சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் (யு.எஸ்.எஸ்.ஆர்.) உடைந்து 20-வது ஆண்டு இது. சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம்? இந்தத் தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத இந்தப் பெயர்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் நிலப்பரப்பில் பாதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இரு உலகப் போர்களின் முடிவுகள் மோசமானவர்களின் கைகளில் சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டது. முக்கியமாக, அமெரிக்காவின் இன்றைய ஏகாதிபத்திய அரசியலுக்குப் பெரும் தடையாக இருந்தது!
இப்போதும் நினைவிருக்கிறது... இந்தியாவைத் தாண்டி இந்தியர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட தேசம் சோவியத் ஒன்றியமாகவே இருக்கும். நம்மை எந்த ஓர் ஆபத்தில் இருந்தும் அவர்களால் விடுவிக்க முடியும் என்று நாம் நம்பினோம். தங்களை நம்பியவர்களிடம் அவர்களும் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் நண்பர்களாக இருந்த ஒவ்வொரு நாட்டிலும் டால்ஸ்டாய்கள், லெனின்கள், ஸ்டாலின்கள் முளைத்தார்கள். அந்த நாட்களில் தமிழகத்தில் 'மோகமுள்'ளும் 'பொன்னியின் செல்வ'னும் இல்லாத வீடுகளில்கூட மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ இருக்கும்.
ஒருநாள் எல்லாம் சிதைந்தது. சோவியத் ஒன்றியத்தில் இருந்த குடியரசுகள் தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பின. ரஷ்யர்களே தங்களுடைய வளங்கள் ஏன் மற்றவர்களுக்குப் பங்கிடப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். முதலாளிகளாகத் துடித்தார்கள். தேசிய இனப் போராட்டங்கள் ஜனநாயக வேட்கையுடன் கைகோத்தன. சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக இருந்த கோர்பசேவ் முன்னெடுத்த ‘பிரெஸ்டோரிகா - கிளாஸ்நோஸ்ட்’ (மறுசீரமைப்பு - வெளிப்படைத்தன்மை) சீர்திருத்த நடவடிக்கைகள் அவரையே வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளின. 1991 ஆகஸ்ட் 19-ம் தேதி அதிபரும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலருமாகிய கோர்பசேவ் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகக் கூறி, ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் அரங்கேறியது. கோர்பசேவ் இடத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் கென்னடி யானேவ் அமர்ந்தால், மக்கள் போராட்டங்களை அவரால் அடக்கிவிட முடியும் என்று நம்பினார்கள். நடந்ததோ வேறு. ரஷ்யா தனி நாடாக வேண்டும் என்று முழங்கிய போரிஸ் எல்ட்சின், ஒரே நாளில் பெரும் சக்தியாக உருவெடுத்தார். வீதிகளில் கூடிய பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் தங்கள் மீது தாக்குதல் தொடுக்கக் காத்திருந்த பீரங்கிகளில் பூங்கொத்துக்களைச் செருகிச் சென்றபோது, ராணுவம் சோவியத் ஒன்றியத்தினுடையதாக இல்லை; ரஷ்யாவினுடையதாக மாறி இருந்தது. டிச. 25-ம் தேதி கோர்பசேவ் தன் வசம் இல்லாத அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, மிச்சம் இருந்த சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் என்ற பெயரும் முற்றிலுமாக அழிந்தது.
யார் செய்தது சரி, யார் செய்தது தவறு? தெரியவில்லை!
மக்கள் ஜனநாயகத்தை விரும்பினார்கள், எப்போதும்போல. அது இன்றுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும், தங்களுடைய வளமான வாழ்வையும் பறிகொடுத்து இருக்கிறார்கள்.
இந்தக் கதையை இப்போதைய அரபு உலகின் எழுச்சியோடு ஒப்பிட்டுப்பாருங்கள்... எகிப்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து விரட்டியவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது... ராணுவத்தின் ஆட்சி. லிபியாவில் கடாஃபியின் கதையை முடித்தவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது... ஒரு பொம்மை அரசாங்கத்தின் ஆட்சி. நாளை சிரியாவில், ஏமனில், இரானில்...
மக்களால் யார் ஆளக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடிகிறது. யார் ஆள வேண்டும் என்பதை ஏன் தீர்மானிக்க முடியவில்லை? ஒரு வலுவான சித்தாந்தமும் தொலைநோக்கும் உள்ள மக்கள் தலைவனும் இல்லாத இடத்தில் உருவாகும் மக்கள் எழுச்சியால் ஒரு கட்டமைப்பை அழிக்க முடியுமே தவிர, உருவாக்க முடியாது. யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் புரட்சியை எப்படி முன்னெடுப்பது என்று ரஷ்யர்கள் தங்கள் முன்னோரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்!
இப்போதும் நினைவிருக்கிறது... இந்தியாவைத் தாண்டி இந்தியர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட தேசம் சோவியத் ஒன்றியமாகவே இருக்கும். நம்மை எந்த ஓர் ஆபத்தில் இருந்தும் அவர்களால் விடுவிக்க முடியும் என்று நாம் நம்பினோம். தங்களை நம்பியவர்களிடம் அவர்களும் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் நண்பர்களாக இருந்த ஒவ்வொரு நாட்டிலும் டால்ஸ்டாய்கள், லெனின்கள், ஸ்டாலின்கள் முளைத்தார்கள். அந்த நாட்களில் தமிழகத்தில் 'மோகமுள்'ளும் 'பொன்னியின் செல்வ'னும் இல்லாத வீடுகளில்கூட மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ இருக்கும்.
ஒருநாள் எல்லாம் சிதைந்தது. சோவியத் ஒன்றியத்தில் இருந்த குடியரசுகள் தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பின. ரஷ்யர்களே தங்களுடைய வளங்கள் ஏன் மற்றவர்களுக்குப் பங்கிடப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். முதலாளிகளாகத் துடித்தார்கள். தேசிய இனப் போராட்டங்கள் ஜனநாயக வேட்கையுடன் கைகோத்தன. சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராக இருந்த கோர்பசேவ் முன்னெடுத்த ‘பிரெஸ்டோரிகா - கிளாஸ்நோஸ்ட்’ (மறுசீரமைப்பு - வெளிப்படைத்தன்மை) சீர்திருத்த நடவடிக்கைகள் அவரையே வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளின. 1991 ஆகஸ்ட் 19-ம் தேதி அதிபரும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலருமாகிய கோர்பசேவ் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகக் கூறி, ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் அரங்கேறியது. கோர்பசேவ் இடத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் கென்னடி யானேவ் அமர்ந்தால், மக்கள் போராட்டங்களை அவரால் அடக்கிவிட முடியும் என்று நம்பினார்கள். நடந்ததோ வேறு. ரஷ்யா தனி நாடாக வேண்டும் என்று முழங்கிய போரிஸ் எல்ட்சின், ஒரே நாளில் பெரும் சக்தியாக உருவெடுத்தார். வீதிகளில் கூடிய பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்கள் தங்கள் மீது தாக்குதல் தொடுக்கக் காத்திருந்த பீரங்கிகளில் பூங்கொத்துக்களைச் செருகிச் சென்றபோது, ராணுவம் சோவியத் ஒன்றியத்தினுடையதாக இல்லை; ரஷ்யாவினுடையதாக மாறி இருந்தது. டிச. 25-ம் தேதி கோர்பசேவ் தன் வசம் இல்லாத அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, மிச்சம் இருந்த சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் என்ற பெயரும் முற்றிலுமாக அழிந்தது.
யார் செய்தது சரி, யார் செய்தது தவறு? தெரியவில்லை!
மக்கள் ஜனநாயகத்தை விரும்பினார்கள், எப்போதும்போல. அது இன்றுவரை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும், தங்களுடைய வளமான வாழ்வையும் பறிகொடுத்து இருக்கிறார்கள்.
இந்தக் கதையை இப்போதைய அரபு உலகின் எழுச்சியோடு ஒப்பிட்டுப்பாருங்கள்... எகிப்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து விரட்டியவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது... ராணுவத்தின் ஆட்சி. லிபியாவில் கடாஃபியின் கதையை முடித்தவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது... ஒரு பொம்மை அரசாங்கத்தின் ஆட்சி. நாளை சிரியாவில், ஏமனில், இரானில்...
மக்களால் யார் ஆளக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடிகிறது. யார் ஆள வேண்டும் என்பதை ஏன் தீர்மானிக்க முடியவில்லை? ஒரு வலுவான சித்தாந்தமும் தொலைநோக்கும் உள்ள மக்கள் தலைவனும் இல்லாத இடத்தில் உருவாகும் மக்கள் எழுச்சியால் ஒரு கட்டமைப்பை அழிக்க முடியுமே தவிர, உருவாக்க முடியாது. யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் புரட்சியை எப்படி முன்னெடுப்பது என்று ரஷ்யர்கள் தங்கள் முன்னோரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக