என்று மோடி பேசினார்.

எதிர்கால டிஜிட்டல் உலகமே இந்தியா வசம்: மொஸில்லா

இந்தியாவில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அதிகரித்துக்கொண்டு வருவதால், வருங்காலத்தில் டிஜிட்டல் உலகை வடிவமைப்பதில் இந்தியா மிகப் பெரிய சக்தியாக திகழும் என்று மொஸில்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மார்க் சர்மான் தெரிவித்துள்ளார்.
இன்னும் பத்தாண்டுகளில், கிட்டதட்ட ஐந்து முதல் ஆறு பில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய மார்க் சர்மான், “இணையம் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி மக்களுக்கு தெளிவான புரிதல் வேண்டும். இதில் இந்தியா சிறந்து விளங்குகிறது”, என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பல முறை பயணம் மேற்கொண்டுள்ள சர்மான், இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை கண்டு வியந்துள்ளார். “நான் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். குறிப்பாக, மொஸில்லா தன்னார்வலர்கள் தாங்கள் கற்பது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், சமீபத்தில் துவங்கிய உலக டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தில், இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது”, என்று நெகிழ்கிறார்.
இம்மாத தொடக்கத்தில், ‘Maker Parties’ என்ற இணைய கல்வியறிவை பெருக்கும் இரண்டு மாத உலக பிரச்சார நிகழ்ச்சிகளை மொஸில்லா நிறுவனம் துவங்கியது.
உலகம் முழுவதும் உள்ள 350 நகரங்களில் கிட்டத்தட்ட 2,000 நிகழ்ச்சிகளை மொஸில்லா நிறுவனம் நடத்தவுள்ளது.இதில், பெரும்பாலான நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் - ராமநாதன் ஐஏஎஸ்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற் காக 19 ஆண்டுகளாக போற்றுதலுக் குரிய பணியை செய்து கொண் டிருக்கிறார் ராமநாதன் ஐஏஎஸ்.
குமரி மாவட்டம் அழகிய பாண்டிபுரத்தில் பிறந்து, தற்போது மதுரையில் செட்டிலாகி இருக்கும் ராமநாதன், ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். தென்அமெரிக்காவில் அரசு ஆலோசகராக இருந்தார். விருப்ப ஓய்வில் 1995-ல் தாயகம் திரும்பிய இவர், மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களை தத்து எடுத்து அவர்களை தனது சொந்தச் செலவில் படிக்க வைக்கத் தொடங்கினார். இப்படியொரு அறப் பணியில் இவர் இறங்குவதற்குக் காரணம்? அதை அவரே விவரிக்கிறார்..
‘‘நானும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்தான். தினமும் 3 கி.மீ. தூரம் நடந்துதான் பள்ளிக்குப் போவேன். அப்போதே ஏழைக் குழந்தைகளுக்கு என்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளை செய்திருக்கிறேன்.
அமெரிக்காவில் அரசுப் பணியில் கை நிறைய சம்பளத்தில் சந்தோஷமாக எனது நாட்கள் நகர்ந்தன. ஆனால், அந்த சந்தோஷம் இறுதிவரை நீடிக்கவில்லை. என் மனைவிக்கு ஃபிளட் கேன்சர் என்று சொன்ன டாக்டர்கள், ‘அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருப்பார்’என்று கெடு வும் வைத்துவிட்டனர்.
அதனால், அமெரிக்காவில் இருக்கப் பிடிக்காமல் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். இங்கு வந்ததும், ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் கட்ட வேண்டும் என்று என் மனைவி ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன்.
1995-ல் என் மனைவி இறந்தபிறகு, அந்தக் காப்பகத்தை இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, பணம் இல்லாததால் படிப்பை கைவிடும் ஏழை மாணவர் களின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன். அதற்காக 1996-ல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்த ஏழை மாணவர்களின் பட்டியலை கேட்டு கடிதம் எழுதினேன்.
சரியான மாணவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகள் பரிந்துரை செய்திருந்த மாணவர்களை அழைத்து, நானே ஒரு தேர்வு வைத்தேன். அதில் முதல் ஆண்டு தேர்வான 13 பேரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் செய்து படிக்க வைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் தனியாக நடத்த ஆரம்பித்தோம்.
மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவு உள்ளிட்ட தனித் திறன் பயிற்சி வகுப்பை நிபுணர்களைக் கொண்டு நடத்தினோம். இப்படி, கடந்த 19 ஆண்டுகளில் 583 பேரை தத்தெடுத்து நல்வழிப்படுத்தி இருக்கிறோம்.
கூடலூரைச் சேர்ந்த பால் விற்கும் பெண்ணின் மகன் ஒருவன், கையில் பணம் இல்லாத தால் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்குப் போகும் முடிவில் இருந்தான். அவனை நாங்கள் தத்தெடுத்து படிக்க வைத்தோம். அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முடித்தான். தற்போது தனது தம்பியை மதுரை அமெரிக்கன் காலேஜில் எம்.எஸ்சி. படிக்க வைத்திருக்கிறான்.
எங்களிடம் பயிற்சி பெற்று படித்த 8 பேர் டாக்டர்களாகவும் நிறைய பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். 15 வயதில்தான் மாணவர்கள் வழி தடுமாறிப் போகின்றனர். அந்த நேரத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி விட்டால் நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன்

(தொடர்புக்கு -9442564078).

திங்கள், 28 ஜூலை, 2014

தன்னம்பிக்கை - தற்காப்பு - தன்னொழுக்கம்

உலக மானிட சமுதாயத்தின் பரிமாண வளர்ச்சியிலும்,"உலகெல்லாம்" வாழும் மனிதர்களின் மனங்களிலும்,  "உலகம் யாவையும்" தமக்கே, தம் ஆளுகையின் கீழ் என போர் முரசு கொட்டி, வென்று புகழ் கொடி நாட்டிய, உலகம் எல்லாம் ஆண்ட மாமன்னர்களின் பொற்கால ஆட்சியின்,புகழ் பாடும் பொன்னேடுகளிலும், வேராய் இருந்து, பூவாய் பூத்து பொலிந்து, ஓங்கி உயர்ந்து நிற்கும் உண்மை கருத்து என்ன ?

உலகை வாழ்விக்க வந்த உத்தமர்கள்,உன்னதமானவர்கள்,உயர்ந்த உள்ளம் பெற்றோர்கள் உணர்த்த விரும்பிய உண்மை என்ன?  அனைத்து சமுதாயத்தவர்கள்,சாதாரண மக்கள்,குழந்தைகள் முதல் வயதில் முதிந்தவர்கள் வரை விரும்புவது என்ன ?

"ஆர்பாட்டமில்லாத, அமைதியான, நிம்மதியான வாழ்க்கை". அத்தகைய வாழ்க்கைக்கு என்னென்ன தேவை ? வாருங்கள் பார்க்கலாம்..

காட்டில் காட்டு விலங்குகளை விட கீழாகவும், விலங்குகளை போலவும் இருந்த காட்டு மிராண்டிகள், தன்னை விட வலிமைமிக்க வன விலங்குகளான சிங்கம்,புலி,கரடி,யானை போன்வைகளை வெல்லவும், இயற்கையான-இடி,மின்னல்,புயல்,சூறாவளி,பெரு மழை,வெள்ளம்,ஆறு,கடல்,இயற்கை சீற்றம் போன்றவைகளை சமாளிக்கவும்...முதலில் தேவையாயிருந்தது "தன்னம்பிக்கை".

அந்த ஒரு எண்ணம்,உள் உணர்வு வந்தவுடன், தம்மை சுற்றி,தம்மை சார்ந்த குழுக்களை காத்திட, கையில் கிடைத்த கற்கள்,மரக்கட்டைகள்,கூர்மையான மரக்குச்சிகள்,பிறகு உலோகங்களான ஈட்டி,வேல்,வாள் கொண்டு போராட  தொடங்க தேவையாயிருந்தது "தற்காப்பு".

தன்னம்பிக்கை வளர்ந்து,வளர்ந்து.. தற்காப்பு கருவிகள் பெருகி பெருகி..ஆற்றங்கரையில்,மனித சமுதாயம் வளமை பெற்ற காலங்களில்,அவன் சிந்தனைகளின் செழுமை, நாகரிகத்தின் பெருமை, அவனை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தி காட்டியது..."தன்னொழுக்கம்".

குமரிக்கண்டத்தில் தோன்றி, "பற்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குடரிக் கோடும்,கொடுங்கடல் கொள்ள",நிலப்பரப்பு மாற்றம் கொள்ள,உலகின் மையப்பகுதியான ஆசியா,ஐரோப்பா,ரோம்,எகிப்து,கிரேக்கம்,சீனம்,இந்தியா சென்று, பல்வேறு இன மக்களாய் வாழ்ந்து, நாகரிக தொட்டில்களில்,சிரித்து,செழித்து மலர்ந்த போதும்..தேவைப்பட்டது இந்த
"தன்னம்பிக்கை -தற்காப்பு-தன்னொழுக்கம்". ஆதி காலம் முதல், இன்றைய அணுகுண்டு காலம் வரை, அதன் அவசியம் உணர்த்தப்பட்டே வருகிறது.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசு

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அ.கருப்பையா.
# 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி., எம்.பி.சி., சீர் மரபினர் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறதா?
மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் தலா ஒரு மாணவர், மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது.
மாநில அளவில்:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி. மாணவருக்கு ரூ.3000, எம்.பி.சி. மற்றும் சீர்மரபினருக்கு ரூ.5000 வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி. மாணவர்களுக்கு ரூ.1500, எம்.பி.சி. மற்றும் சீர்மரபினருக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில்:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பி.சி. பிரிவினருக்கு ரூ.1500, எம்.பி.சி. மற்றும் சீர்மரபினருக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் பிரிவை சேர்ந்த தலா ஒரு மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி பி.சி. பிரிவினருக்கு முதல் பரிசாக ரூ.500, இரண்டாம் பரிசாக ரூ.250, மூன்றாம் பரிசாக ரூ.150 வழங்கப்படுகிறது. எம்.பி.சி., சீர் மரபினருக்கு முதல் பரிசாக ரூ.1000, இரண்டாம் பரிசாக ரூ.500, மூன்றாம் பரிசாக ரூ.300 வழங்கப்படுகிறது.
# மேற்கண்ட பிரிவினருக்கு இதுபோல வேறு ஏதாவது பரிசுகள் வழங்கப்படுகிறதா?
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நினைவு விருது திட்டம் மூலம் பரிசு வழங்கப்படுகிறது. தந்தை பெரியார் நினைவு விருது திட்டத்தின்படி தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்டு பட்டயப் படிப்பு (பாலிடெக்னிக்) படிக்கும் பி.சி., எம்.பி.சி., சீர்மரபினருக்கு அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படுகிறது.
# பேரறிஞர் அண்ணா நினைவு விருது திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசு எவ்வளவு?
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம் படிக்கும் பி.சி., எம்.பி.சி. மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு (மாவட்டத்துக்கு தலா 2 மாணவ, மாணவிகள்) படிப்புச் செலவுக்காக ஆண்டுக்கு ரூ.3000 வழங்கப்படுகிறது.
# பரிசுத் தொகை பெற நிபந்தனைகள் உண்டா?
மேற்கண்ட எந்த பரிசுத் தொகையைப் பெறுவதற்கும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பரிசுத் தொகை அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் வழங்கப்படும். இந்த பரிசுத்தொகையைப் பெற வருமான உச்சவரம்பு கிடையாது.
(மீண்டும் நாளை சந்திப்போம்)

ஞாயிறு, 27 ஜூலை, 2014

நோக்கியா தரும் பாடம்

மத்திய அரசு 2005-ல் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தை உருவாக்கியது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதும், தொழில்கள் தொடங்கு வதும், உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும், பொருளாதார மண்டலங்களின் நோக்கமாகச் சொல்லப்பட்டது. இதன் அடிப்படையில் நூற்றுக் கணக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக, பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
2009-ல் மத்திய அரசு மின்னணு தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆலோசனை அளித்திட அமைத்த பணிப் பிரிவு பல ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகளையெல்லாம் தமிழகத்தில் அதிமுக அரசு அதற்கு முன்னதாகவே 2005-ம் ஆண்டிலிருந்தே அட்சரம் பிசகாமல் அமலாக்கியிருந்தது. அதனால்தான் மேற்கண்ட பணிப்பிரிவு நாடு முழுவதும் ‘ஸ்ரீபெரும்புதூர்களை உருவாக்கிட வேண்டும்’ என்று கூறியது.
2005-ல் ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்ட லத்தில் நோக்கியா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. ஏக்கருக்கு ரூ. 8 லட்சம் என்று நிலத்தை வாங்கி ஏக்கருக்கு ரூ. 4.5 லட்சம் என்று 210 ஏக்கர் நிலத்தை நோக்கியாவுக்கு மாநில அரசு வழங்கியது. பத்திரப் பதிவுக் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்பட்டது. தடையில்லா மின்சாரம், முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50% வரிவிலக்கு, மத்திய விற்பனை வரி மற்றும் சேவை வரி, வேலை ஒப்பந்த வரி, குத்தகை வரி, நுழைவு வரி போன்ற வரிகளிலிருந்தும் விலக்குகள் வாரி வழங்கப்பட்டன. மேலும், நோக்கியா நிறுவனத்தைப் பொதுப் பயன்பாட்டு நிறுவனம் என்றும் அரசு அறிவித்தது.
நோக்கியாவில் சுமார் 8,000 பேர் நேரடித் தொழிலாளர் களாகப் பணிபுரிந்தனர். தொழிலாளர்களில் 60% பேர் பெண்கள். நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்துதருவதற்கு ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி., சால்காம், லைட் ஆன் மொபைல், ஆர்.ஆர். டொனாலி போன்ற நிறுவனங்கள் உருவாயின. இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் உட்பட நோக்கியா வளாகத்தில் சுமார் 22,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் சேர்ந்தனர். நோக்கியாவில் உற்பத்தி வேகமாக நடந்தது. கைபேசி உலகச் சந்தையில், 32 சதவீதத்தையும், இந்திய கைபேசி சந்தையில் 52 சதவீதத்தையும் நோக்கியா கைப்பற்றியது. கோடிகோடியாய் விற்பனை, கோடிகோடியாய் லாபம்.
ரூ. 21,000 கோடி என்னவாயிற்று?
கைபேசிக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த மென்பொருளுக்கு மத்திய அரசுக்குக் கட்ட வேண்டிய வரி ரூ.21,000 கோடியைக் கட்டாமல் ஏய்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைப் போலவே உள்நாட்டில் விற்பனை செய்த கைபேசிகளையும் ஏற்றுமதி செய்வதாக இணைத்துக் கணக்குக் காட்டி மாநில அரசுக்குக் கட்ட வேண்டிய சுமார் ரூ. 2,430 கோடியை நோக்கியா ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே, மாநில வருவாய்த் துறையும் மத்திய வருமானத் துறையும் நோக்கியா நிறுவனம் மீது வழக்கு தொடுத்தன. வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நோக்கியா நிறுவனம் வரியைக் கட்டியாக வேண்டுமென்று உத்தரவிட்டதோடு நோக்கியாவின் சொத்துக் களையும் முடக்கியது. இதற்கிடையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதுமுள்ள தனது கைபேசி உற்பத்தித் தொழிற்சாலைகளை நோக்கியா விற்றுவிட்டது. பெரும்புதூரிலுள்ள நோக்கியா தொழிற்சாலை மீது வரி பாக்கி வழக்கு இருப்பதால் இதை மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கவில்லை. வரி பாக்கிக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது நோக்கியா நிறுவனம் பெரும்புதூரில் தொடர்ந்து கைபேசி உற்பத்தி நடக்கும் என்றும், தொழிலாளர்களின் வேலைக்கு ஆபத்து இல்லையென்றும் நீதிமன்றத்துக்கு உறுதியளித்தது. நடை முறையில் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செல்ல நிர்ப்பந்தித்தது.
தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாக்கத் தொழிற் சங்கத் தலைமை பல முயற்சிகளை மேற்கொண்டது. மாநில தொழிலாளர் துறை, தொழில் துறை, முதல்வர் போன் றோரிடம் முறையிட்டு, தொழிற்சாலையையும், பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலையையும் பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தியது. 31.3.2014-ல் 2000-க்கும் மேற்பட்ட நோக்கியா தொழிலாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கோட்டை முன்பு நடைபெற்றது. தொழிலாளர் துறையும், அரசும் இதில் தலையிடவே விரும்பவில்லை.
திமுக-அதிமுக வேறுபாடு இல்லை?
இந்த மாதிரி விஷயங்களில் மத்திய ஆட்சியில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எப்படி வேறுபாடு இல்லையோ, அதே மாதிரி தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அதிமுக அரசு போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, அடுத்து வந்த திமுக அரசு அட்சரம் பிசகாமல் அமலாக்கியது. நோக்கியா நிறுவனம் தொடக்கத்தில் மூலதனமிட்ட ரூ. 650 கோடிக்கும் மேலாக மதிப்புக்கூட்டு வரியாக சுமார் ரூ. 850 கோடியை மாநில அரசு நோக்கியாவுக்குத் திருப்பி அளித்துள்ளது.
9 ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்தின் உற்பத்தியின் மதிப்பு ரூ. 1,50,000 கோடி என்பதை நிறுவனமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. குறைந்த மூலதனம், கொள்ளை லாபம் இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்கை. ஆனால், தொழிலாளர்களின் நலன்?
22 ஆயிரம் தொழிலாளர்களின் கதி?
தங்களுடைய எதிர்காலம் ஒளிமயமாக அமையும் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்த 5,000 தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் நோக்கியா நிர்வாகம் வெளியேற்றிவிட்டது. நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்த நஷ்ட ஈட்டை வாங்கவில்லையென்றால் வெறுங்கை
யோடு வெளியேற வேண்டியிருக்கும் என்ற பீதியில் தொழிலாளர்கள், நிர்வாகம் கொடுத்ததை விரக்தி யோடு வாங்கிக்கொண்டார்கள். சுமார் 850 தொழிலாளர்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். நோக்கியா மட்டுமல்ல; இந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுத்து வரும் மற்ற சிறு நிறுவனங்களும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துவருகின்றன. பெரும்புதூர் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நோக்கியா தொழிலாளர்கள் உட்பட 22,000 தொழிலாளர்களும் வேலை யிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கமாகச் சொல்லப்பட்ட தொழில் வளர்ச்சி, நோக்கியா எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்ட 9 ஆண்டுகளோடு முடிந்துபோனது. வேலைவாய்ப்பும் குறுகிய காலத்துக்கே அளிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்கான வாய்ப்புகளின்றி நிர்க்கதியாய் விரட்டப்பட்டுள்ளனர்.
ஆனால், நோக்கியா தமிழக அரசிடமிருந்து குறைந்த விலையில் நிலம், பத்திரப் பதிவு சலுகை, வரியை திரும்பப் பெற்றதில் ரூ.850 கோடி, பல்லாயிரக் கணக்கான கோடிகள் வரிச் சலுகை இத்தனையும் பெற்றுக்கொண்ட பிறகு மத்திய அரசுக்கு ரூ.21,000 கோடி வரிஏய்ப்பு, மாநில அரசுக்கு ரூ.2,430 கோடி வரி ஏய்ப்பு என்று நம் நாட்டுச் செல்வங்களை எல்லாம் ஏப்பம் விட்டுவிட்டுக் கூடாரத்தைக் காலிசெய்துவிட்டது. என்ன செய்யப்போகிறோம் நாம்? வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோமா?
- ஜி. ராமகிருஷ்ணன்மாநிலச் செயலாளர் - சிபிஐ (எம்)

போர்கள் ஓய்வதில்லை ...

பெல்ஜியம் நாட்டில் ஜோனேபெகியில் நூல்பிடித்தாற்போல வரிசையாக இருக்கும், முதலாம் உலகப் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள் ஊடே நடக்கும்போது இனம்புரியாத அச்சம் ஏற்படுகிறது. சுமார் 12,000 வீரர்கள் இங்கே புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,400 பேர், ‘பெரும் போரில் இறந்த வீரர், இவருடைய பெயர் கடவுளுக்கு மட்டுமே தெரியும்' என்று மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போரில் இறந்தவர்கள் பற்றிய நினைவுகள் இப்போது வரலாறாகி விட்டன. நவீன உலகத்தின் போர் என்பது எவ்வளவு பயங்கரமானது, நாடுகளின் வரலாறும் நில எல்லைகளும் எவ்வாறு மாறுகின்றன, போரில் ஈடுபடும் நாடுகளும் போருக்குச் செல்லும் வீரர்களின் குடும்பங்களும் எப்படிச் சிதைத்து எறியப்படுகின்றன என்பதையெல்லாம் பார்த்த பின்பும், போருக்கான சூழல்களை உலகம் இன்னமும் களையவேயில்லை.
முதல் பொறி
முதல் உலகப் போர் சரயேவோ என்ற இடத்தில் ஜூன் 28-ம் தேதி நடந்த சம்பவத்தை அடுத்து மூண்டது. மகா செர்பிய தேசம் கோரி போராடிய இளம் தேசியவாதி ஒருவர், ஆஸ்திரியா – ஹங்கேரி பட்டத்து இளவரசரான பிரான்ஸிஸ் ஃபெர்டினாண்டையும் அவருடைய மனைவி சோபியையும் படுகொலை செய்ததை அடுத்து சரியாக ஒரு மாதம் கழித்து ஜூலை 28 அன்று முதல் உலகப் போர் வெடித்தது. அடுத்தடுத்து ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாகப் போரில் இறங்கின. ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்குக்கும் ஆசியாவுக்கும் யுத்தம் பரவியது.
தகர்ந்த சாம்ராஜ்யங்கள்
இந்தப் போருக்குப் பிறகு பல மன்னர்கள், மாமன்னர்கள், ஜார்கள், சுல்தான்கள் அழிந்தனர். பல சாம்ராஜ்யங்கள் தகர்ந்தன. ரசாயன ஆயுதங்கள், டேங்குகள் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டன. வானிலிருந்து போர் விமானங்கள் குண்டுகளை வீசுவதும் முதல் உலகப் போரில்தான் தொடங்கியது. லட்சக் கணக்கான பெண்கள் தொழிற்சாலை வேலைகளில் சேர்ந்தனர். பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. உக்ரைன், போலந்து, பால்டிக் நாடுகள் விடுதலைபெற்றன. மத்திய கிழக்கில் புதிய நாடுகள் தற்காலிக எல்லைகளுடன் பிறந்தன. பல நாடுகளின் கலாச்சாரங்களும் மாறத் தொடங்கின. போர் என்பதன் உளவியல் பின்னணி புரியத் தொடங்கியது. வெடிகுண்டு அதிர்ச்சியும் (ஷெல் ஷாக்), போருக்குப் பிறகு குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் அவலமும் மக்களுக்கு ஏற்பட்டன.
போர் முடிவுக்கு வந்திருந்தபோது ஜெர்மனி தரப்பிலும் நேச நாடுகள் தரப்பிலும் சேர்ந்து முதல் உலகப்போரில் சுமார் 85 லட்சம் பேர் இறந்திருந்தனர்; 2 கோடிக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
உலக வல்லரசு அமெரிக்கா
முதல் உலகப் போருக்குப்பின் அமெரிக்கா உலக வல்லரசு நாடாக உணரப்பட்டது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் புதிய உலக முறைமையை ஏற்படுத்தத் துடித்தார். போரிடும் நாடுகள், போரை நிறுத்திவிட்டுச் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடலாம் என்ற அவருடைய யோசனையையும், சுய நிர்ணய உரிமையையும் மற்ற நாடுகள் ஏற்கவில்லை. போர் முடிந்த உடனேயே ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க ராணுவம் விரைந்து வெளியேறியதால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு உலகப் போருக்கு விதை ஊன்றப்பட்டுவிட்டது.
போரினால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு அனுபவம் ஏற்பட்டது. ஜெர்மனியின் ஊடுருவலைத் தடுத்தேயாக வேண்டும் என்பதால் பிரான்ஸ் போரில் இறங்க நேர்ந்தது. மார்ன் என்ற இடத்தில் நடந்த சண்டைதான் சுதந்திரமா, அடிமைத்தனமா என்ற கேள்விக்கு பிரான்ஸ் விடை கண்டாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கத் துருப்புகளின் உதவியால்தான் பிரான்ஸ் இந்தப் போரில் வென்றது. அதுதான் ஜெர்மனியின் தோல்விக்கு ஆரம்பமானது. முதல் உலகப் போர் பிரான்ஸுக்கு நல்லதாக அமைந் தாலும் இரண்டாவது உலகப் போரினால் அது சீர்குலைந்தது.
ஜெர்மனிக்கு தோல்வி
போர் இயந்திரத்தில் பெரும் முதலீடு செய்த ஜெர்மனிக்கு, ஜீரணிக்க முடியாத தோல்வியைத் தந்தது முதல் உலகப் போர். அதே சமயம், புரட்சி, பாசிசம், இழந்த நிலப் பகுதியை மீண்டும் போரிட்டு மீட்பது, கும்பல்கும்பலாக எதிரிகளைக் கொல்வது ஆகிய கருத்துகளுக்கான விதைகள் அப்போதே தூவப்பட்டுவிட்டன.
முதல் உலகப் போரில் மட்டும் ஈடுபட்டிருக் காவிட்டால், ஜெர்மனி தனது பொருளாதார வலிமை காரணமாக ஐரோப்பா முழுவதையும் அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும் என்று போர்களை ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர் மேக்ஸ் ஹேஸ்டிங்ஸ் கூறுகிறார்.
பனிப்போரும் பிறகும்
அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ' ஒப்பந்த நாடுகளுக்கும் சோவியத் யூனியன் தலைமையிலான ‘வார்சா' ஒப்பந்த நாடுகளுக்கும் இடையிலான பனிப்போர் முடிந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால், பனிப்போர் முடிந்ததாகக் கருதப்படும் இப்போதைய உலக நிலைமை கிட்டத்தட்ட, முதல் உலகப் போரின்போது இருந்த நிலைமையைப் போலவே இருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்துவருகின்றன. சீனா புதிய வல்லரசாகிவருகிறது. ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளில் தேசியவாதம் மீண்டும் தலைதூக்கிவருகிறது. முதல் உலகப் போருக்குப் பிறகு கார்த்தேஜிய சமரச முயற்சியை நிராகரித்த ஜெர்மனியின் நிலையில் இப்போது ரஷ்யா இருக்கிறது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். பனிப்போருக்குப் பிறகு ஏற்பட்ட சமரசம் தங்களுக்கு நியாயத்தைச் செய்யவில்லை என்று ரஷ்யா இப்போது உறுமுகிறது. புதிய பாய்ச்சலுக்கு அது தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறது.
2014: மூன்று சிறப்புகள்
முதல் உலகப் போரில் நாடுகள் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாததால், இரண்டாம் உலகப் போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. 2014-ம் ஆண்டுக்கு மூன்று சிறப்புகள் இருக்கின்றன: முதல் உலகப் போரின் 100-வது ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் 75-வது ஆண்டு, கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் தகர்ந்து 25-வது ஆண்டு.
இரண்டு உலகப் போர்களும் உணர்த்திய பாடங்கள் இப்போதைக்கும் பொருந்துமா? 1914-ல் நாடுகள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தால் உலகப் போர் மூண்டிருக்காது. 1939-ல் அப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பையே ஜெர்மனி தரவில்லை. இப்போது சர்வதேச நிலைமை எப்படி? ரஷ்யாவும் ஜெர்மனியும் இப்போதும் தங்களை ஐரோப்பாவின் வல்லரசாக நிலைநிறுத்த முயல்கின்றன. உக்ரைனில் இப்போது பிரச்சினை நீடிக்கிறது. முதலாம் உலகப் போர் சரயேவோ நகரச் சம்பவத்தால்தான் தொடங்கியது.
பனிப்போர்க் காலத்துக்குப் பிறகு யூகோஸ்லாவியாவில் ஐரோப்பாவுக்குப் பல பிரச்சினைகள். போஸ்னியா, கொசாவோ மற்றும் அதற்கும் அப்பால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. வடக்கு அயர்லாந்தில் இன்னமும் பதற்றம் நிலவுகிறது. மத்திய கிழக்கில் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. மத அடிப்படைவாதிகள் பாக்தாதைக் கைப்பற்ற படைகளுடன் செல்கின்றனர். இராக்கின் நில எல்லை தகர்ந்துவிடும்போலத் தெரிகிறது.
பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று தனி அரசு ஏற்படுவதற்கான ஒப்பந்தம் பால்ஃபோர் பிரகடனத்தால் 1917 நவம்பரில்தான் சாத்தியமானது. இப்போது பாலஸ்தீனமும் கொந்தளிப்பில் இருக்கிறது. எனவே, உலகப் போர்களிலிருந்து நாம் பாடம் கற்ற மாதிரியே தெரியவில்லை. உலகப் போர்களில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். காலங்கள் செல்லச்செல்ல அவரவர்களுடைய பகுதிகளிலேயே அவர்கள் அறியப்படாதவர்களாகிவிடுகிறார்கள். ஒரு
காலத்தில் அவர்களும் நம்மைப் போலவே ரத்தமும் சதையுமாய் வாழ்ந்தார்கள். நாளை நாமும் அவர்களைப் போலவே நிழல்களாகிவிடுவோம் என்பதை நினைவில் கொள்வது நல்லது

டிவி பார்க்கும் குழந்தைகள்: நன்மையா? தீமையா?

குழந்தைகளின் சமூக மற்றும் உணர்வு நிலை வளர்ச்சி தொடர்பாகவும், தொலைக்காட்சியின் விளைவுகள் தொடர்பாகவும் அமெரிக்காவின் லொவா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர்.
இந்த ஆய்வில், குழந்தைகள் உள்ள அறையில் டிவி இருக்கும்பட்சத்தில், அவர்கள் படித்துக்கொண்டிருந்தாலோ அல்லது விளையாடிக்கொண்டிருந்தாலோ, அவர்களது கவனம் தொலைக்காட்சியினால் சிதறக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.
மேலும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் அல்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்ப்பது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
“குழந்தைகள் முன்பு நீங்கள் எதை காண்பித்தாலும், அவர்கள் அதனிடமிருந்து ஏதோ ஒன்று கற்றுக்கொள்வார்கள். அப்படியிருக்கையில், தொலைக்காட்சியை அவர்கள் முன் காட்டுவதன் மூலம் அவர்கள் என்ன கற்றுக்கொள்ளப் போகிறார்கள்?”, என்று அப்பல்கலைகழகத்தின் இணை பேராசிரியர் டிபோராஹ் லைன்பார்கர் (Deborah Linebarger) கேள்வி எழுப்புகிறார்.
அமெரிக்காவின் 1,150 குடும்பங்களிலுள்ள 2 முதல் 8 வரையிலான வயதுடைய குழந்தைகளை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு ‘Journal of Developmental & Behavioural Pediatrics’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.

வியாழன், 24 ஜூலை, 2014

தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்ம்

உயிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”
நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம். பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.
ஓர் உதாரணம்
தனுஷ்கோடியை மூழ்கடித்த புயலின்போது, பாம்பன் பாலமும் உருக்குலைந்தது. ரயில்வே நிர்வாகம் 6 மாதக் கெடு தந்து, பாலத்தைச் சீரமைக்க ஒரு அணியை இறக்கியது. வெறும் 46 நாட்களில் இந்தப் பணிகளை முடித்தார் பொறியாளர் ஸ்ரீதரன். இது வரலாறு. ஸ்ரீதரனின் பணி கொண்டாடப்பட வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அந்தப் பணி அவ்வளவு சீக்கிரம் முடிவதற்கு முக்கியப் பங்காற்றியவர்கள் சுற்றுவட்டார மீனவ மக்கள். தங்கள் சொந்த வீட்டு வேலையாகப் பாலத்தின் கட்டுமான வேலையில் பங்கேற்றவர்கள் அவர்கள். இன்றைக்கு அவர்களுடைய பங்களிப்பு, மறக்கப்பட்ட கதை. காரணம் என்ன? முந்தைய பத்தியைப் படியுங்கள்.
நாட்டுப்புறப் பாடல்களில் வரலாறு
தனுஷ்கோடி மீனவ மக்களிடம் ஒரு மரபுண்டு. கரை வலை இழுக்கும்போது பாட்டுப் பாடுவது. அவர்கள் வாழ்வைச் சீரழித்த புயலுக்கு இந்தப் பாடல்களில் முக்கிய இடம் உண்டு. அந்தப் பாடல்கள் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் வாயிலாக நாட்டுப்புறங்களில் ஊர்ஊராகப் பரவியிருக்கிறது. அதன் தாக்கத்தில் வெளியூர்க்காரர்களும் புயல்பாட்டு பாடி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று செ. போத்தி ரெட்டியின் ‘தனுக்கோடி நாட்டுப்புறப் புயற்பாடல்கள்' புத்தகத்தில் காணக்கிடைத்தது. கடலோரத்தில் ஊர்ஊராக அலைந்து, மக்களிடம் பேசி நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்திருக்கிறார் போத்தி ரெட்டி.
இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் வேம்பார் பாக்கியம் எனும் பனைத் தொழிலாளி. புயல் அடித்த தேதியில் தொடங்கி, பார்வையிட வந்த எம்ஜிஆர் முதலானவர்களைத் தொட்டு, பாட்டெழுதியவர் பெயர் வரை சொல்லும் இந்தப் பாடல், நம்முடைய நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவுக்குப் புறக்கணிக்க முடியாத மக்கள் ஆவணம் என்பதற்கு ஒரு சான்று.
தனுஸ்கோடி நாட்டுப்புறப் புயல் பாடல்
தனுஸ்கோடி பாம்பன் முதல்
தயங்காத இராமேஸ்வரம்
அநியாயப் புயலடித்து
அழிந்த கொடுமை பாடுகிறேன்
அமைதியாகக் கேளும்
இந்தக் கதையை எந்த நாளும்
*
கண்டோர் நடுநடுங்க
காற்றுமழை புயலடிக்க
மண்டலத்தில் இக்கதையை
மனத்தெளிவாகப் பாடுகிறேன்
மக்களைப் போல நினைத்து
சபை மன்னிக்கணும் பிழைபொறுத்து (தனுஸ்கோடி)
*
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து
அறுபத்து நாலாம் ஆண்டில்
வாய்மையுள்ள டிசம்பர் மாதம்
வளருந்தேதி இருபத்திரெண்டில்
அடித்ததே புயற்காற்று
பாம்பன் தனுஸ்கோடியைப் பாத்து (தனுஸ்கோடி)
*
ஐயாயிரம் ஜனத்துக்குமேல்
ஆணும் பெண்ணும் அவதிப்பட்டார்
பேய்மழையும் காற்றினாலே
பேதலித்து உயிரைவிட்டார்
ஐயோ துயரமாச்சே
சில ஊரழிந்து போச்சே (தனுஸ்கோடி)
*
மாலை எட்டு மணிக்கு மேலே
மதிப்படங்கா சாமத்திலே
வேலை சோலிதான் முடித்து
வீற்றிருக்கும் வேளையிலே
வருகுதையா ரயிலு
வண்டியைப் புரட்டுதையா
வடகடலும் தென்கடலும்
மண் மோதித் தான் கிளம்பி
தொடர்பாகச் சந்தித்துமே
சூறாவளிப் போல் கொதித்து
வண்டியைத் தூக்கி அடிக்க
மக்கள் மருவி மருவித்துடிக்க (தனுஸ்கோடி)
*
ஐந்நூறு ஜனத்துக்கு மேல்
ஆணும் பெண்ணும் ரயிலில் வர
கால்கள்தான் முறிந்து
கடலோடு போகுதய்யா
ஐயோ பரிதாபம்
இது யாருபோட்ட சாபம் (தனுஸ்கோடி)
*
தனுஸ்கோடி ஊர்களெல்லாம்
தலைக்கு மேலே தண்ணீர் வர
துணியுடைகள் இல்லாமலே
தொங்குதய்யா வீட்டின் மேலே
மதில் இடிந்து சாய
மக்கள் தண்ணீரில் குதித்துப்பாய (தனுஸ்கோடி)
*
ஐயையோ மனைவி மக்கள்
அநியாயமாய்ப் போகுதென்று
மெய்சோர்ந்து மன்னவனும்
மெதுவாக இழுக்கும்போது
குடும்பத்தோட புரட்டி வெள்ளம்
கொண்டு போகுதே சுருட்டி (தனுஸ்கோடி)
*
வள்ளங்களும் விலாஞ்சிகளும்
வளைக்கச் சென்ற தோணிகளும்
வெள்ளத்திலே அடியும்பட்டு
பள்ளத்திலே இழுக்குது பார்
ஐயோ மக்கள் அலற
அடிபட்டுக் குடலும் சிதற (தனுஸ்கோடி)
*
வெள்ளரிப்பழம் போல
வெடித்துப்பிணம் மிதக்குதைய்யா
அள்ளிக்கொண்டு புதைப்பதற்கு
ஆளுதவி கிடையாமல்
அலையடித்து ஒதுக்க
நாய்நரி கடித்து இழுக்க (தனுஸ்கோடி)
*
இராமேஸ்வரம் ஊர்களிலே
தெருக்களெல்லாம் தண்ணீர் ஓட
பூமான்கள் கோவிலெல்லாம்
புரட்டித்தூக்கி அடிக்குது பார்
ஐயோ மக்கள் வாட
அடுத்த திட்டில் ஏறி ஓட (தனுஸ்கோடி)
*
சித்தம் புகழ் நடிகரவர்
ஜெமினி கணேசன் சாவித்திரி
அத்த ராத்திரி வேளையிலே
அமைந்தாரே கோவிலுக்குள்
ஆயாசப்பட்டார்
நடிகர் அழுதும் கண்ணீர் விட்டார் (தனுஸ்கோடி)
*
உடுப்பதற்கோ உடையுமில்லை
உண்பதற்கோ உணவுமில்லை
படுப்பதற்கோ பாயுமில்லை
பறக்குதுபார் வெள்ளத்திலே
பார்க்க பார்க்க துக்கம்
பார்த்துப் போனாலுமே ஏக்கம் (தனுஸ்கோடி)
*
கக்கன்ஜி நெடுஞ்செழியன்
காமாராஜர் அண்ணாதுரை
முக்கியமாய் எம்ஜியார்
பாம்பன் செய்தி கேட்டார்
பாங்காகவே புறப்பட்டார் (தனுஸ்கோடி)
*
ஏரோப்பிளேன் மீதேறி
எல்லோருக்குமாய் சோறுகட்டி
வாறார்கள் தனுஸ்கோடி
வந்துபார்த்தார் இராமேஸ்வரம்
சோர்ந்து கண்ணீர் விட்டார்
சோற்றுமூட்டை தூக்கிப்போட்டார் (தனுஸ்கோடி)
சோறு சோறு சோறு என்று
சுழலுதய்யா மக்களெல்லாம்
ஆரு சோறு போட்டாலும்
அரை வயிறு நிறையுதில்லே
நைந்தோடுது சோறு
மண்ணில் புரட்டித் தின்பதைப்பாரு (தனுஸ்கோடி)
*
சண்டாளப் புயலடித்து
தனஉயிரும் வீடும் போச்சே
கண்டு கவர்மெண்டாரும்
கனகோடி நிதி கொடுத்தார்
காமராஜரைத் தேடு
வேம்பார் பாக்கியம் கவிபாடு!
(மக்களின் பாடல் அவர்கள் வார்த்தையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.)
*
“புயல் தெரியலீயே… ரயிலை அனுப்பிட்டேனே!”
தனுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார்.
புயல் நாளை நினைவிருக்கிறதா? அதை எப்படி மறக்க முடியும்?
இப்படிப் புயலடிக்கும்னு இந்தப் பாவிக்கு யாரும் சொல்லலீயே… புயல் தெரியலீயே... ரயிலை அனுப்பிட்டேனே… (அழுகிறார்)
ஆனால், பாம்பனுக்குத்தானே நீங்கள் ரயிலை அனுப்பினீர்கள்?
ஆமா, பாம்பனுக்கு நான் அனுப்பிச்சேன். அங்கேயிருந்து தனுஷ்கோடிக்கு பாம்பன் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிச்சார். யாருக்குமே புயல் இப்படிச் சுருட்டும்னு தெரியலையே… (அழுகிறார்)
அப்போது சம்பவ இடத்துக்குப் போனீர்களா?
அதிகாரிகளோட படகுல போனேன். எங்கே பார்த்தாலும் மனுச ஒடம்பு மிதக்குது. ஐயோ, கொடுமை, கொடுமை… (மீண்டும் அழுகிறார்)
சரி, நாம் அதை விட்டுவிடலாம்... பாம்பன் பால மறுகட்டமைப்பில் மீனவ மக்கள் பங்களிப்பைச் சொல்ல முடியுமா?
(கண்களைத் துடைத்துக்கொண்டு…) அவா ஒத்தாசை இல்லேன்னா நடக்குற கதையா அது! உள்ளூர் மீனவா மட்டும் இல்லை; வெளியூர் மீனவாவும் வந்தா. மாப்ளாஸ் வந்தா. எல்லாருமா ஓடி ஓடி ஒழைச்சுதான் பாலத்தைத் திரும்ப தூக்கி நிறுத்தினா.
கடலோர மக்களிடையே நீண்ட நாட்கள் வேலை செய்திருக்கிறீர்கள். அவர்களுடனான உங்கள் உறவைச் சொல்லுங்களேன்…
ரொம்ப நல்ல மனுஷா. நான் தஞ்சாவூர் ஜில்லாக்காரன். ஊரை மறந்துட்டு அவாளோடேயே இருந்துடலாமானு நெனைச்சுருக்கேன். அவ்ளோ நல்ல மனுஷா.

அவாளுக்கு நான் ஸ்டேசன் மாஸ்டர் மட்டும் இல்லை. மனு எழுதிக் கொடுக்குறவன், கடுதாசி படிச்சுக் காட்டறவன், பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துல சேர்க்க யோஜனை சொல்லுறவன்… கூடையோடு மீனைத் தூக்கிட்டு வந்துட்டு, ‘சாமி… உங்களுக்குக் கொடுக்க எங்களுக்கு இங்கே மீனைத் தவிர என்ன இருக்கு? மீன் சாப்பிடாதவராப் போயீட்டீங்களே'ன்னு வருத்தத்தோடு போவா. அவாள விட்டு வந்துட்டேனேயொழிய இன்னும் எம் மனசுல அவா அப்படியே இருக்கா

Genetically Modified Crops

The promise and performance of genetically modified crops in agriculture is once again under the spotlight, with the sanction given by the Genetic Engineering Approval Committee for confined field trials of several food crops. In its last days, the UPA government decided to end the moratorium on trial cultivation of these engineered varieties, and to allow experiments aimed at generating biosafety data. The GEAC has now taken further steps to allow field trials of rice, brinjal, mustard, chickpea and cotton, and import of GM soyabean oil. Clearly, there can be no credible argument against scientific experiments in agriculture that advance the goal of developing plant varieties that can withstand drought, resist pests and raise yields to feed the growing world population. But this should be done through a transparent regulatory process that is free of ethical conflicts. Proponents of GM crops funding research in agricultural universities represents one such conflict. To aid transparency, research findings should be made available in the public domain for independent study. But India has taken only halting steps towards establishing a strong regulatory system; the Biotechnology Regulatory Authority of India Bill, 2013, which provided for multi-level scientific assessments and an appellate tribunal, has lapsed.
While the Central government has not permitted the commercial cultivation of Bt brinjal in India, the recent case of neighbouring Bangladesh shows that regulatory mechanisms must be put in place before such crops are grown, whether for research or for the market — and they must be functional. Although the licence to produce the crop in Bangladesh required that the GM variety be isolated from indigenous ones to prevent genetic contamination, the condition was not followed. Field trials in India, in which the State governments have a say, must ensure that there are sufficient safeguards against such violations. If GM food is allowed to be sold to consumers, they must have the right to know what they are buying, and labelling should be made mandatory. Here again, the Bangladesh experience shows that such a condition may be difficult to enforce. There is no consensus on the performance of GM crops and the results have been mixed. They have had some beneficial impact on tillage practices and in terms of curbing the use of insecticides, but as the Union of Concerned Scientists in the U.S. points out, they have created monocultures and may be affecting birds and bees. All this underscores the need for a cautious approach — one that fosters scientific inquiry, allows for scrutiny and is underpinned by regulation. Enacting a comprehensive law that covers all aspects of GM crops should be a priority

சீனிவாச ராமானுஜன் இடைநிலை (இண்டர்மீடியட்) தேர்வில் கணக்குப் பாடத்தில் தோற்றுப்போனாரா

கணித மேதை சீனிவாச ராமானுஜன் இடைநிலை (இண்டர்மீடியட்) தேர்வில் கணக்குப் பாடத்தில் தோற்றுப்போனாரா? அவர் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு?
தொடக்கத்திலிருந்தே இதைப் பற்றிப் பல குழப்பங்கள் நிலவிவந்திருக்கின்றன. 1919 மார்ச் மாதத்தில் இங்கிலாந்திலிருந்து ராமானுஜன் திரும்பியபோது ‘மதராஸ் டைம்ஸ்' நாளேடு (6 ஏப்ரல் 1919) வெளியிட்ட கட்டுரையில், ‘டிசம்பர் 1907-ல் ஃபர்ஸ்ட் எக்ஸாமினேஷன் இன் ஆர்ட்ஸ் பரீட்சையில் தனித் தேர்வராக அமர்ந்து எல்லாப் பாடங்களிலும் தோற்ற பெருமை இவருக்கு உண்டு - இதற்குக் காரணம், அவருடைய உடல்நலக் குறைவே என்பதில் ஐயமில்லை' என்று எழுதியது. ராமானுஜன் எழுத்தராகப் பணியாற்றிய சென்னைத் துறைமுகக் கழகத்திலுள்ள கோப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது என்ற குறிப்பும் இக்கட்டுரையில் உள்ளது. (எஃப்.ஏ. அல்லது இண்டர்மீடியட் என்பது பள்ளியிறுதி அல்லது மெட்ரிகுலேஷனுக்குப் பிறகும், இளங்கலை அல்லது பி.ஏ-வுக்கும் இடையில் அமையும் இரண்டாண்டுப் படிப்பு.)
ஸ்நோ ஏற்படுத்திய குழப்பம்
ராமானுஜனின் புரவலராகவும் கணிதவியல் தோழராகவும் விளங்கிய ஜி.எச். ஹார்டியின் இளம் நண்பர் சி.பி. ஸ்நோ, ‘ஆங்கிலப் பாடத்தில் தோற்றதால் மேதையாக இருந்தாலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ராமானுஜன் நுழைய முடியவில்லை' என்று ஹார்டியின் ‘ஒரு கணிதவியலாளனின் மன்னிப்பு' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். ராமானுஜன் தோற்றது கணக்கிலா ஆங்கிலத்திலா என்ற குழப்பத்தோடு, பள்ளியிறுதியினையும் இடைநிலைத் தேர்வினையும் ஸ்நோ குழப்பிவிடுகிறார்.
ராமானுஜனின் விரிவான வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராபர்ட் கானிகல், நான்கு முறை இடைநிலைத் தேர்வை எழுதி, கணக்கைத் தவிர பிற பாடங்கள் எல்லாவற்றிலும் அவர் தோற்றதாகச் சொல்கிறார். ராமானுஜன் அருங்காட்சியகத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம், தனித்தேர்வராக எஃப்.ஏ. எழுதிக் கணக்கில் மட்டும் நூறு மதிப்பெண் பெற்று, பிற பாடங்களிலெல்லாம் அவர் தோற்றார் என்கிறது.
தொன்மத்தின் ஊற்றுக்கண்
1967-ல் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்திய நூலகவியலின் தந்தை எனப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் ஒரு பாடமாக 1922-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டு முறைகளை ஆராய்ந்திருக்கிறார். அப்போது பழைய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் அனைத்தையும் பார்வையிட்டிருக்கிறார். ராமானுஜன் ‘கணக்கிலே மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றார். பிற பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றதே அவர் தேர்ச்சி பெறாததற்குக் காரணம். இதுதான் உண்மைக் கதை' என்கிறார்.
இருப்பினும், இந்தப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கணித மேதை ராமானுஜன் கணக்கில் தோற்றார் என்றால்தானே, ஒரு துன்பியல் நாடகம் போல் அமைந்த மேதையின் வாழ்வின் சிறந்த அங்கமாக அது அமைய முடியும்! ராமானுஜனின் தோல்வி என்ற தொன்மத்தின் ஊற்றுக்கண் இதுதான். வெள்ளை காலனியாதிக்கம் இந்தியாவின் அறிவாற்றல் மரபைக் குலைத்தது என்ற தேசியக் கருத்தியலும் இந்தத் தொன்மத்துக்கு உரம்சேர்த்தது.
இருக்கட்டும். உண்மையில் ராமானுஜன் கணக்கில் தேறினாரா இல்லையா? அவர் பெற்ற மதிப்பெண்தான் என்ன? இதற்கான விடை மிகத் தற்செயலாகத் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்தது. அதனை ஆங்கிலத்தில் எழுதி ‘எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி', 13 பிப்ரவரி 1988 இதழில் வெளியிட்டேன். பெரிதும் கவனிக்கப்படாமல்போன அந்தக் கட்டுரையின் சாரம் இனி…
‘நியு இந்தியா'வின் கேலி
1917-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ராமானுஜனுக்கு மதிப்புறு பி.ஏ. பட்டம் வழங்கியது. அப்போது சுயாட்சிப் போராட்டத்தில் முனைப்பாக இருந்த அன்னி பெசன்ட்டின் ‘நியு இந்தியா' (25 ஏப்ரல் 1917) நாளேடு, ஆங்கிலேய அரசைக் கேலிசெய்து பின்வருமாறு எழுதியது.
‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எஸ். ராமானுஜ னுக்கு பி.ஏ. பட்டம் வழங்கியதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததில் எந்த ஆச்சரியமுமில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் எஃப்.ஏ-யில் அவர் தேறியிரா விட்டால்தான் என்ன? அது ராமானுஜனின் குற்றமல்லவே; அந்தப் பழி அவரைச் சேராது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தங்களது எஃப்.ஏ-வுக்கு அவர் தகுதியுள்ளவர் என்று நினைக்கவில்லை!
இந்தக் கட்டுரை அரசின் கவனத்துக்கு வந்தது. உடனே, பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் பறந்தது. அன்றைய பதிவாளர் பிரான்ஸிஸ் டியூபெரி பதிலளித்தார்.
‘எஸ். ராமானுஜன் 1903-ல் மெட்ரிகுலேஷனில் தேறி, நான்காண்டுகளுக்குப் பிறகு, 1907-ல் எம்.ஏ. தேர்வைத் தனித் தேர்வராக எழுதித் தோல்வியுற்றார். அவருடைய பதிவேடு வருமாறு:
பிறந்த நாள்: 1888 (ஜூன்)
தந்தை பெயர்: சீனிவாச அய்யங்கார், மிராசுதாரர்
மெட்ரிகுலேசன்: 1903, கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளி
1907 ஃபர்ஸ்ட் எக்ஸாமினேஷன் இன் ஆர்ட்ஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் (பதிவு எண்:1198):
பாடம்
அதிகபட்ச மதிப்பெண்
தேர்வு பெற குறைந்தபட்ச மதிப்பெண்
பெற்ற மதிப்பெண்
ஆங்கிலம்
200
70
38
சமஸ்கிருதம்
100
35
34
கணக்கு
150
45
85
உடலியல்
-
-
-
வரலாறு
-
-
-
பெரும்பாலும் உடலியல், வரலாறு ஆகிய பாடங்களை அவர் எழுதியிருக்க மாட்டார் எனலாம்.'
ராமானுஜன் கணக்கில் தோற்கவில்லை. மனித வாழ்வுக்கு உண்மைகள் மட்டுமல்ல, தொன்மங்களும் வேண்டும். ராமானுஜன் கணக்கில் தோற்றார் என்ற தொன்மம் எத்தனை ஆவணங்களைக் கொண்டு அழித்தாலும் தொடர்ந்து தளிர்க்கும் என்று நம்பலாம்.
ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்றுப் பேராசிரியர், ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: chalapathy@mids.ac.in