2011-ல் 677, 2012-ல் 737, 2013-ல் 923 என்று பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்தபடியேதான் இருக்கின்றன. பாதிக்கப்பட்டோர் இத்தகைய கொடூர வன்முறைக்கு எதிராக நீதியைத் தேடிக்கொண்டே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தேங்கிக்கிடக்கும் வழக்குகள்
பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் தண்டனை வழங்கப்படுவது 20 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பது ஒரு பக்கம் என்றால், மறுபுறம் நீதிமன்றங் களில் இதுதொடர்பான வழக்குகள் ஆயிரக் கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் 2,462 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நீதிமன்ற நிலுவையில் இருந்தன. இவற்றில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 21. ஆறு ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் 255. ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளின் எண் ணிக்கை 1,258. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதிக்குச் சமம் என்று சொல்வார்கள். பெண்கள்மீது இழைக்கப்படும் குற்றங்களில் மிகவும் கொடூரமான குற்றங்களான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில்கூட நீதிவிசாரணை ஆமை வேகத்தில்தான் இருக்கிறது என்பதைத்தான் மேற்கண்ட தரவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
பாலியல் வல்லுறவு மட்டுமல்ல பலாத்காரம், தாக்குதல், கொலை, கடத்தல், சித்திரவதை போன்ற பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கும் உரிய நீதி கிடைப்பதில்லை.
இதையெல்லாம் உணர்ந்துதான், பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த மூன்று மாதங்களில் விசாரணைசெய்து நீதி வழங்க வேண்டுமென்று ஜே.எஸ். வர்மா கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஆனால், டெல்லி சம்பவத்தில்கூட 8 மாதம் கடந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகத்தில் குறைந்தபட்சம் 2013 ஜூன் மாதம் முடிய நடந்த, பெண்கள் மீதான அனைத்துக் குற்றங்களுக்கும் எதிராகத் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக